நாம் போக வேண்டிய இடத்திற்கான விலாசத்தைப் பற்றி (அவ்விடத்தைப் பற்றி நன்கறிந்த) நபர்கள் படித்தவன், படிக்காதவன் என வித்யாசமில்லாமல் யாரிடம் கேட்டாலும் straightஆ போய் leftல் திரும்பி நேரா போனா ரெண்டாவ்து வீடு என்றோ அல்லது nearest landmark சொல்லி குத்துமதிப்பாக அனுப்புவோம். ஆனால் பஸ் அல்லது ரயிலில் இறங்கி பின் பக்கமாக 100தப்படி நடந்து சாலையைக் கடந்து 1பர்லாங் அதே திசையில் நடந்து இடப்புறமுள்ள 2வது சந்தில் திரும்பி 100கெஜம் நடந்தால் இடதுபுறமுள்ள வீடு என அவர் சொல்லும் அடையாளத்தில் கண்ணை மூடிக் கொண்டு சென்று அடையலாம். GPRS கருவி வருவதற்கு பல பத்தாண்டுகள் முன்பே GPRS போல் துல்லியமாக வழிகாட்டியவர் அவர்.
எப்படி வஞ்சனையில்லாமல் பேசுவரோ அதே போல ஆகாரத்தையும் ரசித்து, விரும்பி சாப்பிடும் விதமும் அலாதியானது அவருடையது.
அந்த அவர் தான் ஜ.சுப்பாராவ்ஜி
சென்னை சைதாப்பேட்டையில் 30.03.1933இல் அம்மா கல்லம்மாளுக்கும் அப்பா ஜகதீஷுக்கும்நான்காவது குழந்தையாகப் பிறந்தவர். அவரது குடும்பத்தில் மொத்தம் ஏழு குழ்ந்தைகள். தனது 9ஆவது வயதில் சங்க ஸ்வயம்சேவகரானார். 1945இல் தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் ஸ்ரீகுருஜியின் பௌத்திக் கேட்டு சங்கத்தின் பால் மேலும் ஈர்க்கப்பட்டார்.
1954 தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரியில் பிஏ (தற்போது பிஎஸ்சி) கணிதம் முடித்தார். அதற்குப் பின் நுங்கம்பாக்கம் உயர்நிலைப் பள்ளியில் (சுதந்திர தினப் பூங்கா அருகில்) 6 மாதங்களும் காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத்தில் 4 மாதங்களும், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் ஒரு வருடமும் ஆசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர், சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் பி.டி. (தற்போது பி.எட்.) படித்து முடித்தார். அதன் பிறகு, ஆரணியில் இரண்டு ஆண்டுகளும் செங்கல்பட்டில் ஓராண்டும் ஆசிரியராகப் பணியுரிந்தார்.
1948 சங்க தடைக்குப் பின்னர் மாநிலம் தழுவிய சங்க பத்திரிகை வெளிவராது இருந்தது. இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, தியாக பூமி தொடங்கப்பட்டது.
1964இல் பத்திரிகை நடத்த பணம் இல்லாத காரணத்தால், தமிழகம் முழுவதும் புதிய சந்தாதாரர்களை சேர்க்கப்பட்டு தியாகபூமியை மீண்டும் தொடக்கினார், சுப்பாராவ்.
1965இல் சங்கரன்கோவிலில் ஆசிரியராக சென்றார். அதுவரை ஷாகா பொறுப்பில் இருந்த அவர் தாலுகா கார்யவாஹ் பொறுப்பேற்றார்.
1967இல் சங்கத்தின் பிரசாரக் ஆனார். அதே சங்கரன்கோவில் தாலுகாவில் பிரசாரக்,
1968இல் நெல்லை, குமரி மாவட்ட பிரசாரக், 1970இல் சேலம், தருமபுரி மாவட்ட பிரசாரக்,
1974இல் சென்னை விபாக் பிரசாரக்,
1977 முதியோர் கல்வி அமைப்பின் (அப்போது முதியோர் கல்வி அவசியமாக இருந்தது) பொறுப்பாளர்,
1978இல் திருச்சி விபாக் பிரசாரக்,
1982 முதல் 1990 வரை தேசிய கல்விக் கழக (வித்யா பாரதி) மாநில அமைப்புச் செயலராக இருந்தார்.
1990 முதல் 1996 வரை குருஷேத்திரத்தில் (ஹரியாணா) இருந்து வித்யா பாரதி பணியாற்றினார். பின்னர் மீண்டும் தமிழகம் வந்த அவர்,
1997 முதல் 2000 வரை சம்ஸ்கார் பாரதியின் மாநில அமைப்பாளராக இருந்தார்.கோவா மாநில மீட்பு வரலாற்றில்தமிழக ஸ்வயம்சேவகர்களுக்கு தலமை தாங்கினார்.
1970களில்வேடசந்தூர் வெள்ள நிவாரணப் பணி குறிப்பிடத்தக்கது வ்யவஸ்தா துறை துவங்கும் முன்பேஅதன் அகராதியாய் திகழ்தார்.
சங்க வரலாற்றுகலைகளஞ்சியமாக இருந்தார்.மொத்த பாமாலை பாடல்களுக்கும்மாஸ்டர் காபியாக இருந்தார்புதிர் விளையாட்டுபுதிர் கதைபுதிர் கணக்கு……இவைகளில்இளம் துடிப்போடு கடைசி வரை இருந்தார்.அவரதுபோட்டோ அதிகமாய் கிடைக்காது ஆனால்அவரது கடிதங்கள் லட்சக்கணக்காய் கிடைக்கும் எடுத்து வைத்திருந்தால். போன்கள் அதிக பயன்பாட்டிற்கு வரும் முன் பலருடனும் கடிதம் மூலம் தொடர்பில் இருந்தார். இன்று அவரது உடல் மட்டுமே நம்மை விட்டு பிரிந்து விட்டது. அவரின் நினைவுகள் அவ்வளவு சீக்கிரம் அகலாது.
பாரத அன்னையின் பாதங்களில் அவர் ஆன்மா இளைப்பாறட்டும்.
நன்றி: Facebook Omampuliyur Jayaraman