64. ப.பூ. டாக்டர்ஜியின் தலைமைப் பண்பு
1857 க்கு பிறகு இந்த நாட்டில் அநேக மகான்கள், தேசியவாழ்வின் பலதரப்பட்ட துறைகளில், தங்கள் தங்கள் கொள்கையின் படி மிகப்பெரும் செயல்களை உருவாக்கினர். ஆனால், நமக்கு அனுபவம் வருவது என்ன வென்றால், பல அமைப்புகளில் அதன் ஸ்தாபகர் காலமான பிறகு, அவருடைய பணியின் முன்னேற்றம் தடுக்கப்பட்டு விடுகிறது. மெள்ள மெள்ள பணியானது இல்லாத நிலை ஏற்பட்டு விடுகிறது.. முடிவில் உயிரற்றுப் போய் விடுகிறது. பணியின் அடிப்படை கருத்துகள், பரம்பரை உருக்குலைந்து விடுகிறது. முடிவில் உடைந்து விடுகிறது. இதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் பெருந்தன்மை தியாகம், தவம் பற்றி யாருக்கும் சந்தேகம் இல்லாத இரு மஹா புருஷர்களைப்பற்றி சிந்திப்போம். அவர்கள் லோகமான்ய திலகரும் மஹாத்மா காந்தியும் ஆவார்கள். திலகர் தனது வாழ்வின் கடைசி காலத்தில், அவராகவே கூறி வந்தார்: ‘என் தோள்களின் மீது கால்களை வைத்து மேலே ஏறக்கூடிய எந்த ஒரு இளைஞனையும் நான் என் வாழ்நாளில் பார்ப்பேன் என்று இப்பொழுது எனக்கு தோன்றவில்லை ‘. அவர் காலமான பிறகு எவ்வளவு விரைவில் அவருடைய பரம்பரை பலமிழந்து விட்டது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. காந்திஜிக்கு பிறகு காந்திவாதம் இவ்வளவு விரைவாக ஏன் வீழ்ச்சி அடைந்தது? இதைப்பற்றிய முடிவு ஆசார்ய வினோபாஜி செய்துள்ளார். மிக உன்னதமான, அர்ப்பணம் செய்த மஹாபுருஷர்களின் எண்ணமும், செயல்முறையும் கீழான நிலைக்கு ஏன் வந்தது என்பது கவனமாக ஆராய்ந்து பார்க்கக்கூடிய விஷயமாகும்.
ஆனால் டாக்டர்ஜி விஷயத்தில் ஒரேயடியாக, மாறான அனுபவம் உள்ளது. அவர் காலமானபிறகு, செயலின் ஊக்கமும், செயல் முறையின் பரம்பரையும் நாளுக்கு நாள் மிக அதிகமான அளவில் வலுவுள்ளதாகவும் பெருமை கொண்டதாகவும் ஆகிவிட்டது. இதுவும் பல உயிர்களைக் கொல்லும் அளவு ஆபத்தும், எதிர்ப்பும் இருந்தும் கூட இது சாத்தியமாயிற்று.
யாருடைய மரணத்திற்குப் பிறகும் கார்யகர்த்தர்களுக்கு சிறிது கூட சஞ்சலம் ஏற்படவில்லையோ, எவருடைய காரியம் மிகச்சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறதோ, அப்படிப்பட்ட ஒரே தலைவர், பாரதத்தில் தற்காலத்தில் டாக்டர்ஜி தான் என்று பாபுராவ் பிஷீகர் அவர்கள் சரியாகச் சொல்லியிருக்கிறார்கள்.
