“பாரில் எல்லா தேசங்களில்
எங்கள் தேசம் உயர்தேசம்”
இந்த உலகத்தில் புண்ணிய பூமி என்று சொல்லத்தக்க ஒரு நாடு இருக்குமானால்,அது பாரதத் திருநாடே. இந்திய இனம் ஒருபோதும் செல்வத்திற்காக வாழ்ந்ததில்லை. பிற எந்த நாடும் குவித்திராத அளவிற்கு ஏராளமான செல்வத்தை ஈட்டியபோதிலும், அது (Continue…)
சுவாமி விவேகானந்தர்
ஹே மாதா! ஹே பவானி! மஹா வீரே! ஆரிய சக்தி உன்னை நமஸ்கரிக்கின்றோம். பரத கண்டத்து முப்பது கோடி ஜனங்களையும் நாசம் செய்துவிட வேண்டுமென்று யாரெல்லாமோ விரும்பிய போதிலும் எங்களுக்கு ஜீவாதாரமாக இருந்து ரக்ஷிப்பவள் நீ! (Continue…)
சுப்பிரமணிய பாரதியார்
Recent Posts
ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்
ரமேஷ் பதங்கே வனவாசி சகோதரர்கள் சமுதாய நல்லிணக்கம் பற்றி சிந்திக்கும்பொழுது வனவாசி சகோதரர்களையும் பற்றி சிந்திக்க வேண்டும். ஆங்கிலேயர்கள் அவர்களை ‘ஆதிவாசி’ என்று கூறினார்கள். அதாவது வனவாசிகள் ஆதிவாசிகள், மற்ற அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பொருள்படுகிறது. ”ஆதிவாசிகள் பாரதத்தின் பழங்குடிமக்கள், ஆரியர்கள் அவர்களின் மீது படையெடுத்து, காட்டுக்குத் துரத்தினார்கள். ஆதிவாசிகள் இயற்கையையும், விலங்குகளையும் வழிபடுபவர்கள். ஹிந்து சமயத்திற்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஹிந்து சமுதாய கட்டமைப்பில் அவர்களுக்கென்று இடமில்லை. நான்கு வர்ணங்களில் அவர்கள் இடம்பெறவில்லை” … Continue reading ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்
ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்
ரமேஷ் பதங்கே தீண்டாமை ஜாதி அமைப்பின் மிக பயங்கரமான விளைவு தீண்டாமை. ஹிந்து தர்மம் அனைத்து உயிரினங்களிலும் உயிர்ப்புள்ள ஒரே ஆத்ம தத்துவம் உள்ளதைக் காணும்படி கூறுகிறது. அனைத்து மனிதர்களையும் இறைவனின் உறைவிடமாக காணும்படி கூறுகிறது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், கீதையில், “ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ ” (அனைத்து உயிர்களின் இதயமும் எனது உறைவிடம்) என்று கூறுகிறார். இத்தனை சிறந்த தத்துவம் இருந்த போதிலும் நமது சமுதாயத்தில் கோடிக்கணக்கானவர்களை ‘தீண்டத்தகாதவர்கள்’ என்று சொல்லி அவர்களை கிராமங்களின் … Continue reading ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்
ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்
ரமேஷ் பதங்கே படிப்பதற்கு முன்…. ஸ்ரீ குருஜி தத்துவ சிந்தனையாளர். தேசிய வாழ்வின் எல்லா அம்சங்கள் பற்றியும் கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டின் அரசியல், சமுதாயம், பொருளாதாரம் ஆகியவை குறித்த தனது அடிப்படை எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். ஸ்ரீ குருஜியின் எண்ணங்கள் சிறப்புக்கள் அவரது எண்ணமும் சிந்தனை எப்போதுமே முழுமை வாய்ந்ததாக இருந்தது. எண்ணங்களின் அடிப்படை நிலையானதாகவும், எக்காலத்திற்கும் ஏற்றதாகவும் இருந்ததால் பொய்யாமொழியாக விளங்கியது. அவர் எண்ணங்கள் ஆன்மிகத்தில் வேர் கொண்டவையாக இருந்தன. அவரது சிந்தனை ஹிந்து சமுதாயத்தை மையமிட்டே … Continue reading ஸ்ரீ குருஜி பார்வையில் சமுதாய நல்லிணக்கம்
சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும்
சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும் ஆர்.பி.வி.எஸ். மணியன் விவேகானந்தரை வர்ணிக்கும் போது “தேச பக்த துறவி” என்றும் “தேசீயத் துறவி” என்றும் தேசபக்த துறவி என்றும் கூறுவதுன்டு. இவரை நாம் தேசபக்த துறவி என்றால் மற்ற துறவிகள் தேசபக்தி இல்லாதவர்களா? என்ற கேள்வி எழலாம். சாதாரணமாக துறவிகள் என்றாலே எல்லாவிதமான பற்றுகளையும் விட்டுவிடவேண்டும். பாச பந்தங்களுக்கு மேலெழுந்து நிற்க வேண்டும். பாசம் என்கிற போது தாய்ப்பாசமாக இருந்தாலும் சரி,தாய் நாட்டுப் பாசமாக இருந்தாலும் சரி. ஆனால் ஒரு … Continue reading சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும்