சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும்

சுவாமி விவேகானந்தரும் சுதந்திரப் போராட்டமும்

ஆர்.பி.வி.எஸ். மணியன்


விவேகானந்தரை வர்ணிக்கும் போது “தேச பக்த துறவி” என்றும் “தேசீயத் துறவி” என்றும் தேசபக்த துறவி என்றும் கூறுவதுன்டு. இவரை நாம் தேசபக்த துறவி என்றால் மற்ற துறவிகள் தேசபக்தி இல்லாதவர்களா? என்ற கேள்வி எழலாம்.

சாதாரணமாக துறவிகள் என்றாலே எல்லாவிதமான பற்றுகளையும் விட்டுவிடவேண்டும்.

பாச பந்தங்களுக்கு மேலெழுந்து நிற்க வேண்டும். பாசம் என்கிற போது தாய்ப்பாசமாக இருந்தாலும் சரி,தாய் நாட்டுப் பாசமாக இருந்தாலும் சரி. ஆனால் ஒரு சில துறவிகள் தங்களது தாய் பாசத்தைத் துறந்தாலும் தாய் நாட்டுப் பாசத்தைத் துறக்கவில்லை . சில துறவிகள் தங்களது தாய்நாட்டுப்பற்றை வார்த்தைகளில் வடித்திருக்கிறார்கள். சிலர் செயல்களால் செதுக்கியிருக்கிறார்கள்.

அப்படிச் சொல்லாலும் செயலாலும் தங்களது தேசபக்தியை ப்ரகடனப்படுத்தியவர்களையே தேசபக்தத் துறவியர்கள் என்றும் வர்ணிக்கிறோம்.

கடந்த கால வரலாற்றில் சுவாமி வித்யாரண்யரும், ஸமர்த்த ராமதாஸரும் இத்தகைய தேசபக்தத் துறவிகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.

அப்படியே அண்மைக் கால வரலாற்றில் சுவாமி விவேகானந்தரும், சுவாமி ராமதீர்த்தரும் தேசபக்தத் துறவிகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைவது அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையும், சமுதாய சூழ்நிலையுமே.

அப்படிப் பார்த்தால் இஸ்லாமிய படையெடுப்புகளால் ஹிந்துப் பண்பாடு அழிந்து போய்விடுமோ என்ற நிலையில் தென்னகத்தில் இஸ்லாமிய ஆதிக்கம் காலூன்ற முடியாதபடி செய்யவேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் விஜய நகர ஸாம்ராஜ்யத்தை நிர்மாணித்தார் வித்யாரண்யர். அதுபோலவே ஔரங்கசீபின் மதவெறியால் தக்கணபீடபூமி துருக்கர் பூமியாகிவிடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமக்கு இருந்ததை உணர்ந்த ஸமர்த்த ராமதாஸர் மாவீரன் சிவாஜிக்கு உத்வேகமும் உற்சாகமும் தந்து அவன் மூலமாக ஹைந்தவீ ஸ்வராஜ்யத்தை நிர்மாணித்தார்.

சுவாமி விவேகானந்தரும் தமது வாழ்நாளில் மேற்கத்திய கலாச்சாரத்தில் நாம் மூழ்கிப்போய் விடுவோமோ என்று அஞ்சி ஹிந்துத்துவ தேசிய உணர்வைத் தமதுச் சொற்பொழிவுகளில் வெளிப்படுத்தினார். அவரது சம காலத்திய விடுதலைப் போர் வீரர்களும் சரி, அல்லது அவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய விடுதலை இயக்கத் தலைவர்களும் சரி அவரது உரைகளால் உந்தப்பட்டு, உத்வேகம் பெற்று உழைத்ததாலேயே நாம் விடுதலை பெற்றோம்.

விடுதலைப் போரில் விவேகானந்தரின் மறைமுகப் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.

ஆகவே இப்போது நாம் அவரது தேச பக்த முகத்தைச் சற்று தரிசிப்போம்.


என்னதான் சொந்தநாடு ஆனாலும் ஒரு துறவி அதன்மீது பற்று வைப்பது சரியல்ல என்று ஒருவர் ஒருமுறை விவேகானந்தரிடம் கூறினார். அதற்கு அவர் பதில் கூறும்போது, “தன் தாயை ஒரு துறவி எவ்வாறு நேசிக்காமல் இருக்க முடியாதோ அதுபோலவே தாய்நாட்டை நேசிக்காமலும் இருக்க முடியாது.

ஒரு துறவிக்குத் தாய்ப்பாசம் இருக்கலாம் என்று சாஸ்திரங்களே கூறுகின்றன. அதுபோலவே ஒரு துறவிக்குத் தாய்நாட்டுப் பாசம் இருப்பதிலும் தவறில்லை. உலகத்தவரை நேசிப்பதற்குத் தாய்நாட்டுப் பற்றுத் தடையாக இருக்க முடியாது” என்று கூறினார்.


சுவாமிஜி பாரதத்தை வெறும் நிலப்பரப்பாகவோ, ஜடப்பொருளாகவோ பார்க்கவில்லை. அதனை சைதன்யம் நிறைந்த மாத்ரு வடிவமாக பார்த்தார். அரவிந்தரும் தாயகத்தை மாதா பவானியாகத்தான் பார்த்தார். இவர்கள் இருவருக்குமே இத்தகைய கண்ணோட்டத்தை வழங்கியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. பங்கிம் சந்திரரின் ஆனந்தமடம் விவேகானந்தரையும், அரவிந்தரையும் வெகுவாகவே பாதித்தது. அரவிந்தரின் பவானி மந்திரம். ஆனந்த மடத்தின் சாயலே அன்றி வேறல்ல. ஆனந்த மடம் பங்கிம் சந்திரரின் கடந்தகாலக் கற்பனை. பவானி மந்திரம் அரவிந்தரின் நனவாகாத கனவு.

சுவாமிஜி உருவாக்கிய ராமகிருஷ்ண மடம் ஆனந்தமடத்தின் சாயலைப் பெறமுடியாமல் போனதற்குக் காரணம் விவேகானந்தரின் சகோதரத் துறவிகளிடத்தில் நரேந்திரனுக்கு இருந்த அளவிற்கு தேசிய உணர்வும், விடுதலை வேட்கையும் இல்லாமல் போனதேயாகும். அவர்களது நாட்டமெல்லாம் ஆன்மீக சாதனையின் மீதே இருந்தது.


ஆனந்த மடத்தில் ஒரு காட்சி.

ஸத்யானந்த ப்ரம்மச்சாரி மஹேந்திரனுக்கு ஆனந்த மடத்தில் அன்னையை தரிசனம் செய்து வைக்கிறார்.

சலவைக் கல்லால் அமைந்த ஒரு விசாலமான கர்ப்பக்ருஹத்தில் பத்துத் தோள்களுடன் பராசக்தியின் பதுமை ஒன்று.

“இவள் எங்கள் தாய். இனி இவள் அடையப்போகும் ஸ்வரூபம் இது. பத்துக்கரங்களிலும் பலப்பல ஆயுதங்கள். பத்து திசைகளிலும் இவள் புகழ் பரவும். அன்னையின் காலடியில் அஸுரன் ஒருவன். இனி பாரத தேவியின் பகைவர்களின் கதி இதுதான்.

தோமிழைப்பார் முன் நின்றிடுங்கால் கொடுந் துர்க்கைய னையவள் இவள். தனை மேவினர்க்கு இன்னருள் செய்பவள். தீயரை வீழ்த்திடும் தோளுடையாள்.

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம் புரிவாள் எங்கள் தாய். அவர் அல்லவராயின் அவரை விழுங்கிப் பின் ஆனந்தக் கூத்திடுவாள்.”

ஆனந்த மடத்தில் ஸத்யானந்த ப்ரம்மச்சாரி மஹேந்திரனுக்கு தரிசனம் செய்து வைக்கும் பாரத தேவி அதே கோலத்தில் விவேகானந்தரது வார்த்தைகளிலும் வெளிப்படுவதைக் காணலாம்.

“வருங்காலத்துக்குள் நான் புகுந்து பார்க்கவில்லை. அதில் எனக்கு அக்கறையும் இல்லை . ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத் தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன். புராதானமான அன்னை மீண்டும் இளமையெழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்து கொண்டிருக்கிறாள். சாந்தியும் அருளும் கலந்த மொழியால் உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்.


பாரத தேசத்தின் மீது சுவாமிஜிக்கு இருந்த ப்ரேமையை விளக்க இன்னொமொரு சம்பவம்.

மேலை நாடுகளில் சுவாமி அந்நாட்டவர்களிடையே பேசிய தலைப்புகளில் பாரத தேசம் என்ற பொருளும் ஒன்று.

பாரதத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் தாம் மெய்மறந்துபோய் நேரத்தைக் கணக்கிடாமல் விட்டுவிடலாம் என்று பயந்து, “பாரதத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு நேரம் போவதே தெரியாது. எனவே சொற்பொழிவை முடிக்க வேண்டிய நேரத்திற்குச் சிறிது முன்பாக ஏதாவது அடையாளம் காட்டுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

சுவாமிஜி பாரதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நேரம் போனதே தெரியவில்லை. குறிப்பிட்ட காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த நண்பர் கடிகாரத்தை எடுத்து உயரப்பிடித்து சுவாமிஜிக்கு சொற்பொழிவை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தினார்.

இதைக் கண்ணுற்ற சுவாமிஜி, “அதோ, அடையாளம் காட்டுகிறார்கள், சொற்பொழிவை முடிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என்று. ஆனால் நண்பர்களே பாரதத்தைப் பற்றி இப்போதுதான் பேசவே ஆரம்பித்துள்ளேன்”

அவருடைய ஹிருதயம் முழுவதும் பாரதத்தைப்பற்றிய தகவல்களால் நிறைந்திருந்தது.


சுவாமிஜி பாரதத்தின்மீது கொண்டிருந்த தேசபக்தி அத்யாத்மிக தேசபக்தி யாகும்.

பாம்பனில் கடற்கரையில் கால் பதித்ததும் சுவாமிஜி மண்ணில் விழுந்து நமஸ்கரித்தார். சிறிதளவு மண்ணை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். மீண்டும் சிறிதளவு மண்ணை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டார். அருகிலிருந்த பிரமுகர் ஒருவர் சுவாமிஜியின் இச்செயகைக்கான விளக்கத்தைக் கேட்டார்.

“கடந்த நான்கு ஆண்டுகளாக நான் மேலை நாடுகளில் சுற்றித் திரிந்து வருகிறேன்” அவையெல்லாம் போக பூமி. பாரதம் மட்டுமே புண்ணிய பூமி, யோகபூமி. என்னயறியாமல் நான் போக பூமியில் இருந்தபோது ஏதேனும் போகத்தின் சாயல் என் உள்ளத்திலோ உடலிலோ பதிந்திருக்கலாம். இந்தப் புண்ணிய பூமியின் மண்ணை உட்கொண்டும் உடலில் பூசியும் அத்தகைய போகத்தின் சாயலை நான் இப்போது போக்கிக் கொண்டேன்” என்று விளக்கினார் சுவாமிஜி.

1896 டிசம்பர் 16 ஆம் தேதி சுவாமிஜியிடம் அவர் ஐரோப்பாவை விட்டுப் புறப்படுகிற நேரத்தில் நண்பர் ஒருவர் கேட்ட ஒரு கேள்வியையும் சுவாமிஜி அளித்த பதிலையும் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது.

“போகங்களும், பெருமைகளும் ஆற்றல்களும் நிறைந்த மேலைநாடுகளில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு உங்கள் சொந்த நாட்டிற்குச் செல்கிறீர்களே இப்போது உங்கள் தாய்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“என்ன நினைக்கிறேனா? நான் என் தாய் நாட்டிலிருந்து கிளம்பும் முன் அதனை நான் பிறந்த பூமி என்பதற்காக நேசித்தேன். இப்போதோ, அதனுடைய ஒவ்வொரு தூசியும் எனக்குப் புனிதமாகிவிட்டது. அதன்மீது வீசுகிற காற்று எனக்குப் புனிதமானது. உலகிலேயே எனது தாய்நாடு ஒன்றுதான் யோகபூமி, புண்ணிய பூமி என்பதைப் புரிந்து கொண்டுவிட்டேன். எங்களது பாரதப் புனிதபூமி எனது க்ஷேத்ராடன ஸ்தலம், தீர்த்தாடன லக்ஷியம்” என்ற சுவாமிஜியின் பதிலில் தொனிக்கும் தேசபக்தி எத்துனை ஆன்மீகமானது என்பதைப் புரிந்து கொள்வோம்.


பாரதத்தை பற்றிய அவரது அத்யாத்மிகப் பார்வை கீழ்க்கண்ட வார்த்தைகளில் மிளிர்வதைப் பாருங்கள்.

“இந்த பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொண்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தன் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால், இறைவழியை நேக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அன்பின் சிகரத்தை பரந்த உள்ளத்தின் உச்சி நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை, எல்லாவற்றுக்கும் மேலாக ஆத்மீக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் அதுதான் பாரதமாகும்.


நமது தேசத்தின் மறுமலர்ச்சிக்காக நாம் மேற்கொள்ளும் பணியும் நமது கடந்த கால ஆன்மீகப் பாரம்பர்யத்தின் ஆதாரத்திலேயே அமையவேண்டும் என்று விரும்பிய விவேகானந்தரின் அத்யாதமிக சுதேசியப் பார்வையைச் சற்றுக் காண்போமா?

ஓ பாரத நாடே!

பிறருடைய கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பதனாலே, மட்டரகமாகப் பிறரைப் பின்பற்றி நடிப்பதனாலே பிறரை நம்பி வாழ்வதனாலே, நாகரீகத்தின் சிகரத்தையும், சீர் சிறப்பின் சிகரத்தையும் நீ எய்திவிட முடியும்?

அவமானகரமான இந்த கோழைத்தனத்தினாலே வீரதீரர்களுக்கே உரித்தான சுதந்திரத்தை நீ அடைய முடியுமா?

ஓ பாரத நாடே ஸீதை, ஸாவித்ரி, தமயந்தி முதலிய கற்பில் சிறந்த உத்தமிகளை மறவாதே. உனது பெண்மையின் லக்ஷியத்துக்கு அவர்களே உதாரணம்!

யோகிகளுக்கெல்லாம் யோகியும் எல்லாவற்றையும் துறந்தவருமான உமாபதியாம் சங்கரனே நீ வணங்கும் கடவுள் என்பதை மறவாதே!

உனது திருமணம், உனது செல்வம், உனது உயிர் முதலானவை, உனது ப்ரத்யேக இந்திரிய சுகபோகத்திற்கும், உனது சொந்த நன்மைகளுக்கும் ஏற்பட்டவையல்ல என்பதை மறவாதே!

நீ தேவியின் பலிபீடத்துக்கான ஒரு யாக திரவியமாகப் பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே!

வர்ணாசிரம தர்மமானது அகிலாண்டேசுவரியான பராசக்தியின் பிரதிபிம்பந்தான் என்பதை மறவாதே. தாழ்த்தப்பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனையற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள். உன் ரத்தக் கலப்புள்ளவர்கள் என்பதையும் மறவாதே.

வீரனே! தீரனாக இரு. கோழைத்தனத்தை அகல ஓட்டு! நீ ஒரு பாரதவாசி என்பதில் பெருமைகொள். “நான் ஒரு பாரதவாசி, ஒவ்வொரு பாரதீயனும் என் சகோதரன்” என்று பெருமையுடன் உரக்கக் குரல் எழுப்பு!

மூட பாரதீயனும், ப்ராம்மண பாரதீயனும், பறையராகிய பாரதீயனும் எனது சகோதரன் என்று சொல்வாய். இடுப்பில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறவ ராயினும் உரத்தக் குரலெடுத்து, “பாரதீயரே எனது சகோதரர், பாரதீயரே எனது உயிர், பாரதத்தின் தேவ தேவிகளே நான் வணங்கும் தெய்வங்கள், பாரதத்தின் ஜன சமூகமே நான் குழந்தையாக இருந்தபோது படுத்து வளர்ந்த தொட்டில், இளமையில் விளையாடிக் களித்த எழிற்பூங்கா, மூப்படைந்த தருணத்தில் அடையும் வாரணாசியான மோக்ஷஸ்தலம்” என்று பெருமையுடன் சொல்வாயாக.

சகோதரனே, “பாரதபூமியே எனது அதியுயர்ந்த மோக்ஷலோகம், பாரதத்தின் நன்மையே எனது நன்மை” என்று சொல்வாயாக.

இரவிலும் பகலிலும் “கௌரி வல்லப! அகிலாண்டேசுவரி! ஆண்மைத் தனத்தை எனக்கு அருள் வீர்களாக! வல்லமையை அருளும் தாயே! எனது கோழைத்தனத்தை அகற்றுவாய். எனது பேடித்தனத்தைப் போக்குவாய்! என்னை ஓர் ஆண்மகனாக ஆக்கு! என்று இடையறாது ப்ரார்த்தனை செய்.


திருவனந்தபுரத்தில் சுவாமிஜீ தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தரராம ஐயரின் மகன் ராமஸ்வாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜீ.

“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை .

நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம்தான் உண்மையில் தேச பக்தி.

பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்கச் சீர்குலைவு களும்தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன்.

“அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம்.

கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லக்ஷோபலக்ஷம் ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி”.


சுவாமி அகண்டானந்தர் சுவாமிஜீயின் தேசபக்தியை வர்ணிக்கும்போது

“… பாரதத்தின் மீதுதான் சுவாமிஜீக்கு எத்தனை அன்பு. அதில் நூறில் ஒரு பங்காவது எங்களிடம் உள்ளதா? அவரது சகோதரர்களாக இருந்தும் எங்களிடம் அந்த உணர்வு இல்லாதபோது மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?

“…சுவாமிஜீ பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேச பக்தி (patriotism)அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்ம போதம்”,அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமிஜிக்கு இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது.

நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர் காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.

தேசாத்ம போதத்துடன் அவரது உணர்வு நின்றுவிடவில்லை. அது விச்வாத்ம போதமாக விரிந்தது. பாரத மக்களுக்காக மட்டுமல்ல. உலக உயிரினங்கள் அனைத்துடனும் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டார் அவர். அனைவருக்கும் முக்தி கிடைக்காமல் அவருக்கு முக்தியில்லை …..”


மேலை நாடுகளிலிருந்து அவர் பேலூர் மடத்திற்குத் திரும்பி வந்த பிறகு நடந்த ஒரு சம்பவம்.

ஒரு நாள் இரவு விவேகானந்தரின் அறைக்குப் பக்கத்து அறையில் அவரது சகோதரச் சீடரான விஞ்ஞானானந்தர் படுத்திருந்தார். நள்ளிரவில் விவேகானந்தரின் அறையில் யாரோ விம்மி விம்மி அழும் குரல் கேட்டு எழுந்து அவரது அறைக்குச் சென்றார்.

அங்கே பார்த்தால் அழுது கொண்டிருந்தது வேறுயாரும் அல்ல. அது விவேகானந்தர்தான். விஞ்ஞானானந்தர் அறைக்குள் நுழைந்ததை சுவாமிஜி கவனிக்கவே இல்லை. விக்கி விக்கி அழுதுகொண்டிந்த சுவாமிஜியிடம், “சுவாமிஜி, உங்களுக்கு ஏதாவது உடல் சுகவீனமா? என்று கேட்டார்.

அதற்கு விவேகானந்தர், “என் உடலுக்கு ஒன்றுமில்லை . நமது தாயகத்தின் உடல்நிலைதான் மோசமாக உள்ளது. என் நாடு துன்பத்தில் துடிக்கிறது. என்னால் அந்த வேதனையைத் தாங்க இயலவில்லை. அதனாலேயே அதை நினைக்கிறபோதெல்லாம் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை ” என்றார்.


பாரதம், பாரத மக்கள், பாரதத்தின் வரலாறு, பாரதத்தின் கலாச்சாரம், மண், நதி, மலை, மக்கள் பழக்கவழக்கங்கள், ஆன்மீகப் பொக்கிஷங்கள்” என்று அனைத்தையும் நேசித்தவர் விவேகானந்தர் என்று எழுதுகிறார் அவரது மேலைநாட்டு சிஷ்யையாகிய சிஸ்டர் கிறிஸ்டினா.


ஒரு முறை மெக்லவுட் என்ற சிஷ்யை சுவாமிஜியிடம், சுவாமிஜி உங்களுக்கு மிகச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். “பாரதத்தை நேசி” என்று பதிலளித்தார் சுவாமிஜி.


சுவாமி விவேகானந்தரின் தேச பக்தியைப் பற்றி மஹாகவி பாரதியார் “இந்தியா” பத்திரிகையில் 25.8.1906. இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.

“சுவாமி விவேகானந்தரின் தேசபக்தியானது அபரிமிதமென்பதை இங்கே குறிப்பிடுவது அவசியமில்லை . இந்த மகரிஷி “கிழக்கு திசையும் மேற்கு திசையும்” என்பதாக வங்காள மொழியில் ஒரு திவ்விய உபன்னியாஸம் எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி இம்மாதத்திலே கிடைத்த ‘வாணி விலாஸினி’ பத்திரிகையில் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பிலே மூல உபன்னியாஸத்தின் ரஸமும் பெருமையும் குறைந்திருக்க வேண்டும் என்பது அவசியமே எனினும், இது கூட படிப்பவர் மனது பிரமிக்கும்படியாகச் செய்கிறது. இதை முழுதும் மற்றொரு முறை நமது பத்திரிகையிலே எடுத்துப் பிரசுரம் செய்ய நிச்சயித் திருக்கிறோமாதலால், இங்கு அதைப் பற்றி விரிவாக எழுத விரும்புகின்றோமில்லை. ஆனால் அந்த உபன்னியாஸத்திலே (கட்டுரையிலே) ஸ்வாமி தமது தேசபக்தியை நன்கு விளக்கியிருக்கிறார்.

“வீரர்களாயிருங்கள். பூமியை அனுபவியுங்கள். கண்டவர்களெல்லாம் காலால் மிதித்தும், காறியுமிழ்ந்தும், அவமானப்படுத்துகிற இந்தப் பேடி வாழ்க்கை எத்தனை காலம் வாழப் போகிறீர்கள். இதுவும் ஒரு வாழ்க்கையா?” என்று மஹா ஆக்ரஹத்துடன் ஸ்வாமி கேட்கிறார்.

ஸர்வ ஸன்னியாஸியாகிய விவேகானந்தர் நமது நாட்டிலே மட்டும் ஒருவிதமான அதீதப்பற்று வைத்திருந்தமை அவரது பெருந்துறவுக்குப் பொருந்துமாவென்று சிலர் ஐயுறலாம்.

இதே விஷயந்தான் அவருடைய சிஷ்ய சிகாமணிகளில் ஒருவராகிய ஸ்ரீ நிவேதிதா தேவியின் மனதினும் பலவித ஆலோசனைகளுக்கு இடமுண்டாக்கியிருக்கிறது.

ஸ்ரீ நிவேதிதா தேவி சென்ற சில மாதங்களாக ‘ப்ரபுத்த பாரதம்’ என்ற பத்திரிகையிலே விவேகானந்தரைப் பற்றி வரிசையாக எழுதிக் கொண்டு வருகிறார். இம்மாதத்து பத்திரிகையிலே நிவேதிதா தேவி, ஸ்வாமியின் தேசபக்திக்கும், ஸன்னியாஸத்திற்கும் உள்ள விரோத இயற்கையைப் பற்றி விஸ்தாரமாகப் பேசுகிறார். இதையெல்லாம் இங்கே விவரமாக எழுத முடியாத போதிலும் அதன் கருத்தை கீழே தருகிறோம்.

விவேகானந்தரின் இயற்கையிலே சுதேச பக்தி வேர் ஊன்றிப் போய் விட்டது. மஹா பலங் கொண்டவளாகிய பாரத மாதா தனது பலத்தைத் தானேயறியாதவளாகி அடிமை நிலைகொண்டு நிற்பதை அவரால் பார்த்துச் சகிக்க முடியவில்லை . ஆனால் இந்த சொற்ப பாசங்கூட மாயா சம்பந்தமனது என்பதை அவரே நன்றாக அறிந்திருந்தார். அவர் மட்டுமென்ன? அவரது பரம குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூட அதைப்பற்றிப் பிரஸ்தாபித்திருக்கின்றார்.

விவேகானந்தருடைய மனசை ஒரு லேசான மாயைப் படலம் சுழ்ந்திருக்கிறது. அதை ஈசன் இவருடைய மனதில் ஒரு நன்மையைக் கருதி வைத்திருக்கிறார். ஆனால் அது மிகவும் லேசான படலம். அதை எந்த நிமிஷத்திலும் விவேகானந்தர் கிழித்தெறிந்துவிடுவார்.” என்று ராமகிருஷ்ணர் திருவாய் மலர்ந்தருளினார்.

“ ஆனால் நம்மவரின் அதிருஷ்டத்தாலும், ஈசனுடைய திருவருளாலும் மற்றெல்லா மாயைப் படலங்களையும் அறுத்தெறிந்துவிட்ட விவேகானந்தர் சுதேசப் பற்றை மட்டிலும் நெடுங்காலம் கொண்டிருந்தனர். ஆனால் , பரம ஸன்னியாஸியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பூமிப் பற்றில்லாத விஷயத்தில் பிணங்களுக்குச் சமமானவர்கள் என்பதை இம்மஹரிஷி மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்”.


1907 ஜீலை 17ல் “இந்தியா” பத்திரிகையில் துணைத் தலையங்கமாக வந்த கட்டுரை

தற்காலப் புது உணர்ச்சிக்கு மூல புருஷர் ஸத்குரு ஸ்ரீ விவேகானந்த சுவாமிகளே

நம் பாரதத்தில் இப்போது நடைபெறும் “நவீன இயக்கத்தின்” உற்பத்தி ஆகமங்கள் ஸ்ரீ விவேகானந்தரின் உபதேசங்களே.

அவர், “பாரதத்திற்கு உள்ளும் புறமுமாக இருக்கும் ஒவ்வொரு குலத்திலும் உள்ள சத்தையெல்லாம் சேர்த்து அதனால் பாரதம் முழுவதையும் புதுப்பியுங்கள்.

உலகின் ஆன்மகோடிகளின் ஆத்ம விருத்தியையும் உங்கள் கடமையாகக் கொள்ளுங்கள். பின் பாரதமே எத்தேசத்திற்கும் லக்ஷியமாகும்” என்று நம்மெல்லோருக்கும் பல முறையும் வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார்.

அப்படி ஆவதற்கு ஏற்ற வழிகள் ஸ்வஜாதீயக் கல்வி, ஸ்வதேச வஸ்துவைப் பரிபாலித்தல், அன்னியச் சரக்குகளை விலக்கல் முதலிய ஸ்வஜாதீய ஏற்பாடுகளே என்றும். அவ்வழிகளில் நடப்பதற்கும், நல்வாழ்க்கைக்கும் அவசியமான தேஹம், மன ஒழுக்கம் பக்தி முதலியவைகள் எல்லாம் உறுதிப்பாடு அடையும்படியான அப்பியாசங்களைக் கைக் கொள்ள வேண்டும் என்றும் சுவாமிகள் நமக்கு போதிக்கிறார்.

இன்னும் முப்பத்து முக்கோடி ஜனங்கள் அடங்கிய இத்தேசத்தை சென்ற ஆயிரம் வருஷங்களாக, கட்டுப்பாடுள்ள சிற்சிலரே (வெளிநாட்டவர்களே) அடக்கி ஆண்டு வருகிறார்கள் என்ற இப்பிரச்னத்தின் தத்துவார்த்தத்தை அறிவிக்கும் எழுத்தாணிப் பாலை முதலில் நமக்கு ஊட்டிய ஸத்குருவும் அவரே பின்னும் அவரே. அக்கிருத்தியத்தை ஒருவித ‘மனோ மயக்கு ஜாலம்’ என்றும், அந்த ஜால மயக்கம் தெளிய நம் எல்லோருடைய ஆத்மாவிலும் மறைந்து கிடக்கும் தெய்வீக சக்தியை வேதாந்த ஞான ஒளியால் எழுப்பக் கூடுமென்றும் கற்பித்திருக்கிறார்:

நம் க்ருத்தியம், ராஜரீகமோ வைதீகமோ, லௌகீகமோ இன்னும் வேறு எதுவாக இருந்தாலும் சரி, அதை அடைய வேதாந்த ‘ஞானமே வழி. நாம் இப்போது ஏற்படுத்தி வரும் ஆயிரக் கணக்கான சங்கங்களும், கூட்டும் எண்ணிறந்த மஹாநாடுகளும் மற்றவைகளும் உபயோகமற்றன.

மற்றெல்லோருடைய கஷ்டங்களையும் காண மனம் உருகி அவர்களுக்கு அனுதாபம் காட்டி அன்பிலும் அருளிலும் புத்தரைப் பணிபவராகவும், ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய உபதேச மொழிகளை ராஜாங்க ரீதியார்த்தமாக கொள்பவராகவும் நாம் ஆகும் வரைக்கும் நாம் முன்னுக்கு வரக்கூடும் என்று நம்ப இடமில்லை என்று அவர் கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார். அன்றியும் நம் ஜாதீய க்ஷணதசைக்குக் காரணம் நம்மை விட்டுப் புறம்பே இருந்து எதுவும் வந்ததாகக் கருதலாகாது. நாம் செய்த பழியை நாம் நம் பேரிலேயே தைரியமாய்ச் சுமத்திக் கொள்ள வேண்டும். நாம் படும் பாட்டிற்கெல்லாம் நாமே காரணம் என்ற இப்படிப்பினை யெல்லாம் அவரிடம் இருந்தே நாம் கற்றுக் கொண்டோம்.

இவை அனைத்தையும் சுருக்கிச் சொல்லுவோம். எல்லோரும் சரியான புருஷர்களாயிருக்கப் பாருங்கள்.அதற்கு ‘சக்தி’யே வடிவமாயுள்ள லோகமாதாவை, “ஹே கருணாம்பிகையே’ என்னிடம் உள்ள பேடித் தனத்தை எடுத்துக் கொண்டு உன்னிடம் உள்ள புருஷத்வத்தைக் கொடு என்று அல்லும் பகலும் ப்ரார்த்தியுங்கள்” என்ற நம் ஸத்குருவான சுவாமிகள் கட்டளையிட்டிருக்கிறார்.

இப்பொழுது இவ்வுணர்ச்சிகளெல்லாம் ஸத்குரு விவேகானந்த ஸ்வாமிகளிடமிருந்து பிறந்து, அவையனைத்தும் ஒருமித்து ‘நவீன இயக்க’ மெனத்திரண்டு ப்ரும்ம ஸமாஜத்து ஸ்ரீ பிபின் சந்திர பாலர், ஆர்ய ஸமாஜத்து ஸ்ரீ லாலா லஜபதிராய், வைதீகர் பால கங்காதர திலகர், சிவனடியார் ஸ்ரீ வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகிய இன்னும் அனேக மஹான்கள் மடியிலே வளர்ந்து பாரதீயனாகப் பிறந்துள்ள ஒவ்வொருவருடனும்ம் தற்காலத்தில் விளயாடி வாரா நிற்கும்.

தேச பக்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியான்.


சுவாமிஜீயின் சீடரான சதாசிவானந்தர் கூறுவதாவது;

“பிரபல தேச பக்தரான கேல்கர் காசியில் சுவாமிஜீயை சந்திக்க வந்தார், சுவாமிஜீக்கு அப்போது உடல் நிலை சரியில்லை .

கட்டிலில் படுத்திருந்த சுவாமிஜீ கேல்கரோடு பேசத்தொடங்கியவுடன் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து உடகார்ந்து விட்டார்.

பாரதத் தாய், அவளது வேதனை,அரசியல் சமுதாய சீர்திருத்தங்கள் என்று பல விஷயங்களை சுவாமிஜீ பேசிக் கொண்டே போனார். குரல் உயர்ந்து கொண்டே போயிற்று.

“வறுமையும் நோயும் பீடித்து, இவ்வளவு இழிவுற்றுக் கிடக்கின்ற இந்த பாரதத்தில் இனிமேலும் வாழ்வதில் என்ன நன்மை ? ஒவ்வொரு கணமும் நமது பாரதத்தாய் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளுக்கு உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. அவமானமும் துன்பமும் தான் அவளது தலையில் நிரந்தரமாக எழுதப்பட்டுள்ளன. அவள் மூச்சு விடுகிறாள் வாழ்கிறாள் என்பதற்கு அது ஒன்றே அறிகுறியாக உள்ளது. அவள் வாடுவது நரகத் தீயில். அது உறுதி,அது நிச்சயம்

இப்படித் துன்புறுவதைவிட அவள் இந்த உலகிலிருந்து மறைந்து விடுவது நல்லதல்லவா?” –

பாரதத்தின் ஏழைகள் அத்தனை பேருடைய துன்பங்களையும் ஏற்று சுவாமிஜீ துடிப்பதுபோல் இருந்தது. அவரது உடல் நடுங்கியது. மூச்சு வேகமாக வெளிவந்தது.

அவர் உண்மையான தேச பக்தர். உண்மையான மஹான். “யாருடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனே உண்மையான மஹாத்மா என்பேன் நான்” என்று கூறியவர் அல்லவா அவர். அவரது வாழ்க்கையிலேயே அந்த உணமையை நாங்கள் காண முடிந்தது.

படிப்படியாக சுவாமிஜியின் பழைய நிலைமை திரும்பியது பிறகு, எந்த வழியில் பாரதத் தாயின் துன்பத்தை ஆற்ற முடியும் என்பதுபற்றி அவர் கேல்கரிடம் கூறினார்.

குறிப்பாக ஒரு கருத்தை வலியுறுத்தினார்.

“பாரதம் வளர்ச்சி காணவேண்டுமானால் அதன் முன்னேற்றம் நமது புராதன மரபுகளைப் பின்பற்றி அகத்திலிருந்தே வருகின்ற இயல்பான முன்னேற்றப் பாதையில் இருக்கவேண்டும்.”

இந்தக் கருத்தை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். எல்லாச் சீர்திருத்தங்களும் மதத்தின் வழியில் இருக்க வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். அன்று நாங்கள் ஒரு வித்தியாசமான சுவாமிஜியைக் கண்டோம்”


1901 டிசம்பர் 28 முதல் 31 வரை கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. சுவாமிஜி அரசியல் மற்றும் அது சார்ந்த இயக்கங்களிலிருந்து விலகியே இருந்தார். –

“எங்கள் நாட்டை எங்களிடம் கொடுத்து விடுங்கள்” என்று பிச்சை கேட்கும் பாணியில் அமைந்த காங்கிரஸின் கொள்கையை அவர் சிறிதும் விரும்பவில்லை.

இந்தக் கோரமான பஞ்சம் வெள்ளம், வியாதிகள், தொற்றுநோய் மிகுந்த இந்த வேளையில் காங்கிரஸ்காரர்கள் எங்கே போய்விட்டார்கள்? சொல். ப

“அரசை எங்கள் கையில் தந்துவிடுங்கள்” என்று வெறுமனே சொல்லிவிட்டால் போதுமா? இவர்களின் பேச்சைக் கேட்க யார் இருக்கிறார்கள்? உண்மையான வேலை செய்கின்ற ஒருவன் வாய் திறந்து கேட்கவும் வேண்டுமா?

உன்னைப்போல் இரண்டாயிரம் பேர் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை செய்தால் அரசியல் விவகாரங்களில் ஆங்கிலேயர்கள் உங்களைக் கலந்து ஆலோசிக்க மாட்டார்களா என்ன?” என்று 1900 பிப்ரவரியில் அகண்டானந்தருக்கு எழுதினார் சுவாமிஜி. காட்ட

அவரது போக்கு ஆண்மை நிரம்பியதாக ஆக்கபூர்வமானதாக இருந்தது. சுவாமிஜின் போக்கைக் காங்கிரஸார் பொதுவாக விரும்பவில்லை. அதே வேளையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திலகர் போன்ற சிலர் சுவாமிஜியின் கருத்துக்களை வரவேற்காமலும் இல்லை.

தேசபக்த மஹானாகக் கருதப்பட்டவர் சுவாமிஜி. அவரது கருத்துக்களைப் படித்த பல காங்கிரஸ் தலைவர்களும் அந்த நாட்களில் பேலூர் மடத்திற்கு வந்து சுவாமிஜியை தரிசித்துச் சென்றனர். பல்வேறு கருத்துக்களை விவாதித்தபடி திலகரும் சுவாமிஜியுமாக கங்கைக் கரையில் உலவிய நாட்களும் உண்டு .


1901 மாநாட்டில்தான் மஹாத்மா காந்தி முதன்முறையாக கலந்துகொண்டார். மாநாடு முடிந்தபிறகு ஒரு மாத காலம் கோகலேயின் வீட்டில் விருந்தினராக அவர் தங்கியிருந்தார் அவர் சுவாமிஜியை சந்திக்கவும் விரும்பினார். ஆனால் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி சென்றபோது சுவாமிஜி மடத்தில் இல்லாததால் அவரை சந்திக்க இயலவில்லை.

“நான் விவேகானந்தரது சொற்பொழிவுகளை ஆழ்ந்து படித்த பிறகுதான் எனது தேசபக்தி ஆயிரம் மடங்காகப் பெருகி உள்ளது” என்று பேலூர் மடத்திற்குப் பின்னொரு முறை விஜயம் செய்தபோது கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது.


சுவாமிஜி வேறொரு சந்தர்ப்பத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்த தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“காங்கிரஸின் செயல்பாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஏதாவது செய்வது நல்லதுதானே. உறங்கும் நமது நாட்டை விழிப்படையச் செய்ய எல்லா பக்கங்களிலிருந்தும் உந்தித்தள்ளுவது நல்லதுதான்.

இந்தக் காங்கிரஸ் மக்களுக்காக இதுவரை என்ன செய்துள்ளது என்பதை எனக்குக் கூறுங்கள் பார்க்கலாம். சில தீர்மானங்களை நிறைவேற்றி விட்டால் சுதந்திரம் தானாக வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் தங்கள் சுதந்திரத்தை தாங்களே தேடிக்கொள்வார்கள்.


ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது அங்கெல்லாம் ஆன்மீக ப்ரச்சாரம் செய்ததோடு விவேகானந்தர் நின்று விடவில்லை . தனது சொற்பொழிவுகளுக்கு நடுவே அடிமைப்பட்டுக்கிடக்கும் பாரதத்தின் துயரகரமான நிலையைக் குறித்தும் அவர் பேசத் தவறவில்லை. அவர் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இந்தக் கனலின் விளைவு ரஷ்யப் புரட்சிக்காரர்களுடன் அவரைத் தொடர்பு கொள்ள வைத்தது.

எந்த பிரிட்டன் பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்ததோ அந்த பிரிட்டனிலேயே சுதந்திரப் பிரச்சாரம் செய்ய அவர் தயங்கவில்லை .

