அன்னை பூமி பாரதம்
உலகில் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கும் பொது மனித சமுதாயத்தில் மட்டுமே உறவுகளும் அதற்கு ஆதாரமான உணர்வுகளும் ஆழமாக வேரூன்றியுள்ளன.மற்ற உயிர்களிடத்து இத்தகைய உணர்வுகள் வளர வாய்ப்பில்லை.
பறவை உலகம் – தாய் செய் உறவு:
பறவை ஒன்று முடடையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது; பின்னர் அக்குஞ்சுப்பறவை தாய்ப்பறவையினிடத்து பாசம் வைத்திருப்பது அத்தாய்ப்பறவை இறை தேடித் தரும் வரைதான்; அதுபோலவே தாய்ப் பறவைக்கும் தனது குஞ்சு என்ற உறவு, அக்குஞ்சுப் பறவை சிறகு முளைத்து, சிறகடித்துப் பறந்து சென்று இதை தேடும் வரைதான். அக்குறிப்பிடட பருவத்திற்குப் பின்னர் தாய் – குஞ்சு என்ற உறவுமுறை பறவை உலகத்தில் இல்லை.
விலங்கு உலகம் – தாய் சேய் உறவு:
நாய்,பூனை,ஆடு,மாடு போன்ற விலங்குகள் தங்கள் குட்டிகள் தங்களிடத்தில் பால் குடிக்கும் பருவம்வரை பாசவுணர்வு கொண்டுள்ளன. தாய்ப் பசு தன கன்று என்ற அடையாளம் கண்டு கொள்வதும் – அது தன்னிடத்தில் பால் குடிக்கும் வரைதான். அது போல கன்றிற்கும் தனது தாய் என்ற உணர்வு அப்பசுவினத்தில் பால் குடிக்கும் வரைதான் உள்ளது. பல் குடிக்கும் பருவத்திற்கு மேலே இவ்வுறவுகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன.
இந்த தாய் – சேய் உறவு முறை ஒன்றைத் தவிர வேறு உறவு முறைகள் பறவை உலகிற்கும், விலங்கு உலகிற்கும் இல்லை.
தாய்யில்லாமல் நானில்லை:
பறவை, விலங்கினத்தை விட மனிதப் பிறவியை எல்லோரும் உயர்ந்த பிறவியாகக் கருதுகின்றனர். சான்றோர்கள் பெறுதற்கரிய பிறவியாகவே மனிதப் பிறவியைச் சொல்லுகின்றனர்.
‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்பது ஒவ்வையார் வாக்கு.
ஆறறிவு பெற்ற மனித இனம் தயனிடத்து பால் குடிப்பதை நிருத்திப் பல ஆண்டுகளுக்குப் பின்னாலும் ‘தாய்’ என்கின்ற ஆழமான உணர்வு போவதில்லை.
அதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு.
மனித இனத்தில் மட்டும் பறவையினத்தைப் போல, விலங்கினத்தைப் போல குழந்தை பிறந்த சில தினங்கள் அல்லது மாதங்களுக்குள்ளாகவே சுதந்திரமாக வாழ முடிவதில்லை.
குழந்தை பிறந்து அதை பாராட்டிச் சித்திரட்டி வளர்த்து, பின் அது கவிழ்ந்து, தவழ்ந்து,அமர்ந்து,தளிர் நடைபயில்வதற்கு பல மாதங்கள் ஆகின்றன;பின்னர் நடந்து தானே உணவு உண்டு, மொழி பயின்று பேசி வாழ்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகின்றன. அதுவரை, நம்மை நம் தாயும் தந்தையும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்புபாகத் தன்னை வருத்திக் கொண்டு குழந்தையை வாழ வைக்கும் தாயின் சேவைக்கு ஈரேழு உலகத்தில் எதைக் கொடுத்தாலும் ஈடாகாது. அதனால்தான் வேதம் முதலில் ‘மாத்ரு தேவோ பவ’ என்று மொழிகின்றது. தமிழ் வேதமும் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்று இயம்புகின்றது.
மனித சமுதாயம் முழுவதிலும் தன்னை ஈன்றெடுத்த தாயை மதிக்கின்ற மனோபாவம் இயல்பானதாக அமைந்துள்ளது. இந்த மனோபாவம் தான் பார்க்கின்ற அனைத்தையும் தாயாகக் காணும்படி நம்மைச் செய்கின்றது.
