(ஸ்ரீ குருஜி அவர்களின் பௌத்திக்
முந்தய பகுதியின் தொடர்ச்சி )
ஒரே வழி
இப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையை தவறாக பயன்படுத்திக் கொள்ள, பல்வேறு சக்திகள் நமக்குள் ஊடுருவிட காத்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் நமது சமுதாயத்தில் விரிசல் ஏற்படுத்தி அழிவை ஏற்படுத்த எந்த ஒரு வாய்ப்பையும் வீணாக்குவதில்லை. இந்த எதிரிகளுக்கு உதவி செய்ய வெளியில் எதிரிகள் உள்ளார்கள். இந்த வெளி எதிரிகள் நாட்டை அப்படியே முற்றுகையிட்டு உள்ளார்கள். எல்லா எல்லைகளிலும் நின்று சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள், ஊடுருவல் செய்து கொண்டிருக்கின்றனர். எப்போது நேர்தாக்குதல் என்று தெரியாது. நாம் நமக்குள் பொறாமை, சண்டை, ஒழுக்கமின்மை, சுயமறதி ஆகிய காரணங்களால் ஒரு விதமான அராஜகத்தையே ஏற்படுத்திவிட்டோம். இப்படிப்பட்ட சின்னாபின்னமான, கோரமான சூழ்நிலையின் காரணமாக, தாக்குகிற எதிரிகளை எதிர்த்து நிற்கும் சக்திகள் இல்லையோ என்கிற சூழ்நிலை தெரிகிறது.
இது எல்லாவற்றையும் பார்த்தால் நம்மிடம் ஒரே ஒரு பதில்தான் உள்ளது. அது துயரமான வரலாற்றை பார்த்து அழுவது அல்ல. எதிரி நாட்டிற்கு மூன்றாவது நாடு உதவி செய்கிறது அல்லது ஆயுதங்களைக் கொடுத்து உதவுகிறது. இந்த நிலையில் புகார் செய்வது, அழுவது எல்லாம் கோழைத்தனத்தின், கையாலாகாத்தனத்தின் அடையாளம். நாம் அவனை விடப் பலம் வாய்ந்தவனாக ஆகி உறுதியுடன் இருக்க வேண்டும் அல்லவா? பராக்கிரமம் வாய்ந்த, பல்வேறு குணங்கள் வாய்ந்த, தன்மானம் வாய்ந்த நாட்டின் கடமை என்ன? மற்றவர்களை குறைகூறிக் கொண்டிருப்பதா? நம்முடைய தோள் பலத்தை நம்பி எழுந்து நிற்போம். அப்படி எழுந்து நின்றாக வேண்டும். சாக்கு போக்கு கூறுவதால் வேலை நடக்காது; அல்லது மற்றவர்கள் நம்மீது தாக்குகிறார்கள் என்று கத்தி அழுவதினாலும் ஒன்றும் நடக்காது. அவர்கள் அப்படித்தான் செய்யப்போகிறார்கள். எது நாள் வரை நாம் பலவீனர்களாக இருந்து கொண்டு, அவர்களுக்கு தாக்குவதற்கான வாய்ப்புக் கொடுக்கிறோமோ அதுவரை அவர்கள் தாக்குவார்கள்; அடிப்பார்கள்.
அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்? சுயமறதியின் காரணமாகத்தான் இந்த பெரிய சமுதாயம் உடைந்துள்ளது. இந்த சுயமறதியை அகற்ற வேண்டும். “இது என்னுடைய தாய் நாடு முழு சமுதாயமும் என்னுடையது. என்னுடைய ராஷ்டரம், இந்த பூமியில் என்னுடைய இந்த தேசிய வாழ்க்கை எல்லாம் வல்லதாக, அனைத்தும் நிறைந்ததாக, முழு அதிகாரம் வாய்ந்ததாக ஆகி உலக அரங்கில் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்கும்” என்ற உணர்வை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஏற்படுத்த வேண்டும். இந்த எழுச்சியால், நம்முடைய பணியின் பலத்தினால், முழு சமுதாயத்தையும் தன்னம்பிக்கை மூலம் கோர்த்து இணைக்க வேண்டும். எல்லோருக்கும் கட்டுப்பாட்டைப் பழக்கப்படுத்தி, அனைத்து இடர்களையும் அழித்துவிடுகின்ற தகுதியுள்ள, ராமேஸ்வரத்தில் இருந்து இமயமலை வரை ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய சக்தியின் வடிவத்தில், நமது சமுதாயத்தையே எழுப்பி நிறுத்த வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை. வேறு வழிகள் எல்லாம் அப்பாவிதனமானதும், பைத்தியக்காரத்தனமானதும் மேலோட்டமானதும் ஆகும். நம்முடைய சமுதாயம் என்கிற உடலில் புகுந்துள்ள அழுக்கை அகற்றி, முழுமையாகத் தூய்மைப்படுத்தி, தன்னுடைய முழு சக்தியை எழுப்புகின்ற காரியம் தான் சங்க வேலை. இது தவிர வேறு எதுவும் பொருத்தமான உபாயம் இல்லை.
அந்த வேலை செய்கின்ற பேறு கடவுள் அருளால் நமக்குக் கிடைத்துள்ளது நாமெல்லாம் சங்கத்தின் சாதாரண ஸ்வயம்சேவக்’. இப்படிப்பட்ட இணையில்லாத உயர்ந்த அங்கீகாரம் நமக்குக் கிடைத்துள்ளது. இந்த உணர்வுடன் நாம் வேலையில் ஈடுபடுவோம். ஒவ்வொருவரும் சக்தி, புத்தி, நேரம் இவற்றை சங்க வேலைக்காக அர்ப்பணித்து சிறிது காலத்திலேயே சங்க வேலை விசாலமான பரிணாமம் அடைய வேண்டியுள்ளது. இது நம் ஒவ்வொருவர் கடமை என்று கொள்ளுங்கள் இதுவே என் வேண்டுகோள்.
முற்றும்