1898 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நியூ இங்கிலாந்தில் அனிஸ்கூவாம் என்னும் ஊரில் பேராசிரியர் ரெய்ட் என்பவர் வீட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் “ஆங்கில ஏகாதிபத்தியம் பாரதத்திற்கு இழைத்து வரும் தீமைகளைக் கண்டித்துக் காரசாரமாக அவர் பேசினார்.

1899ஆம் ஆண்டில் மேரி ஹேலன் என்னும் அமெரிக்கப் பெண்மணிக்கு விவேகானந்தர் எழுதிய கடிதம் ஒன்றில் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளார்.

“1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பாரத சுதந்திரப் போராட்டத்தின்போதும், அதற்குப் பின்னரும் ஆங்கிலேயர்கள் பாரதத்தில் புரிந்த கொலைகளையும் அட்டூழியங்களையும் பாரதீயர்களால் ஒரு போதும் மறக்க முடியாது.

பாரதத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு ரத்த பயங்கர ஆட்சியே நடந்து வந்துள்ளது. ஆங்கிலேயே போர் வீரர்கள் எங்கள் மாதர்களைக் கற்பழித்தும் வருகின்றனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் எதற்காக? எங்கள் செலவில் வழிச்செலவும் பென்ஷனும் பெற்றுத் தங்களது தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காகத்தான். ஒரு வேளை நீங்கள் இந்தக் கடிதத்தை வெளியிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பாரதத்தில் இப்போது நிறைவேற்றப் பட்டுள்ள சட்டம் என்னை இங்கிருந்து பாரதத்திற்கு இழுத்துக் கொண்டு போய் எத்தகைய விசாரணையும் இல்லாமல் என்னைக் கொல்வதற்கு ஆங்கிலேயே அரசுக்கு அனுமதி அளித்திருக்கிறது.”


ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பாரதம் திரும்பிய விவேகானந்தா பாரதத்திலும் நமது தேச விடுதலைக்காக ரகசிய புரட்சி நடவடிக்கைகளில் ஈடுட்டிருந்தார்.

தனக்கோ அல்லது தான் தோற்றுவித்த ராமகிருஷ்ண மடத்துக்கோ எத்தகைய அரசியல் சம்பந்தமும் கிடையாது என்று விவேகானந்தர் அறிவித்திருந்தபோதிலும் அவரும் அவருடைய சீடர்களும் ரகசிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்தனர். ஆயுதம் தாங்கிய புரட்சி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த புரட்சிகர சங்கங்களுடன் விவேகானந்தரின் சீடர்கள் பலருக்கு ரகசிய தொடர்பு இருந்தது.

பாரதத்தில் ஒரு ஆயுதப் புரட்சி நடைபெறவேண்டும் என்ற அவருடைய உள்ளக் கிடக்கையில் எத்தகைய மாறுதலும் இல்லை .


1901-ல் சுவாமிஜீ டாக்காவில் இருந்தபோது, பின்னாளில் புரட்சிவாதியாக மலர்ந்த ஹேமச்சந்திர கோஷும் அவரது நண்பர்களும் சுவாமிஜீயை சந்தித்து தங்களுக்கு அவர்கூறும் அறிவுரை என்ன என்று வினவியபோது, சுவாமிஜீ கூறியதாவது:

“அடிமைப்பட்டு கிடக்கும் தேசத்தின் இளைஞர்கள் அச்சமின்மையையும், வலிமையையும் தங்களுள் வளர்த்துக் கொள்ளவேண்டும். நமது நாட்டைச் சுரண்டி வாழும் இந்த அன்னிய மிலேச்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டுவாருங்கள். இரும்பினை ஒத்த தசையும், எஃகினை ஒத்த நரம்புகளையும் கொண்ட இளைஞர்களாகத் திகழுங்கள். பங்கிம் சந்திரரது நால்களைப் படியுங்கள். பங்கிம் சந்திரர் போதித்த தேச பக்தி உங்கள் உள்ளங்களில் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும். பாரதத்தின் அரசியல் விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராடவும் தயங்காதீர்கள்.”

சுவாமிஜி கூறியபடியே, ஹேமச்சந்திர கோஷ் புரட்சிவாதியாக மாறினார். இதுபோலவே ஜதீன் முகர்ஜியும் புரட்சிவாதியாக மாறினார்.


அனுசீலன் சமிதி என்ற பெயரில் வங்காளத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஆயுத புரட்சி சங்கத்தைச் சேர்ந்த சாயிராம் கணேஷ் டேவுஷ்கர் என்னும் புரட்சியாளரை விவேகானந்தர் சந்தித்தார். அவரிடம் விவேகானந்தர் பின்வருமாறு கூறினார்.

“பாரதம் ஒரு வெடி மருந்துக் கிடங்காக மாறும். எனது மரணத்திற்கு முன்பாகவே நாட்டில் புரட்சி நடக்கும். ஒரு சிறு தீப்பொறி போதும். வெடிக்கிற வேகத்தில் பிரிட்டிஷ் அரசு சிதறிவிடும். என் வாழ்வில் நான் புரட்சியைக் காண்பேன்”

அப்போது சுவாமிஜியிடம் டேவுஸ்கர், “வெளிநாட்டினரின் உதவியுடன்தான் இது நடக்குமா?” என்று கேட்டார்.

“நிச்சயமாக இல்லை , நமது சுதேசிய மன்னர்கள் பலர் ஒன்று சேர்வார்கள். மக்கள் எழுச்சியும் மன்னர்களின் கூட்டுத் தலைமையும் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்” )

சுவாமிஜியின் வாழ்நாளில் இது நிறைவேறவில்லை . மன்னர்கள் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என்ற சுவாமிஜியின் கனவு கனவாகவே இருந்துவிட்டது. 1857ல் மன்னர்கள் சிலர் ஒன்று சேர்ந்து போரிட்டது உண்மை. ஆனால் அதற்குப் பின்னால் அங்ஙனம் ஏதும் நிகழவில்லை . இதனை சுவாமிஜியே கிறிஸ்டினா என்ற தமது மேற்கத்திய சிஷ்யையிடம் தாம் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னால் கூறியிருக்கிறார்.

“சுதேசிய மன்னர்களை ஒருங்கிணைக்க நான் முயற்சித்தது உண்மை . ஹிராம் மேக்ஸிம் என்ற துப்பாக்கித் தயாரிப்பாளரிடம் நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஆனால் மன்னர்களிடம் தேசத்தைப் பற்றிய சூடு சொரணையே இல்லை. எனவே மக்களிடத்தில் தேசிய உணர்வைத் தூண்டும் பணியைச் செய்யும் தன்னலமற்ற தொண்டர்களை உருவாக்குவதிலேயே என் கவனம் எல்லாம் உள்ளது” உள்ளம் நொந்து சுவாமிஜி கூறிய வார்த்தைகள் இவை. பிரபல வரலாற்று ஆசிரியரான ஆர்.சி. மஜூம்தார் தான் எழுதிய நூலில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.

விவேகானந்தர் எதிர் பார்த்ததுபோல் நாடு தழுவிய ஆயுத புரட்சி ஏதும் பாரதத்தில் நிகழவில்லை . அத்தகைய புரட்சியை உருவாக்க முயன்றவர்களின் முயற்சிகள் பல காரணங்களால் தோல்வியைத் தழுவின.

ஆனாலும்கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனிநபர்களும், அமைப்புகளும் ஆயுத புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்னவோ உண்மை தான்.

ஆனால் இத்தகைய உதிரிப் புரட்சியாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் சுவாமிஜி தன் வாழ்நாளில் காண இயலவில்லை

அவர் மறைந்த 1902க்குப் பின்னரே இத்தகைய புரட்சி நடவடிக்கைகள் மஹாராஷ்ட்ரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம் தமிழகம் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்தன.

இவைகள் கூட தனி நபர்களின் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பதாக வர்ணிக்கப்படலாமே தவிர அவற்றை ஆயுதப்புரட்சி நடவடிக்கைகள் என்று பட்டியலிட முடியாது.


விவேகானந்தருக்கு ரகசிய புரட்சி நடவடிக்கைகளோடு தொடர்பு இருக்கலாம் என்று பிரிட்டிஷ் அரசு சந்தேகித்தது. அவரை இடைவிடாது கண்காணிக்க ஒற்றர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்தச் செய்திக்கு ஆதாரமாகத் திகழ்வது சகோதரி நிவேதிதை 1898 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாளன்று தனது தோழி ஹராமாண்டுவிற்கு எழுதிய கடிதம்தான். நிவேதிதை அக்கடிதத்தில் குறிப்பிடுவதாவது. “சுவாமிஜியை ஓற்றர்கள் மூலம் காவல்துறையினர் கண்காணித்து வருவதாக இன்று மாலை, மடத்தைச் சேர்ந்த துறவிகளில் ஒருவர் எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்டு சுவாமிஜி சிரிக்கிறார். ஆனால் இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.

பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் விவேகானந்தர் அவர்களை ஒரு துறவியாகப் பார்க்கவில்லை . காவியுடை தரித்த ஒரு புரட்சிவாதியாகவே அவரைக் கருதியது.

1918ம் ஆண்டில் பாரதத்தில் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை புரட்சி குறித்து விசாரிப்பதற்கு ரௌலட் குழுவை பிரிட்டிஷ் அரசு நியமித்தது.

இந்தக் குழு தயாரித்து அளித்த அறிக்கையில் “வங்காளத்திலும் வேறு இடங்களிலும் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகள் நடந்ததற்கு விவேகானந்தரின் பிரச்சாரம் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு முக்கியமான காரணம்” ஆகும்.

“விவேகானந்தர் சன்னியாஸி உடையில் இருந்த ஒரு மூர்க்கமான அரசியல்வாதியே”

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவுத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட புரட்சிவாதிகளின் வீடுகளில் விவேகானந்தரது சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகங்கள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் ராமகிருஷ்ண மிஷனையே அரசியல் இயக்கமாகக் கருதி அதனைத் தடை செய்ய விரும்பியது அரசு. ஆனால் வங்காள கவர்னர் அரசின் இந்த முயற்சியை தடுத்து விட்டார். பல புரட்சிவாதிகள் ராமகிருஷ்ண மடத்திற்கு வந்து போய் கொண்டிருந்தனர். புரட்சிவாதிகளாகத் திகழ்ந்து பின்னாளில் ராமகிருஷ்ண மடத்தில் துறவியர்கள் ஆனவர்களும் உண்டு. உதாரணத்திற்கு ஒருவரைச் சொல்லவேண்டுமானால் தேவவிரத பஸு என்பவர் சுவாமி ப்ரக்ஞானானந்தா என்ற துறவியாக மாறியதைக் கூறலாம்.

பிரிட்டீஷ் அரசின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையே கொஞ்சமும் அஞ்சாமல் விவேகானந்தர் தனது புரட்சிகர நடவடிக்கைகளை நடத்தி வந்தார். வங்கத்திலும் பாரதத்தின் பிற்பகுதிகளிலும் ரகசியமாக இயங்கிவந்த புரட்சிக்காரர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்து வந்திருக்கிறது.

விவேகானந்தரின் புரட்சி நடவடிக்கைகளை இவர்கள் இருவரும் நன்கு அறிந்திருந்த காரணத்தினால் அவர் விட்டுச் சென்ற பணியினை இவர்களால் தொடர முடிந்தது.


நிவேதிதை கல்கத்தாவில் தான் தொடங்கிய பெண்களுக்கான பாடசாலை மூலம் ஹிந்துப் பெண்களின் இளம் உள்ளங்களில் தேசிய உணர்வை விதைக்க விரும்பினாள்.

அன்றைக்கு வங்காள மக்களே கூட அறிந்திராத வந்தேமாதரம்” பாடலை தினசரி ப்ரார்த்தனை கீதமாக ஆக்கினாள்.

ஆம்! பின்னாளில் வங்காளம் துண்டாடப்பட்டபோது ஓர் பேரியக்கமாக உருவெடுத்த வந்தே மாதர கீதத்திற்கு வித்தூன்றியவள் விவேகானந்தரின் சிஷ்யையான இந்த வீரப் பெண்மணிதான்.

பாரதநாட்டின் உடனடித் தேவை அரசியல் விடுதலைதான் என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள்.

அவள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை சுவாமிஜீயும் சரி அவர் தொடங்கியிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் சரி விரும்பவில்லை . எனவே அவள் தனது அரசியல் உணர்வுகளை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க நேர்ந்தது.

ஓகாகுரா காசுகோ என்னும் ஜப்பானிய பேராசிரியருடன் சேர்ந்து ரகசிய சங்கம் ஒன்றை உருவாக்கி பிரிட்டிஷாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தாள் நிவேதிதை. ஆயுதம் தாங்கிய புரட்ச்சிக்கு நாட்டைத் தயார் செய்வதே இச்சங்கத்தின் ரகசிய நோக்கமாக இருந்தது.

ரஷ்யாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாத அனார்க்கிச இயக்கம் காட்டிய பாதையை பாரதமும் பின்பற்றவேண்டும் என்று ஜப்பானிய பேராசிரியர் ஓகாகுரா யோசனை கூறினார்.

நிவேதிதா பாரதம் வந்தபோது அவளது அரசியல் முனைபபை மழுங்க வைக்க நினைத்து சுவாமி விவேகானந்தர் நிவேதிதாவின் தோழி கிரைஸ்டின் என்னும் பெண்மணியிடம் தனது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

“எனக்கும் புரட்சியில் ஆர்வம் உண்டு. ஆனால் பாரதம் புரட்சிப் பாதையில் நடைபோட இன்னும் தயாராக வில்லை . முதலில் பாரதத்தை அதன் இன்றைய சீரழிந்த நிலையிலிருந்து விடுவித்துச் சீரமைக்க வேண்டும்.

அதற்காக ப்ரும்மச்சர்ய விரதம் ஏற்று நாட்டு மக்களிடையே உணர்வூட்டி புத்துயிர்பெறச் செய்யக் கூடிய தொண்டர் படைதான் முதலில் எனக்குத் தேவை. அத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் வெறும் ஆர்வத்தில் உந்தப்பட்டு புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்தப் பயனும் தராது” என்று விவேகானந்தர் கூறினார்.

ஆனால் சுவாமிஜீயின் மறைவுக்குப் பின்னால் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி வந்தார் நிவேதிதை.

சுவாமிஜீயின் மறைவுக்குப் பின்னால் சுதந்திரப் பறவையாகி விட்ட நிவேதிதா பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கெல்லாம் சென்றார். பரோடாவில் இருந்த மன்னர் கல்லுரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த அரவிந்தரை 1902 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாளன்று சந்தித்தார். ஏற்கெனவே புரட்சி நடவடிக்கைகளில் அரவிந்தர் ஈடுபாடு கொண்டிருந்தார். விவேகானந்தரால் உந்தப்பட்டவர் அரவிந்தர்.

பூனாவில் இயங்கி வந்த ரகசிய சங்கத்தோடு அரவிந் தருக்குத் தொடாபு இருந்தது அரவிந்தருக்கும் திலகருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவருமாக சேர்ந்து பாரத இளைஞர்களுக்கு ரஷ்யாவில் ராணுவப் பயற்சி அளிக்கும் சாத்தியக் கூறுகள் பலவற்றை அறியும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இது சம்பந்தமாக திலகர் பம்பாயில் இருந்த ரஷ்ய தூதரை பல முறை சந்தித்துப் பேசினார். இத்தகைய சூழ்நிலையில் அரவிந்தரை நிவேதிதா தேவி சந்தித்தது மிக முக்கியமானதாகும். இந்தச் சந்திப்பை பற்றி அரவிந்தர் பின் கண்டவாறு எழுதியிருக்கிறார்.

“நிவேதிதா என்னிடம் ஆன்மீக விளக்கம் பற்றியோ ராமகிருஷ்ணர் விவேகானந்ததர் பற்றியோ பேசியதாக எனக்கு நினைவு இல்லை . பாரத அரசியலையும் மற்றும் பல விஷயங்களையும் குறித்தே பேசினோம்.”

அரவிந்தரும் நிவேதிதா தேவியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது பற்றிய முழு விவரமும் தெரியாவிட்டாலும் நாடெங்கிலும் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய திட்டங்களைப் பற்றியே இருவரும் பேசியிருக்க வேண்டும்.

பல்வேறு சிறு சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்த புரட்சி வீரர்களை ஒன்றுபடுத்த வேண்டியது பற்றியும் அவர்கள் ஆராய்ந்திருக்க வேண்டும்.

இச்சந்திப்பின் விளைவாக பின்னால் அரவிந்தர் எழுதிய ஒரு குறிப்பே நமக்குப் பல விவரங்களைத் தெளிவுபடுத்துகிறது.

“சமீப காலத்தில் தோன்றியுள்ள புரட்சிவாத அமைப்புகள் சிலவும், புரட்சிவாதிகள் சிலரும் தனித்தனியாக செயல்பட்டு வந்ததை நான் கண்டேன். இவையாவற்றையும் இணைத்து பாரிஸ்டர் பி. மித்ரா அவர்களை வங்காளத்தில் புரட்சித் தலைவராகவும் நிவேதிதா தேவியை உள்ளடக்கிய ஐந்து பேர்களை ஒரு மத்தியக் குழுவாகவும் அமைத்து ஒரே ஸ்தாபனமாக உருவாக்க நான் முயன்றேன்”

நிவேதிதா பற்றிய தனது நூலில் பரிவ்ராஜிகா ஆத்மப்ராணா பின் கண்டவாறு எழுதியிருக்கிறார். – “ஒத்துழையாமையும் ஸாத்வீக எதிர்ப்பும் தோல்வி அடையும் கட்டத்தில் பஹிரங்கமான கலகத்திற்கு ஒரு தயாரிப்பாக ரகசிய புரட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும் என்ற அரவிந்தரின் முயற்சியை அவர் ஆதரித்தார்”

1905ல் பவானி மந்திரம் என்ற துண்டுபிரசுரத்தை வெளியிட்டார் அரவிந்தர்.

கானகத்தில் மலைகளுக்கு இடையே மறைவாக ஒரு கோயில் கட்டவேண்டும். கட்டிய கோயிலில் பவானி தேவியை ப்ரதிஷ்டை செய்யவேண்டும். இந்த பவானி வேறுயாருமில்லை . பாரத தேவிதான்.

பாரத தேவியின் அடிமை விலங்கை உடைத்தெறிய உறுதி பூண்டு தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்ய முன்வரும் பிரம்மச்சாரிகள் இந்த் பவானி மந்திரத்தில் ஆயுதம் ஏந்திப் போராடப் பயிற்சி பெறுவார்கள். பவானி மந்திரம் அரவிந்தரின் மனக்கோட்டையாகவே முடிந்துபோயிற்று. ஆனாலும் அவரது எண்ண ஓட்டம் என்ன என்பதைப் புரிந்து கொண்ட ஆங்கிலேய அரசு அதிர்ந்து போனது.

ஆயுதப் புரட்சியை மறைமுகமாக ஊக்குவித்த அரவிந்தர் விண்ணப்பங்கள் மூலம் விடுதலை பெற்று விடலாம். என்று வீண் கனவு கண்டு கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை, இரும்புக் கரம் கொண்டு மட்டுமே இங்கிலாந்தைப் பணிய வைக்க முடியும் என்று நம்பவைத்தார். விளைவு காங்கிரஸ் ஆங்கில அரசின் அஸ்திவாரத்தையே அசைக்கும் அளவுக்கு வலிமை பெற்றது. –

அரவிந்தர் தன் சகோதரர் பரீந்திர கோஷ் மூலம் வங்காள ராஜதானியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்துக் கொண்டார். விவேகானந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் உருவான “அனுசீலன் ஸமிதி” என்னும் புரட்சி அமைப்பு சிறந்த முறையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்புடன் நிவேதிதா நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்.

மாஜினியின் சரித்திரத்தில் கொரில்லாப் போர்முறை பற்றிய அத்தியாயத்தைப் பிரதி எடுத்து வங்காளம் முழுவதும் பரவச் செய்தார் நிவேதிதை.


வங்காள மாநில இந்திய தேசிய காங்கிரஸின் மாநில மாநாடு 1906 ஏப்ரல் 14ல் பாரிஸாலில் நடந்தது. இந்த மாநாட்டின்போது வந்தே மாதரம் கோஷத்தை எழுப்பியதற்காக, மாநாட்டுத் தலைவர்கள் மீது தொண்டர்கள் மீதும் தடியடிப் பிரயோகம் செய்தனர் பிரிட்டீஷ் போலீஸார்.

அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்றுவிட்டுத் திரும்பிய ஸுரேந்திரநாத் பேனர்ஜியை ஸியால்டா ஸ்டேஷனில் நிவேதிதை சந்தித்தார். அப்போது அவர் கூறியது. ம்

“தேச விடுதலைக்காகத் தாங்களும் மற்றவர்களும் சிந்திய ரத்தத்துளிகளிலிருந்து சிலிர்த்து எழுவார்கள் சிங்கக்குட்டிகள். விடுதலை விரைவில் கிடைக்க அஸ்திவாரம் இட்டுவிட்டீர்கள்” என்பதே.


1908 ஆம் ஆண்டில் விவேகானந்தரின் தம்பியான பூபேந்திரநாத் தத்தா நிவேதிதையிடமிருந்து மாஜினியின் சுயசரிதை மற்றும் “ஒரு புரட்சிவாதியின் நினைவுக் குறிப்புகள்” “ரஷ்ய மற்றும் ஃப்ரெஞ்சுக் சிறைக்கூடங்கள்” என்ற தலைப்புகளில் பீட்டர் குரோபோட்கின் எழுதியிருந்த இரு நூல்களையும் பெற்றிருந்தார். –

இளைஞர்களை விடுதலைப் போராட்டத்திற்குத், தயார் செய்யவேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்ட நிவேதிதாதேவி அக்காலத்தில் அவ்வளவாக பிரபலம் அடையாத புரட்சி வீரர்கள் மத்தியில் அதிகமாக அறிமுகம் ஆகியிருந்தார். விவேகானந்தரின் தம்பியான பூபேந்திரநாத் தத்தா, அரவிந்தர், பரிந்திரகோஷ் போன்ற இளம் புரட்சிவாதிகள் அவரிடமிருந்து உத்வேகத்தையும், உதவிகளையும் பெற்றார்கள்”

பூபேந்திரநாத் தத்தா 1907ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வருவதற்கு நிவேதிதா முயற்சிகளை மேற்கொண்டார். அவரைச் சிறையில் சந்தித்தார். அவருடைய தாய் புவனேஸ்வரியை அடிக்கடி சென்று பார்த்து அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்தார். ப

பூபேந்திரநாத் தத்தாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10000 ஐத் திரட்டிக் கொடுப்பதிலும் அவர் முன் நின்றார். ஒரு ஆண்டுக்கால சிறை வாசத்திற்குப் பின்னால் பூபேந்திரநாத் தத்தா அமெரிக்கா சென்றார். இதற்கு இரண்டு ஆண்டுக்காலம் கழித்து அமெரிக்கா சென்ற நிவேதிதா பூபேந்திரநாத், தாரக் நாத் மற்றும் அமெரிக்காவில் இருந்த பல புரட்சி வீரர்களைச் சந்தித்துப் பேசினார். –

அலிப்பூர் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்து விட்டு வெளியே வந்த அரவிந்தர் 1910 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சந்திரநாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கு சென்று அவரை நிவேதிதா தேவி சந்தித்துப் பேசி அரவிந்தர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு பத்திரமாகப் போய்ச் சேர்வதற்கு பிரபல விஞ்ஞானியான டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்களிடம் பணம் பெற்றுக் கொடுத்து அவரை பத்திரமாக அனுப்பிவைத்தார்.

நிவேதிதாவிற்கு சுவாமிஜி ஊட்டிய பாரத தேசப்பற்றே அவரை இந்த அளவிற்கு நமது தேச விடுதலைக்காக உழைக்கத் தூண்டியது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.


விவேகானந்தரிடம் குடிகொண்டிருந்த தேசபக்திக்கனல் அவரது சகோதரரான பூபேந்திரநாத் தத்தாவையும் ஆட்கொண்டது. பாரத தேசிய விடுதலை இயக்கத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். யுகாந்தர் என்னும் பத்திரிகை வாயிலாக அனல் கக்கும் பிரச்சாரம் புரிந்தார். வங்க இளைஞர்கள் அவரது எழுத்துக்களின் மூலம் எழுச்சி பெற்றார்கள்.

அரவிந்தர் தமது யுகாந்த வார இதழில் கொரில்லாப் போர் முறை பற்றிய விவரங்களை வெளியிட்டார். இதன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா மீது அரசு வழக்குத் தொடர்ந்தது.

தாங்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்தையே நியாயமான அதிகாரபூர்வமான அரசாக ஏற்கவில்லை என்பதால் அந்த அரசு தொடரும் எந்த வழக்கும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று இந்த பத்திரிகை துணிச்சலுடன் பதிலடி கொடுத்தது. பிரிட்ஷ் அரசின் அடக்குமுறைக் கணைகள் அவர்மீது பாய்ந்தன.

1907 ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைப்பட்டவுடன் யுகாந்தர் குழுவில் இடம் பெற்றிருந்த இளைஞர்கள் ஓய்ந்துவிடவில்லை.

“விடுதலை பெற வழி என்ன? (முக்தி கோன் பாதே) என்ற தலைப்பில் அவரது கட்டுரைகள் பல நூலாக வெளிவந்துள்ளன.

“ஆயுதங்களை ஏராளமாக ரகசியமாக தயாரிக்கவேண்டும், ஏராளமான குண்டுகள் புரட்சிவாதிகளின் ரகசியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படவேண்டும். இத்தகைய குண்டுகளைச் செய்யும் வித்தைகளையும் கற்றுவர ஹிந்து இளைஞர்கள் அன்னியநாடுகளுக்கு அனுப்பப்பெறவேண்டும். அயல்நாடுகளிலிருந்து ஆயுதங்கள் ரகசியமாக இறக்குமதி செய்யப்படவேண்டும்” பிரிட்டிஷாரின் படையில் உள்ள ஹிந்து ராணுவ வீரர்களின் துணை கொண்டு ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை உருவாக்குவது சாத்தியம். பிரிட்டிஷ் அரசின் படையில் பணிபுரியும் சுதேசிய வீரர்களின் ஆயுதங்கள் பிரிட்டீஷாருக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு உள்ளது” என்பன போன்ற தகவல்களை இந்நூலில் காணலாம்.

1940களில் மும்பையில் பிரிட்டிஷ் படையில் சுதேசிய வீரர்களின் கிளர்ச்சியும், இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியரிடம் கைதிகளாக பிடிபட்ட பிரிட்டிஷ் படையினரின் சுதேசிய வீரர்களைக் கொண்டு நேதாஜி உருவாக்கிய ஹிந்து தேசிய ராணுவமும்தான் உண்மையில் பிரிட்டிஷார் பாரதத்திற்கு விடுதலை அளிக்க முக்கிய காரணங்கள் என்பதை பலரும் அறிவர்.

விவேகானந்தர் நேரிடையாக அரசியலில் ஈடுபடுவதற்கு அவரது துறவு வாழ்வும், ஆன்மீகப் பணிகளும் தடையாக இருந்தன. ஆனாலும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் சுவாமி விவேகானந்தரையே தங்களின் வழிகாட்டி யாகக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்று உண்மை .

பாரதம், சிகரத்தை நோக்கி…

1947-ல் பாரதம் சுதந்திரம் அடைந்தது. ஆனால் நீண்ட காலத்திற்கு மேற்கு நாடுகளை கண்டு அஞ்சினோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனியாதிக்கத்தில் இருந்ததால், வெறும் பாம்பாட்டிகளும், பசி, பட்டினியும் நிறைந்த படிப்பறிவு இல்லாத நாடாகவே சித்தரிக்கப்பட்டது. பெண்களை கொடுமைப்படுத்துபவர்களாகவும், சாதி, மதத்தின் பெயரால் சண்டையும், சச்சரவும் நிறைந்த சிதறிப்போகும் ஒரு தேசம் என்றும் மேற்கு நம்மைப் புரிந்து கொண்டது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை இதே நிலைதான். ஆனால் இன்று….

பாரதம் சுயேச்சையான ராணுவத்திட்டங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா நாடுகள் தவிர மற்ற நாடுகள் நேட்டோ, சென்டே, ஸீடோ போன்ற பல அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. பாரதம் 11 லட்சம் வீரர்களை கொண்டு உலகின் இரண்டாவது பெரிய படை கொண்டுள்ளது.

செயற்கைகோள் ஏவுகணை தொழில் நுட்பத்தால் ஜெர்மனி, பெல்ஜியம், ஹங்கேரி போன்ற முன்னேறிய நாடுகளுக்காக பாரதம் செயற்கை கோள்களை அனுப்புகிறது.

1998 மே 11,13 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் போக்ரான் – II அணுகுண்டு சோதனை நடத்தி நமது வல்லமையை உலகுக்கு உணர்த்தியது.

Fast Breeder Reactor Technolgy உடைய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது (மற்ற நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்)

அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்த படியாக சூப்பர் கம்யூட்டரை உருவாக்கியுள்ளது. டாக்டர் விஜய்பட்கர் தலைமையில் இயங்கிய அறிஞர்குழு பரம் – 10,000 என்ற சூப்பர் கம்யூட்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் சூப்பர் கம்யூட்டர் ரூ.450 கோடிக்குமேல், பரம் கம்யூட்டர் 22.5 கோடி மட்டுமே.

கம்யூட்டர் தொழில் நுட்பத் துறையில் இன்போஸிஸ், விப்ரோ , ஹெ.சி.எல் போன்ற பாரத நாட்டு நிறுவனங்கள் உலக அளவில் புகழ் பெற்று திகழ்கின்றன. மென்பொருள் (Software) துறையில் முன்னனி நாடாக திகழ்கிறது.

பரப்பளவில் 8 வது பெரிய நாடான நமது நாட்டில் 5ல் 3பங்கு விவசாயத்திற்கு ஏற்ற நிலம். இது உலக சராசரியில் 10ல் 1பங்கு. விவசாய உற்பத்தியில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக நிகழ்கிறது. உலகளவில்

அரிசி,பால் உற்பத்தியில் முதலிடமும்

தேயிலை உற்பத்தியில் 30%

கோதுமை, காய்கறி உற்பத்தியில் இரண்டாவது இடம் இவ்வாறு உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஆட்டோமொபைல் இன்ஜினிரிங் துறையில் பாரதம் மிகவேகமாக முன்னேறி வருகிறது. உலகில் பெரிய 15 கார் கம்பெனிகள் பாரதத்திலிருந்து உதிரி பாகங்களை வாங்குகின்றன.

டாடா இண்டிகா கார்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வேத

ஹிரோ ஹோண்டா நிறுவனம் பைக் உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது.

மருந்து தயாரிப்பில் பாரதம் 4 வது இடம் பெற்றுள்ளது. பாரதத்தில் 75% விற்பனையாகி வந்த பண்னாட்டு கம்பெனிகளின் மருந்து இப்போது 30% குறைந்துள்ளதே மருந்து தயாரிப்பில் நமது வளர்ச்சியை காட்டுகிறது.

உலகில் மிகப்பெரிய ரயில்வே இந்திய ரயில்வே. ஒரு லட்சம் கி.மி ரயில் பாதை, ஏழாயிரம் ரயில் நிலையங்கள் உள்ளது.

சிமெண்ட் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது.

டாடா ஸ்டீல் நிறுவனம் எஃகினை வெப்ப முறையில் உருட்டி தரும் நிறுவனம். உலகிலேயே மிகக்குறைந்த செலவில் தயாரிக்கிறது.

சாதனை படைக்கும் சகோதரர்கள்

100 வருடங்களுக்கு முன் நமது மக்கள் பல நாடுகளுக்கு சென்றனர். அடிமைகளாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும் வேலை செய்தார்கள். கடுமையான உழைப்பு, முயற்சியால் இன்று உலகெங்கும் சாதனை படைத்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் 3.22 மில்லியன் பாரதியார்கள் இருக்கிறார்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 1.5%. அமெரிக்காவில் ஒரு இந்தியர், தேசிய சராசரியைவிட 28% அதிகமாக சம்பாதிக்கிறார்கள். மேலும் அமெரிக்காவில் உள்ள

டாக்டர்களில் மைல் 38%

NASA விஞ்ஞானிகள் 12%

மைக்ரோ சாப்ட் கம்பெனில் 36%

IBM – ல் 28%

லை stafபவம்

INTEL – 17%

பாதியர்கள் பணியாற்றுகிறார்கள்

சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் கம்பனியின் இணை நிறுவனர் வினோத் கௌசலே

பெண்டியம் ஹார்வேடுன் தந்தை விநோத் தரம்

MACH – 7 என்ற அமெரிக்க ராக்கெட் திட்டத்தின் பொறுப்பாளர் மீரட்டை சார்ந்த அஜய் குமார்

லக்ஷ்மி மிட்டல், ஸ்வராஜ்பால், ஹிந்துஜா, ஜடானியா சகோதரர்கள், போன்றோர் இங்கிலாந்தில் பெரும் செல்வந்தர்களாக திகழ்கின்றனர்.

டாக்டர் ஹர்கோவிந்த் கொரானா, டாக்டர் சுப்பிரமணியம் சந்திரசேகர், பேராசிரியர் அமர்த்தியா சென், வி.எஸ்.நய்பால் போன்றவர்கள் நோபல் பரிசு பெற்ற பாரத வம்சாவளியினர்.

பாண்டிச்சேரியில் பிறந்த சியாமளன் ஹாலிவுட்டில் மிக அதிகமான வருமானம் சம்பாதிக்கும் வசன கர்த்தா

ப்ரிதா பன்சால் வெள்ளைமாளிகைக்கு ஓர் ஆலோசகர்.

அமெரிக்காவின் நேசனல் இன்ஸ்ட்டியுட் ஆப் ஸ்டேன்டர்ஸ் அமைப்பாளர் இயக்குனர் ஆர்த்தி பிராபாகர்.

காளிச்சரன், நாஸர் ஹீசேனும் மேற்குகிந்தியா, இங்கிலாந்து கிரிகெட் அணிகளின் தலைவர்களாக இருந்தார்கள். கோல்ப் விளையாட்டில் பிஜியின் விஜய் சிங் சாதனை செய்தார்.

பல நாடுகளில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் பல பொறுப்புக்களை பாரத வம்சாவளியினர் உள்ளனர்.

பிஜியின் பிரதமராக மஹேந்திர சௌத்திரி இருந்தார்.

வாசுதேவ் பாண்டே ட்ரினிடாடின் பிரதமராக இருந்தார்

S.R.நாதன் – சிங்கப்பூர் குடியரசு தலைவர்

பரத் ஜக்தேவ் – கயானா குடியரசு தலைவர்

அனுருத் ஜகநாத் – மொரிஷியஸ் ஜனாதிபதி

தேவன் நாயர் – சிங்கப்பூர் பிரதமராக இருந்தார்

சிவசாகர் ராம் கூலம் – மெரிஸியஸ் பிரதமராக இருந்தார்.

க்ஷிதத் ராமபால் – காமன் வெல்த் பொது செயலாளர்.

மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் கங்கை ஆற்றில் இரு கைகளால் அள்ளி எடுத்த நீர் போலத்தான். இந்தப் பட்டியலுக்கு முடிவே கிடையாது. ஆங்கில வரலாற்று அறிஞர் ஆர்னால்டு ஜோசப் டாயின்பீ, “வரலாற்றின் மிக அபாயகரமான இந்தத் தருணத்தில் பண்டைய பாரதத்தின் வழி தான் (அசோகர், ராமகிருஷ்ணர், காந்தி) மீட்புக்கான ஒரே மார்க்கம். மோதல் இல்லாமல், ஒரே குடும்பமாக மனித இனம் வளர்வதற்கான மனப்பான்மையும் உணர்வும் இந்த மார்க்கத்தில் தான் இருக்கிறது. அணுகுண்டு யுகத்தில் மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே வழி இதுதான்.” என்கிறார். உலகத்தில் பல அறிஞர்களின் எதிர் பார்ப்பும் இதுவே.

நமது புனித வேதங்களில் தறப்பட்டுள்ள உலகை மேன்மையடையச் செய்வோம் (க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்) என்ற கூற்று இப்போது உண்மையாகி வருகிறது. நாம் தன்னம்பிக்கையுடன், தற்பெருமை கொண்டு நமது முன்னோர்கள் காட்டியுள்ள பாதையில் சென்று உலகை மென்மையுறச் செய்வோம் என்ற உறுதி எடுப்போம்.

பாரத் மாதாகீ ஜெய்!

பாரில் உயர்ந்த பாரதம்

“பொன்னும் மணியும் மிகப் பொங்கி நின்ற இந்நாட்டில்
அன்னமின்றி நாளும் அழிவார்கள் எத்தனை பேர்!
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவார் இந்நாட்டினிலே.”

– என்று நமது நாட்டின் இன்றைய பொருள் வறுமை, சிந்தனை வறுமை இரண்டையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிச் சென்றிருக்கிறார் மகாகவி பாரதியார். இன்று நாமும்தான் பார்க்கின்றோம்.

இது வீழ்ச்சிதான். ஆனால் எவ்வளவு உயரத்திலிருந்து வீழ்ந்திருக்கிறோம் என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்த்து புரிந்து கொண்டால் பதைபதைக்கும் நமது உள்ளம். உலகமே வியந்து போற்றி, வணங்கிய அன்றைய பாரதத்தை பல நாட்டு அறிஞர் பெருமக்கள் கண்ட நோக்கில் காணுவோமானால் அதன் உண்மை உறுதிப்படும் நமக்கு.

மேலும் இந்த நாட்டின் படித்த கூட்டத்திற்கும், சிந்தனையாளர் கோஷ்டிக்கும் ஒரு வியாதி உண்டு. எந்த விஷயமானாலும் சரி அயலார், அதுவும் மேற்கத்திய நாட்டினர் சொல்வதுதான் இவர்கள் செவி வழியே சிந்தனையில் புகும். நாடு சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிய பின்பும் இன்றும் இது பொருந்தும். எனவே நமது நாட்டைப் பற்றி உலகின் உயர்ந்த சிந்தனையாளர்கள், வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்துள்ளோம். நமது மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டம், தன்மான உணர்வு எழுப்பவும். நமது முன்னோர்களின் சாதனைகளை அறிந்து கொள்ளவும் உதவும். அவர்களை மிஞ்ச வேண்டும் என்ற வேகமும் எண்ண எழுச்சியும் நம் மனதில் ஏற்பட இச்சிறு நூல் உறுதுணை புரியும் எனக் கருதுகிறோம்.