பாரத நாட்டில் மட்டும்தான் தன்னை ஈன்றெடுத்த பெண்ணை மட்டும் தாயகப் பார்க்காமல் உலகிலுள்ள மற்ற பெண்களையும் தாயகப் பார்க்கும் கண்ணோட்டம் இயல்பாக இருக்கிறது.
இதனாலேயே தான் நம் பண்பாடு மற்ற எல்லாப் பண்பாடுகளையும் விட உயர்வானதாகக் கருதப்படுகிறது.
தாய்ப்பாலில்லாத போது தாய்ப்பாலுக்கு நிகரான தன் பாலக் கொடுத்து வளர்க்கும் பசுத்தாய் ஹிந்துக்களால் புனிதமாகப் போற்றி வணங்கப்படுகிறது. அதனால்தான் மஹாத்மா காந்தியடிகள் பசுவதை தடைச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றார்.
போலிப் பகுத்தறிவினால் பார்த்தால் நதியைத் தாயாகப் பார்ப்பது பைத்தியக்காரச் செயலாகத் தோன்றும்; அண்ணல் உணர்வு பூர்வமாகப் பகுத்தறிவினால் பார்த்தால் நதி தாயாகிறது.இந்த ஹிந்து உணர்வு நாடெங்கும் விரவி நிற்கிறது. அதனால்தான் தமிழகத்தில் உள்ள நாத்திகள் கூட்டமும் கூட ‘காவிரித் தாய்’ என்று நதியைப் புகழ்வதை பார்க்கிறோம். ஒருபடி மேலே போய் காவிரித் தாய்க்குச் சிலை செடுப்பதையும் பார்க்க முடிகிறது.
விஞ்ஞான ரீதியாக மட்டுமே சிந்தித்துச் செயல்படும் உலகில் எந்த விதமான உறவு முறைகளுக்கும் இடமிருக்க முடியாது. ஆன்மிக உணர்வுகள் நம் ரத்தத்தோடு கலந்து போய்விட்டதால்தான் தமிழகத்தின் போலிப் பகுத்தறிவு வாதிகள் தமிழ்த்தாய் என்று காவிரித்தாய் என்றும் மொழியையும் நதியையும் தாயாக உருவகப்படுத்தி அழைத்தனர். தமிழ்த்தாய்க்கும் சிலை அமைக்கின்றர். பாஷா ரூபிணி, வாக்தேவி என்று அம்பாளைப் போற்றுகின்ற தன்மைதான் மொழியைத் தாயகப் பார்க்க வைத்தது.
ஆன்மிக உணர்வுகள் இல்லாத வேறு எந்த நாட்டவரும் தங்கள் மொழியையும் நதிகளையும் தயாகப் பார்ப்பதில்லை.
அதர்வ வேதத்தில் ……
வெறும் பூப்பிரதேசமாக, நிலமாகப் பார்க்காமல் பூமித்தாயாக (பூமாதேவி) பார்க்கும் மொனோபாவம் தொன்றுதொட்டு ஹிந்துக்களாகிய நம்மிடம் இருந்து வந்துள்ளது.
“பூமித்தாயே! உன்னை அகழ்ந்து உழும்போது ஏற்படும் பள்ளங்கள் யாவும் உடனடியாக நிரைமேடு களாகட்டும்.
உன் உதிரத்து உதித்த நான் உனக்கு எவ்வித உறும் செய்யாமல் இருப்பேனாக. உன் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தாமல் நான் வாழ்வேனாக.
இந்திர தேவன் இந்த பூமியை எதிரிகளிடமிருந்து காத்து வருகிறான். பூமித்தாயே! எங்களை வாழ்விக்கும் வளத்தத்தினை எங்களுக்கு அருள்வாயாக! உன் மடியில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஒடட்டும்.”
எனவே தான் எல்லாவற்றையும் தாயாகக் காண்கின்ற மனோபாவத்தை நம் ஹிந்து தர்மம் கற்று கொடுக்கிறது.
(ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்கள் எழுதிய ‘புண்ணிய பூமி பாரதம்’ என்னும் நூலிலிருந்து பெரும்பாலான கருத்துக்கள் இங்கு எடுத்தாள பட்டுள்ளன.)