இதற்கு முன் கண்டிராத, இந்தப் பெருமை டாக்டர்ஜி என்ற தனிமனிதனுக்கே உரியதாகும். இவ்வுலகத்தில் காண முடியாத அற்புதமான தனது ஆளுமையின் காரணமாக, இந்த நாட்டிற்கு அவர் வழங்கிய மிகப் பெரிய கருவியும் சாதனையும் தான் ‘சங்கஷாகா’. ஒரே நேரத்தில், வாழ்விற்கு சஞ்ஜீவினி மந்திரம் போல வாழ்வளிக்கக் கூடியதாகவும், சிவபெருமானின் பாசுபதாஸ்த்ரம் போல் வேலை செய்யவும் கூடிய இருவகையிலும் செயல்படக்கூடியது – ஷாகா. “உலகில் உன்னத நிலை” (பரம்வைபவம்) என்ற உயர்ந்த லட்சியத்தை, நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதற்கு உண்டானகல்பதரு – சங்கமும், சங்கத்தினுடைய தனிமனிதனை உண்டாக்கும் செயலின் மூலம் உருவாகிய அர்ப்பணம் எண்ணம் கொண்ட நமது கார்யகர்த்தர்களும் ஆவார்கள். இப்படி தேவர்களுக்கும் கிடைத்தற்கரிய கார்யகர்த்தர்களை ஆதாரமாகக் கொண்டு, சங்கவேலை முன்னேற்றம் அடைந்தது. முன்னேற்றம் அடைந்து கொண்டே இருக்கும்.
இப்படிப்பட்ட தலைமையின், சிறப்புக்கான அளவுகோல் பெருமை கொண்டதாகவே உள்ளது. செய்தித் தாள்களில் இதனின் புகழ் பற்றிய விவரம் வருவதில்லை . ஆனால் செய்தித் தாளிகளில் வரும் புகழ் அதிக நாள் வரை தங்குவதில்லை . 1975 முதல் 1985 வரை 10 ஆண்டுகாலத்தில் மிகப் பிரபலமானவர்களின் பெயர்கள் பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. இவர்களைப் பற்றி India today என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை வந்திருந்தது. தலைப்பு: Where are they now? அதாவது பத்திரிகைகளில் மிக அதிகமாக சர்ச்சைக்குள்ளான நபர்கள் கூட சில காலத்திற்கு பிறகு நினைவிலிருந்து அகன்று விடுகிறார்கள். அவர்கள் இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் போய்விடுகிறது. அப்படியானால் மேன்மை என்பதின் பொருள் என்ன?
இதற்கு ப.பூ.டாக்டர்ஜி அவர்களின் உதாரணத்தை எடுத்துக் கொள்வது தகுதியுடையதாகும். அவர் தனது புகழைப் பற்றி கண்டு கொண்டதே இல்லை. ஒருமுறை அவரிடம் தாமோதரபந்த் என்கிற கனவான் வந்தார். நான் ஒரு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறேன். அதில், மேன்மை பொருந்தியவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுத விரும்புகிறேன். நீங்கள் உங்கள் வாழ்க்கை சம்பந்தமான குறிப்புகளை கொடுங்கள்” என்று டாக்டர்ஜியிடம் கேட்டார். “நீங்கள் எனது வாழ்க்கை சரித்திரத்தைக் கொண்டு என்ன செய்வீர்கள்?. நானோ சிறியவன். ஏதாவது எழுதவேண்டும் என்றால் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தைப் பற்றி எழுதுங்கள். என்னுடைய வாழ்க்கை சரித்திரம் ஒன்றும் இல்லை” என்று டாக்டர்ஜி சொன்னார். தற்காலத்தில் எத்தனை பேர் இவ்விதம் தனது புகழின் மோகத்தை தவிர்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள்?