பாரில் உயர்ந்த பாரதம்

பாரதம் என்றால் ஒளியில், ஞானத்தில் திளைத்தல் என்று பொருள். பெயருக்கேற்ப நம் நாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய சாதனைகள் செய்துள்ளது. வானவியல், கணிதம், வேதியியல், பொறியியல், இசை, விவசாயம், உயிரியல், அணு விஞ்ஞானம், மருத்துவம், கலை போன்ற பல துறைகளையும் நமது முன்னோர்கள் அலசி ஆராய்ந்து அந்தத் துறைகளில் உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர். அவர்கள் வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் தன் நிகரற்று விளங்கினர். சத்தியம், வீரம், அன்பு போன்ற பண்புகளை உயிரினும் மேலாக மதித்துப் போற்றி வந்தனர்.

கல்வி

நமது முன்னோர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். காஞ்சி, நாளந்தா, தட்சசீலம், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் சர்வதேச பல்கலைக் கழகங்கள் இருந்தன. பல்லாயிரம் நூல்கள் கொண்ட நூல்நிலையங்கள் இவ்விடங்களில் அமைந்திருந்தன.

கி.மு.700 இல் உலகின் முதல் பல்கலைக் கழகம் தட்சசீலத்தில் அமைந்திருந்தது. அங்கு ஒரு சமயத்தில் 30, 000 மாணவர்கள் 146 துறைகளில் கல்வி பயின்றனர். 2,000 ஆசிரியர்கள் இருந்தனர். காலை

பக்தியார் கில்ஜியின் படையெடுப்பின் போது அவனது படையினர் நாளந்தா நூலகத்திற்கு வைத்த தீ, பல நாட்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

18 ஆம் நூற்றாண்டில் கூட மேற்கு வங்கத்தில் 80,000 பள்ளிகள் இருந்ததாகவும் 400 பேர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாகவும் தரம்பால் என்ற அறிஞர் ‘Beautiful Tree’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவம்

பாரத நாட்டின் மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறைகள் மிகத் தொன்மையானவை.

இன்று உலக நாடுகள் அனைத்தும் இருகரம் நீட்டி வரவேற்கும் யோகாவும், தியானமும் பாரத ரிஷிகள் உருவாக்கிய அரிய அறிவியல் நுட்பங்கள்.

மனித குலத்தின் முதல் மருத்துவ அறிவியலான ஆயுர்வேதம், ரிக்வேதத்தின் உபவேதம் ஆகும். அதில் உடற்கூறியல், மருந்தியல் பற்றி விளக்கங்கள் உள்ளன.

சரக சம்ஹிதையில் 20,000 மூலிகைகளைப் பற்றிய ஆய்வு அடங்கியுள்ளது.

சுஸ்ருத சம்ஹிதையில் உடற்கூறியல், அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் அதற்கான கருவிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. இதன் ஆசிரியரான சுஸ்ருதர் உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் வல்லுநர்.

ஸ்ரீமதி மெனிங் என்னும் அறிஞர் ஹிந்துக்களின் அறுவை சிகிச்சை கருவிகள், ஒரு மயிரிழையை நெட்டுவாக்கில் வகிர்ந்து தள்ளக்கூடிய அளவு கூர்மை உடையனவாக இருந்தன என குறிப்பிடுகிறார்.

“ஜென்னர் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே அம்மைப்பால் தயாரித்தலும் அம்மை குத்துவதிலும், அம்மை நோய் தடுப்பதிலும் ஹிந்துக்கள் வல்லுநர்களாக விளங்கினர்” என்று 1905 இல் சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆம்பல் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

பிளேக் நோய் எங்காவது தோன்றினால், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நோய்க் கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி அழித்து நோயைத் தடுக்கும் முறை ஹிந்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதாக கர்னல் கிங் (சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர்) குறிப்பிடுகிறார்.

தமிழ் நூல்களிலும் பல சான்றுகள் உள்ளன. தழும்பின்றி காயங்களை ஆற்றும் சிகிச்சை பற்றி புறநானூறும், கரு அமையும் காலம் பற்றி தொல்காப்பியமும் கூறுகின்றன. ‘தொய்யில் எழுதுதல்’ என்பது திருமுருகாற்றுப்படை கூறும் “அழகியல்” பற்றிய குறிப்பு. “இரும்புச் சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்த்து மருந்து கொள் மரத்தின் வாள்வடுமயங்கி வடுவின்றி தழும்பின்றி வடித்த யாக்கையன்’ என்ற குறிப்பில் அரிய தகவல் பொதிந்துள்ளது.

கணிகம்

பூஜ்யம் (0), எண்ணிலி α π இவற்றின் துல்லியமான மதிப்பை நம் முன்னோர்கள் கண்டுபிடித்திருந்தார்கள்.

1 முதல் 9 வரையிலான எண்கள் அராபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் சொல்வதை நமது தேச பாடநூல்களிலும் அப்படியே கற்பிக்கின்றோம். ஆனால் அராபிய வரலாற்றாசிரியர்களோ இவற்றை ஹிந்துக்கள் தந்த கொடை என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். ‘ஹிந்தஸா’ என்று இவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்.

கணிதத்தை பல வகையாகப் பிரித்துள்ளனர்.

வியக்த கணிதம் – கால்குஸ்
அவ்வியக்த கணிதம் (அல்லது)
பீஜ கணிதம் – அல்ஜீப்ரா
க்ஷேத்ர கணிதம் – திரிகோணமிதி

“லீலாவதி சம்ஹிதை” என்ற நூல் நமது முன்னோரின் கணிதப் புலமையை பறைசாற்றும் நூல்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய மிகப் பெரிய எண் 1053. இதை கி.மு. 5000 ஆவது ஆண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய மிகப்பெரிய எண் 106. நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய எண் 1012 தான்.

சமஸ்க்ருதத்திற்கு பாணினி உருவாக்கிய கட்டமைப்பின் காரணமாக அது இன்று கம்ப்யூட்டருக்கு மிகவும் ஏற்ற ஊடகமாக ஏற்கப்படுகிறது.

வானசாஸ்திரம் :

சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை கோள வடிவம் கொண்டவை என்பது வேதகாலத்திலேயே நமது முன்னோர்கள் அறிந்திருந்த உண்மை . உலகம் உருண்டை என்று கோபர்நிகஸ் சொல்வதற்கு 1,600 ஆண்டுகள் முன்பே ஆர்யபட்டர் தனது நூலில் இதை விவரித்திருக்கிறார்.

நமது காலக் கணக்கு மிகவும் தொன்மையானது. பூமி சூரியனை சுற்றும் காலத்தைக் கணக்கிட்டு அதை 12 கோள்களாகப் பிரித்து, ஒரு வருடத்தை 12 மாதங்களாகப் பிரித்தனர். பூமி ஒரு கோளிலிருந்து அடுத்த கோளுக்கு மாறும் நாளே மாதப் பிறப்பு.

பூமி சூரியனை சுற்ற ஆகும் காலத்தை அறிஞர் ஸ்மார்ட் கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாஸ்கராச்சாரியார் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்லிவிட்டார். (365.258756484 நாட்கள்.) மயம்

ஒரு விநாடி நேரத்தை 33.750 பகுதிகளாகப் பிரித்து அதை ‘த்ருதி’ என்ற நுண்ணிய கால அளவை கணக்கிட்டுள்ளார்கள்.

கட்டடக் கலை

இசைபாடும் துண்கள், நிழல்படாத கோபுரம், குறிப்பிட்ட நாளில் மட்டும் சூரியனின் கதிர்கள் தெய்வத்தைத் தொடுமாறு அமைக்கப்பட்ட கோயில்கள், கோயில் உச்சியில் இடிதாங்கி, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை போன்றவை நமது கட்டடக் கலைக்குச் சான்றாக இன்றும் இருக்கின்றன.

மதுரையில் கோயிலை மையமிட்ட நகரமைப்பு; சீரான ஊர் அமைப்பு, நேரான சாலைகள், மூடிய சாக்கடைகள், குளம் என்று சுகாதார முறையில் அமைக்கப்பட்ட நகரங்கள் ஹரப்பா, மொகஞ்சோதரா.

“பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஹிந்துக் கட்டடங்கள் உறுதி குலையாமல் நிற்கின்றன” என்று தார்ன்டன் குறிப்பிடுகிறார்.

விவசாயம் :

5,000 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் வளம் குன்றா நிலங்கள்.

கிராமந்தோறும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மூலம் சிறந்த நீர் நிர்வாகம். குடிமராமத்து என்ற தமிழகப் பாசனநீர் பங்கீட்டு, பாதுகாப்பு முறை தொன்மையானது.

உணவுப் பொருட்களை விற்பனை பொருளாக்காமல் எல்லோருக்கும், ஏன் எல்லா உயிரினங்களுக்கும் கிடைக்கும் வகையிலான விநியோக முறை.

உலகிலேயே பாசனத்திற்காக முதன்முதலில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரத்தில் தான் அணை கட்டப்பட்டது.

பொருளாதாரம்

அதர்வண வேதம், மகாபாரதத்தில் விதுர நீதி, பீஷ்மர் தருமருக்கு அளித்த உபதேசம் (சாந்தி பர்வம்), சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்றவை நமது பண்டைய பொருளாதார நூல்கள். –

இங்கு நாணயங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டது. “கி.மு. 800 -க்கும் முன்பே ஹிந்துக்கள் நாணயங்களைப் பயன்படுத்தி வந்தனர்” என்று பேராசிரியர் பிரன்ஸெப் என்பவர் கூறுகிறார்.

சுக்கிர நீதி – தொழிலாளர் நலன், வருங்கால வைப்புநிதி, காப்பு நிதி போன்ற கருத்துக்களைக் கூறுகிறது.

17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலேயர்கள் வரும்வரை பாரதம் உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது.

வியாபாரம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் வாரச்சந்தை முறை, திருவிழாக் காலங்களில் சிறப்பு சந்தை முறைகள் இருந்தது.

அரபு, கிழக்கு நாடுகளுடன் நவரத்தினம், ஏலம், கிராம்பு மற்றும் இரும்பு, எஃகினாலான போர்க்கருவிகள் கப்பல் மூலம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

வாஸ்கோடகாமா தென்னாப்பிரிக்காவின் கடல் ஓரம் நின்றிருந்தார். உப்புக் காற்று திடீரென வாசனைக் காற்றாக மாறியது. எப்படி என கேட்டார். ‘அதோ தெரிகிறதே அந்தக் கப்பல்தான் காரணம். அதில் ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் வருகின்றன’ என்றனர். இந்தக் கப்பல் இவ்வளவு வாசனையா என வியந்து அதனைப் பின்தொடர்ந்து நமது நாட்டிற்கு வந்ததாக தனது டைரிக் குறிப்பில் வாஸ்கோடகாமா எழுதியுள்ளார்.

நெசவு

டாக்கா மஸ்லின், மிகச் சிறந்த பருத்தி ஆடைகள், பட்டு, உயர்தர சால்வைகள், ரத்தினம் பதித்த ஜமுக்காளம் போன்றவை இங்கு தயாராயின.

நெசவுத் தொழில் உன்னத நிலையில் கிராமந்தோறும் லட்சக்கணக்கான குடும்பங்களை வாழவைத்தது.

உலோகவியல்

4,000 ஆண்டுகளுக்கு முன்பே தரமான உருக்கு தயாரானது என்பதற்கு டில்லியில் 10 டன் எடையுள்ள 24 அடி உயரமுள்ள துருப்பிடிக்காத தூண் சாட்சியாக உள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன எஃகு உற்பத்திக் கூடம் சென்னிமலை அருகில் கொடுமணல் என்ற ஊரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

1896 வரை உலகத்திலேயே பாரதத்திலிருந்து தான் வைரம் வந்ததாக அமெரிக்க வைர ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறது.

பேராசிரியர் வில்சன், “அண்மைக் காலத்தில்தான் இங்கிலாந்தில் நாம் இரும்பை உருக்கி வார்க்கும் கலையைக் கையாண்டு வருகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இரும்பை உருக்குகிற, இணைக்கின்ற மற்றும் எஃகு இரும்பை உருவாக்கிற கலையை மிகப் பழங்காலம் முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கையாண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

விமானம், கப்பல் கட்டும் தொழில் நுட்பம்

பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரம் என்ற நூல் 339 வகை கப்பல், 703 வகை விமானம், 101 வகை ஊர்திகள் பற்றி குறிப்பிடுகிறது. அந்நூலில் ஆளின்றி தூரக்கட்டுப்பாட்டில் இயங்குபவை, ஒலியை விட வேகமாகச் செல்பவை, ஒலியால், சூரிய ஒளியால், ரசாயன மின்விசையால் இயங்குபவை என பலவித ஊர்திகள் பற்றி குறிப்பு உள்ளது. ராடருக்கு இணையான கருவி, தீய நச்சுக் கதிர்களிலிருந்து விமானியை காக்கும் ‘பிஞ்டா’ கண்ணாடி, ‘மங்கா’ என்னும் கண்ணுக்குத் தெரியாத கதிர்மூலம் எதிரி விமானத்தை வீழ்த்தும் தொழில் நுட்பம், வெப்பம் உறிஞ்சி, உலோகக் கலவைகளைப் (சோமக, சௌண்டலீகா, மௌர்த்விசா) பயன்படுத்தி செய்த விமானங்கள் போன்றவை பற்றியும் குறிப்புகள் உள்ளன.

டாக்டர் ரோபர்ட்டோ பினோட்டி என்ற விமான சாஸ்திர விஞ்ஞானி, “இந்நூல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இவையெல்லாம் வெறும் கற்பனை என்று என்னால் ஒதுக்க முடியவில்லை ” என்று கூறுகிறார்.

கப்பல் கட்டும் கலை சிந்து நதி பாய்ந்த பகுதியில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறப்பாக இருந்துள்ளது. ‘நவ் கத்’ என்ற சம்ஸ்க்ருத சொல்லிலிருந்தே Navigation என்ற ஆங்கில வார்த்தை பிறந்தது. ‘நேவி’ என்ற வார்த்தை ‘நௌ’ என்ற வார்த்தையிலிருந்து மறுவி வந்ததே. தமிழில் நாவாய் என்று சொல்லப்படுகிறது. ‘நவ்கா’ என்றால் படகு.

போஜராஜனால் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் ‘யுக்தி கல்பதரு’. இந்நூல் ‘சாமன்யா’ எனும் ஆறுகள் கடக்கும் கப்பல், ‘விசேஷா’ எனும் கடல் கடக்கும் கப்பல் என இரு வகைக் கப்பல்கள் பற்றி விளக்குகிறது. தங்கும் வசதிகளையொட்டி சர்வ மந்திரா, மத்திய மந்திரா, அக்ர மந்திரா என்று மேலும் மூன்று வகையாகப் பிரிக்கிறது. ஓர் அஜந்தா ஓவியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கப்பல் பயணம் செய்யும் காட்சி உள்ளது.

சம்ஸ்க்ருத இலக்கண ஆசிரியரான பாணினி (கி.மு. 7 ஆம் நூற்றாண்டு) தமது நூலில் பல படகுகளை உத்சங்க, உடுப, உதுபுத பீடகா என்ற பெயர்களில் குறிப்பிடுகிறார். 8

இங்கிலாந்தில் உள்ள கப்பல் கட்டுவோர் நிறுவனத்தின் உறுப்பினர் திரு. ஜெ.எல். ரெய்டு அவர்கள், “பண்டைய ஹிந்து ஜோதிடக் கலைஞர்கள் ஒருவகையான காந்தங்களைப் பயன்படுத்தி அடிக்கல் நாட்டுவதற்கும், பிற சமயச் சடங்குகள் நடத்துவதற்கும் வடதிசையை நிர்ணயம் செய்வதுண்டு. பண்டைய ஹிந்து திசையறி கருவியில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு இரும்பு மீனைவிட்டு அமைத்தனர். அதனை ‘மச்சயந்திரா’ என்று அழைத்தனர் எனக் கூறியுள்ளார்கள்.

கலைகள்

ஆய கலைகள் 64. அவை வளர அரிய பணி செய்துள்ளனர். மக்கள் மனங்களைப் பண்படுத்தும் கருவியாக கலைகளைப் பயன்படுத்தினர்.

சிற்பக்கலை : வானுயர்ந்த கோபுரங்கள், தஞ்சைப் பெரிய கோயில், மகாபலிபுரம் போன்ற கற்கோயில்கள், எல்லோரா குகைக் கோயில், கஜுராஹோ, ஒரிசாவின் கோனார்க் போன்றவை.

ஓவியக்கலை : அஜந்தா, எலிபண்டா, புதுக்கோட்டை சித்தன்னவாசல் போன்ற குகை ஓவியங்கள், நமது வீட்டு வாசலில் காலையில் தாய்மார்கள் போடும் கோலங்கள். 08

இசைக்கலை : நரம்பு இசைக் கருவிகளான வீணை, யாழ், தம்புரா; தோல் இசைக் கருவிகளான உடுக்கை, மிருதங்கம் போன்றவை.

மனித உடலும் மனமும் ஆன்மாவும் ஒருங்கிணைந்து 7 ஸ்வரங்கள் எழுந்தன. நேரம், மனநிலை ஆகியவற்றிற்கு ஏற்ற பல ராகங்களைத் தொகுத்தனர்.

ஆனந்தம் – ஆனந்த பைரவி

வீரம் – கம்பீர நாட்டை

பக்தி – தன்யாஸி

தாலாட்டு – நீலாம்பரி

அதிகாலையில் – பூபாளம்

மாலையில் – வசந்தா

சோகம் –

நாட்டியக்கலை : நவரச உணர்ச்சிகளை முகபாவத்தில், விரல் முத்திரைகளில் வெளிப்படுத்தும் பரதக்கலை, கதகளி, குச்சுபிடி, ஒடிசிநனய்தல் உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

வாழ்வியல்

நமது முன்னோர்கள் வாழ்வியலில் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியதுடன் மக்கள் மனங்களுக்கு அணிகலனாகத் திகழும் உயர் பண்புகளையும் கடைப்பிடித்து வாழ்ந்தனர். அன்பு, தியாகம், வீரம், ஒழுக்கம், இயற்கையுடன் இணைந்த ஆரோக்கிய வாழ்வு போன்ற பண்புகளால் உலகிற்கே வழிகாட்டி வாழ்ந்தனர்.

“வீட்டுக்குப் பூட்டுப் போடாத நாடு இது” என்றார் சீனப் பயணி யுவான் சுவாங்.

– “உலகிலேயே மிகவும் நேர்மையானவர்கள் பாரதீயர்கள்” என்கிறது ‘ரீடர்ஸ்’ டைஜஸ்ட்’ பத்திரிகை நடத்திக் கருத்துக் கணிப்பு.

இரண்டாம் நூற்றாண்டில் நமது நாட்டிற்கு பயணியாக வந்த அர்ரியன் என்பவர் ஹிந்துக்கள் பொய் சொல்லுவதில்லை என்றார்.

ஆங்கில நீதிபதி கர்னல் ஸ்லீமன் என்பவர் கூறுகிறார்: “நூற்றுக்கணக்கான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். ஒரு பொய் சொல்லியிருந்தால் தனது சொத்து, சுதந்திரம், உயிர் ஆகிய அனைத்தும் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் இந்தியர்கள் பொய் சொல்ல மறுக்கிறார்கள்.”

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷம்சுதீன் அப்துல்லா என்ற முஸ்லிம் அறிஞர் கூறுகிறார்: “ஹிந்துக்கள் எண்ணிக்கையில் கடல் மணல் போல் கணக்கற்றவர்கள்; ஏமாற்றும் வேலைகளுக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். எவர்மீதும் அட்டூழியம் நடத்தமாட்டார்கள். வாழ்வில் ஆசையோ, மரணத்தில் அச்சமோ அவர்களைத் தீண்டியதில்லை.”

“பண்பாளர்கள் இருப்பதால்தான் உலகம் அழிந்து போகாமல் இருக்கிறது” என்று திருவள்ளுவ முனிவர் அன்றே கண்டு சொன்னது அகச்சான்று. லியோ டால்ஸ்டாய் திருக்குறளை “ஹிந்து திருக்குறள்” என்கிறார்.

பார் போற்றும் பாரதம்

– “பாரதம் நம் இனத்தின் தாயகம். சம்ஸ்க்ருத மொழி அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய். பாரதம் நம் தத்துவ ஞானத்தின் தாய்; மற்றும் அரேபியர் மூலமாக நாம் பெற்ற கணிதக் கலையின் அன்னை ; புத்தர் மூலமாக அவன் வெளியிட்ட லட்சியங்களை கிறிஸ்தவ சமயம் மேற்கொண்டுள்ளதால் அச்சமயத்திற்கும் அன்னை அவளே; பண்டு தொட்டுப் பழகிவரும் கிராம மரபினால் பாரதம் சுயாட்சி முறைக்கும் ஜனநாயகத்திற்குமே தாய். அன்னை பாரதம், பலவகையில் நம் அனைவருக்கும் தாய் (India, mother of us all.)”

வில் டுரண்ட் (அமெரிக்கா)
‘The Story of Civillisation’ என்ற நூலில்.

“இயற்கை வளங்கள் பலவும் நிறைந்து வலிவும் வனப்பும் ஒருங்கே கூடிய நாடு. சுருங்கக் கூறின் ‘பூலோக சுவர்க்கம்’ என்று அழைக்கக்கூடிய நாடு ஏதேனும் உலகில் உள்ளதோ என்று நான் தேடினால், அதற்கு உலகில் விடையாக பாரதமே என் கண்முன் தோன்றுகிறது.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லர்
‘Sacred Books as the East’ என்ற நூலில்.

“மனிதகுலம், தன் அறிவாற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ள இடம், அதனால் மிகவும் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து ஆராய்ந்து, அவற்றில் ஒரு சிலவற்றிற்குத் தீர்வும் கண்டுபிடித்துள்ள நாடு. பிளாட்டோ, காண்ட் போன்ற அறிஞர்களின் நூலை அறிந்தவர்களும் அக்கறையுடன் அறிந்து கொள்ள வேண்டிய நாடு உலகில் எங்கேனும் உளதோ எனின், பாரத நாட்டையே நான் சுட்டிக் காட்டுவேன்.”

பேராசிரியர் மார்க்ஸ்முல்லர்.

“ஐரோப்பாவில் வாழும் நாம், கிரேக்க, ரோமானிய யூத இனங்களின் சிந்தனையில் ஊறி வளர்ந்த நாம், நம்முடைய அகவாழ்வு இன்னும் பரந்ததாக அமைய, குறுகிய கோட்பாடுகள் இல்லாது விரிந்து வளர, உண்மையிலேயே மானுட வாழ்வு வாழ, இன்று மட்டும் அல்ல, என்றைக்கும் அழிவற்ற வாழ்வு பெற வகை செய்வதற்காக நம் வாழ்க்கைக் குறைகளை நீக்கி நிறை செய்வதற்கு, வழிகாட்டியான ஏதேனும் நாடு உளதா என்று என்னைக் கேட்டால், பாரத நாட்டையே நான் சுட்டிக்காட்டுவேன்.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லர்

“நெடிதுயர்ந்த இரானியப் பீடபூமியில், செரிந்தியா பாலைவனச் சோலையில், திபெத்தில், மங்கோலியா, மஞ்சூரியாவில், பண்டை நாடுகளாம் சீனாவில், ஜப்பானில், மான், கெமர் என்ற கூட்டத்தினர் வாழும் இந்தோனேஷியாவில் வாழும் மக்களின் வாழ்வில் பாரதம் உயர்ந்த தன் கலாசாரத்தின் பதிவுகளை, அவர்கள் சமயத்துறையில் மட்டிலும் அல்லாமல், கலை இலக்கியத் துறைகளிலும் ஏற்படுத்தியுள்ளது.சுருங்கக் கூறின் ஆத்மீக வெளிப்பாட்டில் எல்லாம் பாரதம் தன் பதிவை ஏற்படுத்தியுள்ளது.”

எம்.ரெனேக் ரௌசட் (பிரெஞ்சு அறிஞர்)

“கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்து பகுதியில் வாழ்ந்த மக்கள் தோலுடையணிந்து, உடலில் சாயம்பூசி காடுகளில் திரிந்து கொண்டிருந்த அந்தப் பழைமையான காலத்திலேயே பாரதீயர்கள் தலைசிறந்த நாகரிக வாழ்க்கை நடத்தி வந்தனர்.”

லார்டு மெக்காலே (இங்கிலாந்து)

“1907 ஆம் ஆண்டு போகோஸ்கோல் என்ற இடத்தில் ஒரு கல்வெட்டினை, புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஹ்யூகோவின்கலர் என்னும் ஜெர்மானியர் கண்டுபிடித்தார். அதில் கி.மு. 1400 இல் மத்திய ஆசியாவில் போரிட்டுக் கொண்ட இரு கூட்டத்தினரிடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் ஹிட்டைடிஸ் மற்றும் மிதானிஸ் என்ற இரண்டு கூட்டத்தினரும் மித்ரா, இந்திரா, வருணா, அசுவினி போன்ற தேவதைகளைப் போற்றி, இவ்விரு கூட்டத்தின் அரச குடும்பங்களிடையே ஏற்பட்டுள்ள திருமணத்திற்கு ஆசியளிக்க வேண்டுவதாக அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

லின்யூடங்
‘பாரதத்தின் ஞானம்’ என்ற நூலில்.

“பாரதத்தில் வற்றாத பெருகி ஓடும் விஞ்ஞான அறிவென்னும் நதியின் ஒரு சிறு காட்சியினையே நாம் அறிந்துள்ளோம்.

உலகம் உய்வதற்கான அறிவு வளர்ச்சி ஞானத்தை அள்ளி வீசுவது பாரதம். புத்த பெருமான் தோன்றுவதற்கு முந்தைய காலத்திலேயே சாங்கிய தத்துவத்தையும் அணுக் கொள்கையையும் உலகிகு அளித்தது பாரதம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தின் கணிதக் கலையும், விண்வெளிக் கலையும் ஆர்யபட்டரின் ஆற்றலில் மலர்ச்சி கண்டது. ஏழாம் நூற்றாண்டில் பிரமகுப்தா அரிச்சுவடி கணிதத்தின் ஆழ்ந்த அறிவினால் சிறந்த வான ஆராய்ச்சி சாதனங்களை உருவாக்கினார். பன்னிரெண்டாம் நூற்றாண்டு பாஸ்கராச்சாரியர் மகளின் புகழ்மிக்க கணித ஞானத்தைக் கண்டு உலகமே வியந்தது.”

பேராசிரியர் ஒகஹுரா

”மனித குலம் தோன்றிய நாளிலிருந்து அவனது கற்பனைகள் எல்லாம் நனவாக்கப்பட்ட ஒரு இடம் உள்ளதென்றால் அது பாரத நாடாகும்.”

ரொமென் ரோலண்டு

“பருத்தி பாரத நாட்டுச் செடி. இங்கிருந்துதான் இச்செடியைப் பற்றிய ஞானமும், அதனைப் பயிராக்கும் முறையும் உலகின் பல பாகங்களுக்கும் சென்றன. இச்செடிக்கான பெயர் பாரத நாட்டிலிருந்து கடன் வாங்கி வைத்த பெயர்களேயாகும். சம்ஸ்க்ருதத்தில் பருத்திக்கு ‘கர்பஸா’ என்று பெயர். இது ஹீப்ருவில் ‘கபாஸ்’ என்றும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ‘கர்பசோஸ்’ அல்லது ‘கர்பாசோஸ்’ என்றும் அழைக்கப் படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய மம்மிகளுக்குப் பாரத நாட்டின் பருத்தி ஆடை அணிந்திருந்தனர்.”

சமன்லால்

‘தன் நாட்டிலிருந்து ஒரு படைவீரனைக்கூட அனுப்பாமல் இருபது நூற்றாண்டுகளாக, பாரதம் கலாசாரத் துறையில், சீனாவை வெற்றி கண்டு ஆட்சி நடத்தி வந்துள்ளது. இந்தக் கலாசார வெற்றியைப் பாரதம் என்றும் சீனாவின்மீது திணிக்கவில்லை. இவையனைத்தும், சீனா தானாகவே விரைந்து தேடி, பாரதம் நாடி வந்து, கற்று, ஏற்றுக்கொண்ட அனுபவம் ஆகும்.”

ஹூசி
(அமெரிக்காவில் இருந்த சீன நாட்டுப் பிரதிநிதி)

“இந்தியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள்தான் எண்ணுவதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த அறிவு இல்லாமல் எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் சாத்தியமாகியிருக்காது.”

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

“இந்தியா சமயங்களின் பூமி. மனித இனத்தின் தொட்டில். மனித மொழியின் பிறப்பிடம். வரலாற்றின் அன்னை . புராணங்களின் பாட்டி. மரபுகளின் கொள்ளுப் பாட்டி. வரலாற்றின் மிக மதிப்புவாய்ந்த அம்சங்கள் இந்தியாவில்தான் குவிந்திருக்கின்றன. உலகில் எல்லா மனிதர்களும் காண விரும்பும் இப்பூமியை ஒருமுறை பார்த்தவர்களை இதர உலகின் ஒட்டுமொத்த காட்சிக்கூட கவர முடியாது.”

மார்க் ட்வெய்ன்

இணையற்ற ஹிந்துத்துவம்

ஆர்தர் ஸ்கோபன் ஹீவர் : ”உபநிஷதங்கள் மிகவும் பயனுள்ளவை. மனித சிந்தனையை மேம்படுத்துபவை. உலகம் முழுவதிலும் இதற்கு இணையான நூல் எதுவும் இல்லை .

ஹென்றி டேவிட் தோரோ : “வேதத்திலிருந்து நான் படித்த பகுதிகள், மிகுந்த உயரத்திலிருந்து புனிதமான நதி என்மீது பாய்ந்த அனுபவத்தைத் தருகின்றது.”

கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ் : “இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு அஸ்தமித்து வெகுகாலம் கழிந்த பிறகும், வளமையும் அதிகாரமும் தந்த பிற ஆதாரங்கள் மனித இனத்தின் நினைவிலிருந்தே அழிந்த பிறகும் பகவத்கீதை போன்ற எழுத்துக்கள் உயிர் வாழும்.”

ரால்ஃப் வால்டோ எமர்சன் :”எல்லா நாடுகளிலுமே பிரபஞ்சத்தின் அடிப்படை ஒற்றுமை பற்றிய சிந்தனைகள் உள்ளன. பிரார்த்தனையின் பேரின்பமும், பக்திப் பரவசமும் எல்லா உயிர்களையும் ஒரே உயிரோடு சங்கமிக்கச் செய்கிறது. வேதம், கீதை, விஷ்ணு புராணம் போன்ற ஹிந்துக்களின் புனித நூல்களில் இந்த மனநிலை பெரிய அளவில் வெளிப்படுகிறது.

கௌண்ட் ஜான்ஸ்டன் : ‘தி ஆரிஜின் ஆப் ஹிந்துயிஸம்’ என்ற நூலில் “ஹிந்துக்களுடைய சமயம், அவர்களுடைய நாகரிகம் இவற்றின் தொன்மையோடு போட்டி போட உலகில் வேறு ஒரு நாடும் கிடையாது” என்று கூறுகிறார்.

விக்டர் கஸின் : ‘ஹிஸ்டரி ஆப் மாடர்ன் பிலாஸபி’ என்ற நூலில், “பராதத்திலுள்ள அரசியல். தத்துவ நினைவுப் பட்டயங்களை நாம் உன்னிப்பாகக் கற்போமானால், எத்தனையோ உண்மைகள், ஆழ்ந்த உண்மைகள் நமக்குப் புலப்படும். ஐரோப்பிய சிந்தனை, அற்ப சொற்ப அளவிலேயே, முன்னேறச் செயலற்று நிற்கிற கோலத்துக்கு நேர்மாறாக பாரதீய சிந்தனையோட்டம் தருகிற சீர்மிகு காட்சி, நம்மை மண்டியிடச் செய்துவிடுகிறது. மானிட இனத்தின் தொட்டில் எனத் தகும் இந்த தேசமே மிக உன்னத தத்துவத்தின் தாய்நாடாக விளங்குவதையும் காணுகிறோம்” என கூறுகிறார்.

க்ரோஜர் (பிரான்ஸ்) : “தன்னை மானுட இனத்தின் தொட்டில் என்றோ அல்லது குறைந்த பட்சம், மனிதனின் புதுவாழ்வினைப் படிப்படியாக உருவாக்கிய ஆதிகால நாகரிகத்தின் களம் என்றோ உரிமை கொண்டாடிக் கொள்ள இந்த உலகில் நாடேனும் உண்டு என்றால் அது பாரதமேதான்.

லூயி ஜெகாலியட் (பிரான்ஸ்): “புராதன பாரத பூமியே! மானுடத்தின் தொட்டிலே! வெல்க! வெல்க! போற்றற்குரிய ஆற்றல்மிக்க அன்னையே! நூற்றாண்டுகள் பலவாக மிருகத்தனமான படையெடுப்புக்களும் துடைத்தழிக்க முடியாத தீரம் மிக்கவளே! நம்பிக்கை, அன்பு, கவிதை, அறிவியல் அனைத்துக்கும் பிறப்பளித்தவளே! எமது மேனாட்டு எதிர்காலத்தில் நினது மேலான இறந்தகாலம் புத்துயிர் பெற்றுப் பொலிவதாகுக!”

கர்னல் டாட் : “கிரேக்கத் தத்துவங்களுக்கெல்லாம் முன்மாதிரியாய் அமைந்த ஞானம் கொண்டு விளங்கிய இந்த மகான்களை உலகில் வேறெங்குதான் காண முடியும்? பிளேட்டோவும், டெல்ஸும், பிதாகோரஸும் அல்லவா இவரிடம் பாடங் கேட்டிருக்கிறார்கள்! இன்றும் ஐப்ராப்பியர் கண்டு வியக்கும் வகையில் கிரக நிலைகளை அறிந்து வைத்திருந்த வான சாஸ்திரங்களைத்தான் வேறெங்கேனும் காணமுடியுமா? நமது மெச்சுதலுக்குரிய கட்டடக் கலை வல்லுநரும் சிற்பிகளும்தான் இங்கு போல வேறெங்கு காண்போம்? கடுந் துயரிலிருந்து களிப்புக்கும், களிப்பிலிருந்து கடுந்துயருக்கும் மனதை அலைபாயச் செய்யவல்ல இசைவல்லார்தான் இவர்கள் போல வேறு எங்குள்ளனர்?

கௌண்ட் ஜான் ஸ்டன்ஸி : “ கிறிஸ்து பிறப்புக்கு 3000 ஆண்டுகள் முன்னரே ஹிந்துக்கள் வானசாஸ்திரத்திலும் புவியியலிலும் இத்துணை உயரிய அறிவை எய்தியிருக்கிறார்கள் என்றால், அதற்கும் முன் எத்தனை நூற்றாண்டுகளாக அவர்களது கலாசாரம் வளர்ந்து வந்திருக்கும்! ஏனெனில் அறிவியல் பாதையில் மனித மனம் படிப்படியாகத்தான் முன்னேறுகிறது.”

டாக்டர் அலெக்ஸாண்டர் : “ஐரோப்பிய தத்துவ முறைகள் அனைத்தின் வடிவங்களும் தன்னுள் பொதியப் பெற்று விளங்கும் அளவு ஹிந்து தத்துவ முறை விரிவானது. வியாபகமுள்ளது.”

கீதை பற்றி : ஒரு மகத்தான நாளில் பகவத்கீதையை நான் படித்தேன். எல்லா நூல்களையும்விட தலை சிறந்த நூல் அது. ஒரு பேரரசன் நம்மிடம் பேசுவது போல் உள்ளது. அருகதையற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் அது பேசவில்லை . மாறாக சாந்தமான, சீரான குரலில் வேறொரு யுகத்தின், வேறொரு சூழலின் ஞானத்தை வழங்குகிறது. இன்றும் நம்முன் இருக்கும் பல கேள்விகளுக்கு அந்தக் குரல் விடை அளிக்கிறது.

டாக்டர் அன்னி பெசன்ட் : “உலகின் மகத்தான மதங்களை எல்லாம் நாற்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த பிறகு சொல்கிறேன். ஹிந்துயிசத்தைக் காட்டிலும் முழுமையான, விஞ்ஞானப் பூர்வமான, தத்துவார்த்தமான, ஆன்மீகமான ஒரு மதம் வேறெதுவும் இல்லை. ஹிந்துயிசம் இல்லாமல் இந்தியாவில் எதிர்காலம் கிடையாது என்பதில் சந்தேகமில்லை. ஹிந்துயிசம் என்ற மண்ணில் இந்தியாவின் வேர்கள் ஆழமாகப் புதைந்திருக்கின்றன. அந்த வேர்கள் துண்டிக்கப்பட்டால் இந்தியா என்ற மரம் உதிர்ந்து, உயிரிழந்து போகும். ஹிந்துக்கள் ஹிந்துயிசத்தைக் காப்பாற்றாவிட்டால் வேறு யார் அதைக் காப்பாற்றுவார்கள்? இந்தியாவின் புதல்வர்கள் தனது தாயின் நம்பிக்கையைக் கைவிட்டால் வேறு யார் அதைப் பாதுகாப்பார்கள்? இந்தியா மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றும். இந்தியாவும் ஹிந்துயிசமும் வேறல்ல.”

அல்டஸ் ஹக்ஸ்லி : “உலக தத்துவங்களிலேயே கீதைதான் மிகத் தெளிவானதும், விரிவானதுமான தத்துவம். எனவே, அதில் நீடித்து நிற்கும் மதிப்பு ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி மனித இனம் முழுமைக்கும் பயன்படும்.”

வில்ஹம் வான் ஹம்போல்ட் : “பகவத் கீதை உலக மொழிகளில் மிக அழகான நூல். ஒருவேளை இதுதான் உலகிலுள்ள உண்மையான ஒரே தத்துவப் பாடலாகவும் இருக்கலாம். உலகின் மிக ஆழமான, கனமான நூலாகவும் இருக்கலாம்.”

பேராசிரியர் ப்ரெயின்டேவிட் ஜோசப்சன் (மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்) :

“வேதாந்தமும் சாங்கிய தத்துவமும் மனம் மற்றும் சிந்தனை செயல்படும் முறையின் அடிப்படை விதிகளை விளக்குகின்றன. இந்த விதிகள் குவாண்டம் துறையோடு (அணு மற்றும் மூலக்கூறுகள் துகள்களின் செயல்பாடு மற்றும் இடமாற்றம் குறித்த துறை) தொடர்பு கொண்டவை.”

என்.ஏ. பால்கிவாலா: பிரம்மம் பற்றி நமது முன்னோர்கள் சொன்னதும் ஜடப்பொருள்களின் புதிரான தன்மை பற்றி இன்றைய மகத்தான விஞ்ஞானிகள் சொல்வதும் ஒத்துப்போகின்றன. விஞ்ஞானம் முன்னேற, முன்னேற அது வேதாந்தத்திற்கு அருகில் செல்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான பாரம்பரியம் நமக்கு இருக்கிறது. ஆயினும், நாம் அதைப் பார்க்காமல் அற்ப விஷயங்ககளில் கவனம் செலுத்துகிறோம்.”

யெஹுதி மெனுஹின் (உலகப் புகழ்பெற்ற வயலின் கலைஞர்) : “சராசரி மேற்கிந்தியரைவிட ஒரு ஹிந்து நூறு மடங்கு பண்பட்டவன், நேர்மையானவன், சமய உணர்வுள்ளவன். நிதானமான கண்ணோட்டம் கொண்டவன்.”

சுவாமி விவேகானந்தர் : “ஹிந்துயிசத்தில்தான் இந்தியாவின் ஜீவன் அடங்கியிருக்கிறது. தனது முன்னேற்றங்களிலிருந்து பெற்ற பாரம்பரிய செல்வத்தை ஹிந்துக்கள் மறக்காதிருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது.”

காந்திஜி : “இடையறாமல் சத்தியத்தைத் தேடுவதுதான் ஹிந்துயிசம். இன்று நாம் சோர்ந்திருப்பதால் ஹிந்துயிசமும் தேங்கியிருக்கிறது. இந்தச் சோர்வு நம்மிடமிருந்து அகன்றால் ஹிந்துயிசம் இதுவரை இல்லாத அபாரமான திறமையுடன் பிரகாசமாக வெடித்துக் கிளம்பி முன்னோக்கிப் பாயும்.

ஜான் ஸ்டர்ஸன் : “தி விஸ்டம் ஆப் தி ஏன்ஷியண்ட் இண்டியா’ என்ற நூலில், “ஆத்மாவின் அமரத்தன்மை மற்றும் உடலை நீத்தபின் அதன் இருப்பு ஆகியவை ஹிந்துக்களின் புனித கிரந்தங்களில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். அவை வெறும் தத்துவக் கோட்பாடுகளாக அல்லாமல் சமயச் சட்டங்களாகவே கொள்ளப்பட்டன. ஆத்மாவின் அமரத்தன்மை என்பது பிரச்சினைகள் மிகுந்த சிக்கலான விஷயம் என்று கருதிய கிரேக்க, ரேமானிய தத்துவ ஞானிகளைவிட ஹிந்துக்கள் எவ்வளவோ முன்னேறியிருந்தார்கள்.”

கால் ப்ரூக் : ” தத்துவத் துறையில் ஹிந்து போதிப்பவனாக விளங்குபவனாக விளங்குகிறான்; கற்றுக் கொள்ள வேண்டியவனாக அல்ல.”

ஹிந்துத்துவம்: ஓர் அறிவியல் கண்ணோட்டம்

கட்டுரையாசிரியர் பற்றி…

கே.எஸ். சுதர்ஸன்
ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரதத் தலைவர்.

மத்தியப்பிரதேச மாநிலம் ராய்ப்பூரில் 1932 ஜூன் 18- ல் பிறந்தார். 1953 – ல் தொலைதொடர்பு துறையில் பி.ஈ (ஹானர்ஸ்) பட்டம் பெற்றவர். தனது வாழ்வை சமூகப்பணிக்காக அர்பணித்து 1954 ல் ஆர்.எஸ்.எஸ்ஸின் முழுநேர ஊழியரானார்.

ராய்காட், சாகர், ரிவா ஆகிய பகுதிகளில் ஜில்லா ப்ரச்சாரக்காகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் மத்திய பாரதத்தின் ப்ராந்த ப்ரச்சாரக்கராகவும், 1969 முதல் அகிலபாரத சாரீரிக் ப்ரமுக், 1979 முதல் அகிலபாரத பௌத்திக் ப்ரமுக், 1990 முதல் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் ஆகிய பொறுப்புக்களை வகித்துள்ளார். 2000- ம் ஆண்டு முதல் அகிலபாரத தலைவராக பொறுப்பேற்று பாரத நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஸ்வயம் சேவகர்களுக்கு ஊக்கமும், வழிகாட்டுதலும் வழங்கி வருகிறார்.

பஞ்சாப் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனைகளைப் பற்றி ஆழ்ந்த விஷயஞானம் கொண்டவர்.

ஹிந்தி, மராட்டி, பெங்காளி, ஆங்கில மொழிகளில் பேசவும், படிக்கவும், எழுதவும் தெரிந்தவர். அஸ் ஸாமி, ஒரியா, சம்ஸ்க்ருதம், குஜராத்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பேசவும் தெரிந்தவர்.

இங்கிலாந்து, ஹாலந்து, கென்யா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், அமெரிக்கா, கனடா, ட்ருனிடாட் போன்ற பல வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செய்துள்ளார்.


ஹிந்துத்துவம்: ஓர் அறிவியல் கண்ணோட்டம்

இது விஞ்ஞான யுகம் என்று பேசப்படுகிறது. எதையும் விஞ்ஞான உரைகல்லில் சோதித்து தரம் பார்க்கிறார்கள். ஹிந்து தர்மம் விஞ்ஞானபூர்வமானது என்கிற உண்மை நீறுபூத்த நெருப்பாக உள்ளது. சாம்பலை ஊதித்தள்ளி நமக்கு சத்திய தரிசனம் செய்து வைக்கிறார் ஆர்.எஸ்.எஸ் சர்சங்கசாலக் ஸ்ரீ கு.சீ. சுதர்ஸன். அவரது அகிலபாரத சுற்றுப்பயணத்தின்போது கல்கத்தா நகரில் அவர் நிகழ்த்திய பேருரையின் தமிழாக்கம் இது.


ஹிந்துத்துவம்: ஓர் அறிவியல் கண்ணோட்டம்

ஹிந்து தர்மம் எவ்வாறு விஞ்ஞான அடிப்படையில் அமைந்துள்ளது என்பது பற்றி நான் கருத்துக் கூறு முன் ஹிந்து தர்மம் பற்றி வேண்டுமென்றே பரப்பப்பட்ட சில தப்பான கருத்துக்களை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஹிந்து தர்மத்தைப் பற்றிய குழப்பமெல்லாமே ‘இங்கிலீஷ் படிப்பு படித்தவர்களுக்குத்தான். ‘தர்மம்’ என்ற சம்ஸ்க்ருத சொல்லுக்கு சரியான ஆங்கிலச் சொல் கிடையாது என்பதுதான் இதற்குக் காரணம். இது என் கருத்து மட்டுமல்ல, அன்னி பெஸன்ட் அம்மையாரும், “ஆங்கில மொழியில் ‘தர்மம்’ என்னும் சொல்லுக்கு ஈடான சொல்லே இல்லை” என்று சொல்லியிருக்கிறார். ‘மதம்’ என்ற பொருள் தரும் பல சொற்கள் சம்ஸ்க்ருதத்தில் உண்டு. ‘சம்பிரதாயம்’, ‘உபாஸனா பத்ததி’ (வழிபாட்டு முறை), ‘பந்த்’ என்ற சொற்களே அவை. ஆனால் ‘தர்மம்’ என்னும் சொல் ‘மதம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டது.

இப்படியாக ‘தர்மம்’ மதமாகியது. அதனால் நாம் மதத்தை குறிக்க ‘தர்மம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் துவங்கினோம். இதன் விளைவாக, ‘ஐரோப்பாவில் மதத்தின் பேரால் கலகங்களும் போர்களும் நடத்தப்பட்டன அல்லவா, நம் நாட்டிலும் தர்மத்தின் பேரால் அதுபோலவே நடக்கலாம்’ என்று முடிவு கட்டிவிட்டோம். அதனால்தான் பாரத அரசியல் சாசனத்தை வடிவமைக்கும் போது “நம் நாடு தர்மநிரபேக்ஷமானது (தர்மம் சாராதது)” என்று குறிப்பிட்டு விட்டோம். ‘சம்ப்ரதாய நிரபேக்ஷ’ அல்லது ‘பந்த் நிரபேக்ஷ’ (மதசார்பற்ற) என்ற சொற்கள் பொருத்தமாக இருந்திருக்கும். நாம் நம்மை “தர்மநிரபேக்ஷ” என்று அறிவித்துக் கொண்ட கணமே நம் வாழ்வின் அடிப்படை கேள்விக் கிடமாகிவிடுகிறது. ஏனென்றால் தர்மம் நம் தேசத்தின் ஆன்மா என்று கருதுவோர் நாம். “தர்மம் நமது நாட்டின் உயிர் மூச்சு” என்றல்லவா சுவாமி விவேகானந்தர் முழங்கினார்? |

“மந்திரவாதிகளின் உயிர், பூதத்தின் உயிர் ஏதோ ஒரு பறவையிடம் இருக்கும் என்றும், அந்தப் பறவை பத்திரமாக இருக்கும் வரை, மந்திரவாதியை அல்லது பூதத்தை இந்த உலகில் எந்த சக்தியும் அழிக்க இயலாது என்றும் கதை சொல்லிக் கேட்டிருக்கிறோம். தேசங்களுக்கும் அதுபோலத்தான். தேசத்தின் உயிர்நாடி ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அடங்கியிருக்கிறது. அதில்தான் தேசத்தின் தேசியம் பொதிந்துள்ளது. அந்த விஷயத்தை

தீண்டாத வரை நாடு சிறந்து விளங்கும் என்பது பற்றி சந்தேகமில்லை. தேசியத்திற்கு தீங்கு விளைவிக்காத எந்த உரிமை பறிபோனாலும் நாடு அதைப்பற்றிக் கவலைப்படாது. ஆனால் தேசியத்தின் ஜீவநாடி போன்ற விஷயத்தில் சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் தேசம் அதற்கு மிக பலமாக பதிலடி கொடுக்கும்.”

தர்மம் தான் நம் நாட்டின் ஜீவன், உயிர்த் துடிப்பு என்று சுவாமி விவேகானந்தர் அறிவித்தார். “நம் நாட்டவன் ஒருவனிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொள்ளுங்கள்; அவனை எட்டி உதையுங்கள்; என்ன சொல்லி வேண்டுமானாலும் திட்டுங்கள்; அவன் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை, தர்மத்தின் ஒரே ஒரு வாயிலை மட்டும் அகலத் திறந்து வைத்தீர்களானால் போதும் அவனுக்கு. ஒரு இந்திய அறிவாளி, ‘தர்மத்தை நாட்டின் ஆன்மாவாக கருதுவதால் என்ன பயன்? வேறு நாடுகளைப்போல் சமுதாய, அரசியல் சுதந்திரமே தேசத்தின் ஆன்மா என்று கூறினால் என்ன?’ என்று கேட்கிறார். நதி மலையிலிருந்து இறங்கி பல ஆயிரம் மைல் கடந்து வந்து விட்டது. அது திரும்பிப் போகுமா என்ன? இந்தப் பத்தாயிரம் ஆண்டுக்கால வரலாற்றில், தேசிய வாழ்க்கை வழிமாறிப் போயிருந்தது என்றால் இப்போது ஒன்றும் செய்வதற்கில்லை. தேசத்திற்கு ஒரு புதிய தன்மையை கற்பிக்க முயன்றோமென்றால் அழிவு நிச்சயம்”.

இந்த விஷயத்தில் பின்வருமாறு விளக்கமளித்தார் மகரிஷி அரவிந்தர்: “சனாதன தர்மம்தான் நமக்கு தேசியம். இந்த ஹிந்து நாடு சனாதன தர்மத்துடன் தான் பிறந்தது, அதனுடனேயே செல்கிறது, அதனுடன் தான் வளர்கிறது. சனாதன தர்மம் பலமிழந்தால் ஹிந்து ராஷ்டிரமும் பலமிழக்கிறது. சனாதன தர்மம் அழிய முடியுமென்றால் ஹிந்து தர்மமும் அதனுடனேயே அழிந்து போகும். சனாதன தர்மம் அதாவது தேசியம் – இதுதான் நான் உங்களுக்கு அளிக்கும் சேதி”. நம் ரிஷிகளும், முனிவர்களும் தர்மம் என்பதை விளக்கியது இவ்வாறுதான். எனவே, தர்மத்தை மதம் என்று குழப்பிக் கொள்ளுவது இமாலயத் தவறு. இந்த விஷயத்தை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்வது அவசியம்.

அப்படியானால் தர்மத்தை வரையறுப்பது எப்படி? தர்மம் என்றால் இதுதான் என்று வல்லடியாக விளக்கமளிக்க இயலாது. ஏனென்றால், விரிவான பொருள் தரும் எந்த ஒரு சொல்லுக்கும் அச்சுப்பதிப்பது போன்று வரையறை தந்து அந்தச் சொல்லை முடக்கிவிடமுடியாது. அவ்வாறு வரையறுக்கப் பார்த்தால் அந்தச் சொல்லின் பொருள் மிகைப்படுத்தலாக அல்லது அரைகுறையாக ஆகி விடுகிறது. கடவுள் என்றால் இது தான் என்று எதையும் அறுதியிட்டுக் கூற இயலாதல்லவா, அதுபோலத்தான் தர்மமும். அதை ஒரு அச்சுக்குள் ஒடுக்க முடியாது. இருந்தாலும், நம் முன்னோர் தர்மத்திற்கு விரிவான ஒரு பொருளை கொடுக்க முயன்றிருக்கிறார்கள்:

“தாரணாத் தர்ம இத்யாஹு:

தர்மோ தாரயதே ப்ரஜா:

யஸ்மாத் தாரண சம்யுக்த:

ஸதர்ம தி மன்யதே”

எது தாங்குகிறதோ (ஆதாரமானது), எது ஒன்றுபடுத்துகிறதோ அதுவே தர்மம் என்பது இதன் பொருள். தர்மம் என்ற சொல் தாங்குதல், ஒன்று படுத்துதல் என்று இருபொருட்களை கொண்ட “த்ரு’ என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானது. அதாவது சமுதாயத்தை ஒன்றுபடுத்தும் தன்மை கொண்ட எல்லாமே தர்மம்; உலகின் பல கூறுகளையும் ஒன்று படுத்தும் எல்லாமே தர்மம். பொதுவாக இந்த உலகில் தனிநபர், சமுதாயம், படைப்பு, பரம்பொருள் என்ற நான்கு நிலைகள் உள்ளன.

சமுதாயம் என்பது தனிநபர்களின் கூட்டு மட்டுமல்ல. அது ஜீவனுள்ளது. அதற்கே உரிய தனித்தன்மை, அடையாளம் ஆகியவை கொண்டது. ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அலாதியான உள்ளார்ந்த தன்மை உண்டு. அதில் வாழும் தனிநபர்களின் இயல்பில் அந்த சமுதாயத்தின் தன்மை படிகிறது. அந்த வகையில் சமுதாயம் தனிநபர்களின் கூட்டம் மட்டுமல்ல, தனியே ஜீவனுள்ளது. தனிநபர், சமுதாயம் இவற்றை அடுத்து வரும் படைப்பு மூன்றாவது நிலை. பரம்பொருள் கடைசி நிலை.

இந்த நான்கு நிலைகளின் நடுவே சுமுகமான சச்சரவில்லாத, ஒருங்கிணைக்கப்பட்ட உறவுகளுக்காக ஏற்படுத்தப்பட்ட எல்லா நெறிமுறைகளும், தத்துவங்களும் ‘தர்மம்’ என்பதன் கீழ் வரும். தனிநபருக்கும் சமுதாயத்திற்கும் இணக்கமான, ஒருங்கிணைந்த உறவு ஏற்படுத்தும் சட்டத்திட்டங்களும் ஏற்பாடுகளும் ‘கர்த்தவ்ய தர்மம்’ (விதிக்கப்பட்ட கடமைகள்) என்று பெரியோர்களால் வடிவமைக்கப்பட்டன.

குடும்பம் என்பது சமுதாயத்தின் குறுவடிவம். இணக்கத்துடன் சச்சரவில்லாமல் பரஸ்பர ஒத்துழைப்பினால் அமைதியாக குடும்பம் நடக்கவேண்டுமென்றால், குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் தன் கடமைகளை செவ்வனே செய்தல் வேண்டும். குடும்பத்தில் தாய்க்கு, தந்தைக்கு, அண்ணனுக்கு, தங்கைக்கு, கணவனுக்கு, மனைவிக்கு, குழந்தைகளுக்கு என அவரவர் கடமை உண்டு. இதையெல்லாம்தான் மாத்ருதர்மம் (தாயின் கடமைகள்), பித்ருதர்மம் (தந்தையின் கடமைகள்), சந்தான தர்மம் (பிள்ளைகளின் கடமைகள்) என்றெல்லாம் அழைக்கிறார்கள். இங்கே தர்மம் என்ற சொல் கடமை என்பதைக் குறிக்கிறது.

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் நாம் நல்ல நட்போடு இருக்க வேண்டுமென்றால் ப்ரதிவேஷி தர்மத்தை (பக்கத்து வீட்டார் கடமை) கடைப்பிடிக்க வேண்டும். பொதுவாக, பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நல்ல அண்டை வீட்டாராக, அவரவர் தங்கள் கடமையை, தங்கள் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும். பக்கத்து வீட்டில் நடக்கும் நல்ல சேதிகளை பிறருக்கு தெரிவித்தல், நல்லது அல்லாதவற்றை பற்றி பேசாதிருத்தல் இவை அண்டைவீட்டாரின் தர்மம். உதாரணமாக, என் பக்கத்து வீட்டில் கணவனும் மனைவியும் சண்டைபோட்டுக் கொண்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். மறுநாள் நாலுபேர் மத்தியில், ‘நண்பர்களே… நேற்று பொழுது போனதே தெரியவில்லை. என் பக்கத்து வீட்டில் கணவனும் மனைவியும் சண்டை போட்டுக்கொண்டார்கள். அடித்துக் கொள்ளும் அளவுக்குப் போய்விட்டது…’ என்று வம்பளந்தால் எனக்கு நானே குழிபறித்தது போல்தானே ஆகும்? அந்தக் கணவன், மனைவி இருவரிடமும் நன்றாக உதைபடுவதற்கும் சாத்தியக்கூறு உண்டு. மாறாக நேற்று உன் பக்கத்து வீட்டில் என்ன நடந்தது என்று யாராவது கேட்டாலும் நான், ‘ஒன்றுமில்லை. இதெல்லாம் வாழ்க்கையில் சகஜம். என் பக்கத்து வீட்டார் மிக நல்லவர்கள்’ என்று நான் கூறினால், அண்டை வீட்டார் தர்மத்தை நான் கடைப்பிடித்தவனாவேன்.

இதேபோல் ஆளுவோருக்கும் ஆளப்படுவோருக்கும் சுமூகமான உறவு நிலவ வேண்டுமென்றால், ஆளுவோர் ராஜதர்மத்தையும் மக்கள் பிரஜாதர்மத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இப்படித்தான் ஆசிரியர் – மாணவர், எஜமானன் – வேலையாள் ஆகியோரும் அவரவர் தர்மத்தை கடமையை சிறப்பாகச் செய்யவேண்டும். இப்படி எல்லோரும் தமது தர்மங்களை சரியாக செய்வதானால் தனி நபருக்கும் சமுதாயத்திற்கும் நடுவே மோதல்கள் தடுக்கப்படுகின்றன. இவ்வாறு, கர்த்தவ்ய தர்மம் (அவரவர் கடமை புரிதல்) என்பது தர்மத்தின் ஒரு அம்சம்.

நம் சரீரம் படைப்பில் இயற்கை தந்த பரிசு. எவருமே தன் உடல் நன்றாக செயல்படவேண்டும் என்று தான் விரும்புவார்.

அதனால் நாம் படைப்புடன் (சிருஷ்டி) சுமுகமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். சுகாதார கோட்பாடுகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது எந்தப் பருவத்தில் என்ன உண்ணவேண்டும், எதைப் பருக வேண்டும். எவ்வாறு உடை அணிய வேண்டும் என்பது பற்றி சில கோட்பாடுகள் உண்டு. இவை உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற இயற்றப்பட்டவை. நாம் இந்த கோட்பாடுகளுக்கு உட்படாவிட்டால், நம் பழக்க வழக்கங்கள் இந்த கோட்பாடுகளுக்கு நேர்மாறாக இருந்தால், நாம் துன்பப்படுவது நிச்சயம். இன்றைய நம்முடைய வாழ்க்கையில் ஓட்டம் அதிகரித்து ஓய்வற்ற தாகி விட்டது, மிகவும் வேகமான வாழ்க்கை என்று இதைத்தான் கூறுவார்கள். இந்த மாதிரியான வாழ்க்கையால் பல்வேறு பிரச்சினைகள் முளைக்கின்றன. நகரங்களில், பெருநகரங்களில் வசிக்கிறவர்களுக்கு இது தெரிந்த விஷயம்தான். எனவே இயற்கையுடன் (படைப்புடன்) நாம் இணக்கமாக வாழ வேண்டும் என்றால் இயற்கையின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டே ஆகவேண்டும். இதைத்தான் நம் முன்னோர்கள் ஆசார தர்மம் (இயற்கையுடன் ஒன்றிவாழ்தல்) என்று கூறினார்கள். “ஆசார: பிரதமோ தர்ம:” (சரியான பழக்க வழக்கம்தான் முதல் தர்மம்) என்று தெளிவாகவே எடுத்துக் கூறினார்கள். ஏன்? இதை நன்றாக செயல்படுத்தினால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சரீரம் ஆத்யம் கலு தர்மசாதனம். சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுத முடியும். எந்தவித செயல் செய்யவும் உடல் ஆரோக்கியம் மிக அவசியம். அதாவது ஆசார தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அடுத்து, சமுதாயம் – இயற்கை உறவு. சமுதாயம் இயற்கையால்தான் வாழ்கிறது. இயற்கையானது சமுதாயத்தின் வாழ்விற்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் பூர்த்திசெய்கிற வளங்களை வழங்கு கிறது. அதனால் சமுதாயம், இயற்கை இவற்றுக்கிடையே ஒரு இசைவிணக்கமான உறவு அவசியம். இதைத்தான் சிருஷ்டி தர்மம் (சுற்றுச்சூழல் சமன்பாடு) என்று கூறுவார்கள். இயற்கையில் மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள், புழு, பூச்சிகள், மனிதர்கள் எல்லாமே அடங்கும். இவைகளுக்கிடையே ஜீவனுள்ள ஒரு இணைப்பு உள்ளது. இதைத்தான் சுற்றுச்சூழல் சமன்பாடு என்பார்கள். இந்த சமன்பாட்டு நிலை பேணிக் காக்கப்படுமானால் வாழ்க்கை சீராகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். உலகில் காணப்படும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் என்ன? எங்கோ ஒரு இடத்தில் ஓசோன் படலம் சன்னமாகிமிட்டது, அதில் ஓட்டையும் ஏற்பட்டுவிட்டது. இந்தப் படலம் அழிந்து போனால் (கலைக்கப்பட்டால்) சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமண்டலத்திற்குள் பிரவேசிக்கும். நம் உடல் நலத்தை அது பாதிக்கும். நம் சருமம் பாதிக்கப்படும். அதனால் தோல் புற்றுநோய் ஏற்பட்டு மனித குலமே அழிந்துவிடும். இது பற்றி விஞ்ஞானிகளுக்கு கவலை ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாடும் அதிகரித்துக் கொண்டே போகிறது. பெருநகரங்களில் சுற்றுச்சூழல் மாசு கவலை அளிக்கக்கூடியதாக, கட்டுக்கடங்காமல் போய்விட்டது. டாக்டர் ட்ரேஹன் தில்லியின் எஸ்கார்ட்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல இருதய அறுவை சிகிச்சை நிபுணர் (கார்டியாக் சர்ஜன்). ஒரு வாடிக்கையாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்க வந்திருந்தார். அங்கே அவர் கூறிய ஒரு விஷயம் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தது. “நான் பல நோயாளிகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன். ஒரு விஷயம் எண் கண்ணில் படுகிறது. கிராமப்புறத்திலிருந்து வரும் நோயாளிகளின் இருதயம் சிவப்பாகவும், தில்லி நகரில் வசிப்பவர்களின் இதயம் கருப்பாகவும் இருக்கிறது” என்றார் அவர். பெரிய நகரங்களில் மாசு அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை இந்த உதாரணம் மிகத்தெளிவாகக் காட்டுகிறது. சுற்றுச் சூழல் மாசு மற்றும் இதுபோன்ற பல பிரச்சினைகள் அதிகரித்த வண்ணம் இருப்பதற்குக் காரணம் செயற்கையான, இயற்கைக்கு ஒவ்வாத நம் வாழ்க்கை முறைதான்.

இயற்கை வளங்கள் வேகமாக வற்றி வருகின்றன. வேகமாக குறைந்து வரும் இயற்கை வளங்களையும் இயற்கையின் நானாவித இயல்பையும் (பயோ டைவர்ஸிடி) காப்பாற்றத் தவறினால் மனித குலத்திற்கு ஏற்படும் நெருக்கடிகள் பற்றி மக்களுக்கு இப்போதே மிகவும் கவலை உண்டாகியிருக்கிறது. இது பற்றி சிந்திக்க ‘பூமி மாநாடு’ ரியோடிஜெனீரோ நகரத்தில் நடத்தப்பட்டது. இதே போன்ற மாநாடு திரும்பவும் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க உள்ளது. இது இயற்கைக்கும் மனித சமுதாயத்திற்கும் நடுவே இருக்க வேண்டிய இசைவிணக்கமான பிணைப்பின் முக்கியத்துவத்தை கோடிட்டுக் காட்டுகிறது.

கடந்த வருடம் தென்னாப்பிரிக்கா, ஜொஹானஸ்பர்கில் நடந்த பூமி மாநாட்டில் தட்பவெட்பநிலை மாற்றம் பற்றிய கியோடோ நெறிமுறை விஷயத்தில் வெளிநடப்பு செய்த அமெரிக்காவை வளரும் நாடுகள் கடுமையாக கண்டித்தன. கியோடோ நெறிமுறை செயல்படுத்தப்பட்டால் மாசு காரணமாக அதிகரித்து வரும் பூமிப்பந்தின் வெப்பம் கட்டுப்படுத்தப்படும்.

இதையெல்லாம் நாம் செயல்படுத்தவேண்டும் என்றால், நம் அனைவருக்கும் கடவுள் என்ற நான்காவது (முதல் மூன்று : தனி மனிதன், சமுதாயம், இயற்கை) அம்சம் உள்ளது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இதன்மூலம் சமன்பாட்டைக் கட்டிக்காக்க முடியும். சமன்பாடு காக்கப்படவில்லை என்றால் மேற்கத்திய முறையில் அமைந்த சிந்தனாமுறை தான் அதற்குக் காரணம். மேற்கத்திய நாடுகள் கிறிஸ்தவ சிந்தனா முறையால் ஈர்க்கப்பட்டுள்ளன என்பது நாம் அறிந்தது தான். கடந்த 1,500 வருடங்களாக தடையின்றி கிறிஸ்தவ சிந்தனாமுறையால் அவை ஆளப்பட்டு வருகின்றன.

கிறிஸ்தவ நம்பிக்கைகளில் முக்கியமானது இது: மனிதன் செய்த முதல் பாவத்தால் கடவுள் கோபமடைந்தார். இதனால் ஆதாமையும், ஏவாளையும் சுவர்க்கத்திலிருந்து வெளியே தள்ளினார். நீங்கள் இந்த பூமியில் வாழ்க்கை நடத்துவதற்கு மிகவும் கஷ்டப்படு வீர்கள் என்றும் சபித்தார். ஆதாமுக்கும் ஏவாளுக்கும் சுவர்க்கத்தில், ஈடன் தோட்டத்தின் பழங்களில், அறிவு என்னும் பழத்தையும் வாழ்க்கை என்னும் பழத்தையும் தவிர அனைத்துக் கனிகளையும் சுவைக்க சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. இருவரும் மிகவும் சந்தோஷத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒருநாள் சாத்தான், பாம்பு உருவில் வந்து ஏவாளிடம் வாழக்கை எப்படியிருக்கிறது? சந்தோஷமாக இருக்கிறதா? என்று கேட்டான். ஆம் என்றாள் ஏவாள். இங்குள்ள அனைத்துப் பழங்களையும் சுவைத்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு, ஆம், அனைத்தையும் சுவைத்தேன் என்றாள். அந்த இருபழங்களையும் உண்டீர்களா என்று சாத்தான் கேட்க, ஏவாள், அந்த இருபழங்களையும் உண்ணவேண்டாம் என்று கடவுள் தடைவிதித்துள்ளார் என்றாள். கடவுள் உங்களை சோதித்துப் பார்க்கிறார். இங்குள்ள அனைத்துப் பழங்களில் அந்த இரண்டு பழங்கள் தான் சிறந்த சுவை உள்ளவை. அதை ஒருமுறை உண்டு பாருங்கள், வேறு அனைத்தையும் மறந்து விடு வீர்கள் என்றான் சாத்தான். ஆதாமுக்கும் எவாளுக்கும் கடவுள் சொல்லை மீறிச்செல்ல விருப்பம் இருக்கவில்லை. சாத்தான் மீண்டும் கூறினான்: பாருங்கள், கடவுள் உங்கள் தைரியத்தை தான் சோதித்துப் பார்க்கிறார். பழத்தை உண்ணுங்கள். கடவுளே உங்களுக்கு உதவுவார் என்றான்.

ஏவாளும் சாத்தான் பேச்சைக் கேட்டு பழத்தை உண்டு ஆதாமுக்கும் கொடுத்தாள் என்று கூறப்படுகிறது. பழத்தை உண்ட உடனேயே தாங்கள் இருவரும் வேறுபட்டிருப்பதையும் ஆண் பெண் எனும் பேதத்தையும் உணர்ந்தார்கள். இதுநாள்வரை இருவர் மத்தியில் ஆண் பெண் என்ற பேதமோ அதனால் ஏற்படும் மோகமோ இருக்கவில்லை. ஆனால் இப்போது வேறுபாட்டை உணர்ந்தவுடன், தாங்கள் ஆடையின்றி இருப்பது தெரிந்து வெட்கமடைந்தார்கள். அதனால் தங்கள் உடல்களை இலை தழைகளால் மறைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். இந்நேரத்தில் கடவுள் வரும் காலடிச் சப்தம் கேட்டது. அவர்கள் தங்களை புதரில் மறைத்துக் கொண்டார்கள். கடவுள் அவர்களை காணாமல் வியப்படைந்தார். ஆதாம்! ஏவாள்! எங்கு இருக்கிறீர்கள்? என்று கேட்டார். நாங்கள் இங்கு உள்ளோம் என்று இருவரும் பதிலளித்தார்கள். அங்கு என்ன செய்கிறீர்கள்? என்று இறைவன் கேட்டதற்கு, உங்கள் முன் வருவதற்கு வெட்கமாக இருக்கிறது என்றார்கள். வெட்கமா? ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று உணர்ந்த கடவுள், ஆதாமையும் ஏவாளையும் தன் முன்னே வருமாறு ஆணையிட்டார். அவர்களும் கடவுள் முன் வந்தார்கள். இலை தழைகளால் உடம்பை மறைத்து கொண்ட அவர்களை இறைவன் கண்டார். என்ன தவறு நேர்ந்தது என்று புரிந்துகொண்ட கடவுள் அவர்களை ஏசினார்: என் ஆணையை ஏன் மீறினீர்கள்? இதற்காக நீங்கள் இருவரும் தண்டிக்கப்படுவீர்கள். நான் உங்களை பூமிக்கு அனுப்புகிறேன். இதுவரை ஒரு முயற்சியும் இல்லாமல் வேண்டியது அனைத்தும் இந்த சுவர்க்கத்தில் உங்களுக்குக் கிடைத்து வந்தது. ஆனால் பூமியிலோ எந்த பொருளானாலும், அதை கடும் உழைப்பினால் மட்டுமே பெறுவீர்கள் – இவ்வாறு அவர்களை தண்டித்து பூமிக்கு அனுப்பினார் கடவுள்.

அதாவது இறைவன் மனிதனை இந்த பூமியில் உள்ள அனைத்தையும் அனுபவிக்கத்தான் அனுப்பியுள்ளான். பூமியிலுள்ள அனைத்து இன்பங்களையும் பெற மனிதனுக்கு உரிமை உண்டு என்பது கிறிஸ்தவ நம்பிக்கை . மரங்கள், செடிகள், விலங்குகள், பறவைகள், புழு, பூச்சி போன்ற அனைத்துமே மனிதனின் சுகபோகத்திற்காகத்தான். அவர்களுக்கு இன்னொரு நம்பிக்கையும் உள்ளது. மனிதனைத் தவிர பிற அனைத்து பொருட்களும் ஜடங்கள், உயிரற்றவை. உணர்ச்சி இல்லாதவை. இன்னும் சொல்லப்போனால் பெண்களும் கூட உணர்ச்சி அற்றவர்கள்தான் ஆண்கள் மட்டுமே உணர்ச்சியுள்ளவர்கள். பெண்கள் ஆண்களுக்குப் பிறகு தான் பிறந்தார்கள். ஆதாம் சுவர்க்கத்தில் தன் தனிமை உணர்ந்து கடவுளிடம், இறைவா: நான் இங்கு தனியாக இருக்கிறேன். என் நேரத்தை எப்படி செலவிடுவது என்றே தெரியவில்லை. எனக்கு ஒரு துணையை கொடுங்கள் என்று கேட்டான். கடவுளும் ஆதாமின் ஒரு விலா எலும்பை ஒடித்து எடுத்து காற்றை ஊதினார், உடனே ஏவாள் தோன்றினாள். விலா எலும்புப் பகுதியிலிருந்து தோன்றியதால் ஏவாள் ஆன்மா அற்றவள் ஆனாள். ஐரோப்பா கண்டத்தில் நூறு, நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் கூட பெண்கள் ஈவிரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். சூனியக்காரிகள் என்று பல பெண்கள் பட்டம் சூட்டப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள்.

சமீபத்தில், இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் கீழ்ச்சபையில் விலங்குகளுக்குக் கொடுமை செய்வதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டது. அப்போது பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. மேல் சபையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தச் சட்டம் பற்றி காண்டர்பரி ஆர்ச் பிஷப்பிடம் கருத்துக் கேட்கப்பட்டது. அவர் கூறிய முடிவு இதுதான்: பைபிள் கூறுவது என்னவென்றால், மனிதனைத் தவிர வேறு எந்த பிராணிக்கும் ஆன்மா இல்லை. அதனால் அவைகளை கொல்வது பாவமாகாது. இந்த தைரியத்தில்தான் கிறிஸ்தவர்கள் தங்களுக்கு மனிதனைத்தவிர வேறு எல்லா பிராணிகளையும் கொல்லும் உரிமை இருக்கிறது என்று நினைக்கிறார்கள்.

விஞ்ஞான யுகம் மேற்கத்திய நாடுகளில் தொடங்கியது. ஆரம்பத்தில் விஞ்ஞான வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட முயற்சி நடந்தது. கலீலியோ, சூரியன் ஒரே இடத்தில் ஸ்திரமாக உள்ளது. பூமிதான் அதைச்சுற்றி வருகிறது என்று கூறிய போது அது கடுமையாக எதிர்க்கப்பட்டது. ஏனென்றால் அது பைபிள் உபதேசங்களுக்கு விரோதமாக இருந்தது. கலீலியோ சிறையில் தள்ளப்பட்டார். தொலைநோக்கி (telescope) மூலம் கலீலியோ தான் கூறியதை நிரூபித்ததால், அவருடைய கருத்தை பலர் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினார்கள். இதற்கிடையில் விஞ்ஞானிகளுக்கு எதிரான கொடுமைகள் தொடர்ந்தன. விஞ்ஞானி ப்ரூனோ எரித்துக் கொல்லப்பட்டார். ஆனாலும் மக்களின் மனதில் எதையும் ஆராய்ந்து தெளியும் போக்கு வளரத் தொடங்கியிருந்தது. கிறி ஸ் தவம் மனிதனின் யோசிக்கும் திறனையே முடக்கி வைத்திருந்தது. இந்த மதம் பைபிளில் எழுதப்பட்டதுதான் பரம உண்மை என்ற நம்பிக்கையில் நிறுவப்பட்டது. ‘விஞ்ஞான முடிவுகளை ஏற்பீர்களா அல்லது பூமி ஸ்திரமானது, சூரியன்தான் அதைச் சுற்றி வருகிறது என்னும் பைபிள் கூற்றை ஏற்பீர்களா?’ என்று கேட்கப்பட்டபோது, அன்னை தெரஸா கூட நான் பைபிள் கூறுவதையே ஏற்பேன் என்று கூறினார். இப்படி விஞ்ஞானத்திற்குக் கடும் எதிர்ப்பு இருந்தது. விஞ்ஞானம் தர்க்க ரீதியில் அமைந்திருந்தமையால் மக்கள் விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்ளத் துவங்கினார்கள். விஞ்ஞான முன்னேற்றத்தால் கிறிஸ்தவ மதம் பின்னுக்குத் தள்ளப்பட்டது. கிறிஸ்தவத்தின் பிடி தளர்ந்தது. விஞ்ஞானம் முன்னேறியது. பல சிறந்த விஞ்ஞானிகள் தோன்றினார்கள் என்பது பற்றி சந்தேகமில்லை. இருந்தாலும் அவர்களில் இருவர் குறிப்பிடத்தகவர்கள். ரீனீ தேகார்தே என்பவர் முதலாமவர். பிரான்ஸ் நாட்டு கணித மேதையான அவர் பகுத்தறியும் முறையை (Reduction Approach) அறிமுகப்படுத்தினார். பகுத்தறியும் முறையில், சோதிக்கும் எந்த ஒரு விஷயத்தையும் சிறிசிறு பிரிவுகளாக பகுத்து அவற்றை முழுமையாக ஆராய வேண்டும். பிரிக்கப்பட்ட எல்லா பகுதிகளையும் பற்றி முழு விவரங்கள் ஆராயப்பட்டு திரட்டபட்ட பின் அவற்றை ஒன்றுபடுத்தினால், அது பற்றி முழுமையான வடிவத்தை நம்மால் பெற முடியும். இது ரீனி கண்ட முறை.