ப.பூ.டாக்டர்ஜி அவர்களின் பெருந்தன்மை பற்றி 1966-68 ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற ஒரு விவாதம் என் நினைவிற்கு வருகிறது. நான் கேரளத்திலும், வங்காளத்திலும் பிரசாரகராக இருந்தேன். நான் ராஜ்யசபாவின் உறுப்பினராக இருந்தபோது அதிகமான கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கேரளாவையும், வங்காளத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். நாடாளுமன்றத்தின் மத்திய ஹாலில் தேநீர் குடித்துக் கொண்டே கலந்துரையாடல் நடக்கும். ஒரு நாள் அவர்களில் ஒருவர் என்னை கோபமூட்ட வேண்டி “என்னிடம், டெங்கடிஜி உங்க ஆர்.எஸ்.எஸ். இருக்கே அதற்கு முழுப் பெயர் என்ன? என்று கேட்டார். நான் பதில் சொன்னேன். எப்பொழுது ஆரம்பமானது. யார் ஆரம்பித்தார் என கேள்வி கேட்டார். அதற்கு பதில் கூறினேன். அதற்கு அவர் “டாக்டர் ஹெட்கேவாரா? இந்தப் பெயரை இதற்கு முன் நான் ஒரு பொழுதும் கேட்டதே இல்லை” என்றார். ப.பூ.டாக்டர்ஜி அவர்களின் பெயரைச் சொன்னதும் முகம் சுளித்துக் கொண்டு அற்பமான முறையில் பேசினார். என்னை கோபமூட்டுவதற்காக இப்படிப் பேசுகிறார் என்று புரிந்து கொண்டேன். ஆகவே நான் பேசாமல் இருந்து விட்டேன். பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீபாலச்சந்தரமேனன் என்பவரும் அங்கு இருந்தார். அவர் கொஞ்சம் கம்பீரமான குணம் உடையவர். அவர் ‘பெரியோர்களைப்பற்றி இவ்வாறு அற்பத்தனமாக பேசக்கூடாது’ என்று அந்த கம்யூனிஸ்ட் நண்பரிடம் சொன்னார்.
“நான் அற்பமான முறையில் பேசவில்லை” என்று கேள்வி கேட்டவர் பதில் கூறினார். “நீங்கள் உண்மையில் கம்பீரமாக இருக்கிறீர்கள் என்றால் நான் கேட்கும் இரண்டு கேள்விகளுக்கு விடைகொடுங்கள்” என்று பாலச்சந்திர மேனன் கேட்டார். பண்டிட் ஜவஹர்லால் எப்பொழுது காலமானார்? என்று கேட்டார். 1964 மே மாதத்தில் என்று அவர் கூறினார். நேரு காலம் ஆகும் சமயத்தில் அவருடைய புகழ் எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்று மேனன் கேட்டார். நீங்கள் என்ன கேள்வி கேட்கிறீர்கள்?. நேரு காலம் ஆகும் சமயத்தில் மூன்றாவது உலகத்தில் மூன்று தலைவர்களில் ஒருவராக அவர் இருந்தார். நாஸர், டிட்டோ , நேரு. இது எல்லா மக்களும் அறிவார்கள் என்று அந்த நண்பர் கூறினார்.
பிறகு மேனன் அவர்கள் “டெங்கடிஜி, டாக்டர்ஜி எப்பொழுது காலமானார்கள்? என்று என்னிடம் கேட்டார். 1940ஜூன் என்று கூறினேன். காலமாகும் சமயத்தில் டாக்டர் ஹெட்கேவார் அவர்களை பற்றி எத்தனை பேருக்குத் தெரியும், அவருக்கு எவ்வளவு புகழ் இருந்தது என்று இரண்டாவது கேள்வி கேட்டார். ஒன்றும் இல்லை. நமது மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அவரை அறிவார்கள்; நமது சங்க வேலையெல்லாம் அப்பொழுது ஆரம்ப நிலையில் இருந்தது என்று நான் சொன்னேன்.