இரண்டாமவர் நியூட்டன். இந்த பிரபஞ்சமே சிறுசிறு உறுப்புகள் கொண்ட ஒரு பெரிய இயந்திரம் என்று அவர் கூறினார். அந்த சிறு பாகங்கள் செயல்படும் முறையை ஆராய்ந்து அவைகளின் சித்தாந்தத்தை நாம் அறிந்து கொண்டால் இந்த பிரபஞ்சத்தை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்றார். விஞ்ஞான வளர்ச்சியில் இந்த இரு சித்தாந்தங்களின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. சைமன் லாப்லாஸ் என்பவர் நியூட்டனின் Law of Motion and Law of Mechanics என்ற இரு சித்தாந்தங்களையும் ஆராய்ந்து அவற்றில் தான் கண்ட குறைபாடுகளைக் களைந்து, தன்னுடைய ஆய்வு முடிவை நெப்போலியனிடம் அனுப்பி வைத்தார். அதை படித்த நெப்போலியன் ஆய்வு முடிவுகள் சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒரு இடத்தில் கூட கடவுள் பற்றி குறிப்பிடவில்லையே என்று கேட்டார். அப்படியொரு விஷயத்தை ஏற்க வேண்டிய அவசியத்தை தான் உணரவில்லை என்று லாப்லாஸ் பதிலளித்தார். இந்த பிரபஞ்சமே ஒரு இயந்திரம் என்றால், அது சில கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குகிறது என்றால், கடவுள் ஏன்? என்று அவர் வினவினார். இதன் விளைவாக அவருக்கு அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் முரட்டுப் பிடிவாதத்துடன் தாங்களே இந்த பிரபஞ்சத்தின் செயல்பாட்டுக்குக் காரணமான அனைத்து சித்தாந்தங்களையும் கண்டு பிடித்து உலகையே ஆள வல்லவர்கள் என்ற போக்கில் போனார்கள். கடவுள் என்ற ஒருவர் இருந்தால் கூட அவர் தங்களுடைய பரிசோதனைச் சாலையின் சோதனைக் குழாயில் வந்து தான் இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்ற அளவிற்கு போய்விட்டார்கள்.

இதன் விளைவாக விஞ்ஞானம் மெய்ஞ்ஞானத்திலிருந்து விலக ஆரம்பித்தது. ஆனால், சிறு சிறு விஷயங்களின் ஆழ்ந்த ஆராய்ச்சிகளால் புதுப்புது கண்டு பிடிப்புகள் தடையில்லாத தொடர்ச்சியாய் வெளிவரத் துவங்கின. விஞ்ஞானம் தலைதெறிக்கும் வேகத்தில் முன்னேறத் தொடங்கியது. பகுத்தறிவின் விளைவால் பிறந்ததனாலும், தர்க்கரீதியில் விளக்கப்படமுடியும் என்பதாலும் விஞ்ஞானம் வரவேற்பையும் மதிப்பையும் பெறத் தொடங்கியது. விஞ்ஞானிகள் தங்களை விசேஷ பிறவிகள் என்று எண்ணினார்கள். விஞ்ஞானம் என்றால் திட்டவட்டமான தன்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார்கள். எதெல்லாம் எடைபோட்டுப் பார்க்க முடியுமோ, அளக்க முடியுமோ, எதையெல்லாம் கணிதக் கலைச்சொற்களால் குறிப்பிட முடியுமோ அவைதான் விஞ்ஞான ரீதியில் அமைந்தவை என்றார்கள்.

விஞ்ஞானம் முன்னேற முன்னேற இயற்கையை உறிஞ்ச புதிய கண்டுபிடிப்புகளும் கருவிகளும் முளைத்தன. இயற்கை வளங்கள் என்றுமே அழியாதவை, அள்ள அள்ளக் குறையாதவை என்று நினைத்து விட்டார்கள். ஆடம்பரத்திற்கான, சுகபோகத்திற்கான கருவிகள் பெருகப்பெருக, மனிதன் தர்மத்திலிருந்தும் கடவுளிடமிருந்தும் விலகிச் செல்ல ஆரம்பித்தான். இந்த போக்கினால் அறிவியல் பூர்வமானவை என்று கூறப்படும் பல சிந்தனாமுறைகள் தோன்றத் துவங்கின. மேற்கத்திய பொருளியலின் தந்தை என்று கூறப்படும் ஆடம் ஸ்மித், “நல்லது எதையும் செய்ய முயற்சி செய்யாதீர்கள், சுயலாபத்திற்காக செயல்படுங்கள். அதன் பக்க விளைவாக நல்லது நடக்கட்டும்” என்றார். இருபதாம் நூற்றாண்டில் கீன்ஸ் என்றும் இன்னொரு பொருளியல் அறிஞர் இருந்தார். 1930களில் மிகவும் பிரபலமடைந்தார். கீன்ஸ் கூறுவார்: “இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் நல்லதை கெட்டது என்றும் கெட்டதை நல்லது என்றும் நம்புவோம். பேராசை, பொறாமை, அபகரித்தல் போன்ற குணங்களை சிறிது காலம் தெய்வீக குணங்களாக கருதுவோம். இந்த குணங்களால் தான் ஏழ்மை என்னும் இருட்டு குகையிலிருந்து வெளி வந்து ஒளியைக் காண முடியும்”. இது போன்ற சித்தாந்தங்கள் பொருளியலின் அடிப்படையாகுமானால் மனிதனின் சுயநலத்துக்கு தூபம் போடுவதைத்தவிர வேறு எதையாவது செய்ய முடியுமா?

விஞ்ஞானிகளால் இன்னொரு போக்கிற்கும் ஊட்டம் கிடைத்தது. ‘மனிதன் இயற்கைக்கு உட்பட்டவன் அல்ல, அவன் தான் இயற்கையின் எஜமானன். புதுப்புது கருவிகள், சிறந்து செயல்படக் கூடிய இயந்திரங்கள் இயற்கையை இன்னும் அதிக வேகத்துடன் உறிஞ்ச வழிவகுத்தன. ‘காலம்’ என்பது பிரவாகம் போன்றது. அது திரும்பிச் சொல்லாது. ‘வெளி’ (Space) என்பது ஒரே சீரான பொருள்’ என்றார்கள்.

இந்தத் தவறான அணுகு முறையின் தீமையான விளைவுகள் சீக்கிரமே வெளிவரத் துவங்கின. இயற்கை வளங்கள் வேகமாக வற்றிப்போக ஆரம்பித்தன. சுற்றுச்சூழலும் அதே வேகத்துடன் மாசடையத் துவங்கியது. சமுதாயத்திலிருந்து நன்னடத்தை, தர்ம சிந்தனை போன்ற குணங்கள் மறையத் தொடங்கியது மூன்றாவது தீயவிளைவு. விஞ்ஞானத் துறையில் மிகவும் முன்னேறிய அதிக உலகாயதப் பொருட்களை அடைந்த நாடுகள்தான் நடத்தைக் கேடு, கட்டுப்பாடு இன்மை போன்ற சமுதாயப் பிரச்சினைகளில் சிக்கி மிகவும் அவதிப்படுகின்றன. இந்நாடுகளில் மனித உறவுகள் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளன. அது அமெரிக்காவாகட்டும், இங்கிலாந்து ஆகட்டும், ஜெர்மனியாகட்டும், மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் உள்ள உறவு மிகவும் சீர்குலைந்துள்ளது. சுமுகத்தன்மை என்பதே காணக்கிடைக்காததாகி விட்டது. குடும்பங்கள் சிதறி விட்டன. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் நடுவே உறவு கசந்து போக ஆரம்பித்தது. பாரதத்தில் இது போன்ற நிலைமையை கற்பனை செய்யக் கூட நம்மால் முடியாது. என் அத்தை (தாய்மாமனின் மனைவியார்) தன் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் வசிக்கிறார். அவர் என்னிடம் ஒரு சுவையான சம்பவம் சொன்னார். ஒருமுறை அவர் தன் வீட்டருகில் இருக்கும் நண்பரின் வீட்டில் அமர்ந்திருந்தார். மதிய உணவு வேளை அது. அப்போது அந்த வீட்டில் கார் நிறுத்தும் இடத்தில் ஒரு கார் வந்து நின்றது. அது தன் மகளாகத்தால் இருக்கும் என்று என் அத்தையின் அமெரிக்க நண்பர் கூறினார். அதற்கு என் அத்தை, நீங்கள் இருவரும் பேசிக்கொண்டிருங்கள். உன் மகளுடைய மதிய உணவிற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல, அமெரிக்க நண்பரோ, எதற்காக உணவு ஏற்பாடு செய்ய வேண்டும்? என்றார். அவள் உன்னுடைய மகள் தானே, மூன்று நான்கு மணிநேரம் கார் ஓட்டிக் கொண்டு வந்திருக்கிறார். இது மதிய நேரம். இங்கே உணவு உட்கொள்ள மாட்டாளா? என்றார் என் அத்தை. அந்த அமெரிக்கத் தாய், அவள் இங்கே சாப்பிட வருவேன் என்று முன்னமே தெரியப்படுத்த வில்லையே? அவளுடைய மதிய உணவைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? என்றாராம். காரை நிறுத்திவிட்டு அவருடைய மகள் உள்ளே வந்தாள். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள் தாயும் மகளும். ஒருமுறை கூட மதிய உணவு பற்றி அவளுடைய தாய் பேசவில்லை. மகளும் சாப்பிடாமலேயே புறப்பட்டுப் போனாள்.

1989ல் நான் கனடா நாட்டிற்குப் போயிருந்தேன். டோரோன்டோ நகரத்தில் ஒரு சிறுவனுக்கு பிறந்த நாள் வந்தது. அவன் அம்மாவிடம், என் பிறந்த நாள் விழாவிற்கு என் நண்பர்களை அழைக்கட்டுமா? என்று கேட்டான். ஆறு பேரை மட்டும் கூப்பிடு என்றாள் அம்மா. சிறுவனும் நண்பர்களை அழைக்கச் சென்றான். ஆறு நண்பர்களோடு இன்னும் மூன்று பேரும் வர விருப்பம் தெரிவித்தார்கள். பிறந்தநாள் விழா வந்தது. ஒன்பது நண்பர்கள் வந்தார்கள். இதை பார்த்த அம்மாவுக்கு கோபம் வந்தது. ஆறு பேரை மட்டும் கூப்பிடு என்றேன். எதற்காக 9 பேரை அழைத்தாய்? என்று அனைவர் முன்னிலையில் அவனைக் கேட்டாள். ஆறு பேரைத்தான் அழைத்தேன். வேறு மூன்று பேரும் வர விருப்பம் தெரிவித்தார்கள். நானும் சரி என்று கூறினேன் என்றான் சிறுவன். கோபம் தணியாத அந்த அம்மா அழையா விருந்தாளிகளான அந்த மூன்று சிறுவர்களை திருப்பி அனுப்பிவிட்டாள். இதுபோன்ற ஒரு விஷயத்தை நம் நாட்டில் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அங்கே குடும்பத்தில் உறவுகளின் இழை இற்றுப்போகும் அளவிற்கு வந்துவிட்டது. ஒரு பக்கம் பணத்தின் படாடோபம். இன்னொரு பக்கம் அதலபாதாளத்தில் மனித உணர்வுகளின் வீழ்ச்சி. ஆஹா என்ன சுகமான வாழ்க்கை! என்ன செல்வாக்கு! என்று எண்ணத் தோன்றும். இந்த பளபளப்புக்கும் மினுமினுப்புக்கும் பின்னால் பயங்கரமான வீழ்ச்சி உள்ளது என்பதை நாம் உணர வேண்டும். வாழ்க்கை பற்றிய கிறிஸ்தவ கண்ணோட்டமும், ஈரமில்லாத அறிவியல் ஆராய்ச்சியும் தான் கடவுளை மறந்த மேற்கத்திய பொருளியல் முன்னேற்றத்திற்கும் மனித உணர்வுகளின், உறவுகளின் வீழ்ச்சிக்கும் காரணம். என்ன தான் அறிவியல் முன்னேற்றம் இருந்தாலும், கிறிஸ்தவ நம்பிக்கைகள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. பைபிளில் கூறியதைப் போல அறிவியல் வல்லுனர்களும், இயற்கை என்பது ஜடப்பொருள், நாம் அனுபவிப்பதற்குத்தான் இருக்கிறது என்று பேசுகிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சில மிக முக்கியமான அறிவியல் கண்டு பிடிப்புகள் நடப்பில் இருந்த விஞ்ஞானத்தின் அடிப்படையான சில விஷயங்களை பொய்யாக்கின. புதுயுக முன்னேற்றத்திற்கு உதவிய, மிகவும் சிறந்தது என்று கருதப்பட்ட தேகார்தே, நியூட்டன் ஆகியோரின் விஞ்ஞான சித்தாந்தங்களை தகர்த்தெறிவதில் முக்கியமான பங்கு ஐன்ஸ் டீனுடையது. நியூட்டனின் விஞ்ஞானத்தில் எந்த ஒரு பொருளும் உயரம், அகலம், நீளம் என்று மூன்று அம்சங்களைக் கொண்டது என்று கூறப்பட்டது. ‘காலம்’ என்ற நான்காவது புது அம்சத்தை அறிமுகப்படுத்தினார் ஐன்ஸ்டீன். காலமும் கூட விரிவடையும், சுருங்கும் தன்மை கொண்டது. நாம் நண்பர்களுடன் இருக்கும் போது நேரம் போவதே தெரிவதில்லை. நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது நேரத்தை பற்றிக் கவலைப்படுவதில்லை. நேரம் பறக்கும். இப்போது நீங்கள் கேட்கும் இந்த சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகளில் இருக்கும் போது ஒவ்வொரு நிமிடமும் ஒரு மணி நேரமாகிறது. நிமிடத்திறகு ஒருமுறை கடிகாரத்தைப் பார்க்கிறோம். இதன்மூலம் காலமும், சுருங்குதல், விரிவடைதல் போன்ற குணங்களைக் கொண்டது என்று நாம் அறிகிறோம். காலத்திற்கு ஒரு விசேஷ தன்மை உண்டு. அது நேர்கோட்டில் செல்வதில்லை. அது வட்டப்பாதையில் செல்கிறது என்று கூறினார் ஐன்ஸ்டீன் . இரண்டாவதாக ‘வெளி’ கூட ஒரே சீரானது அல்ல. பொருளின் ஸ்பரிசம் பட்டதும் வெளி வளைகிறது என்கிறார் ஐன்ஸ்டீன். வெளியும் பொருளும் ஒன்றையொன்று பாதிக்கின்றன. பிரபஞ்சத்தின் இயக்கத்தை வெறும் ஈர்ப்பு சக்தி கட்டுப்படுத்துகிறது என்று நியூட்டன் கூறியதை மறுத்த ஐன்ஸ்டீன்; மின்காந்த சக்தியும் பிரபஞ்சத்தின் இயக்கத்தில் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது என்றார். ஒவ்வொரு கிரகத்திற்கும் என ஒரு காந்த மண்டலம் உள்ளது. இந்த காந்த மண்டலத்துடன் மின்சார மண்டலமும் உள்ளது. இந்த பிரபஞ்சத்தின் பல்வேறு செயல்கள் இந்த மின்காந்த சக்தியால்தான் நடக்கின்றன என்றார் ஐன்ஸ்டீன்.

இது ஒருபுறம் இருக்க, பிரபஞ்சத்தின் கட்டமைப்பில் ஆதாரமாக அமைந்த தத்துவங்களை கண்டறிய விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டார்கள். நம் வீடுகள் செங்கல் மேல் செங்கல் வைத்து கட்டப்படுவது போல, இந்த பிரபஞ்சத்தின் நிர்மாணத்தில் சிறுசிறு பொருட்கள் நிச்சயம் இருக்கின்றன. இப்படி சிந்தித்து ஆராய்ந்து சூட்சுமமான தத்துவங்களை கண்டறியத் துவங்கினார்கள். மாலிக்யூல்கள் (அணுத்திரள்கள்), அணுக்கள் இவற்றால் ஆனது பிரபஞ்சம் என்று முடிவு கட்டினார்கள். பல வருடங்கள் வரை அணுத்திரள், அணு இவைதான் பிரபஞ்சத்தின் கட்டமைப்புக்கு ஆதாரமான செங்கற்கள் என்று நம்பியிருந்தார்கள். அணுவையும் பிளந்தபோது விஞ்ஞானிகள் வியப்பில் ஆழ்ந்தார்கள். பரமாணுவின் உலகிற்குள் எட்டிப் பார்த்தபோது வாயடைத்துப் போனார்கள். அணுவிற்குள் நடப்பதை விவரிப்பது மிகவும் கடினம் என்றார்கள். அணுவிற்குள் இருக்கும் எலக்ட்ரான், புரோட்டான், ஹெட்ரான், டெட்ரான், ந்யூட்ரான் போன்ற துகள்கள் லட்சோபலட்சம் எண்ணிக்கையில் தலைதெறிக்கும் வேகத்தில் சுழன்று, பரஸ்பரம் உராய்ந்து கொண்டும் மோதிக் கொண்டும் பழைய துகள் மறைந்து புதிய துகள் தோன்றிக் கொண்டும் விளக்க முடியாத ஒரு விறு விறுப்பான நாடக மேடையின் தோற்றம் காட்டி மலைக்க வைத்தன. அணுத்துகள் விஞ்ஞானி, ராபர்ட் ஓப்பன்ஹைமர், “ஒரு எலக்ட்ரானின் இடம் நிரந்தரமானதா என்று கேட்டால் இல்லை. அப்படியானால் கால மாற்றத்திற்கு ஏற்றவாறு அதன் இடம் மாறுகிறதோ என்றால், அதுவும் இல்லை. எலக்ட்ரான் சலனமில்லாமல் இருக்கிறதா? இல்லை. அது நகர்ந்து கொண்டேயிருக்கிறதா என்றால் அதுவும் இல்லை” என்றார். நேற்றுவரை திட்டவட்டதன்மையுடையது விஞ்ஞானம் என்று கூறி வந்த பலர், திட்டவட்டத் தன்மையுடையது அல்ல என்று ஒப்புக்கொண்டார்கள். அளந்து பார்க்கக்கூடிய பொருட்கள் மட்டுமே விஞ்ஞானம் என்று கூறிய பலர் அணுவுக்குள் நடப்பதையெல்லாம் பார்த்த பின்னர் அங்கே நடப்பதை திட்டவட்டத்தன்மையுடன் கூற இயலாது என்று பேசலானார்கள். இப்படியிருக்கலாம் என்று அனுமானத்தின் பேரில்தான் அவர்களால் அணுத்துகள்கள் செய்யும் செயல்களைப் பற்றிக் கூற முடிகிறது. இது இரண்டாவது முக்கியமான கண்டுபிடிப்பு.

மூன்றாவது முக்கிய கண்டுபிடிப்பு, ஒவ்வொரு அணுத்துகளுக்கும் ஈடான ஒரு துகள் பிரபஞ்சத்தில் வேறு எங்கோ உண்டு என்பது தான். ஒரு துகள், கடிகாரச் சுற்றுவட்டத்தில் சென்றால் அதற்கு ஈடான துகள் எதிர் திசையில் செல்ல ஒரு துகள் மேல் நோக்கிச் சென்றால் அதற்கு ஈடான துகள் கீழ்நோக்கிச் செல்லும். ஐன்ஸ்டீனுக்கும் நீல்ஸ் போர் என்னும் அணுத்துகள் விஞ்ஞானிக்கும் இடையே இது பற்றி ஒரு பெரிய விவாதமே நடந்தது. இது எப்படி சாத்தியமாகும்? என்று கேட்டார் ஐன்ஸ்டீன். “ஒரு துகள் இங்கு இருக்கிறது அதன் ஈடு துகள் ஆயிரம் ஒளிவருடங்களுக்கு அப்பால் ஏதோ ஒரு கிரகத்தில் உள்ளது என்று கொள்வோமானால் இந்தத் துகளின் செயல்பாடுகளை உடனடியாக அறிந்து அந்த ஈடுதுகள் அதற்கு நேர்மாறாக நடந்துகொள்கிறது என்று எப்படிக் கூறுவது? இங்கிருக்கும் துகளின் மாற்றத்தை அறிய குறைந்தது ஆயிரம் ஒளிவருடங்கள் தேவைப்படுமல்லவா? மிகவும் வேகமாக செல்லக்கூடியது என்று கருதப்படும், ஒளிக்கே 1,000 வருடங்கள் தேவை என்னும்போது, துகளுக்கும் ஈடுதுகளுக்கும் உள்ள தொடர்பை எப்படி விளக்குவது? இது சாத்தியமில்லை” என்றார் ஐன்ஸ்டீன். ஆனால் நீல்ஸ் போர், உடனடித் தொடர்பு உள்ளது என்பதில் விடாப்படியாக இருந்தார்.

உடனடித் தொடர்பு உள்ளது என்று கூறினால் ஒளியை விடவும் வேகமாகச் செல்லும் பொருள் உள்ளது என்று கூறுவது போலாகும். இதை ‘மனம்’ என்று தான் கூற வேண்டும். இல்லாவிட்டால் துகள் -ஈடுதுகள் தொடர்பை விளக்க இயலாது.

எது எப்படியானாலும் ஒன்று நிச்சயம். பிரபஞ்சத்தின் கட்டமைப்பில் செங்கல் போல துகள் என்று ஒன்று இல்லை என்று விஞ்ஞானம் ஒப்புக்கொண்டுள்ளது. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பொருளும் பிற எல்லா பொருட்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. அதனால் பிரபஞ்சத்தின் உள்ள பொருட்கள் அனைத்தும் ஒரு மறுக்கமுடியாத பரஸ்பர தொடர்பு வலையில்தான் இருக்கின்றன. இதையே நமது முன்னோர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன் கூறியிருக்கிறார்கள். மரத்தில் விதை, விதையில் மரம் என்பார்களல்லவா? ஒரு விதையைப் போட்டால் அதிலிருந்து ஒரு மரம் வளர்கிறது. மரத்திலே தான் நாம் விதைகளைக் காண முடிகிறது. இப்படியாக அனைத்துப் பொருட்களும் பரஸ்பர தொடர்புகொண்டுள்ளன. அதனால் ஒரு சிறு துகளில் பிரபஞ்சம் உள்ளது. அந்த சிறு துகள் பிரபஞ்சத்தில் உள்ளது என்று கூறலாம்.

இரட்டை அம்சம் அல்லது ‘துவந்துவம்’ என்ற ஒரு கருத்தும் நம் நாட்டில் விளைந்த பயிர்தான். இன்ப துன்பம், இரவு பகல், வெற்றி தோல்வி, என்ற இவையெல்லாம் இரட்டைகளாகத்தான் இருக்கும். இந்த உலகமே இந்த இரட்டைகளால் ஆனது தான். இதைத்தான் துவைதம் என்பார்கள். இந்த உலகியல் துவைதத்திற்கு அப்பால் உள்ளது பரம்பொருள். இதை அத்வைதம் என்பார்கள் இவ்வாறு இந்த இரட்டை இயல்பை விஞ்ஞானம் இன்று ஒப்புக்கொண்டுள்ளது.

நம் முன்னோர்கள் பரம்பொருளான அத்வைத நிலையை விண்டுரைக்க இயலாதது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். நமது உபநிடத விளக்கங்களும் விஞ்ஞானி ஓப்பன்ஹை மரின் விளக்கங்களும் பல இடங்களில் இசைந்து போவதைக் காணலாம். உபநிடதங்கள் பரம்பொருளை ததே ஜதி (அது செல்கிறது), தன்னேஜத (அது செல்வதில்லை); தத்தூரே (அது தொலைவில் உள்ளது); தத்வந்திகே (அது அருகிலேயே இருக்கிறது); ததந்தரஸ்ய ஸர்வஸ்ய (அது அனைத்து பொருட்களின் உட்பொருளாக உள்ளது); தது ஸர்வஸ்யாஸ்ய பாஹ்யத: (புற உலகிலும் நிறைந்து நிற்கிறது) – என்றெல்லாம் விளக்குகின்றன. ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலேயே 20-21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகள் பயன்படுத்தும் சொற்களை எடுத்தாண்டிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். இந்த பிரபஞ்சத்தின் உண்மையை அறிய வேண்டுமானால் காலம் என்னும் தடையை மீறி சிந்திக்க வேண்டும் என்கிறது நவீன விஞ்ஞானம் இதை காலாதீதமான (காலத்திற்கு அப்பாலான) தத்துவம் என்பார்கள். காலத்திற்கு அப்பால், வர்ணனைக்கு அப்பால், இரட்டை இயல்பு (த்வைதம்), மரத்தினுள் விதை, விதையினுள் மரம் என்பது போன்ற சொற்களை பல நூற்றாண்டுகளுக்கு முன்னாலேயே நம் முன்னோர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மேற்கத்திய சிந்தனையின் ஓட்டத்தை இதுவரை பார்த்தோம். ஹிந்து சிந்தனாமுறை வளர்ந்த விதமே வேறு. மேற்கத்திய விஞ்ஞான பரிசோதனை முறைபோல் அல்லாமல் ஹிந்து சிந்தனை வேறு விதமாகவே பரிணமித்தது. பெரிதும் அடிப்படை விஷயங்களை மிகதீர்க்கமாக அலசி ஆராய்வதில் முனைந்தார்கள் ஹிந்துக்கள். உலகிலுள்ள தத்துவ அறிஞர்கள் அனைவரும் எதிர்கொள்பவை மூன்று முக்கியமான கேள்விக் கொத்துகள் தான். அதில் முதலாவது கொத்து: நான் யார்? எங்கிருந்து வந்தேன்? எங்கு செல்கிறேன்? நான் இங்கு வந்ததன் நோக்கமென்ன? இரண்டாவது கேள்விக்கொத்து: இந்த பிரபஞ்சம் என்பது என்ன? எப்போது இது தோன்றிது? எதை நோக்கிச் செல்கிறது? எதற்காகத்தான் இந்த பிரபஞ்சம் உள்ளது? மூன்றாவது: எனக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் என்ன தொடர்பு? எல்லா காலங்களிலும் உலகின் எல்லா அறிஞர்களும் இந்த அடிப்படைக் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் சிரமம் கண்டிருக்கிறார்கள். மேற்கத்திய சிந்தனையாளர்கள் முதல் கேள்விக் கொத்திற்கு பதிலளிப்பதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் இரண்டாம் கேள்விக்கொத்திற்கு பதில் தேடி சிந்தித்திருக்கிறார்கள். சிலர் தண்ணீர் தான் படைப்பின் (சிருஷ்டியின்) அடிப்படைப் பொருள் என்றார்கள். வேறு சிலர் எண்கள் தான் அடிப்படையான பொருள் என்றார்கள். (பிதாகரஸ் எண் தான் படைப்பின் அடிப்படைப் பொருள் என்று நம்பினார்). சிலர் நெருப்பு என்றார்கள். வேறு சிலர் காற்று என்றார்கள். இன்னும் சிலர் நிலம், காற்று நெருப்பு ஆகியவை என்றார்கள். மனிதன் என்பவன் ‘பகுத்தறிவுள்ள விலங்கு’ ‘பொருளாதார விலங்கு’, ‘கூடிவாழும் விலங்கு’ என்றெல்லாம் பலவிதமாகச் சொன்னார்கள். யாருக்குமே ஒரு முழுமையான பார்வை இருக்கவில்லை.

ஆனால் நம் நாட்டில் தான் மனிதனை பற்றி பூரணமான, விவரமான கண்ணோட்டம் இருந்து வருகிறது. நான் யார்? பார்க்க முடிகிற உடலா நான்? விளையாடும் போதும், எழும்போதும், உட்காரும்போதும், உண்ணும் போதும், தண்ணீர் பருகும்போதும், நடக்கும்போதும் நான் இந்த உடல் என்று உணர்கிறேன். உறங்கச் செல்லும்போது கூட நான் இந்த உடல்தான் என்று உணர்கிறேன். ஆனால் உறங்கும் போது கனவு காண்கிறேன். கனவிலும் கூட எழுகிறேன், உட்காருகிறேன். உண்கிறேன், தண்ணீர் பருகுகிறேன், குதிக்கிறேன், எல்லா செயல்களையும் செய்கிறேன். ஆனால் என் உடம்பு செயலற்று படுக்கையில் கிடக்கிறது. அப்படியானால், கனவைப் பார்ப்பது யார்?

இந்நாட்டின் ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும் பல எளிமையான உதாரணங்களின் மூலம் இந்த கடினமான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்கள். சிலர், புராணங்கள் என்பது கட்டுக்கதைகளின், வெட்டிப் பேச்சுகளின் தொகுப்பு என்று கூறுகிறார்கள். அது சரியல்ல. எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் மிக ஆழ்ந்த தத்துவங்களை புராணங்கள் சாதாரண மனிதர்களுக்குப் புரியவைக்கின்றன.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போமே. ஒருநாள் ஜனக மகாராஜா உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கனவு கண்டார். அதில் தான் எதிரி நாட்டு மன்னனோடு கடுமையாகப் போரிட்டுத் தோற்றதாகக் கண்டார். எதிரி நாட்டு மன்னன் முன்னிலையில் ஜனகர் நிறுத்தப்படுகிறார். அப்போது வெற்றிபெற்ற மன்னன், இந்த நாடு எனக்குச் சொந்தமானது, நீ இங்கிருந்து வெளியேறு என்று உத்தரவிடுகிறான். இந்த நாட்டில் யாரும் ஜனகருக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடாது, மீறினால் மரண தண்டனை என்று முரசறைவித்தான். ஜனகருடைய ராஜ்ஜியம் சிறியதல்ல. அதை விட்டு வெளியேறவே பல நாட்கள் ஆகிறது. நடந்தே சென்றதால் பசியும், களைப்பும் ஜனகரை வாட்டுகின்றன. இருந்தாலும் மிகுந்த சிரமத்துடன் தான் இழந்த ராஜ்ஜியத்தின் எல்லையை ஜனகர் கடக்கிறார். எல்லைக்கு அப்பால், தான் கண்ட முதல் வீட்டின் கதவைத் தட்டி உண்ண உணவு வேண்டும் என்று வேண்டுகிறார். சாலையின் மறுபுறம் ஒரு சத்திரம் இருப்பதாகவும் அங்கு சென்றால் இலவசமாக உணவு பெறலாம் என்றும் வீட்டார் சொல்கிறார்கள். களைப்பினால் சோர்ந்திருந்த ஜனகர் கஷ்டப்பட்டு சத்திரத்திற்குப் போகிறார். சத்திரப் பராமரிப்பாளர், ஐயா, நீங்கள் தாமதமாக வந்துள்ளீர்கள். இங்கு சமைத்த உணவெல்லாம் தீர்ந்துவிட்டது என்று கைவிரிக்கிறார். ஜனகர் நொந்து போகிறார். ஜனகரின் பரிதாப நிலையைக் கண்ட சத்திரத்துக்காரர், சோற்றுப் பானையின் அடியில் ஒட்டிக் கொண்டிருப்பதைச் சுரண்டித் தருகிறேன், உண்ணுங்கள் என்று கூறிவிட்டு கிடைத்ததை கொண்டு வந்து கொடுக்கிறார். உணவை கையில் வாங்கிய நேரத்தில் எங்கிருந்தோ பறந்து வந்த கழுகு, அதைப் பறித்துக் கொண்டு பறந்து விடுகிறது. ஜனகர் வாய் விட்டு ஓவென்று கதறுகிறார். இந்த கட்டத்தில் தூக்கம் கலைந்தது. ஜனகருடைய அலறல் கேட்டு கவலையுடன் கூடியிருந்த சேவகர்களைக் கண்டு, தான் அரண்மனையில் உள்ளதை உணர்ந்தார் ஜனகர்.

ஒரு நிமிடம் முன்பாக, பசியுடனும் தாகத்துடனும் இருந்தேன். என் உடை மிகவும் அழுக்காகியிருந்தது. உடம்பு சோர்ந்து களைத்திருந்தது. இப்போதோ அதன் அறிகுறியே இல்லை. இதற்கு எல்லாம் என்ன பொருள்? நான் முன்பு பார்த்தது சத்தியமா, இப்போது பார்ப்பது சத்தியமா? இது சத்தியமா அது சத்தியமா? என்ற சொற்கள் அவர் அறியாமலேயே அவர் வாயிலிருந்து வெளிப்பட்டன. ஓடோடி வந்த மகாராணி, மன்னா, என்ன நேர்ந்தது? என்றார். ஜனகர், எது சத்தியம்? இதுவா, அதுவா? என்றார். அமைச்சர்கள் எல்லோரும் வந்தார்கள். ராஜவைத்தியர் ஜனகருக்கு நாடி பார்த்தார். மன்னர் நலமுடனேயே இருந்தார். ஆனால் எது சத்தியம் இதுவா அதுவா? என்பதை மட்டும் திரும்பத் திரும்ப கூறிக்கொண்டே இருந்தார். மன்னரின் இந்தச் செயலைக் கண்டு அனைவரும் கவலையில் ஆழ்ந்தார்கள்.

அந்த இரவு எப்படியோ கழிந்தது. அதிகாலையில், அஷ்டாவக்கிரர் என்னும் முனிவர் வந்திருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. அரண்மனையில் இருந்த அனைவரும் அவர் பாதங்களில் வீழ்ந்து பணிந்தார்கள். அவர்களிடம் அஷ்டாவக்கிரர் ஜனகர் நலமா என விசாரித்தார். அதற்கு அவர்கள், மன்னர் ஏதோ மந்திர சக்தியால் கட்டுண்டவர் போல எது சத்தியம் இதுவா, அதுவா? என்று ஜெபித்துக் கொண்டேயிருக்கிறார் என்றார்கள். அஷ்டாவக்கிரர் மன்னரிடம் சென்று நலம் விசாரித்தார். எது உண்மை , இதுவா, அதுவா? என்பதே மன்னரின் பதிலாக இருந்தது. அஷ்டாவக்கிரர் முக்காலமும் உணர்ந்த யோகி. யோக சக்தியின் மூலம் என்ன நடந்தது என்பதை அறிந்தார். மன்னா! நேற்று நீங்கள் உணவிற்காக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த போது, இந்த அரண்மனையும் சேவகர்களும், பொன்னும் மனியும் இருந்தனவா கூறுங்கள் என்று கேட்டார் அஷ்டாவக்கிரர். இல்லை யாரும் இருக்கவில்லை என்றார் ஜனகர். கனவிலிருந்து விழிப்புநிலைக்கு வந்தபோது, சத்திரக்காப்பாளர், கழுகு, பசி இவற்றில் ஏதாவது புலப்பட்டதா? என்று அஷ்டாவக்கிரர் கேட்டார். இல்லை என்று கூறினார் ஜனகர். அதனால் அது இருந்தபோது இது இல்லை , இது உள்ளபோது அது இல்லை. ஆகவே, இதுவும் உண்மையில்லை அதுவும் உண்மையில்லை என்றார் முனிவர். அப்படியானால் உண்மை எது? சத்தியம் எது? என்று கேட்டார் ஜனகர். அஷ்டாவக்கிரர் கூறினார், பசியால் வாடி பிச்சை எடுக்கும்போதும், இந்த சேவகர்கள் புடைசூழ அரண்மனையில் வீற்றிருக்கும்போதும் தாங்கள் உள்ளீர்கள் அல்லவா? மன்னவா, அங்கும் நீங்கள் இருந்தீர்கள், இங்கும் நீங்கள் உள்ளார்கள். அதனால் நீங்கள் மட்டுமே உண்மை (சத்தியம்) என்று விளக்கினார் அஷ்டாவக்கிரர். இப்படி ஒரு கதை உண்டு.

இது போன்ற உதாரணங்களால் விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்ன), ஆழ்ந்த உறக்கம் (சுஷுப்தி) என்று மூன்று நிலைகள் உள்ளன என்பதை எளிமையாக நம் முன்னோர்கள் விளக்கிச் சென்றுள்ளார்கள். சுஷுப்தி (ஆழ்ந்த நித்திரை) நிலையில் நம் மனதும் கூட செயலாற்றுவதை நிறுத்திவிடுகிறது. ஆழ்துயிலிலிருந்து எழுந்த உடன் எவருமே, ஆஹா! நல்ல தூக்கம்! நான் சுகமாகத் தூங்கினேன் என்றுதான் சொல்வார்கள். அப்படியானால் ஆழ்துயில் சுகத்தை அனுபவித்தது யார்? இந்த கேள்வியை ஆழ்ந்து விவாதித்து, சிந்தித்து நம் முன்னோர்கள் பதிலளித்துள்ளார்கள். அது இந்த கீதை வரிகளில் காணப்படுகிறது:

“இந்த்ரியாணி பராண்யாஹுஹு

இந்த்ரியேப்யப் பரம் மனஹ

மனஸ ஸ்து பராபுத்திஹி

யோ புத்தேப் பரத ஸ்து ஸஹ”

– பகவத் கீதை (அத்.3 ஸ்லோ 42)

(புலன்கள் இந்த உடலை விடச் சிறந்தவை. புலன்களை விட மனதும் சிறந்தது. மனதை விட சிந்திக்கும் திறன் பெற்ற புத்தி (அறிவு) சிறந்தது. ஆனால் ஆன்மா புத்தியை விடவும் சிறந்ததாக இருக்கிறது).

ஆன்மா எப்படிப்பட்டது? ஆழ்துயிலில் இருக்கும் போது ஆன்மாவின் மிக அருகில் நாம் இருக்கிறோம். ஆன்மா ஆனந்த மயானது என்பதனால், அப்போது நாம் சுகத்தை, ஆனந்தத்தை அனுபவிக்கிறோம்.

அதனால்தான் நம் முன்னோர்களான ரிஷிமுனிவர்கள், “மனிதன், உடல், மனம், அறிவு, ஆன்மா என்ற இவைகளால் ஆனவன். ஆன்மா உருவமற்றது, குணங்களற்றது, ‘அகங்கார’ மற்றது, சாஸ்வதமானது, முடிவற்றது” என்று தெளிவாக விளக்கினார்கள்.

அதன்பின் பிரபஞ்சத்தைப் பற்றியும் சிந்தித்தார்கள். பிரபஞ்சத்தில் உள்ள எல்லாப் பொருட்களும் மாற்றமடைந்த வண்ணம் உள்ளன. நேற்று இருந்தது இன்று இல்லை, இன்று இருப்பது நாளை இருக்கப் போவதில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் நம்மில் பலர் இருக்கவில்லை. ஐம்பது வருடங்களுக்கு முன்னால் கோல்கத்தா இப்படி இருக்கவில்லை. ஐம்பது வருடங்களுக்கு அப்புறம் கோல்கத்தா இப்படியே இருக்கப் போவதில்லை. எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் எதுதான் நிரந்தரமானது?

நீண்டநெடும் தவத்தின் பலனாக நம் முன்னோர்களான ரிஷிகள், பரம்பொருள் ஒன்றே மாற்றமற்றது, சாசுவதமானது, இந்த உலகின் ஆதாரமானது. விதவித வடிவங்களும் பெயர்களும் தாங்கிய உலகம், ஆதிப் பரம்பொருள் என்னும் சமுத்திரத்தின் மேற்பரப்பில் உள்ள அலைகளை போல. அலைகள் எண்ணிக்கையிலடங்காதது. ஆனால் கடலின் ஆழத்தில் அலைகளில்லா அமைதி தவழ்கிறது. அலைகள் கடலிலிருந்து தான் எழுகின்றன, அங்கேயே அடங்கி விடுகின்றன. அதே போல் இந்த பிரபஞ்சமே பரம் பொருளிலிருந்து தான் உண்டாகிறது, அதிலேயே மறுபடியும் ஒன்றிவிடுகிறது.

“ஜைஸே ஜல தே

புத்புதா உபஜே பினஸே நீத்

ஜகரசனா தைஸேகரீ

கஹநானக் ஸுன் மீத்

” குரு க்ரந்த ஸாஹேப்

(நீர்குமிழிகள் நீரிலேயே தோன்றி அதிலேயே மறைவது போல இந்த பிரபஞ்சம் பரம்பொருளிலிருந்தே தோன்றி அதிலேயே மறைகின்றது. இதைத்தான் பரமாத்மா என்று அழைக்கிறார்கள்)

பரம்பொருளை தியானித்து அது நிர்க்குணம்; உருவமற்றது, ‘அகங்கார’ மற்றது நித்தியமானது, அழிவற்றது என்று கூறினார்கள் ரிஷிகள். இரண்டு பரம் பொருட்கள் இருப்பது சாத்தியமில்லை என்றும் கூறினார்கள். பரம்பொருள் ஒன்றே. எல்லையற்றதையும், எல்லையற்றதையும் கூட்டினாலும், கழித்தாலும், பெருக்கினாலும் வகுத்தாலும் நமக்கு கிடைப்பது எல்லையற்ற பொருளேதான். இதைத்தான் –

“பூர்ணமத: பூர்ணமிதம்

பூர்ணாத் பூர்ணமுதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய

பூர்ணமேவாவ சிஷ்யதே”

(பூர்ணத்தை பூர்ணத்தால் பெருக்கினாலோ கூட்டினாலோ, கழித்தாலோ, வகுத்தாலோ பூர்ணமேதான் மிஞ்சும். பரமாத்மா ஒருவனே) என்கிறது முனிவன் வாக்கு.

ஆன்மாவும் பரமாத்மாவும் ஒன்றே என்றால் நான் நினைப்பதை வேரொருவர் அறிய வேண்டும், வேரொருவர் நினைப்பதை நான் அறிய வேண்டும் அல்லவா? என்ற சந்தேகம் எழுகிறது. –

ஆம்! அது சாத்தியம் தான். மனதை மறைக்கும் அறியாமைத் திரையைக் கிழித்து எறிந்தால் அது சாத்தியமாகும். அந்த திரையை மாயை என்று நம் முன்னோர்கள் அழைத்தார்கள். நான் இந்த உடல் மட்டும் தான் என்று நம்மை நாமே குறுக்கிக் கொண்டு விட்டோம். ஆனால் மாயையை கடந்து மேலே சென்றால், அனைவருடைய சுகதுக்கங்களும் நம்முடையது ஆகும். குழந்தை பசியாக இருக்கிறது என்று தாய்க்கு எப்படித் தெரிகிறது? குழந்தை அழும்போது அதை தாய் அறிகிறாள். பசியாக இருக்கும் போது, தாகம் இருக்கும் போது, வயிற்று வலி இருக்கும்போது குழந்தை அழுகிறது. வயிற்றுவலியாக இருக்கும் போது மருந்து கொடுக்க வேண்டும் என்று தாய் எப்படி அறிகிறாள்? குழந்தையைப் பற்றி தாய் ஏன் மிகவும் கவலைப்படுகிறாள்? அது தன்னுடைய குழந்தை என்று உணர்வதால் தாய் இவ்வாறெல்லாம் செய்கிறாள். அதேபோல், பிறரையும் நம்மவர் என்று நாம் கருதும்போது பிறர் சுகதுக்கங்கள் நம்முடையவையாகின்றன. நான் தான் இந்தக் குடும்பம் என்று மனதை விசாலப்படுத்தி எண்ணும் போது, குடும்பத்தின் சுகதுக்கங்கள் என்னுடையதாகின்றன . இதே போலத்தான் நம்முடைய நகரத்தை அளாவியவாறு, சமுதாயத்தை அளாவியவாறு எண்ணம் விசாலமடையும் போது நகரின், சமுதாயத்தின் சுகதுக்கங்களில் நாமும் பங்கெடுக்கின்றோம். இதே போல இங்குள்ள வனவாசி சகோதர சகோதரிகளின் கஷ்டங்கள், நம்முடையதாகின்றன. இப்படியே மனிதன் தன்னுடைய ஆன்மாவை விசாலப்படுத்திக் கொண்டே சென்றால் இந்த பிரபஞ்சத்தையே தன்னில் காண்கிறான். அதனுடன் ஒன்றிவிடுகிறான். இதைத்தான் ‘மனிதன் இறைநிலை அடையும் பிரயாணம்’ என்கிறோம். மனிதன் (நரன்) கடவுள் (நாராயணன்) ஆகிறான். கடவுள் அருகில் செல்வதற்கு வழி தன்னைத்தானே விசாலப்படுத்திக் கொள்வது தான். இப்படித்தான் மனிதன் மகேசனாகிறான். அதிலிருந்து அனைத்திலும் நிறைந்த பரம்பொருளாகிறான், பூர்ணனாகிறான்.

இதுதான் நமது ஹிந்து தர்மம். ஹிந்து தர்மத்தை விளக்குங்கள் என்று யாராவது நம்மைக் கேட்டால், ஹிந்து தர்மம் தனிநபர், சமுதாயம், படைப்பு ( இயற்கை ), கடவுள் என்ற நான்கு நிலைகளுக்கும் பரிபூரண இசைவிணக்கத்தை ஏற்படுத்தி மனிதனுக்கு உடல், மனம், அறிவு, ஆன்மா என்ற அனைத்து நிலைகளிலும் ஆனந்தத்தை வழங்கும் முயற்சி என்போம். இந்த குறிக்கோளை அடைவதற்காக செய்யப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் ஹிந்து தர்மத்தின் அங்கங்கள் ஆகின்றன. இதுதான் ஹிந்து கண்ணோட்டம் அல்லது உலகு தழுவிய ஹிந்து கண்ணோட்டம்.

உலகு தழுவிய கண்ணோட்டம் என்பதில் ஹிந்து தர்மத்தின் பார்வைக்கும் மேற்கத்திய நாடுகளின் பார்வைக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. மேற்கத்திய சிந்தனாமுறையில் உலகு தழுவிய கண்ணோட்டம் என்றால் உயிர்வாழப் போட்டாபோட்டி, வல்லவன் மட்டுமே வாழுதல், இயற்கையை சுரண்டுதல், தனிமனித உரிமைகள் இவையெல்லாம்தான் முக்கிய அம்சங்களாக உள்ளன. தர்மத்தின் அடிப்படையிலான ஹிந்துக் கண்ணோட்டம் இந்த நான்கு அம்சங்களையுமே நிராகரிக்கிறது. உயிர் வாழப் போட்டா போட்டியே இல்லை. ஏனென்றால் எல்லாமே பரம்பொருளின் வடிவம். சர்வம் கல்விதம் ப்ரம்ம. பிரபஞ்சம் பரம்பொருளின் விரிவாக்கமே என்றால் போட்டாபோட்டி என்பதற்கு இடமே இல்லை . எங்கும் நிலவுவது பரஸ்பர உதவியும் இசைவிணக்கமும்தான். ஆனால் எல்லா இடங்களிலும் போட்டாபோட்டி தென்படுகிறதே? என்று கூறி இதை சிலர் மறுக்கலாம். அது அவர்களின் அறியாமையின் விளைவு. இது எதிரெதிர் திசையிலிருந்துவரும் இரு நண்பர்கள் இருட்டறை ஒன்றில் மோதிக் கொள்வது போல். மோதிக் கொள்கிறவர்கள் கைகலப்பிலும் இறங்குகிறார்கள். அறையில் வெளிச்சம் வந்தவுடன், அட நீயா? என்று இருவரும் ஒருவரையொருவர் கேட்டுக்கொள்கிறார்கள். நண்பர்களான நாம் வீணாக சண்டை போட்டுக் கொண்டிருந்தோமே என்று உணர்கிறார்கள். உண்மை தெரிந்ததும் மோதல் நிற்கிறது.

திறன்மிக்கவர்களே வாழத் தகுதியுடையவர்கள் என்ற இரண்டாம் அம்சத்தையும் நாம் ஏற்கவில்லை. சர்வே பவந்து சுகினஹ (அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்) என்றுதான் நாம் கூறு கிறோம். சக்தி மிகுந்தவன் மட்டும் வாழ வேண்டும். மற்றவறெல்லாம் மடிய வேண்டுமா? மேற்கத்திய பொருளியல் சித்தாந்தமே தகுதியுள்ளவன் மட்டுமே, சக்திசாலி மட்டுமே வாழ வேண்டும், மற்றவரெல்லாம் வாழத் தகுதியற்றவர்கள், அவர்கள் அழிந்தால் அழியட்டும் என்ற கண்ணோட்டத்தின் அடிப்படையிலானது. பிறரும் வாழ வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்நாட்டில் நாம் இந்தக் கருத்தை ஏற்பதில்லை. சக்தியுடையவர்கள், திறமையானவர்கள், பல வீனர்களை அரவணைத்து, அவர்களின் வாழ்க்கையையும் மகிழ்ச்சிகரமானதாய் ஆக்க வேண்டும் என்ற கருத்துடைபவர்கள் நாம்.

இயற்கையை சுரண்டுதல் என்பது நமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. நம்முடைய அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே இயற்கை வளத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் நாம். இயற்கையை அன்னை என்கிறோம். குழந்தை தன் வயிறு நிரம்பும் வரை மட்டுமே தாயிடமிருந்து தாய்ப்பாலை அருந்து கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். வயிறு நிறைந்தவுடன், தாயே கட்டாயப்படுத்தினாலும் குழந்தை பாலைக் குடிக்க மறுக்கிறது. அதனால் தான் எவ்வளவு அத்தியாவசியமோ அவ்வளவே இயற்கையிடமிருந்து கொள்ளவேண்டும் என்கிறோம். ப

தேன த்யக்தேன புஞ்ஜீதா; (தியாக உணர்வுடன் சுகத்தை நாடுதல்). நம் ஆசையைப் பூர்த்திசெய்ய இயற்கையிடம் போதுமான வளங்கள் உள்ளது; நம் பேராசையை அல்ல. அதனால் மிகத் தேவையானதை மட்டுமே இயற்கையிடமிருந்து எடுக்கும் பழக்கம் நமக்கு வேண்டும். இதைத்தான் ‘தாக்குப் பிடிக்கக்கூடிய நுகர்வு’ என்பார்கள். நிறைய சம்பாதிக்க இறைவன் நமக்கு புத்தியையும் சக்தியையும் அளித்துள்ளான். ஆனால் அத்தியாவசியமானதை மட்டுமே பெற நாம் முயற்சி செய்ய வேண்டும். மற்றவையெல்லாம் இறைவனுக்கே சொந்தம்.

“ஈசா வாஸ்யம் இதம் சர்வம்

யத்கிஞ்ச ஜசுத்யாம் ஜகத்

தேன த்யக்தேன புஞ்ஜீதாஹா

மாக்ருதஹ கஸ்யஸ்வித்தனம்.”

– ஈஸாவாஸ்ய உபநிடதம்

(பேராசை கூடாது. இந்தச் செல்வம் கடவுளுடையது, நம்முடையது அல்ல. இந்த உலகில் நாம் காணும் அனைத்தும் கடவுளுக்கே சொந்தம். அத்தியாவசியத்தை மட்டுமே எடுத்துக்கொள். தியாகத்தில் மகிழ்ச்சிகொள்)

நாம் தனிமனித உரிமைகளை சரி என ஏற்றுக்கொள்வதில்லை; ஏனென்றால் நாம் வெறும் தனி நபர்கள் மட்டுமே என்பதை ஏற்பவர்களல்ல. நான் சுதர்சன். எனக்கு இந்தப் பெயர் எப்படி வந்தது? ஏன் வந்தது? ஆண்டர்சன் என்று ஏன் இல்லை ? சர்மத் கான் என்று ஏன் இல்லை ஏனென்றால் நான் பிறந்த சமுதாயத்தில் சூட்டப்பட்ட ஒவ்வொரு பெயருக்கும் குறிப்பிட்ட பொருள் உண்டு. நான் இங்கிலாந்தில் பிறந்திருந்தால் ஆண்டர்ஸன் என்று பெயரிட்டிருப்பார்கள். அதனால்தான் பெயர் தனிமனிதனை மட்டும் குறிப்பிடவில்லை அவன் சார்ந்து இருக்கும் சமூகத்தையும் குறிப்பிடுகிறது. நான் தனிமனிதனா? நான் செல்லும் போது, இவன்தான் என் மகன் என்கிறார் என் தாயார். என் அக்கா, என் தம்பி செல்கிறான் என்கிறாள். தாத்தா என் பேரன் செல்கிறான் என்கிறார். மாமா என் மருமகன் செல்கிறான் என்கிறார். இப்படி நான் தனி மனிதனல்ல. பலவிதமான உறவுகளால் பல தனிமனிதர்களுடன் பிணைக்கப்பட்டுள்ளேன். நம்முடைய மகளுக்கு திருமணம் நிச்சயிக்கும் போது மாப்பிள்ளையின் பூர்வீகம், பழக்கவழக்கம், நடத்தை போன்றவற்றை கேட்டு விசாரித்து தெரிந்து கொள்கிறோம். பையன் நல்லவன், படித்தவன். அது சரி, அவன் பெற்றோர் எப்படி? பெற்றோரைப் பற்றி ஏன் கவலைப் படுகிறீர்கள்? நல்ல மாப்பிள்ளை வேண்டும், பையன் நல்லவனாக இருக்கிறான் இது போதாதா? என்று கேட்கக்கூடும். இதற்கு நாம் பதில் என்னவாயிருக்கும்? நீங்கள் சொல்வது போல மாப்பிள்ளை சரியாக இருக்கலாம். ஆனால் அவன் பெற்றோர் மோசமானவர்களாக இருந்தால்? அதைப் பற்றியும் யோசிக்க வேண்டியது அவசியம் அல்லவா? இவையெல்லாம் நாம் தனிநபர் மட்டும் அல்ல என்பதைத்தான் சுட்டிக்காட்டு கின்றன. நம் இஷ்டப்படி நடக்க நமக்கு சுதந்திரம் கிடையாது. நாம் நல்ல செயல்களைச் செய்தால் நம் பெற்றோர் மகிழ்ச்சி அடைவார்கள். நாம் கெட்ட செயல் செய்தால், பெற்ற தாயே ‘எனக்கு அவமானத்தை ஏற்படுத்தி விட்டாயே’ என்று கூறிவிடுவார். என் பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்திவிட்டாய் என்பார் தந்தை. அண்ணா! என்ன காரியம் செய்துவிட்டாய் என்பாள் தங்கை. நான் விரும்புவதை செய்ய எனக்கு சுதந்திரம் கிடையாது. ஒரு பெரிய அமைப்பின் அங்கம் நான். நான் என் குடும்பத்தின் அங்கத்தினன். குடும்பம் சமுதாயத்தின் அங்கம். சமுதாயம் தேசத்தின் அங்கம். தேசம் மனிதகுலத்தின் அங்கம். மனிதகுலம் இந்த பிரபஞ்சத்தின் அங்கம். இந்த பிரபஞ்சமே பரம்பொருளின் அங்கம்.

தனிநபர் முதல் பரம்பொருள் வரை நாம் அனைவரும் உயிருள்ள உடலின் உறுப்புகள் போல பிணைக்கப்பட்டுள்ளோம். உடல், அதன் உறுப்புகள் என்ற உறவில் உரிமை என்ற பேச்சுக்கே இடமில்லை. யாருடைய உரிமை? யாருக்கு உரிமை? கை, கால், கண் இவற்றிற்கு எல்லாம் தனித்தனி உரிமை உண்டா? எதற்கும் அப்படி உரிமை இல்லை. கடமைதான் இருக்கிறது. ஒவ்வொரு அங்கமும் உடலுக்காக உழைக்கிறது, பதிலுக்கு உடல், அங்கங்களை பராமரிக்கிறது. யாராவது ஒரு இரும்புத்தடியால் நம் தலையில் அடிக்க முயலும் போது நமது கை அனிச்சைச் செயலாக தடுக்க முன்வருகிறது அல்லவா? தலையைத் தடுக்க நான் சென்றால் அந்த அடி என்மேல் விழுமே என்று கை சிந்திக்கிறதா? காலில் முள் குத்தினாலும், கணமும் தாமதமின்றி முள்ளை எடுக்கிறது கை. இந்த உடல் முழுவதும் நான் என்ற உணர்வு ஓட்டம் இருப்பதால் இதுபோன்ற செயல்கள் சாத்தியமாகின்றன. குடும்பத்திற்காக ஒவ்வொரு தனிநபரும் முயற்சி செய்கிறார். அதனால் குடும்பம் ஒவ்வொருவரையும் பராமரிக்கிறது. குடும்பம் சமுதாய மேம்பாட்டுக்காக இயங்குகிறது; சமுதாயம் குடும்பத்தை காப்பாற்றுகிறது.

ஒவ்வொரு சமுதாயமும் மனித குலத்தின் நன்மைக்காக செயல்படுகிறது. மனித குலமும் ஒவ்வொரு சமுதாயத்தின் தனித்தன்மையை காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது. மனிதன் இயற்கையை பேணிப் பாதுகாக்கிறான். இயற்கையும் மனிதன் உயிர்வாழத் தேவையான பொருட்களைத் தந்து உதவுகிறது. இந்தக் கொடுக்கல்-வாங்கல் கடவுள் எங்கும் நிறைந்தவராக உள்ளார் என்கிற அடிப்படை நம்பிக்கையின் பேரில்தான் நடக்கிறது.

இதுதான் ஹிந்து தத்துவம். இதுதான் ஹிந்து தர்மம். வழிபடு முறைகள் வேறுபடலாம். அணு கு முறைகள் வேறுபடலாம். கடவுளை சிலர் தாயாகப் பார்க்கிறார்கள், தந்தையாகப் பார்க் கிறார்கள் சிலர், சகோதரனாகவும் கருதுகிறார்கள் சிலர் அவன் உருவம் உள்ளவன் என்பார்கள் சிலர். உருவமற்றவன் என்பார் சிலர். ஐந்து முகங்களுடையவன் என்று சிலர் கூறினால் அவன் நான் முகன் என்று கூறுபவரும் இருக்கிறார்கள். வழிபடு முறைகள் பலவானாலும் தர்மம் ஒன்று தான். இதைத்தான் சனாதன தர்மம், அழிவற்ற தர்மம் என்றழைக்கிறோம். ஜீவநதியாகப் பிரவாகமெடுக்கும் தர்மம் இது தான். இதன் கோட்பாடுகள் நேற்றும் உண்மை; இன்றும் உண்மை; நாளையும் உண்மையாகத்தான் இருக்கும் என்பதால் இதை அழிவற்றது, சாசுவதமானது என்கிறோம். இது ஹிந்துக்களுடையது மட்டுமல்ல பரந்த இந்த உலகிலுள்ள அனைவருடைய தர்மம். இது மானவ (மனித குல ) தர்மம். இந்த உண்மையை ஹிந்துக்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததால் இதை ஹிந்து தர்மம் என்கிறோம். நியூட்டன் புவியீர்ப்பு சக்தியின் செயல்பாட்டை கண்டறிந்ததால், ‘நியூட்டன் புவியீர்ப்பு தத்துவம்’ என்ப போலத்தான் இதுவும். ஐன்ஸ்டீன் கண்டு பிடித்தால் அவருக்கு முன்னாலேயே இருந்த போதும் அதை ஐன்ஸ்டீனின் சார்பு சித்தாந்தம் (ரிலேட்டிவிட்டி) என்கிறோம். (ஜைன மதத்தில் ஐன்ஸ்டீனுக்கு முன்னேயே ‘ஸ்யாத் வாதம்’ என்னும் தத்துவமாக ரிலேட்டிவிட்டி விளக்கப்பட்டுள்லது. ஆள்காட்டி விரல் நடுவிரலை விடச் சின்னது ஆனால் சுண்டு விரலை விடப் பெரியது. இதுதான் ரிலேட்டிவிட்டி).

ஹிந்துக்களால் உலகிற்கு அளிக்கப்பட்டதால் அது ஹிந்து தர்மம் என்று அழைக்கப்படு கிறது. பார்க்கப்போனால் இது மனித குலத்தின் தர்மமாகும். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால் ஹிந்து தர்மம் விஸ்வ தர்மம் (உலக தர்மம்) ஆகிறது. ஹிந்து தர்மத்தின் அடிப்படையில் வாழ்க்கை கோட்பாடுகளைச் சிந்திக்கும் போது நமக்குக் கிடைப்பது ஹிந்து கலாச்சாரம். ஹிந்து கலாச்சாரம் ஒரு நாட்டின் எல்லைக்கு உட்பட்டது. ஆனால் ஹிந்து தர்மம் எல்லாவிதமான எல்லைகளையும் கடந்து உலகமக்கள் அனைவருக்கும் உகந்தது ஆகிறது. புத்தம் புதிய விஞ்ஞான கண்டு பிடிப்புக்கள் ஹிந்து தர்மத்தின் அடிப்படை தத்துவங்களை விளக்குவது போல அமைந்துள்ளன. ஹிந்து தர்மமும் விஞ்ஞானமும் நெருக்கமாக உள்ளன என்பதை இது புலப்படுத்துகிறது.

இன்றைய உலகம் ஒரு மகத்தான அடிப்படை மாற்றத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. அடிப்படை மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அதற்கு 20-30 வருடங்களுக்கு முன்னாலேயே அதன் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். சமூகவியல் நிபுணர்கள் இந்த அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளார்கள்: ‘எல்லாம் அன்னியமாகிப் போய் விட்டது, எதுவும் உருப்படாது, எல்லாம் இருக்கிறபடியேத்தான் இருக்கும்’ என்பது போன்ற மனப்பான்மை மக்களிடையே காணப்படும். மன ரீதியான பிரச்சினைகள், கொடூரம் மிகுந்த வன்முறையால் குற்றங்கள் அதிகமாகும், சமுதாயம் சீர்குலையத் துவங்கும், புதுப்புது சம்பிரதாயங்கள் தலை தூக்கும்.

இதையெல்லாம் படிக்க விந்தையாக இருக்கலாம். இவற்றில் பல அழிவை குறிப்பதாக இருந்தாலும், பலப் புதுப்பது சம்பிரதாயங்கள் தோன்றும் என்பது ஆக்கப்பூர்வமான அறிகுறியாகத் தோன்றுகிறது. எல்லா முனைகளிலும் நம்பிக்கை அழிந்து போனாலும், கடைசியில் தெய்வ பக்திதான் பலத்தை, ஊட்டத்தை அளிக்கும்.

“அப பல தபபல அவுர் பாஹுபல

சௌதோ ஹை பல தாம்

சூர் கிசோர் க்ருபா

தேஸப பல ஹாரே கோ ஹரிநாம்”

– சூர்தாஸர்

(அசுர பலம், தவசக்தி, தோள் வலிமை, நான்காவது பணபலம் இவையெல்லாம் இருக்கின்றன. ஆனால் சூர்தாசன் கூறுகிறான், அனைத்தையும் இழந்து தவிக்கும் போது தெய்வபக்தி ஒன்றே நம்மை மீட்கும்).

இந்த அறிகுறிகளை பாரத நாட்டில் மட்டுமல்ல, உலகின் எல்லா இடங்களிலும் இப்போது காண முடிகிறது. சமூகவியல் அறிஞர்கள் அடிப்படை மாற்றம் நிகழ்வது உறுதி என்று கூறுகிறார்கள். உலகாயத அறிவியலை ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நமது பொருளாதாரக் கட்டமைப்பே ஒரு பெரும் மாற்றம் கண்டுள்ளது. அதனால் ஹிந்து தர்மத்திற்கு மிக நெருக்கமான புதிய அறிவியலின் அடிப்படையில் சமூக, அரசியல், பொருளாதார அமைப்பை ஏற்படுத்த வேண்டியது அவசியம். இந்த அடிப்படை மாற்றத்தில் பாரத மக்கள் பெரும் பங்கு ஆற்ற வேண்டியுள்ளது. நம் ஞானிகள் முன்பே கூறியது போல், அடுத்த ஆயிரம் வருடங்கள், ஹிந்து புத்தாயிரமாண்டாக இருக்க போகின்றன. ஒரு நூறு வருடங்களுக்கு முன்னால் சுவாமி விவேகானந்தர் கூறினார்: “நான் எதிர்காலத்தை பார்க்கவில்லை. அது பற்றி நான் கவலைப்படுவதாகவும் இல்லை. என் இந்த வாழ்க்கை போல தெளிவான ஒரு காட்சியை என் கண்முன்னால் காண்கிறேன். புராதனமான நம் அன்னை மறுபடியும் விழித்தெழுந்து, புத்துணர்வுடன் அரியணையில் வீற்றிருக்கிறாள். அவள் வருகையை அறிவியுங்கள்”. 1947 ஆகஸ்டு 15 அன்று அரவிந்த மகரிஷி கூறினார்: “இன்னும் சிலகாலம் நம்முடைய இந்த நாடு தவறான பாதையிலே செல்லும். ஆனால் எதிர்காலத்தில் உலகிற்கே தலைமை ஏற்க வேண்டிவரும்”. மகாத்மா காந்தியும் கூறியுள்ளார்: “ஹிந்துத்துவம் என்பது தொய்வில்லா சத்திய சோதனையாகும். அது சக்தியிழந்து செயலிழந்து, வளர்ச்சியை ஏற்பதாக இல்லாமல் இருப்பதற்கு காரணம், நாம் சோர்ந்திருப்பது தான். நாம் இந்தச் சோர்வி லிருந்து விடு பட்ட கணமே ஹிந்துத்துவம் முன்பு எப்போதும் அறிந்திராத பிரகாசத்துடன் வெடித்துக் கிளம்பி இந்த உலகில் மிளிரும்”.

நண்பர்களே, ஹிந்துத்துவம் உலகில் பாய்ந்து பரவும் நாள் நெருங்கி விட்டது. நாம் எல்லோரும் விழித்தெழிந்து, உற்சாகத்துடன் அந்த நாளை வரவேற்போம்!

வந்தே மாதரம்!


ஆர்ய- த்ராவிட இன வாதம் குறித்து விவேகானந்தர்


ஆர்ய- த்ராவிட இன வாதம் குறித்து விவேகானந்தர்

ஆர்.பி.வி.எஸ் மணியன்


நமது பண்பாடு எத்தனைப் பழமையானதோ அத்தனை பழமையானவை ஆர்ய, த்ராவிட என்கிற இரு வார்த்தைகளும். இந்த சொற்களையும் இன வாதப் பெயர்களாகச் சுட்டி காட்டி நம்மைப் பிரித்தாள முயற்சித்தனர் பிரிட்டிஷார்.

பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கே ஓர் அச்சுறுத்தலாக பின்னாளில் திகழ இருந்த ஆரியா திராவிடா பிரச்சினை முளை விட்டிருப்பதை சுவாமி முதன்முதலில் திருவனந்தபுரத்தில் காண நேர்ந்தது.

மெத்தப் படித்த மேதாவியான மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்கள் சுவாமிஜியிடம் தன்னை திராவிடர் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். ப்ராம்மண ஆதிக்கத்தை எதிர்த்துச் சில குரல்கள் அப்போது எழத் தொடங்கியிருந்தன. அதுபோலவே பேராசிரியர் சுந்தரராம ஐயர் போன்றவர்கள் தங்களை ஆர்யர்கள் என்று வர்ணித்துக்கொண்டதும். சுவாமிஜீக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை . ஆர்ய-திராவிட இனவாதப்பிரிவு முற்றிலும் தேவையற்றது என்பதே சுவாமிஜீயின் கருத்தாக இருந்தது. இது குறித்து பின்னாளில் விவேகானந்தர் கூறியதாவது;

ஆரியர் என்ற சொல்லைப் பற்றி மேலை நாட்டவர் கூறுவதைப் புறந்தள்ளி நமது சாஸ்திரங்களில் காணப் படுகிற விளக்கத்தை நாம் உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும்.

‘ஆர்ய’ என்பது ஒரு இனத்தைக் குறிப்பிடுவதாக சாஸ்திரங்களில் எங்குமே வரவில்லை . ‘த்ராவிட’ என்பதும் இனப்பெயராக வரவில்லை. வேத சாஸ்திரங்களைப் பார்த்தால் ஆரிய, த்ராவிட என்று இரண்டு வேறு வேறு இனங்கள் இருந்தன என்பதற்குக் கொஞ்சம் கூட ஆதாரம் இல்லை .

சாஸ்திரப் பிரகாரம் இவ்விரு வார்த்தைகளுக்கான பொருள் என்ன ?

“ஆர்ய” என்றால் மேலான, உயர்ந்த பண்பாட்டுக்குரிய, மதிப்புக்குரிய என்பதாகவே அர்த்தங்கள் தொனிக்கும் வகையில் இந்த வார்த்தை கையாளப்பட்டிருக்கிறது.

“க்ருண்வந்தோ விச்வம் ஆர்யம்” என்ற சொற்றொடர் ஒன்று காலங்காலமாக நம்மவரால் பயண்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு “உலகைப் பண்படையச் செய்வோம், உலகை மேம்படுத்துவோம்” என்பதாகவே அர்த்தம். பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனைப் பார்த்து “நீ என்ன இப்படிப் பேடி மாதிரி மனத்தளர்ச்சி அடைந்து அனார்யனாகி விட்டாயே” என்கிறார். இங்கு அனார்யன் என்பதற்கு “மதிப்புக்குரியவனாக அல்லாமற் போய் விட்டாயே” என்பதுதான் அர்த்தம்.

பழங்காலக் காவியங்களை, நாடகங்களைப் படித்தால் ராணிகள் தங்கள் கணவன்மார்களான ராஜாக்களை ‘ஆர்ய புத்ர’ என்றே அழைக்கிறார்கள். இதன் பொருள் ” மேலான குடும்பத்தில் பிறந்தவனே” என்று தனது புக்ககத்தை அவர்கள் புகழ்ச்சியாகக் கூறுவதாகவே ஆகும்.

ஸீதை ராமரை “ஆர்ய புத்ர” என்பதாக அழைக்கிறார். அப்படியானால் ஸீதை தன் கணவனை இன ரீதியாக அப்படி அழைத்தார் என்று கொள்ள முடியுமா? ராமன் இன ரீதியாக ஆரியன் என்றால் ஸீதை அவனை “ஆர்ய” என்று விளிக்கும் போது இவள் : த்ராவிடப் பெண்மணி ஆகிவிடுவாளே!

ராமாயணத்தில் மண்டோதரியும் தனது கணவன் ராவணனை “ஆர்ய” என்றே மரியாதையோடு அழைக்கிறாள்.

முத்ரா ராக்ஷஸம் நாடகத்தில் அமாத்ய ராக்ஷஸன் ஆரியன் என்று அழைக்கப்படுகின்றான். பிறகு அவன் மீது வீண்பழியைச் சுமத்த முயற்சி நடக்கிறது. உடனே அவன் அனார்யன் (பண்பில்லாதவன்) என அழைக்கப்படுகிறான்.

ஒரு வேடிக்கை என்னவெனில் ஐரோப்பிய மொழிகள் எதிலுமே ஆர்ய என்ற வார்த்தை இல்லை.

அம்பிகையை “ஆர்யா” என்று மரியாதையோடு குறிப்பிடும் வழக்கம் உள்ளது. துர்வாஸர் அம்பிகைமீது இயற்றியுள்ள ஸ்தோத்திரத்திற்கே “ஆர்யா த்விசதி” என்று தான் பெயர். அமரகோசத்தில் அம்பிக்கையின் நாமங்களைக் குறிப்பிடும்போது “ஆர்யா தாக்ஷாயணி ச ஏவ கிரிஜா” என்று வருகிறது.

ஆதிசங்கரரின் தாயாருக்கே ஆர்யாம்பா என்றுதான் பெயர். இந்த ஆர்யாம்பாவின் மகனான சங்கரர் “திராவிட சிசு என்று தன்னையே அழைத்துக் கொள்வதற்கான அகச்சான்று அவரது சௌந்தர்ய லஹரியின் 75வது சுலோகத்தில் உள்ளது.

“ஆரிய” என்பது தமிழில் “ஐயன்” என்றும், இன்னும் மரியாதை நிமித்தமாக “ஐயர்” என்றும் ஆகியுள்ளது.

த்ராவிட தேசத்தின் கிராம தேவதையான ஐயனார் என்ற பெயர் இந்த ஆர்ய பதத்திலிருந்து பிறந்ததே.

தனது “ஜய வந்தே மாதரம்” பாடலில் பாரதியார்

“ஆரிய பூமியில்

நாரியரும் நர

சூரியரும் சொலும்

வீரிய வாசகம்

வந்தே மாதரம்

ஜய வந்தே மாதரம்”

என்று பாடும்போது நமது தேசத்தை “உயர்ந்த நாடு” என்ற அர்த்தத்திலேயே வர்ணித்துள்ளார். ஆரியர் யார் என்பதற்கான இலக்கணத்தையே வகுப்பது போல பாரதி தனது “சத்ரபதி சிவாஜி” பாடலில் பல கருத்துக்களைத் தந்திருக்கிறார்.

பிச்சை வாழ்வு உகந்து

பிறருடையாட்சியில்

அச்சமுற்று இருப்போன்

ஆரியனல்லன்

புன்புலால் யாக்கையை

போற்றியே

தாய் நாட்டு அன்பிலாது இருப்போன்

ஆரியனல்லன்

மாட்சிதீர் மிலேச்சர்

மனப்படியாளும்

ஆட்சியில் அடங்குவோன்

ஆரியனல்லன்,

ஆரியர் இருமின்!

ஆண்கள் இங்கு இருமின்.

ஆரியத்தன்மை அற்றிடும் சிறியர்

யார் இவண் உளர்

அவர் யாண்டேனும் ஒழிக.

‘த்ராவிட’ என்பதும் எங்கும் இனப்பெயராக வரவில்லை . ஒரே ஹிந்து இனத்தைச் சேர்ந்த பாரத ஜனங்களைத்தான் ப்ராதேசிக ரீதியாக கௌடர்கள் என்றும், திராவிடர்கள் என்றும் பிரித்திருக்கிறார்கள்.

முன் காலத்தில் விந்திய மலைக்கு வடக்கே உள்ள ப்ரதேசங்களை பஞ்ச கௌட தேசங்கள் என்றும், விந்திய மலைக்குத் தெற்கே உள்ள ப்ரதேசங்களை பஞ்ச த்ராவிட தேசங்கள் என்றும் நம் முன்னோர் அழைத்தனர்.

எனவே திராவிடர் என்பது தென் பாரத ப்ரதேசங்களைச் சேர்ந்த மக்கள் என்றே அர்த்தமாகிறது. ஒரு பிரதேசத்திலிருந்து இன்னொரு பிரதேசத்திற்குப் போனவர்களை அந்தப் பிரதேசப் பெயரை வைத்தே குறிப்பிடுவார்கள். எனவே தான் வடபாரதத்தில் குடியேறிய தமிழ் தேச ப்ராம்மணர்களுக்கு ‘த்ராவிட்’ என்ற surname பயன்படுத்தப் படுகிறது. பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் “ராஹுல் த்ராவிட்” பெயர் நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமானதே.

மேலே கூறப்பட்டக் கருத்துக்களை வலியுறுத்தி விவேகானந்தர் கூறுவதாவது;- |

“ஹிந்து என்று இப்பொது நாம் குறிப்பிடுகின்ற அனைவரையுமே ‘ஆரியர்’ என்ற சொல் குறிக்கிறது. ஹிந்துக்கள் அனைவரும் வேறுபாடற்ற ஆரியர்களே.

தென் பாரதத்தில் திராவிடர் என்ற இனத்தினர் இருந்ததாகவும் அவர்கள் வட பாரதத்திலிருந்து முற்றிலும் வேறு பட்டவர்கள் என்றும், பிற தென்னகத்து ப்ராம்மணர்கள் மட்டும் வட பாரத்தி லிருந்து வந்த ஆரியர்கள் என்றும், பிற தென்னகத்தவர் எல்லாம் இந்த ப்ராம்மணர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஜாதியையும், இனத்தையும் சார்ந்தவர்கள் என்றும் ஒரு கொள்கை நிலவுகிறது.

இவையெல்லாம் இதுவரை நிரூபிக்கப்படாத கொள்கைகள். இவை வெறும் அபிப்பிராயங்களும் ஊகங்களும் மட்டுமே.

தமிழர்களை தஸ்யுக்கள் என்று வேதங்கள் இழிவுபடுத்தியதாக ஒரு ஆதாரமற்றக் குற்றச்சாட்டு உள்ளது. தஸ்யுக்கள் என்பது தமிழர்களைக் குறிக்கிற வார்த்தையல்ல.

சுவாமிஜி கூறுவதாவது:

“வேதங்களில் தஸ்யுக்களின் அழகற்ற உடலமைப்பைப் பழிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்ற அடைமொழிகளில் ஒன்றுகூடப் பெருமை வாய்ந்த தமிழினத்திற்குப் பொருந்தவில்லை”

பாரத நாட்டின் வரலாற்றையும் இலக்கியங்களையும் ஆராயப்புகுந்தவர்களில் ஒருவரான ம்யூர் (MUIR) என்பவர் கூறியுள்ளதாவது. –

“எந்தவிதமான ஸம்ஸ்க்ருத புத்தகத்திலும் எவ்வளவு பழமையானதாயிருந்தாலும் சரி, ஆரியர்கள் வெளிநாட்டவர் என்பதற்குச் சான்றோ, குறிப்போ எங்கும் கிடைக்கவில்லை. ரிக்வேதத்தில் கூறியுள்ள தாஸ, தஸ்யூ, அஸுர என்பன போன்ற பெயர்கள் ஆரியர்கள் அல்லாதார்களுக்கோ அல்லது இந்நாட்டுப் பழங்குடி மக்களுக்கோ உபயோகப்படுத்தப்பட்டதாக யாதொரு ஆதாரமும் குறிப்பும் கிடைக்கவில்லை .

வரலாற்றாளர் பி.டி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் அவர்கள் தமது “DRAVIDIAN STUDIES” என்ற நூலில் கூறுவதாவது:

ஆர்யர்கள், தஸ்யுக்கள் என்ற சொற்கள் வெவ்வேறு இனங்களைக் குறிப்பன அல்ல. இந்த வார்த்தைகள் இருவேறு வழிபாட்டுமுறைகளைப் பின்பற்றியவர்களைக் குறிக்கின்றன.

தஸ்யுக்கள் அக்னி வழிபாடில்லாதவர்கள், யாகங்களை வெறுத்தவர்கள். யாகயக்ஞங்களில் நம்பிக்கைக்கொண்டிருந்த வர்கள் ஆர்யர்கள்.

ரிக் வேதம் எட்டாம் மண்டலத்தில் வரும் 70வது அனுவாகத்தில் 11வது ரிக் இதற்கு ஆதாரமாக உள்ளது.

ரிக்வேத மந்திரத்தில் (10-22-8)தஸ்யுவின் லக்ஷணத்தை இவ்வாறு விளக்கியிருக்கிறது.