“இப்பொழுது இந்த இரண்டு விஷயங்களையும் கவனத்தில் கொண்டு நீங்கள் இருவரும் ஒரு கேள்விக்கு விடை அளியுங்கள்” என்று மேனன் கேட்டார். பண்டிட் நேரு அவர்கள் தற்போதுதான் காலமாகி இருக்கிறார்கள். அதற்கு 24 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் ஹெட்கேவார் அவர்கள் காலமானார்கள். காலமாகும் சமயத்தில் டாக்டர் ஹெட்கேவார் அவர்களை அவருடைய மாகாணத்திற்கு வெளியே, யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் நேரு காலமான போது உலகம் முழுவதும் அவரைப் பற்றி அறிந்திருந்தது. அவர் ஒரு உலகத் தலைவர். இப்பொழுது நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஓர் அறைகூவல் விடுத்தால், “நேருவின் கொள்கைக்காக உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்?. மேலும் டாக்டர் ஹெட்கேவார் அவர்களின் கொள்கைக்காக, உயிர் தரக்கூடியவர்கள் எத்தனை பேர் தயாராக இருக்கிறார்கள்? என்று மேனன் அவர்கள் ஒரு கேள்வி கேட்டார்.
பிறகு அந்த கம்யூனிஸ்ட் நண்பரைப் பார்த்து மேனன் கூறினார். “நேரு அவர்களின் சித்தாந்தத்திற்காக தன்னை அர்ப்பணம் செய்து கொள்ள நாடு முழுவதிலிருந்தும் 50 பேர் கூட முன்னுக்கு வரமாட்டார்கள். டாக்டர் ஹெட்கேவாரின் கொள்கைக்காக, லட்சக்கணக்கான இளைஞர்கள் முன் வருவார்கள். இதை நீங்களும் நானும் ஆகிய இருவரும் அறிவோம்.
Now tables were turned. இப்பொழுது பகடை மாறிவிட்டது. என்னை கோபமூட்டுவதற்கு யார் விவாதத்தை ஆரம்பித்தாரோ அது மாறி, அவருக்கு கோபம் ஏற்படக்கூடிய சந்தர்ப்பமாகி விட்டது. அரை நிமிஷம் மௌனமாக இருந்தார். மீண்டும் கோபத்துடன் மேனன்ஜியிடம் கேட்டார், Afterall, what is the criterion of one’s greatness? முடிவில் ஒருவருடைய பெருமைக்குரிய பிரமாணம் என்ன?
மேனன்ஜி உடனே பதில் அளித்தார். The length of one’s shadow on future? அதாவது எதிர்காலத்தில் யாருடைய நிழல் மிக நீளமாகவும், வெகுதூரம் வரை விழுகிறதோ அதுவே அதற்கு பிரமாணம் ஆகும்.
எதிர்காலத்தில் நீளமான நிழலை பரப்பக்கூடிய, அதே ஊக்க ஊற்றுடன், அமர நிலை பெற்ற உணர்வுடன் நாம் முன்னேறுவோம். அப்பொழுது இந்த ராஷ்ட்ரத்தை மகோன்னத நிலைக்கு கொண்டு செல்வதில் நமது காரியகர்த்தர்கள் வெற்றி பெறுவார்கள். இது நமது நம்பிக்கை ஆகும்.
நமது முன்னோர்கள் இவ்வாறு கூறியிருக்கிறார்கள்:
லௌகீ கானாம் ஹி சாதுனாம்
அர்தம் வாகனுவர்ததே
ரிஷீணாம் புனராத்யானாம்
வாசமர்தோநுதாவதி (உத்தர ராமசரிதம் 1-10)
அதாவது, உலகாயத சாதுக்களின் பேச்சு பின்பற்றக் கூடியதாக உள்ளது. ஆனால் முற்கால முனிவர்களின் சொல்லானது பின்பற்றக் கூடிய செயலின் பொருளை கூறுவதாக உள்ளது.
மேலும் தற்காலத்திய மஹான் ரிஷியான ப.பூ.குருஜி அவர்களுடைய வாழ்க்கைப் பயணத்தின் கடைசி காலத்தில் 1973 ஏப்ரலில் அவர் கூறிய வார்த்தை இவை: “இப்பொழுதோ, இனிமேல் வெற்றி வெற்றியேதான்”.