“எவன் தீர ஆலோசிக்காமல் செயல்புரிகிறானோ, எவன் அஹிம்ஸை , ஸத்யம், தயை முதலிய நல்ல விரதங்களை அனுஷ்டிக்காது இதற்கு மாறாக ஹிம்ஸை , அஸத்யம், கொடூரத்தனம் முதலிய ஆசரணங்கள் உள்ளவனோ, மனிதத் தன்மைக்கு உகந்த காரியங்களைச் செய்யாதவனோ அவனே “தஸ்யு” ஆவான்.

வி.ஆர். ராமச்சந்திர தீக்ஷிதர் என்பவரும் தமது ORIGIN AND SPREAD OF TAMILS என்ற நூலில்

– “திராவிடர்கள் ஒரு காலத்தில் பஞ்சாபிலும் கங்கைச் சமவெளியிலும் வாழ்ந்தார்கள் என்பதும், பின்னர் படையெடுத்து வந்த ஆரியர்களால் அவர்கள் விரட்டப்பட்டுத் தெற்கே ஓடி வந்தார்கள் என்பதும், அதன் பிறகே திராவிடர்கள் தென் பாரதத்தைத் தங்கள் தாயகமாக்கிக் கொண்டார்கள் என்பதும் ஆதாரமற்ற நிரூபிக்கப்பட முடியாத செய்திகள் என்று கூறியிருக்கிறார்.

சுவாமிஜீ கூறுவதாவது: “திருவாளர் மொழியியல் அறிஞரே உங்கள் கருத்து முற்றிலும் ஆதாரம் அற்றது. (இங்கு மொழியியல் அறிஞரே என்று சுவாமிஜி குறிப்பிட்டிருப்பது ராபர்ட் கால்டுவெல் பற்றியதாக இருக்க வேண்டும்) வடபாரதத்து மொழிகளுக்கும் தென்பாரதத்து மொழிகளுக்கும் இடையே உள்ள மொழிவேற்றுமையைத் தவிர வேறு எந்த வேறுபாட்டையும் நான் காணவில்லை.

ஆரியர்கள் வெளிநாட்டிலிருந்து படையெடுத்து வந்தார்கள் என்றும், பூர்விகக் குடிகளிடமிருந்து அவர்களுடைய நிலங்களைப் பிடுங்கிக் கொண்டார்கள் என்றும் அவர்களை நிர்மூலமாக்கிவிட்டு பாரதத்தில் குடியேறினார்கள் என்று கூறுகிறார்கள். இதெல்லாம் கலப்பற்ற பொய், முட்டாள்தனமான பேச்சு ஆகும்” இத்தகைய பொய்யான ஒரு செய்தியை பிரிட்டிஷார் ஐரோப்பிய வரலாற்றாளர்களைக் கொண்டு பரவச் செய்ததற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. 1600களிலிருந்து 1800 வரை இங்கு நிலைகொண்டுவிட்ட பிரிட்டிஷ் அரசை எதிர்த்து ஹிந்துக்கள் போரிடத் தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக 1857ல் நடந்த சுதந்திரப் புரட்சியும் எழுச்சியும் பிரிட்டிஷாரை பீதியடைய செய்தது. நாடே ஒருங்கினைந்து நடத்திய இந்தப் புரட்சி – இந்த சுதந்திரப் போர் பாரத நாட்டின் அடித்தளமான பண்பாட்டு ஒற்றுமையின் வலிமையை ஆங்கிலேயர்களுக்கு உணர்த்தியது. இதனை எப்படியாவது குலைத்துவிடவேண்டும் என்று அவர்கள் துடித்தனர்.

இவர்களுக்குக் கை கொடுக்கும் விதத்தில் ஆர்தர்-டி-கோபிநியூ என்பவர் அளந்து விட்ட “ஆர்யன் இனம்” (aryan race) என்பதான ஆராய்ச்சி என்ற பெயரில் அவர் செய்த சூழ்ச்சி அப்போது தொடங்கியிருந்தது. எனவே மாக்ஸ் முல்லரைப் பயன் படுத்தி ஆர்யர்கள் ஐரோப்பிய சம்பந்தம் உடையவர்கள் என்றும் அவர்களே பாரதத்தில் நுழைந்து இங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த திராவிடர்களின் மொஹஞ்சோரோ-ஹரப்பா கலாச்சாரத்தை அழித்துத் தங்களது வேத கலாச்சாரத்தை நிறுவினார்கள் என்றும் கதை கட்டிவிட்டனர்.

திராவிடர்களும் பாரதத்தின் பூர்வீகக் குடிமக்கள் அல்ல என்றும் அவர்களுக்கும் முன்னதாக வாழ்ந்த மலைவாழ் மக்களும் கானகத்தில் வாழ்ந்த மக்களுமே இந்த நாட்டின் ஆதிவாசிகள் அதாவது பூர்வீகக் குடிமக்கள் என்றும் அளந்தனர்.

டாக்டர் கேய்னே கூறுவதாவது. “ஆரிய மொழிபேசும் மக்கள் இங்கு நுழைவதற்கு முன்பே திராவிடர்கள் ஊடுருவல் செய்துள்ளனர். ஆக மொத்தம் இந்த ஆரியர்கள் திராவிடர்கள் இருவருமே பூர்வகுடியினர் அல்ல, இவர்களுக்கு முன்பு நீக்ரோ இனத்தைக் கிட்டத்தட்டச் சார்ந்த கூட்டம் ஒன்று இங்கு வாழ்ந்து வந்துள்ளது. காலப்போக்கில் அந்த இனம் அழிந்து விட்டிருக்கின்றது.”

ஆதாரமே இல்லாத இத்தகைய நச்சுக் கருத்துக்கள் அபத்தத்திலும் அபத்தம்.

ஆகவே இந்த நாட்டிற்கு உரிமை கொண்டாட ஹிந்துக்கள் தகுதியற்றவர்கள் என்று நிரூபிக்கப் பார்த்தனர். முதலில் இந்த நாட்டை ஆக்கிரமித்த ஆரியர்களே ஹிந்துக்கள் என்று தங்களைப் பறை சாற்றி கொள்வதாக பொய் பிரச்சாரம் செய்தனர்.

தென் பாரத மக்கள் யாவருமே ஒருகாலத்தில் வடக்கிலிருந்து ஆரியர்களால் தெற்கே விரட்டப்பட்டவர்கள் என்று கதை கட்டிவிட்டனர். இதற்கு ஸாதகமாக ராபர்ட் கால்டுவெல் என்ற பாதிரி மொழி ஆராய்ச்சி என்ற பெயரில் திராவிடர்களின் மொழியும் கலாச்சாரமும் வடபாரதத்து ஆரியர்களின் மொழியினின்றும் கலாச்சாரத்தின்றும் வேறுபட்டது என்று பொய்ப் பிரச்சாரம் செய்தார்.

இத்தகைய பின்னணியில் நாம் விவேகானந்தரது கருத்துக்களைக் காணவேண்டும்.

இதோ விவேகானந்தர் கூறுவதைக் கேட்போம். “ஐரோப்பியப் பண்டிதர்களின் இத்தகைய கருத்துகளுக் கெல்லாம் பாரத அறிஞர்கள் கூட “ஆமாம்” போடுவது விந்தையாக இருக்கிறது. இந்த ராக்ஷஸப் புளுகுகள் எல்லாம் நமது பிள்ளைகளுக்குக் கற்பிக்கப் பட்டு வருகின்றன. இது உண்மையில் மிக மிக மோசமான செயலாகும்.

“……… ஆதிவாசிகள் யார்?

ஐரோப்பியர்கள் அப்பாவி ஆஃப்ரிக்கர்களைக் கொடுமைப் படுத்தியது போலவே இங்கேயும் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அதே போன்ற செயல் நடந்திருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார் இந்த மேற்கத்திய தொல்பொருள் ஆய்வாளர். ஆரியர்கள் பின்னால் வந்தவர்களாம்.

சர் யு டர்னர், சர். பு . ரிஸ்லே , டாக்டர் w.w ஹேண்டர், ஹக்கல், டாக்டர் கேய்னே, எட்வர்ட் தாமஸ், ஜே n. ரோட், ஹெச் ஜீ. வெல்ஸ், பிஷப் கால்டுவெல் போன்ற பல வெள்ளையர்கள் மொழி ஆராய்ச்சி என்ற பெயரிலும் பல பொய்யான கருத்துக்களை உலகத்தவர் முன்வைத்துள்ளனர். ஆரிய இன வாதம் பேசும் இந்த மேற்கத்திய அறிஞர்களின் கூற்றுகளில்தான் எத்தனை முரண்பாடுகள் தெரியுமா?

சிலருடைய கருத்துப்படி ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்ததாகக் கூறுகிறார்கள். இந்த ஆரியர்கள் சிவப்புத் தலைமுடியைக் கொண்டவர்கள் என்று சில ஆங்கிலேயர்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இவர்கள் கறுப்பு முடியுள்ளவர்கள் என்கிறார்கள்

ஆரியர்கள் சுவிட்சர்லாந்தின் ஏரிக்கரைகளில் வாழ்ந்தார்கள் என்று நிரூபிப்பதற்கான முயற்சிகளும் சமீப காலத்தில் தோன்றியுள்ளன.

இத்தகைய கொள்கைகளுடன் அந்த ஆராய்ச்சியாளர்களும் சேர்ந்து அந்த ஏரியில் மூழ்கினால் கூட எனக்கு வருத்தமில்லை. ஆரியர்கள் வடதுருவத்தில் வாழ்ந்ததாக இப்போது சிலர் கூறுகிறார்கள் ஆரியர்களையும் அவர்கள் வாழ்ந்த இடங்களையும் கடவுள் ஆசிர்வதிப்பாராக.இந்த ஆர்ய இனவாதக் கொள்கையில் உண்மை இருக்கிற தென்றால் நம் சாஸ்திரங்களில் அது பற்றிய ஒரு சிறு குறிப்பாவது இருக்க வேண்டும். ஆர்யர்கள் என்ற இனத்தவர்கள் பாரதத்திற்கு வெளியேயிருந்து வந்தார்கள் என்று கூறுகின்ற ஒரு வார்த்தை கூட நமது சாஸ்திரங்களில் இல்லை .

உலகப் புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியர் எல்ஃபின்ஸ்ட ன் கூறுவதாவது;

மனுஸ்ம்ருதியிலோ, வேதத்திலோ மற்றும் மனுவுக்கு முற்பட்ட எந்தப் புத்தகத்திலோ ஆர்யர்கள் பாரதத்திற்கு முன்பு வேறு தேசத்தில் இருந்ததாகக் கூறப்படவில்லை . [Elphinston History of India Vol.I] மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டப் பழமையான நாகரீகத்தின் தடயங்கள் திராவிடப் பண்பாடு எனும் தனியான கலாச்சாரம் ஒன்றைச் சுட்டிக் காட்டுவதாக சிலர் கூறுகின்றனர். இது முற்றிலும் தவறான கற்பனையே.

மொஹஞ்ஜதாரோவில் கிடைத்த ஒரு “முத்திரை” (SEAL) யில் உபநிஷதக் கருத்து ஒன்றை விளக்கும் படம் காணப்படுகிறது. (Plate no, cxll seal no 387 from the excavation at Mohenjodaro) (source; indus civilization edited by Sir John Marshall, Cambridge 1931)

5000 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படும் சிந்து சமவெளி நாகரீக ஆராய்ச்சியில் ஒரு உண்மை தெளிவாகிறது, அந்த நாகரீகம் பாரத நாட்டின் தொன்மையான வேத கலாச்சாரத்தின் ஓர் அங்கமே என்பதுதான் அந்த உண்மை .

மொஹஞ்சோதாரோவில் ஸ்ரீ கிருஷ்ணலீலா பற்றிய பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உஜ்ஜயினியில் உள்ள விக்ரம் பல்கலைக் கழகத்தின் தொல்லியல் துறைத் தலைவர் டாக்டர் விஷ்ணு ஸ்ரீதர் வாகங்கர் என்பவர் தன்னுடன் 30 உயர்மட்ட புராதன ஆராய்ச்சி அறிஞர்களின் ஒத்துழைப்போடு ஹரப்பா, மொஹஞ்ஜதாரோவில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை வைத்து 20 ஆண்டுகள் தீவிர அராய்ச்சி செய்து வெளியிட்ட முடிவாவது:

ஹரப்பா நாகரீகத்தின் மூலம் ஆரிய கலாச்சாரமே. அதாவது ஆர்ய கலாச்சாரம் ஹரப்பா கலாச்சாரத்தைவிட பழமையானது, ஹரப்பா கலாச்சாரம் ஆர்ய கலாச்சாரத்தின் ஓர் அங்கமே ஆகும்.

ஆரிய திராவிட இனவாத மேதாவிகள் மனிதர்களின் தோலின் நிறத்தை வைத்து இனங்களை அளக்கத் தொடங்கினார்கள். தென் பாரதத்தில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் மக்களின் நிறம் சற்றும் கருமையாக இருப்பதால் வட பாரதத்தில் உள்ள வெளுத்த நிறத்தவர்கள் ஆர்யர்கள் என்றும் தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும் கதை கட்டினார்கள்.

ஆனால் வரலாற்று உண்மை வேறாக உள்ளது. இவர்கள் ஆர்ய இனத்தின் அதி உன்னத பிரதிநிதிகளாகக் கருதும் ஸ்ரீ ராமனும் ஸ்ரீ கிருஷ்ணனும் கருமை நிறத்தவரே. திராவிடர்களின் தெய்வம் என்று மொஹஞ்சோதாரா கண்டுபிடிப்புகள் மூலம் உறுதியாகியுள்ள சிவன் வெளுத்த நிறத்தவன். வேதங்களைத் தொகுத்து வழங்கிய வியாஸர் (கிருஷ்ணத்வைபாயனர்) கறுப்பு நிறத்தவர். பாஞ்சால தேசத்து ஆர்ய மன்னன் துருபதன் மகள் திரௌபதி கறுப்பு நிறுத்தவள்.

மூக்கின் வடிவையும் முடியின் நீளத்தையும் வைத்து இனவாதக் கதைகள் கூறும் இவர்களது அறியாமையை என்னென்பது?

விவேகானந்தர் மேலும் கூறுவதாவது; “நமது நாட்டுப் பண்டிதர்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் எல்லாம் கற்றறிந்த மனிதர்கள். தயவு செய்து நமது பழைய நூல்களையும் சாஸ்திரங்களையும் துருவி ஆராய்ந்து சொந்தமான முடிவுக்கு வாருங்கள்” என்று சொல்லுகிறேன். –

ஐரோப்பியர்கள் தங்களுக்கு எங்காவது வாய்ப்பான சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஆங்காங்குள்ள பூர்வீகமான குடிமக்களைப் பூண்டறுத்துவிட்டு, அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஸௌகரியமாகவும் வசதியாகவும் குடியேறி விடுவார்கள்.

ஆகவே ஆரியர்கள் என்று அவர்கள் கருதும் ஹிந்துக்களும் அவ்வாறே செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். மேற்கத்தியவர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே தங்கிக் கொண்டு, தங்களது உள் நாட்டு விளை பொருள் வசதிகளையே முற்றிலும் நம்பி வாழ்ந்திருப்பார்களேயானால் அவர்கள் மிக மோசமான காட்டுமிராண்டிகளாகவே வாழ்ந்திருப்பார்கள்.

ஆகவேதான் அவர்கள் ஆக்கிரமிப்பு வெறி கொண்டு உலகெங்கும் ஓடிச் சென்றார்கள். பிறருடைய நிலங்களின் செழுமை வளத்தால் தம் ஊனை வளர்க்க வகை தேடினார்கள்.

ஆகவே ஆர்யர்கள் என்று அவர்களால் வர்ணிக்கப்பட்ட ஹிந்துக்களும் அதுபோலவே செய்திருக்கவேண்டும் என்று அவர்கள் முடிவு கட்டுகிறார்கள். இப்படி கூறுவதற்கெல்லாம் ஆதாரங்கள் எங்கே? கற்பனைக்கதையளக்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லுவேன். “மேற்கத்தியப் பண்டிதர்களே உங்களுடைய விசித்திரக் கற்பனைக் கதைகளை உங்களிடமே வைத்துக் கொள்ளுங்கள்.

எந்த வேதத்தில் எந்த ஸூக்தத்தில் வெளிநாட்டிலிருந்து பாரதத்தினுள் ஆர்யர்கள் என்ற இனத்தவர் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது? காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்து வந்த பூர்விகக் குடிகளை அவர்கள் பூண்டறுத்தார்கள் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள்.

இது போன்ற மடமைப் பேச்சுக்கள் பேசுவதால் உங்களுக்கு என்ன லாபம்?”

ராமாயணமே ஆரியர்கள் திராவிடர்களை வெற்றிகொண்ட வரலாறு தான் என்று சில வக்கிரபுத்தி கொண்ட வரலாற்றாளர்கள் கூறுவதற்கு சுவாமிஜீ பதில் கூறியிருக்கிறார்.

“நீங்கள் ராமாயணம் படித்தது வீணாகி விட்டதே. அதிலிருந்து பெரிய அருமையான கட்டுக்கதையொன்றை எதற்காக உற்பத்தி செய்கிறீர்கள்?

அது சரி ராமாயணம் என்பது என்ன? தென்பாரதத்திலிருந்த காட்டுமிராண்டிப் பூர்விகக் குடிகளை ஆரியர்கள் என்போர் தோற்கடித்ததா?

ஸ்ரீ ராமர் பண்பாடுடைய மன்னராக, மனிதராகத்தான் சித்தரிக் கப்பட்டிருக்கிறார். உங்கள் கண்ணோட்டத்தில் அவர் ஓர் ஆரிய மன்னர். யாருடன் அவர் போரிடுகிறார்? இலங்கை மன்னனான ராவணனுடன்.

ராமாயணத்தைச் சற்றே படித்துப் பாருங்கள். ராவணன் ராமனைவிட உயர்ந்த நாகரீகம் வாய்ந்திருந்தானே யொழிய தாழ்ந்தவனாக இருக்க வில்லை. இலங்கையின் நாகரீகம் அயோத்தியைவிட ஒரு விதத்தில் உயர்ந்து இருந்ததே தவிர நிச்சயமாகத் தாழ்ந்திருக்கவில்லை .

ராமாயணத்தில் வரும் வானரர்களை நீங்கள் தென் பாரதத்தின் பூர்விகக் குடிமக்கள் என்று கருதினால் அவர்கள் எல்லாம் ஸ்ரீ ராமரின் நண்பர்களாக, ஸ்ரீ ராமரின் படைவீரர்களாக அன்றோ சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வாலியின் ராஜ்யத்தையோ ராவணனது ஸ்ரீ லங்கா ராஜ்யத் தையோ ஸ்ரீ ராமர் தமது அரசுடன் இனைத்துக் கொண்டாரா ? சொல்லுங்கள்….

இந்த ராமாயண விவகாரத்தில் விவேகானந்தரது அடிச்சுவட்டைப் பின்பற்றி சுவாமி சித்பவானந்தர் தமது ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் வெளியீடான ” தர்ம சக்கரத்தில் கூறியுள்ள சில விஷயங்களையும் இங்கு காண்போம்.

“ராமாயணம் போன்ற நூல்களில் ஆரியன் என்பவன் ஒரு அலாதியான இனத்தைச் சார்ந்தவன் என்று பொருள்படும் விளக்கம் எவ்விடத்திலும் இல்லை .

ஆரியன் என்னும் பதத்துக்குப் பொருள்-பண்பட்டவன் அல்லது மேன்மகன் என்பதாகிறது. கானகத்தில் தன் உயிரைக்கொடுத்து ஸீதையைக் காக்க முயன்ற ஜடாயுவை அவள் “ஆர்ய” என்று அழைக்கின்றாள். நான்

ஆரியன் என்னும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கிறதென்றால் ஜடாயு ராமாயணத்தின்படி ஆர்யன் ஆகிவிடுகிறான். ராவணன் ப்ராம்மணன். இக்கோட்பாட்டின் படி தென் இலங்கையிலிருந்த ராவணன் ஆரியன் ஆகின்றான்.

வடக்கே அயோத்தியில் இருந்த ப்ராம்மணன் அல்லாத க்ஷத்திரியனாக இருந்த தசரதராமன் இவர்களின் கொள்கையின்படி திராவிடன் என்று யூகிக்க இடமிருக்கின்றது.

ஆக ராமாயணம் தர்மம் அதர்மம் ஆகிய இரண்டுக்கும் இடையே உள்ள போராட்டத்திற்கு விளக்கமாக அமைகிறதே ஒழிய இனப் போராட்டத்தை விளக்குவது அல்ல”.

ஐரோப்பியர்களை நோக்கி விவேகானந்தர் விடுக்கும் சவாலைப் பாருங்கள்.

“…ஐரோப்பியர்களே! உங்களை நான் ஒன்று கேட்கலாமா? எந்த ஒரு நாட்டையாவது நீங்கள் மேல் நிலைக்கு உயர்ந்தியிருக்கிறீர்களா? எங்காவது பலவீனமான இனத்தினரைக் கண்டால் அவர்களைப் பூண்டோடு வேரறுத்திருக்கிறீர்கள் . அவர்களது நிலங்களில் நீங்கள் குடியேறியிருக்கிறீர்கள். நிரந்தரமாக அவர்கள் தீர்ந்து போனார்கள்.

உங்களுடைய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து, பசிபிக் தீவுகள், தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளின் வரலாறு என்ன? அங்கிருந்த ஆதிக் குடிமக்கள் இப்போழுது எங்கே? அவர்கள் வேரறுக்கப்பட்டு விட்டார்கள்.

காட்டு மிருகங்களைப்போல அவர்களைக் கருதி நீங்கள் அடியோடு கொலை செய்து விட்டீர்கள். எங்கே அவ்வாறு செய்ய உங்களுக்கு ஆற்றல் இல்லையோ அந்த நாடுகள் மட்டுமேதான், அந்த தேசந்தான் இன்றும் உயிருடன் இருக்கிறது. –

ஆனால் பாரதம் ஒரு போதும் அவ்வாறு செய்யவில்லை. ஆரியர்கள் என்று நீங்கள் வர்ணிக்கும் ஹிந்துக்களாகிய நாங்கள் அன்பும், தாராள மனப்பான்மையும் வாய்ந்திருந்தவர்கள். எங்கள் முன்னோர்களது உள்ளங்கள் கடலைப் போலப் பரந்தும் எல்லையில்லாமலும் இருந்தன.

அவர்களது மூளைகள் மனித வரம்புக்கு மீறி மேதா விலாசம் வாய்ந்திருந்தன. உலகத்தில் தோன்றி மறைகிற, வெளிப்பார்வைக்கு இன்பம் போலத் தோன்றுகிற ஆனால் உண்மையில் பார்த்தால் மிருகத்தனமான செயல்கள், அவர்களது உள்ளத்திலும் மூளையிலும் இடம் பெறவே இல்லை .

தாமே வாழ்வதற்காக மற்ற அனைவரையும் அழிப்பது ஐரோப்பிய மக்களின் குறிக்கோள் ஆகும். தம்முடைய தரத்திற்கு, இல்லை , தம்மையும் விட உயர்ந்த நிலைக்கு எல்லோரையும் உயர்த்துவது ஹிந்துக்களின் நோக்கம். ஐரோப்பிய நாகரீகத்தின் பாதை வாள் ஆகும். ஹிந்துக்களின் பாதை வாழ்வு ஆகும். பிறரை வாழவைப்பது ஆகும். மக்கள் சமூகத்தை உயர்த்த நாகரீக நிலைக்கு முன்னேற செய்யும் வர்ண விபாகம் ஆகும். ஒருவனது கல்விக்கும் பண்பாட்டுக்கும் தக்க அளவில் அவனை மேலும் மேலும் உயர்ந்து எழுந்து முன்னேற செய்கிறது இந்தப் பாகுபாட்டு அமைப்பு.

ஐரோப்பாவில் எங்கு பார்த்தாலும் பலமுள்ளவனுக்கு வெற்றி, பலவீனனுக்குச் சாவு என்பது நிலை. பாரத பூமியில் சமூகச் சட்டம் ஒவ்வொன்றும் பலவீனனின் பாதுகாப்புக்காக ஏற்பட்டதாகும்.

தென்னகத்து சூத்திரர்கள் எல்லோருமே பூர்வீக திராவிடர்கள் என்று அவர்களை ஆரியர்கள் அடிமைப்படுத்தியபின் சூத்திரர்கள் என்பதாக இழிவுபடுத்தப் பட்டார்கள் என்று ஒரு வாதம் ஐரோப்பிய அறிஞர்களால் பரப்பப்பட்டது.

ஒரு சில ஆரியர்கள் வந்து குடியேறி லக்ஷக்கணக்கான திராவிடர்களை அடிமைப்படுத்தி அடக்கியாண்டார்கள் என்பது அந்தக் காலத்தில் நடக்கக்கூடிய ஒன்றா? அப்படி அடக்கி ஆண்டிருந்தால் அந்த அடிமைகள் அவர்களை ஐந்தே நிமிடங்களில் சட்னி செய்து சாப்பிட்டிருப்பார்கள்.

விவேகானந்தருக்கு பல ஆண்டுகள் முன்னதாகவே சுவாமி தயானந்த ஸரஸ்வதி ஆர்ய திராவிட இனவாதத்தை வேரறுக்கும் விதத்தில் வேத மந்த்ரங்களின் உண்மைப் பொருளை எடுத்துரைத்திருக்கிறார்.

விவேகானந்தருக்குப் பின்னாலும் அரவிந்தர் தமது The secret of Veda என்ற நூலில் மிகவும் ஆணித்தரமாக ஆர்ய திராவிட இனவாதத்தை மறுத்திருக்கிறார்.

பின்னாளில் ஹிந்து மதத்தை முற்றிலுமாக வெறுத்து புத்தமதத்தை தழுவிய பி.ஆர்.அம்பேத்கர் அவர்களும் கடந்த கால நூல்களை எல்லாம் நேரடியாக படித்து ஆர்ய – திராவிட இனவாதம் பேசுவோருக்கு சம்மட்டி அடி தந்திருக்கிறார்.

அவரது கருத்துக்களைக் காண்போமா?

1. வேதங்களில் ஆர்ய இனம் என்பதாக ஒன்று எங்குமே குறிக்கப்படவேயில்லை .

2. ஆர்ய இனத்தினர் பாரதத்தின் மீது படையெடுத்து வந்தார்கள் என்பதற்கோ, அவர்கள் பாரத நாட்டில் பூர்வீகக் குடிமக்களாக வாழ்ந்து வந்த தாஸர்கள், தஸ்யுக்கள் ஆகியோரை வென்றதற்கோ எவ்வித அகச்சான்றும் வேதங்களில் இல்லை.

3. தாஸர்கள், தஸ்யுக்கள் என்பதாக வேதங்களில் குறிப்பிடப்படுவோர் இனத்தால் வேறுபட்டவர்கள் என்பதற்கான அகச்சான்றுகளும் வேதங்களில் இல்லை.

4.ஆர்யர்கள் தஸ்யுக்களின் தோலின் நிறத்தினில் வேறுபட்டிருந்தார்கள் என்பதற்கும் வேதங்களில் சான்றுகள் இல்லை .

5.ப்ராம்மணர்களும், தீண்டத்தகாதார் எனப்படுவோரும் ஒரே இனத்தவரே. ப்ராம்மணர்கள் ஆர்யர்கள் என்றால் தீண்டத்தகாதோர் எனப்படுவோரும் ஆர்யர்களே. ப்ராம்மணர்கள் திராவிடர்கள் எனறால தீண்டத்தகாதோரும் திராவிடாகளே

(அம்பேத்கரின் உரைகளும் கட்டுரைகளும். தொகுதி -7 பக்கம் 85 மற்றும் 302-303)

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு-8

குருதக்ஷிணா முறையின் சிறப்பு

புதிய புதிய ஊழியர்களை உருவாக்குவதுடன் கூடவே, ஷாகாக்களில் புதிதாக வரும் ஸ்வயம் சேவகர்களிடம் சங்கத்துக்குத் தேவையான குணங்களையும் சரியான முறையில் வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கில் டாக்டர்ஜி ஷாகா நடைமுறையில் சில அடிப்படை அம்சங்களை இணைத்தார். எடுத்துக்காட்டாக, எந்தவொரு அமைப்பும் சிறந்த முறையில், நல்லொழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டிருப்பதற்கு அதன் உறுப்பினர்கள் இடையே பணவிஷயத்தில் தூய்மையான எண்ணம் இருப்பது இன்றியமையாதது. எனவே டாக்டர்ஜி சங்கத்தில், கட்டணம் அல்லது நன்கொடை என்ற கருத்துக்குப் பதிலாக சமர்ப்பண மனப்பான்மையை முன்வைத்தார்.

இதே நோக்கில்தான் ஸ்ரீ குருதக்ஷிணா முறையைத் தொடங்கினார். காவிக் கொடியையே தனது குருவாகக் கருதி, ஸ்வயம்சேவகர்கள் வியாஸ பூர்ணிமா (ஆடிமாதப் பௌர்ணமி) நன்னாளில், அதன் முன்னே தனது சக்திக்கு ஏற்றவாறு தக்ஷிணை சமர்ப்பிக்கின்றனர். அதை வைத்துத்தான் சங்கம் தனது பணிகள் அனைத்தையும் நடத்துகிறது. இம்முறையினால் ஸ்வயம்சேவகர்களுக்குள் சுயசார்புப் பண்பும் வளர்கிறது. –

தனிமனிதன் மீது அல்ல; லட்சியத்தின் மீதே ஈடுபாடு

RSS Gurupooja

இப்படிப்பட்ட வித்தியாசமான குரு பூஜை முறையின் மூலம் தனிமனிதனிடம் பற்றுக் கொள்வதற்கு பதிலாக, லட்சியத்தின்மீது பற்றுக் கொள்ளும் பண்புப்பதிவை ஏற்படுத்துவதில் டாக்டர்ஜி வெற்றி கண்டார். இதற்கு ஏற்ற வகையில் அவர் ஸ்வயம் சேவகர்கள் முன்னே தனது வாழ்வையே எடுத்துக்காட்டாக வைத்தார். சங்கம் தொடர்பான முடிவு எதுவாயினும், உடன் பணியாற்றுபவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே தீர்மானிப்பார். எல்லா ஸ்வயம் சேவகர்களிடமும் எதிர் பார்க்கப்படும் ஒவ்வொரு விதிமுறையையும், தானும் மிக உறுதியாக அவர் கடைப்பிடித்து வந்தார்.

எதிர்ப்புகளுக்கிடையேயும் வளர்ச்சி

இயற்கையாக உங்கள் மனதில் எழக்கூடிய இன்னொரு கேள்வி: சங்கத்தின் சிந்தனைகள் – செயல்களை யாருமே எதிர்க்கவில்லையா?

உண்மையில் சங்கம் பிறந்தது முதலே பலவகையான பொய்ப் பிரச்சாரங்களுக்கும், பயங்கர எதிர்ப்புகளுக்கும் இலக்காகி வந்துள்ளது. டாக்டர்ஜி எத்தனை தீவிரமான தேசபக்தர் என்பதை இக்கதையின் தொடக்கத்திலேயே உங்களுக்குக் கூறியிருக்கிறேன் அல்லவா?

எனவே அச்சமயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களின் கழுகுப் பார்வை எப்போதும் சங்கத்தின் மீதே இருந்தது. மூன்றுமுறை சங்கத்துக்கு தடை விதிக்கவும் ஆங்கிலேய அரசு முயற்சி செய்தது. ஆனால் டாக்டர்ஜி மற்றும் ஸ்ரீ குருஜியின் திறமையினாலும், மக்கள் ஆதரவினாலும் அம்முயற்சிகள் தோல்வியடைந்தன.

பாரதம் விடுதலை அடைந்த பின்பும் எதிர்ப்புகள் குறையவில்லை. 1948-இல் காந்திஜி கொலை செய்யப்பட்ட பிறகும், 1975-77இல் நெருக்கடிக் காலத்திலும் தடை விதிக்கப்பட்டது. அண்மையில் 1992-இல் அயோத்தி கரசேவைக்குப் பிறகும் கூட, தடை விதிக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு முறையும் அரசே நிபந்தனையின்றித் தடையை விலக்கிக் கொள்ள வேண்டியிருந்தது. (1992ன் தடை, நீதிமன்றத் தீர்ப்பின்படி விலகியது) ஒவ்வொரு முறையும் சங்கம் புடம் போட்ட தங்கம்போல அதிக ஒளியுடன், வலிமையுடன், மக்களின் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.

தடை விதித்தவர்கள் யார்?

சங்கத்துக்கெதிராக இப்போதும் இடைவிடாது பொய் பிரச்சாரத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. ஷாகாக்களின் விஸ்தரிப்புடன் கூட தேசிய வாழ்வின் – அரசியல் உள்ளிட்ட – அனைத்துத் துறைகளிலும் சங்கத்தின் செல்வாக்கு வளர்ந்துள்ளதையடுத்து, சங்கத்தைப் பற்றிப் பல விதமான எதிர்ப்புப் பிரச்சாரங்களும் வளர்வது இயற்கையே. ஆனால், சங்கம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள அமைப்புகளின் மீது பழி சுமத்துபவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

உங்களுக்கும் இந்த விஷயம் விளங்கியிருக்கும் – இவர்கள் சில அரசியல் மற்றும் மதத் தலைவர்களும், குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகள், கம்யூனிஸ்டுகள், கிறிஸ்தவப் பாதிரிகளும்தான். ஹிட்லரிடம், கோயபெல்ஸ் என்ற பிரச்சார மந்திரி ஒருவன் இருந்தான். அவன் ‘பொய்யையே நூறு முறை திரும்பத் திரும்பக் கூறினால் அது மெய்போலத் தோன்றத் தொடங்கிவிடும்’ என்பான். இந்தக் குற்றம் சாட்டுபவர்கள் எல்லாம் அவனது நேர் சீடர்கள் போலும்!

காந்திஜி கொலை தொடர்பான பழி ஆதாரமற்றது

உதாரணமாகப் பாருங்கள்…. காந்திஜியைக் கொன்றது சங்கம்தான் என்ற குற்றச்சாட்டு குறித்து 27.2.1948-இல் நேருவுக்கு சர்தார் படேல் கடிதம் எழுதினார். ‘காந்திஜியின் கொலையில் சங்கத்தின் உறுப்பினர் எவருக்கும் தொடர்பில்லை’ என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். பிறகு நீதிபதி ஆத்ம சரணின் தனி நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சங்கத்தின் பெயரோ எந்தவொரு ஸ்வயம்சேவகரின் பெயரோ குறிப்பிடப்படவில்லை . அதன்பிறகு, 1965-இல் பிரத்யேகமாக நியமிக்கப்பட்ட கபூர் கமிஷனின் அறிக்கையும் சங்கத்தை நிரபராதி என்றே கூறியது. 1977-இல் அன்றைய பிரதமர் ஸ்ரீ மொரார்ஜி தேசாய் நாடாளுமன்றத்தில் இதே விஷயத்தை கூறினார்.

உண்மை இப்படி இருக்க, காந்தி கொலைப் பழியை சங்கத்தின் மீது மீண்டும் மீண்டும் சுமத்திவருபவர்கள் கோயபெல்சின் சீடர்களா இல்லையா, நீங்களே சொல்லுங்கள்.

சங்கம் மதவாத அமைப்பு; முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானது என்பதும் இதேபோன்று மற்றொரு அடிப்படையற்ற குற்றச்சாட்டு. இதுவரை நாடெங்கிலும் எத்தனையோ மதக்கலவரங்கள் நடந்துள்ளன. அவை தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஒவ்வொன்றுமே சங்கத்தை நிரபராதி என்றே நிறுவியுள்ளன. கன்னியாகுமரி – மண்டைக்காடு கலவரம் பற்றி நீதிபதி வேணுகோபால் கமிஷன் கூறியுள்ளது என்ன? “கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகளுக்கு ஹிந்துக்களின் பதிலடிதான் அது; மதமாற்றத்தைத் தடை செய்ய வேண்டும்” என்றுதான் அந்தக் கமிஷன் அரசுக்கு அறிவுறுத்தியது.

பிரமுகர்களின் கருத்து என்ன?

Dr. Zakir Husain :Former President of India
DR. ZAKIR HUSAIN – Former President of India

டாக்டர் ஜாகிர் ஹுசைன் (பாரதத்தின் முன்னாள் குடியரசுத் தலைவர்) 1949 நவம்பர் 20 அன்று பீகாரில் நடந்த மிலாது விழாவில்: “சங்கத்தைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை வெறுக்கின்றனர், அவர்களைத் தாக்குகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. சங்கத்திடமிருந்து பரஸ்பர அன்பு, ஒத்துழைப்பு, ஒருங்கிணைக்கும் திறமை இவற்றை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டும்”.

ஸ்ரீ கோகா சுப்பாராவ்ஜி பாரதத்தின் முன்னாள் தலைமை நீதிபதி – பெங்களூரில் 25 ஆகஸ்டு 1968-ல் சங்க குருதக்ஷிணா விழாவில்) “ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தேசிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் காப்பதில் ஒரு வலிமை வாய்ந்த கருவியாக வளரும். சங்கம் மதசார்பின்மைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறது என விமர்சிப்பது முற்றிலும் அபத்தமானது”.

இருப்பினும் சில அரசியல்வாதிகள் சங்கத்தை மதசார்பின்மைக்கு விரோதி என ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்? இதற்குக் காரணம் மிக எளிது. ஹிந்துக்கள் இப்போது விழிப்படைந்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் ஒவ்வொரு வகையிலும் தங்களைப் புறக்கணிப்பதையும் கிண்டல் செய்வதையும் கண்டு ஹிந்துக்களது மனதில் கோபம் எழுகிறது. ஹிந்துக்களல்லாதவர்களின் ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு ஹிந்துக்களை விட அவர்களுக்கு மிக அதிகமான உரிமைகளையும் சலுகைகளையும் வழங்கி வரும் அந்த அரசியல்வாதிகளின் தேர்தல் விளையாட்டுக்களும், ஹிந்துக்களின் கவனத்துக்கு வருகின்றன. அவர்களுக்கெதிராக தேர்தல் பாஷையில் எதிர்ப்பையும் ஹிந்துக்கள் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். அவர்களது உண்மையான முகத்தை ஹிந்துக்கள் இனங்கண்டு கொண்டு விட்டனர்.

சங்கம் வேறு, அரசியல் பணி வேறு

Bharatiya Janata Party - Wikipedia

சிலர் சங்கம் மற்றும் பா.ஜ.கவின் பரஸ்பர உறவு பற்றியும் விதவிதமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர். இக்கதையின் தொடக்கத்திலேயே கூறியுள்ளேன், ஸ்வயம் சேவகர்கள் தேசிய வாழ்வின் எல்லாத் துறைகளிலும் ஹிந்துத்வக் கருத்தினைக் கொண்டு சென்று சங்கத்தில் பெற்ற பண்புப்பதிவுகளைக் கொண்டு அந்தத் துறைகளில் தாக்கம் ஏற்படுத்தி வருகின்றனர். அவைகளில் அரசியல்துறையும் ஒன்று. அந்த அமைப்புக்கள் அனைத்துக்கு மிடையில் உள்ள ஒரே உறவு, அனைவரும் ஸ்வயம் சேவகர்கள் என்பதே. பல்வேறு துறைகளில் நடைபெற்றுவரும் அமைப்புகளைப் போன்றே பா.ஜ.கவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க ஆட்சி நடக்கும் மத்தியிலோ, மாநிலங்களிலோ கொள்கை வகுப்பதில் சங்கத்தின் தலையீடு ஏதுமில்லை.

இப்படிப்பட்ட எதிர்ப்புக்கள் அனைத்துக்கும் ஒரே காரணம் சங்கத்தின் வளர்ந்து வரும் செல்வாக்கால் அவர்கள் மனத்தில் தோன்றியுள்ள அச்சமே. சுவாமி விவேகானந்தரின் இந்தக் கருத்துரை ஸ்வயம்சேவகர்களுக்கு மிக நன்றாகத் தெரியும்: “ஒவ்வொரு அரும்பணியும் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியுள்ளது – புறக்கணிப்பு, கேலி, எதிர்ப்பு, இறுதியில் வெற்றி” எனவே இறுதி வெற்றியில் தளராத நம்பிக்கை கொண்டு , ஸ்வயம் சேவகர்கள் செயலில் இறங்கியுள்ளனர்.

ஹிந்து என்ற முறையில் உங்களிடம் அன்பான வேண்டுகோள்

மிகச் சுருக்கமாக சங்கத்தின் கதையை இதுவரை கூறினேன். இதைக் கேட்ட பிறகு உங்களுக்கு நிச்சயமாகத் தோன்றக்கூடிய கருத்து – சங்கப்பணி விரைவாக முன்னேறாவிட்டால் நாட்டுக்கு இன்னும் பல கோரமான பேரழிவுகள் ஏற்படலாம். எனவே இப்பணியை விரைவாக முன்னேற்ற வேண்டி உங்களைப் போன்ற, புதிய புதிய பல்லாயிரம் பேர் இப்புனிதப் பணியில் தோள்கொடுக்க வேண்டியிருக்கும். எனவே இயன்ற வரையில் – ராமாயண அணிலைப் போல – நமது ஹிந்து தேசத்துக்காக நேரம் கொடுப்பது ஒவ்வொரு ஹிந்துவின் முதல் கடமை என்று உங்களுக்குத் தோன்றியிருக்கும். எனவே, இப்போது நீங்கள் இக்கதையைப் படிப்பவராகவும் கேட்பவராகவும் மட்டும் இருந்து விடாமல், இக்கதை, தொடரச் செய்வதில் பங்கெடுத்துக் கொள்ள ‘நான் தகுதியுள்ளவன் என உணர்ந்து செயல்படுங்கள்; சங்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்’ என ஓர் ஹிந்து சகோதரன் என்ற முறையில் நான் உங்களிடம் அன்பான வேண்டுகோள் விடுக்கிறேன்.

கங்கா மாதா போன்றது இந்தக் கதை

நீங்களும், நாங்களும், அனைவரும் பங்கு கொள்ளும் கதை இது. நாமனைவரும் சேர்ந்து உருவாகும் சமுதாயம் புத்தெழுச்சி பெற்றுயர மேற்கொள்ளும் மாபெரும் முயற்சிகளின் கதை இது. அதாவது நமது ஹிந்து சமுதாயத்தை விழிப்படையச் செய்து ஒருங்கிணைத்து நமது அன்புக்குரிய தாய்நாடாகிய பாரதமாதாவை சிறப்பின் மிக உயர்ந்த சிகரத்தில் ஏற்றும் வகையில் மெல்ல மெல்ல முன்னேற்றுவதுதான் இந்தக் கதை.

1925-இல் டாக்டர் ஹெட்கேவார் கண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தக் கனவின் நடைமுறைச் செயல்வடிவத்தின் கதை இது. எல்லா கதைகளுக்கும் முடிவு ஏதாவதொரு கட்டத்தில் உண்டு. ஆனால் இது ஒரு தொடர் கதை.

இந்தப் புனித நீரோட்டம், கடல் போன்ற ஹிந்து சமுதாயத்தைத் தனது மடியில் உட்காரவைத்துக் கொண்டு, அதனை மிகத் தூய்மையாகவும், ஒளி பொருந்தியதாகவும், வெற்றித்திருவுடையதாகவும் செய்து கொண்டு, உலகமனைத்தையும் சுகமளித்து வாழ வைப்பதாக ஆக்கிக் கொண்டு, வாழையடி வாழையாக முன்னேறிக் கொண்டிருக்கும்.

சங்க சக்தியை நான் வளர்ப்பேனென

முன் வருவோர் வேண்டும்

மாபெரும் தியாகியர் படை வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு-7

அரசியலிலிருந்து ஏன் விலகியிருக்கின்றனர்?

நமது சமுதாயத்தைப் பிளவு படுத்தும் மற்றொரு விஷயம் சுதந்திரத்துக்குப் பின் தீவிரமடைந்து வருகிறது; அதுதான் அரசியல் கருத்து வேறுபாடு, பதவி மோகம், சுயநலம். சமுதாயத்தில் சாதி – மத – இன வேறுபாடுகளை விரோதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் திரித்துக் கூறிவருகின்றனர். ஹிந்துக்களின் ஒற்றுமையைக் கொளுத்தி அந்த நெருப்பில் தேர்தல் குளிர் காய்கின்றனர். டாக்டர்ஜி, அரசியலில் தான் இருந்ததன் காரணமாக, சமுதாயத்துக்கு ஏற்படக்கூடிய தீங்கினை மிக நன்றாக அறிந்திருந்தார். எனவே மஹாராஷ்ட்ரத்தில் புகழ்பெற்ற, செல்வாக்குள்ள அரசியல் தலைவராக இருந்தபோதிலும், சங்கத்தை நிறுவிய பின் எல்லாவகையான அரசியல் ஆரவாரங்களில் இருந்தும் அவர் விடுபட்டார், சங்கத்தையும் சுதந்திரமாக வைத்துக் கொண்டார். இன்றும் சங்கம், இதே கொள்கையைக் கவனமாகக் கடைப்பிடித்து வருகிறது.

ஆட்சி மற்றும் அரசியலிலிருந்து எப்போதும் விலகியிருத்தல்

பாரதம் விடுதலையான பின்னரோ அரசியலும் தேர்தலும் மட்டுமே தேசியவாழ்வின் மையப் புள்ளி என்பது போல ஆகிவிட்டது. இதனால் அநேக ஹிந்துத்வ ஆதரவாளர்கள் ‘சங்கம் போன்ற செல்வாக்குமிக்க அமைப்பு அரசியல் களத்தில் இறங்கினால் ஹிந்து சமுதாயத்துக்கு மிகுந்த நன்மை ஏற்படும்’ என்று எண்ணுகிறார்கள். ஆனால் சங்கம் தொடக்கத்தில் இருந்தே தனது கொள்கையில் உறுதியாக இருக்கத் தீர்மானித்து, அரசியலிலிருந்து விலகியே உள்ளது.

1948-49இல் சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டிருந்த போது, அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் ஸ்ரீ குருஜிக்கு எழுதிய கடிதத்தில், சங்கம் காங்கிரஸில் இணைந்து விடுமாறு வலியுறுத்தியிருந்தார். அப்போது சங்கத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை விலகும் என்ற நம்பிக்கை இல்லை. ஆனால் அப்படிப்பட்ட சங்கடமான சூழ்நிலையில்கூட ஸ்ரீ குருஜி பணிவுடன் படேலின் பரிந்துரையை ஏற்க மறுத்து “சங்கம் முன்போலவே, கலாச்சாரத்துறையில் பணிபுரிய விரும்புகிறது” என்று பதில் எழுதினார்.

1975-77-இன் நெருக்கடி நிலை நீக்கப்பட்டதும் சங்கத்தின் முன் வேறு ஒருவகையான அரசியல் வாய்ப்பு வந்து நின்றது. நெருக்கடி நிலையை எதிர்த்து மக்களை விழிப்படையவும் அணிதிரளவும் செய்ததில் சங்க ஸ்வயம் சேவகர்கள்தான் முக்கிய பங்கு வகித்தனர் – என்பதை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவருமே நன்கு அறிந்து இருந்தனர். பயத்தில் ஒடுங்கிய மக்களிடம் துணிவை எழுப்பி, தேர்தலில் இந்திராகாந்திக்கு எதிராக வாக்களிக்கத் தூண்டியவர்களும் ஸ்வயம்சேவகர்களே. இதன் விளைவாகத்தான் ஜனதா கட்சி அமோக வெற்றி அடைந்து, நெருக்கடிக் கால கொடுங்கோலாட்சி முடிவுற்றது,

இந்தப் பின்னணியில், சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரும் மத்திய அரசிலும் பல்வேறு மாநில அமைச்சரவைகளிலும் இடம் பெறுவார்கள் என்பதே பலரின் விருப்பம். ஆனால் நெருக்கடி நிலை முடிவுற்று சங்கத்தின் மீது தடை விலகியவுடனேயே, மறுநாளிலிருந்தே ஸ்வயம்சேவகர்கள், தங்கள் தினசரி ஷாகா பணியில் முன்போலவே ஈடுபட்டனர்; அரசியல், ஆட்சி அதிகாரம் போன்ற விஷயங்கள் குறித்துப் பேசக்கூட இல்லை.

இத்தனை ஊழியர்கள் எவ்வாறு உருவாகின்றனர்?

Creation of person from branch of union - संघ की शाखा ...

இப்போது, ஒரு விஷயம்பற்றி நீங்களும் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். – நாடெங்கிலும் இத்தனை ஆயிரம் இடங்களில் ஷாகாக்களையும், இத்தனை விதமான பெரிய அமைப்புகளையும், பரவலான திட்டங்களையும், இயக்கங்கள் போன்றவைகளையும் நடத்துவதற்கு, சங்கத்தின் எத்தனை லட்சம் ஊழியர்கள் செயல்பட்டு வருவார்கள்?

சங்கம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகளாகின்றன. அதாவது ஊழியர்களின் புதிய புதிய தலைமுறைகளும் உருவாகி வருகின்றனர். ஷாகாக்களில் இத்தனை பெரிய எண்ணிக்கையில் புதிய புதிய தலைமுறைகள் எப்படி உருவாகின்றனர்?

டாக்டர்ஜி முன்னரே இதுபற்றி ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். அந்த நோக்கில்தான் ஷாகா நிகழ்ச்சிகளில், சிறியனவாகத் தோன்றினாலும் அதிமுக்கியமான விஷயங்களை இணைத்திருந்தார். எடுத்துக்காட்டாக – சங்கம் வேறு – சமுதாயம் வேறு என்று கருதக்கூடிய வாய்ப்பளிக்கும் எந்தவொரு அடையாளமோ, வடிவமோ சங்கத்துக்கு இருக்கக் கூடாது என்ற வகையில் மிக எச்சரிக்கையாக இருந்தார்.

காவிக்கொடி – இதன் கீழ்தான் ஷாகா நடைபெறுகிறது – இது ஹிந்து சமுதாயம் முழுவதும் ஏற்று மதிக்கத்தக்க அடையாளம். ஸ்வயம் சேவகரும் சமுதாயத்துக்குள் நடமாடும்போது எந்தவொரு தனித்தன்மை காட்டும் அடையாளத்தை அணிவதில்லை, பழக்கங்களும் சாதாரண மக்களைப் போலவே. உடைகள், பேச்சுகூட. இப்படிப்பட்ட எச்சரிக்கைகளின் பயனாக, சங்கம் ஒரு தனி மதமாக அப்படியே மாறி, சமுதாயத்தில் மற்றொரு சம்பிரதாயமாக மட்டும் ஆகிவிடுவதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட ஒரு சிலர்தான் சமுதாயப் பணி செய்ய முடியும் என்ற மனநிலையை மாற்றி சாதாரண மக்களும் சமுதாயப் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட ஏற்றவாறு ஷாகா நிகழ்ச்சிகளை உருவாக்கினார்.

பிரச்சாரகர்களும் உள்ளூர் ஊழியர்களும்

ஷாகாவின் போதும், அதற்குப் பிறகும் கூட, ஸ்வயம் சேவகர்கள் இடையே மிக நெருக்கமான, அன்பான குடும்பச் சூழ்நிலை நிலவுகிறது. ஸ்வயம் சேவகர்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிறியவர் – பெரியவர் அனைவருடனும் சங்க ஊழியர்கள் மிகவும் பரிவுடன் பழகுகின்றனர்.

‘சமுதாயப் பணி ஒரு சுமை’ என்ற சாதாரண மக்களின் கருத்திலிருந்து ஸ்வயம்

संघ की कुटुंब शाखा में शामिल हुए 50 ...

சேவகர் விடுபட்டு, நாளடைவில் ஷாகாவின் குறிக்கோளில் ஒன்றிவிட்ட ஊழியர்களின் முன்னுதாரணத்தைக் கண்டு, சங்கப் பணிக்காக அதிக நேரம் கொடுக்கவும் தொடங்கிவிடுகிறார். கூடவே அவரது திறமைக்கு ஏற்ப அவரிடம் சிறு சிறு பொறுப்புகள் ஒப்படைக்கப்படுகின்றன. அந்தப் பொறுப்புகளை திறமையாக வகிப்பதற்குத் தேவையான பயிற்சியும் அவருக்கு அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை வாழையடி வாழையாகத் தொடர்கிறது.

அவர்களிலேயே சிலர் தங்கள் கல்விப் பயிற்சி நிறைவடைந்தவுடன் சங்கத்துக்காகத் தங்கள் முழுநேரத்தை அளிக்கவும் தயாராகி விடுகின்றனர். பணிகளுக்கு எந்த இடத்தில், எந்த வகையான தேவை ஏற்படுகிறதோ அதற்கேற்ப அவர்கள் அனுப்பப்படுகிறார்கள். இப்படிப்பட்ட ஊழியர்களை ‘பிரச்சாரக்’ என்கிறோம்.

பிரச்சாரகர்கள் தங்களது சிந்தனை வளர்ச்சிக்கும், செயல்திறனுக்கும் ஏற்ப குறைந்த அல்லது அதிகக் காலம் பணியாற்றுகின்றனர். அவர்களுக்குச் சில சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான ஊழியர்கள், குடும்பங்களிலுள்ளவர்களே – மாணவர்கள், தொழிலாளர்கள், உழவர்கள், ஆசிரியர்கள் போன்றவர்களே.

அவர்கள் சுமார் 8-10 வயதுச் சிறுவர்களாகத் தொடங்கி, முதுமையிலும் தனது உடலும் மனமும் தளராத வரையில் பணி செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் தங்கள் இடங்களிலும் சில சமயங்களில் வெளியூர் சென்றும் சங்கப் பணியை வலுவாக்கவும் பரவச் செய்யவும் கூட தங்கள் தினசரி வாழ்வில் நேரம் ஒதுக்குகின்றனர்.

அவர்களில் சிலர் 50-60 வயதைத் தாண்டியவர்கள் – வானப் பிரஸ்த முறைப்படி, தங்கள் குடும்பப் பொறுப்பிலிருந்து விடுபட்டு, முழுநேரமும் சங்கத்தின் திட்டப்படி பணிபுரிய முன்வருகின்றனர்.

ஷாகாக்களின் மூலமாக சாதாரண மக்களிலிருந்தே, சமுதாயத்துக்காக நேரம் கொடுத்து, கடுமையாக உழைத்துப் பணிபுரிபவர்களை உருவாக்க டாக்டர்ஜி தீட்டிய திட்டம் பெரிய அளவில் வெற்றியடைந்து வருகிறது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.

இந்த எல்லாவகையான ஊழியர்களுக்கும் பெருஞ்சிறப்பொன்று உண்டு – இவர்கள் தங்கள் உழைப்புக்காக – பணம், செல்வாக்கு, பதவி, கௌரவம் எதையுமே எதிர்பார்ப்பதில்லை. தனது பெயர் பரவவேண்டுமென்றுகூட விரும்புவதில்லை. தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களின் பண்புகள் சிறப்படையவும், தன்னிலும் அதிகச் செயல் திறன் கொண்டவர்களாக அவர்கள் முன்னேறவும் இடைவிடாது முயன்று வருகின்றனர்.

சங்கம் பெரும் பணிகளை செய்து வருகிறது என்பது நமக்கு தெரியும். அதற்க்காக யாரிடமும் பணம் பெறுவதும் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா? இவ்வளவு பணி செய்வதற்கு பணம் எங்கு இருந்து வருகிறது.? நாளை பார்க்கலாம்.

தொடரும்…

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு-6

வரலாற்றிலிருந்து பாடம்…

இப்போது உங்கள் மனத்தில் ஒரு கேள்வி எழக்கூடும் – இப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதாலும், தொண்டுப் பணிகள் செய்வதாலும் மட்டுமே, நாட்டின் அனைத்துமுக மேம்பாடு ஏற்பட முடியுமா? நாட்டின் முன்னே எத்தனையோ விதமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு எல்லாம் தீர்வு ஏற்பட்டு விடுமா? சங்க ஸ்தாபகர் இதுபற்றியும் சிந்தித்திருப்பாரா? உங்களது இந்த சந்தேகம் முற்றிலும் சரியானதே,

டாக்டர்ஜி அடிப்படையான விஷயங்களை ஊன்றிக் கவனித்த சிந்தனையாளர். சுதந்திரப் போராட்டத்தில் பல்வேறு தேசிய விழிப்புணர்வுத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்வதால் மட்டும் திருப்தியடைபவரல்ல. தனது கூர்மையான மருத்துவ அறிவினால் அந்த முயற்சிகளனைத்தின் நிறை – குறைகளையும் கூட அவர் நாடிபிடித்துப் பார்த்து அறிந்திருந்தார். கூடவே நமது தேசத்தின் முந்தைய வரலாற்றையும் ஆழ்ந்து பரிசீலித்திருந்தார். இவ்வாறு உள்நோக்கிச் சிந்திக்கும் வேளையில் அவர் முன் முதலாவதாக எழுந்த கேள்வி – இன்றைய நமது கோரமான ஏழ்மையில், அடிமைத்தனத்தில் நாம் தள்ளப்பட்டது ஏன்? எப்போதுமே நமது தேசம் இதுபோலத் தாழ்ந்த நிலையில்தான் இருந்ததா? இதற்கான பதிலை வரலாறு தெளிவாகக் கூறுகிறது.

நமது தேசத்தின் வீழ்ச்சி குறிப்பாக கடந்த ஆயிரம் ஆண்டுகளாகத்தான் படிப்படியாக ஏற்பட்டு வந்துள்ளது. அதற்குமுன், பல்லாயிரம் ஆண்டுகளாக நமது தேசம், மற்ற நாடுகளைவிட கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரத்தில் மேம்பட்ட நிலையில் இருந்தது. இருந்தும் ஏன் அடிமைகள் ஆனோம்?

இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பாளர்கள் நம்மைப் போலவே சகிப்புத்தன்மை, பெருந்தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள்; இறைவழிபாட்டு முறைகளில் மட்டுமே வேறுபாடு உள்ளது என்ற நினைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தோம்.

ஒற்றுமையின்மைதான் சாபக்கேடு

ஆனால் இந்த எல்லா காரணங்களையும் விட முக்கியமான காரணம் நமது சமுதாயத்தின் ஒருமைப்பாடற்ற நிலையே. இது நமது தர்ம பூமி, கர்ம பூமி, புண்ணிய பூமி, மோட்ச பூமி என்ற உணர்வு மக்கள் மனத்தில் நிரம்பியிருந்தது. நாட்டின் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலை வரை நான்கு திசைகளிலும் தீர்த்த யாத்திரைகள் நடைபெற்று வந்தன. கும்ப மேளா போன்ற நிகழ்ச்சிகளில் மிகப்பெரிய எண்ணிக்கையில், வனவாசிகள் உட்பட நாடெங்கிலுமிருந்து பக்தர்கள் ஒன்று திரண்டனர்.

ஆனால் ‘நமது இந்த பூமியே நமது தேசிய வாழ்வுக்கு ஆதாரம், இதன் ஒற்றுமையைக் கட்டிக்காப்பது நமது முதல் கடமை’ என்ற கடமையுணர்வு மக்கள் மனதிலிருந்து மறைந்து விட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் வந்த பிறகு அவர்களது வஞ்சகப் பிரச்சாரத்தின் விளைவாக, கல்வி கற்ற நம்மவர் வேறு ஒரு வகையான சுயமறதியில் சிக்கினர். நாம் யார், நமது தேசத்தின் பெயர் என்ன, நமக்கு தேசியம் என்பது எது போன்ற அடிப்படை விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றி அறிந்து கொள்ள விரும்பாத எண்ணங்கள் நம்மவர் மனத்தில் ஆதிக்கம் செலுத்தின.

டாக்டர்ஜி எடுத்த சரியான முடிவு

எனவே, நமது தேசம் வீழ்ச்சியடைய மூலகாரணமான இந்தக் குறைபாட்டிலிருந்து நமது சமுதாயம் விடுபடாத வரை, நமது நாடு ஒரு போதும் இன்னல்களிலிருந்து விடுபடாது என்ற முடிவுக்கு வந்தார் டாக்டர்ஜி.

அந்நாளில், ஆங்கிலேயரின் பிடியிலிருந்து நாட்டை விடுவிப்பது எப்படி என்பதுதான் எல்லா இயக்கங்களின் மையக்கருத்தாக இருந்தது. அச்சமயம் நடைபெற்று வந்த விடுதலைப் போராட்டத்தில், முஸ்லிம்களை நம்முடன் சேர்த்துக்கொள்ள வழி என்ன என்பதே எல்லாத் தலைவர்களுக்கும் பெரிய தலைவலியாகியிருந்தது.

ஆனால், நமது தேசத்தின் வீழ்ச்சிக்குக் காரணமான ஒற்றுமையின்மை, உண்மையான தேசம் எது என்பதில் மறதி போன்ற அடிப்படைக் குறைபாடுகளை விலக்குவதற்காக வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட டாக்டர்ஜி உறுதிபூண்டார்.

ஹிந்து சமுதாயம் முழுவதையும் ஒருங்கிணைக்க வேண்டும்

100 crore Hindu Unity Platform - Home | Facebook

ஹிந்து தேசிய அடிப்படையில் ஹிந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன் டாக்டர்ஜி சங்கத்தை நிறுவினார். ஹிந்து சமுதாய ஒருங்கிணைப்பு என்றால் என்ன? ஹிந்து ஒற்றுமையின் வடிவம் என்ன? ஸ்வயம்சேவகர்களுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை வேண்டும்? இவ்வாறு பல்வேறு விஷயங்களைப் பற்றியும் ஸ்வயம் சேவகர்களுக்கு விளக்கி வந்தார். பொதுவாக, அமைப்பு என்பது சமுதாயத்திற்குள்ளேயே அதன் உறுப்பினர்களில் சிலரைக் கொண்டு அமையும் ஒரு நிறுவனம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் சங்கம், சமுதாயத்திற்குள்ளே ஒரு தனி அமைப்பல்ல, அதாவது ஹிந்து சமுதாயம் முழுமைக்குமே கட்டுக்கோப்பானதொரு அமைப்புவடிவம் கொடுப்பதற்கான முயற்சி இது.

சோதனைக் காலத்திலும்கூட ஹிந்து ஒற்றுமையில் உறுதி

டாக்டர்ஜி காலத்திலிருந்து இன்றுவரை சங்கத்தில் நிலவி வரும் கண்ணோட்டம் இதுதான். டாக்டர்ஜிக்குப் பின் ஸ்ரீ குருஜி காலத்தைய உதாரணம் ஒன்று – காந்திஜி கொலை செய்யப்பட்ட போது சங்கத்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தி, காங்கிரஸாரும், சோஷலிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும் சங்கத்தை அழித்துவிட முயன்றனர். குறிப்பாக மகாராஷ்டிரத்திலும், கர்நாடகாவின் சில பகுதிகளிலும் சங்க ஸ்வயம் சேவகர்களையும் அவர்களது வீடுகளையும் பயங்கரமாகத் தாக்கினார்கள்.

அச்சமயம் சங்க சக்தியும் குறைந்ததல்ல. தாக்கிய அனைவருக்கும் தக்க விதத்தில் பதிலளிக்கக்கூடிய ஆற்றல் அவர்களிடம் இருந்தது. எனினும் எந்தவொரு சூழ்நிலையிலும் அமைதி காக்கும்படி சங்க பொதுச்செயலர் ஸ்வயம் சேவகர்களைப் பணித்தார். நாகபுரியில் ஸ்ரீ குருஜி இருந்த கார்யாலயத்தை கும்பல் சூழ்ந்து கொண்டபோது கூட பதிலடி கொடுக்கவிடாமல் ஸ்வயம் சேவகர்களை தடுத்துவிட்டார் குருஜி. “எந்த சமுதாயத் தொண்டுக்காக, ஒற்றுமைக்காக, நாம் சமர்ப்பணமாகி உள்ளோமோ. அந்த சமுதாயத்தின் ஒரே ஒரு நபரின் ஒரு சொட்டு ரத்தம் கூட எனக்காக சிந்துவதை நான் விரும்பவில்லை” என்றார்.

மக்களாதரவு பெருகினாலும் அதே பார்வை

RSS led the unprecedented movement against Emergency - Organiser

இதே போன்ற வேறொரு நிகழ்ச்சியும் உண்டு. 1948 – பிப்ரவரி தொடக்கத்தில் சங்கத்தின் மீது தடை விதிக்கப்பட்டது. 1949-ல் தடை நீக்கப்பட்ட பிறகு ஸ்ரீ குருஜி நாடெங்கிலும் சுற்றுப்பயணம் செய்தார். இதையொட்டி ஆங்காங்கே அவருக்கு மக்கள் அளித்த பாராட்டு விழாக்களில் மாபெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டனர். டில்லி விழாவில் குழுமியிருந்த கடல்போல் பரந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு லண்டன் பி.பி.சி. விமர்சித்தது: “இன்று பாரதத்தில் இரண்டே இரண்டு பேருடைய பேச்சைக் கேட்பதற்குத்தான் மக்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுகின்றனர். ஒருவர் பிரதமர் நேரு. மற்றொருவர் ஆர்.எஸ்.எஸ் ஸின் ஸ்ரீ கோல்வல்கர்”.

பெருமளவு மக்கள் ஆதரவும் உற்சாகமும் கிடைத்தும் கூட சிலநாட்கள் முன்தான் தன்மீதும், பல்லாயிரம் ஸ்வயம் சேவகர்கள் மீதும் கோரமான அட்டூழியம் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தும் துளியளவு காழ்ப்புணர்வும் அவர் மனதில் தோன்றவில்லை. ஸ்வயம் சேவகர்களுக்கு தெளிவுபடுத்திச் சொன்னார்: “உணவருந்தும் போது தவறுதலாக நாக்கைக் கடித்துக் கொண்டோமானால் அதற்காக நாம் பற்களைப் பிடுங்கியெறிந்து விடுகிறோமா என்ன? அதே போல் இன்று நமது நாட்டின் தலைவர்களும் நம்மவரே என்பதை நினைவில் கொள்வோம்”.

சங்கம் இந்திராவின் திட்டத்தை ஏன் நிராகரித்தது?

1975-77-ன் நெருக்கடிக் காலத்தின் இறுதி நாட்களில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி இது. ஸ்வயம்சேவகர்களால் நடத்தப்பட்ட நாடு தழுவிய வலுவான தலைமறைவு இயக்கத்தினால் தனது ஆட்சிபீடம் ஆட்டம் கண்டுவிட்டது என்பதை இந்திரா காந்தி உணர்ந்தார். அவர் சங்கப் பிரமுகர்களிடம் தனது உளவுத் துறையின் முக்கியஸ்தர் ஒருவரை தூது அனுப்பினார். சங்கம் இந்த இயக்கத்திலிருந்து விலகிக் கொண்டால், சங்கத்தின் மீது விதிக்கப்பட்டிருக்கும் தடையை விலக்கிக் கொள்ளத் தயார் – என்று செய்தி அனுப்பினார். சங்கப் பிரமுகர்கள் அதற்கு “எந்தச் சூழ்நிலையிலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நாட்டைக் கைவிட, சங்கம் தயாரில்லை – என்று தெள்ளத்தெளிவாக பதிலளித்தார்கள்.

சங்கம் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதில்லை ஏன் விலகியிருக்கிறது? என்பதை நாளை பார்க்கலாம்.

தொடரும்…

ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த வரலாறு-5

விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் அமைப்பு

1962 – இல் சீனாவுடன் நடந்த போரில் ஏற்பட்ட தோல்வியினால் மக்களின் மனம் மிகவும் புண்பட்டு இருந்தது. அந்தவேளையில் மக்களுக்குத் தன்னம்பிக்கை ஏற்படச் செய்வது அதிமுக்கியமாக இருந்தது. அந்த நோக்கில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டது. இதனை இறைவன் திருவுள்ளம் என்றுதான் கூற வேண்டும். 1963-இல் சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவும் வரவே இயக்கத்துக்குத் தூண்டுதலான விஷயம் கிடைத்தது.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன் மூன்று நாட்கள் வரை கன்யாகுமரிக் கடற்கரையருகே, கடலில் உள்ள ஒரு பெரிய பாறை மேல் அமர்ந்து பாரதத்தின் எதிர்காலம் பற்றி தியானித்திருந்தார். அதே இடத்தில் அவர் தனது எதிர்காலப் பணிகளையும் தீர்மானித்தார். எனவே அந்தப் புனிதமான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாறையின் மீது சுவாமி விவேகானந்தருக்கு ஓர் அழகிய நினைவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

இப்பணியின் சிறப்பினை கவனத்தில் கொண்டு, அச்சமயம் சங்கத்தின் பொதுச் செயலர் பொறுப்பில் இருந்த ஸ்ரீ ஏகநாத் ரானடேயிடம் இப்பணி ஒப்படைக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பல வகைகளிலும் இதற்கு முட்டுக்கட்டை போட முயன்று வந்தனர். ஆனால் எல்லா இடையூறுகளையும் தனது இணையற்ற திறமையினாலும், இடைவிடாத முயற்சியினாலும் விலக்கிக் கொண்டு, ஏகநாத்ஜி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னப் பணிகளைத் தொடங்கினார். அப்பணிக்குத் தேவையான பணம் திரட்டுவதற்காக நாடெங்கிலும் ஸ்வயம் சேவகர்கள் விரிவான அளவில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்தினர்.

பொருள்திரட்டுவதுடன் கூடவே விவேகானந்தரின், தேச விழிப்புணர்வுச் செய்தியை பல்லாயிரம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் கொண்டு சென்றனர். கூடவே, சுவாமிஜியின் உத்வேகமூட்டும் கருத்துக்கள் அடங்கிய சிறு நூல்களும் எல்லா மொழிகளிலும் வெளியிடப்பட்டன. இறுதியில், இயக்கத்தை இனிதே நிறைவு செய்ய, 1970-இல் அந்த விவேகானந்தர் பாறையின் மேல் தேசிய உணர்வுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல் மிக அழகாக விவேகானந்தர் நினைவுச் சின்னம் எழுந்தது.

ஒருமைப்பாட்டு யாத்திரைகள்

பாரத மாதாவும் கங்கையன்னையும் பாரதத்தின் கோடிக்கணக்கான மக்களின் கலாச்சார ஒருமைப்பாட்டுக்கும் புனிதத்தன்மைக்கும் மாபெரும் பக்திமையங்கள். கங்கையின் புனித நீரை, பாரதத்தின் பட்டி தொட்டிதோறும் மக்களிடம் கொண்டு செல்வதற்காக 1983 நவம்பர் மாதத்தில் மாபெரும் திட்டம் ஒன்றினை விஸ்வ ஹிந்து பரிஷத் தயாரித்தது.

பாரதமாதாவின் உருவச்சிலையும் கங்கை நீர் நிரம்பிய கலசமும் கொண்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான ரத யாத்திரைகள், நாட்டின் வெவ்வேறு பாகங்களிலிருந்தும் புறப்பட்ட மூன்று முக்கிய யாத்திரைகளுடன் சேர்ந்து நாடெங்கிலும் 50,000 கிலோ மீட்டர் பயணித்தது. கிட்டத்தட்ட மூன்று லட்சம் கிராமங்களில் பத்து கோடி பேர் பாரதமாதாவையும், கங்கை அன்னையையும் தரிசித்தனர்.

அயோத்தி ராமர் கோயில் இயக்கம்

Ram Temple In Spotlight As Two Trucks Of Bricks Arrive In Ayodhya
ராமர் செங்கல் பூஜை

ராமர் செங்கல் பூஜை (ராம சிலா பூஜன்), ராமர் ஜோதி யாத்திரைகளில் பல லட்சம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கெடுத்துக் கொண்டனர். அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, அதன்பிறகு ராமர் கோயில் கட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க கரசேவை, அதில் அநேக ராம பக்தர்களின் பலிதானம் இவற்றின் சிலிர்க்கவைக்கும் வர்ணனைகள், பாரதத்தின் சமீபகால தேசிய வாழ்வின் பொன்னேடுகள்.

இந்த மாபெரும் திட்டங்கள் அனைத்தையும் வெற்றியடையச் செய்வதில் ஸ்வயம் சேவகர்கள் முழு மனதுடன் விஸ்வ ஹிந்து பரிஷத்துக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா

Dr. K. B. Hedgewar

1989-இல் சங்க ஸ்தாபகர் டாக்டர்ஜியின் நூற்றாண்டு விழா நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது. மக்களே கொண்டாடிய விழா இது. இந்த மக்கள் தொடர்பு இயக்கத்தின்போது 1.5 கோடி குடும்பங்களை சங்க ஊழியர்கள் தொடர்பு கொண்டனர். சமீபத்தில் டாக்டர் ஹெட்கேவாரது பெருமையை உணர்ந்து அரசும் தபால்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பு

‘ஷாகாவில் பண்புப் பதிவு பெற்ற ஸ்வயம் சேவகர்கள் மூலம் நமது தேசத்தின் எல்லாத் துறைகளிலும் மேம்பாட்டுக்கான பணி நடைபெறும்’ என டாக்டர்ஜி கூறியதில் தொண்டு தவிர வேறு ஒரு அம்சமும் உண்டு. அதுதான், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், போன்ற துறைகளுடன் கூடவே தர்மம், கலை, சுதேசி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளிலும் கூட தனித்தனியாக மகத்தான செல்வாக்குடைய அமைப்புகளை ஸ்வயம் சேவகர்கள் உருவாக்கியுள்ளனர். இதுவும் தவிர, பிரத்யேகமாக பெண்கள் மத்தியிலும் அமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்புகள் எல்லாமே, அந்தந்தத் துறைகளில் தேசத்தில் மற்ற அமைப்புகளை விட சிறந்தனவாகவும், செல்வாக்குடையனவாகவும் விளங்குகின்றன.

விஸ்வ ஹிந்து பரிஷத்: ஸ்ரீ குருஜி அவர்களின் முயற்சியால். சுவாமி சின்மயானந்தர் உள்ளிட்ட துறவிகள் முன்னிலையில் 1964-இல் மும்பையில் தொடங்கப்பட்டது. குத்துவிளக்கு பூஜை போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் மூலம் ஹிந்துக்களை இணைக்கிறது. ஸ்ரீராம ஜென்ம பூமி இயக்கத்தில் பெரும்பங்கு வகித்து வருகிறது. உலகின் பல நாடுகளில் பரவியுள்ள அமைப்பு இது. தமிழகத்தில், விசேஷமாக கிராமக்கோயில் பூஜாரிகளுக்கு முறையான பூஜைப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்றுள்ளனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் நாடு முழுவதும் எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டு செயல்பட்டு வரும் ஒரே அமைப்பு. மாணவர்களிடையே தேசபக்தியையும், கட்டுப்பாட்டையும் வளர்க்கும் அமைப்பு. தமிழகத்தில், அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அமைப்பதில் பெரும் பங்காற்றியது. செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று கல்லூரிப் பேராசிரியர்களுக்கு மாணவர்கள் மலர்ச்செண்டு அளித்து ஆசி பெறும் நிகழ்ச்சி பரவி வருகிரது. ஏ.பி.வி.பி உள்ள கல்லூரிகளில் ராகிங் கொடுமை குறைந்துள்ளது.

பாரதீய மஸ்தூர் சங்கம்: ஹிந்துத்வ சிந்தனையில் தொழிலாளர்களை ஒன்றுபடுத்தும் அமைப்பு. தொழிலாளி என்றாலே கம்யூனிஸ்டு தான் என்ற மனப்பான்மையை உடைத்து 31 லட்சம் உறுப்பினர்களுடன் பாரதத்தின் முதன்மை சங்கமாக பீடுநடை போட்டு வருகிறது.

பாரதீய கிசான் சங்கம்: 15 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட மிகப்பெரிய விவசாயிகளுக்கான அமைப்பு.

ராஷ்ட்ர சேவிகா சமிதி: பாரதீய கலாச்சாரத்தை நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் மாதர்களுக்கான அமைப்பு. நாடு முழுவதும் 5000-த்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

வித்யா பாரதி: நாடு முழுவதும் நகரங்களிலும், கிராமங்களிலும் மலைவாழ்மக்கள் மத்தியிலும் 16,000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிகளை நடத்திவரும் மிகப்பெரிய தன்னார்வ அமைப்பு.

இந்து முன்னணி: ஆன்மிக பூமியான தமிழகத்தில் 50 ஆண்டுகளாக நாத்திகம் என்ற போர்வையில் பரப்பப்பட்டு வந்த நச்சுக் கருத்துகளை முறியடித்ததில் முன்னணியில் உள்ள இயக்கம். விநாயகர் சதுர்த்தி விழா மூலம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நமது தேசியவாழ்வு ஒரு போதும் அரசியலை, ஆட்சி அதிகாரத்தை மையமாகக் கொண்டிருந்ததில்லை. இதே சிறப்பினை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்குடன் இந்த அமைப்புகளில் எதுவுமே அரசின் தயவை சார்ந்திருக்கவில்லை. மக்கள் ஒத்துழைப்பின் பலத்தில்தான் இவை நடைபெறுகின்றன; வளர்ந்து வருகின்றன.

இப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதாலும், தொண்டுப் பணிகள் செய்வதாலும் மட்டுமே, நாட்டின் அனைத்துமுக மேம்பாடு ஏற்பட முடியுமா? நாட்டின் முன்னே எத்தனையோ விதமான பிரச்சினைகள் உள்ளன. இவற்றுக்கு எல்லாம் தீர்வு ஏற்பட்டு விடுமா? சங்க ஸ்தாபகர் இதுபற்றியும் சிந்தித்திருப்பாரா? நாளை பார்க்கலாம்.

தொடரும்…