பாரதம், சிகரத்தை நோக்கி…

1947-ல் பாரதம் சுதந்திரம் அடைந்தது. ஆனால் நீண்ட காலத்திற்கு மேற்கு நாடுகளை கண்டு அஞ்சினோம். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனியாதிக்கத்தில் இருந்ததால், வெறும் பாம்பாட்டிகளும், பசி, பட்டினியும் நிறைந்த படிப்பறிவு இல்லாத நாடாகவே சித்தரிக்கப்பட்டது. பெண்களை கொடுமைப்படுத்துபவர்களாகவும், சாதி, மதத்தின் பெயரால் சண்டையும், சச்சரவும் நிறைந்த சிதறிப்போகும் ஒரு தேசம் என்றும் மேற்கு நம்மைப் புரிந்து கொண்டது. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்புவரை இதே நிலைதான். ஆனால் இன்று….

பாரதம் சுயேச்சையான ராணுவத்திட்டங்களை கொண்டுள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷியா நாடுகள் தவிர மற்ற நாடுகள் நேட்டோ, சென்டே, ஸீடோ போன்ற பல அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ளன. பாரதம் 11 லட்சம் வீரர்களை கொண்டு உலகின் இரண்டாவது பெரிய படை கொண்டுள்ளது.

செயற்கைகோள் ஏவுகணை தொழில் நுட்பத்தால் ஜெர்மனி, பெல்ஜியம், ஹங்கேரி போன்ற முன்னேறிய நாடுகளுக்காக பாரதம் செயற்கை கோள்களை அனுப்புகிறது.

1998 மே 11,13 தேதிகளில் ராஜஸ்தான் மாநிலத்தில் போக்ரான் – II அணுகுண்டு சோதனை நடத்தி நமது வல்லமையை உலகுக்கு உணர்த்தியது.

Fast Breeder Reactor Technolgy உடைய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது (மற்ற நாடுகள் அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான்)

அமெரிக்கா, ஜப்பானுக்கு அடுத்த படியாக சூப்பர் கம்யூட்டரை உருவாக்கியுள்ளது. டாக்டர் விஜய்பட்கர் தலைமையில் இயங்கிய அறிஞர்குழு பரம் – 10,000 என்ற சூப்பர் கம்யூட்டரை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவின் சூப்பர் கம்யூட்டர் ரூ.450 கோடிக்குமேல், பரம் கம்யூட்டர் 22.5 கோடி மட்டுமே.

கம்யூட்டர் தொழில் நுட்பத் துறையில் இன்போஸிஸ், விப்ரோ , ஹெ.சி.எல் போன்ற பாரத நாட்டு நிறுவனங்கள் உலக அளவில் புகழ் பெற்று திகழ்கின்றன. மென்பொருள் (Software) துறையில் முன்னனி நாடாக திகழ்கிறது.

பரப்பளவில் 8 வது பெரிய நாடான நமது நாட்டில் 5ல் 3பங்கு விவசாயத்திற்கு ஏற்ற நிலம். இது உலக சராசரியில் 10ல் 1பங்கு. விவசாய உற்பத்தியில் முதல் ஐந்து நாடுகளில் ஒன்றாக நிகழ்கிறது. உலகளவில்

அரிசி,பால் உற்பத்தியில் முதலிடமும்

தேயிலை உற்பத்தியில் 30%

கோதுமை, காய்கறி உற்பத்தியில் இரண்டாவது இடம் இவ்வாறு உணவுப் பொருள் உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஆட்டோமொபைல் இன்ஜினிரிங் துறையில் பாரதம் மிகவேகமாக முன்னேறி வருகிறது. உலகில் பெரிய 15 கார் கம்பெனிகள் பாரதத்திலிருந்து உதிரி பாகங்களை வாங்குகின்றன.

டாடா இண்டிகா கார்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. வேத

ஹிரோ ஹோண்டா நிறுவனம் பைக் உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது.

மருந்து தயாரிப்பில் பாரதம் 4 வது இடம் பெற்றுள்ளது. பாரதத்தில் 75% விற்பனையாகி வந்த பண்னாட்டு கம்பெனிகளின் மருந்து இப்போது 30% குறைந்துள்ளதே மருந்து தயாரிப்பில் நமது வளர்ச்சியை காட்டுகிறது.

உலகில் மிகப்பெரிய ரயில்வே இந்திய ரயில்வே. ஒரு லட்சம் கி.மி ரயில் பாதை, ஏழாயிரம் ரயில் நிலையங்கள் உள்ளது.

சிமெண்ட் உற்பத்தியிலும் முதலிடம் வகிக்கிறது.

டாடா ஸ்டீல் நிறுவனம் எஃகினை வெப்ப முறையில் உருட்டி தரும் நிறுவனம். உலகிலேயே மிகக்குறைந்த செலவில் தயாரிக்கிறது.

சாதனை படைக்கும் சகோதரர்கள்

100 வருடங்களுக்கு முன் நமது மக்கள் பல நாடுகளுக்கு சென்றனர். அடிமைகளாகவும், ஒப்பந்த தொழிலாளர்களாகவும் வேலை செய்தார்கள். கடுமையான உழைப்பு, முயற்சியால் இன்று உலகெங்கும் சாதனை படைத்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் 3.22 மில்லியன் பாரதியார்கள் இருக்கிறார்கள். அமெரிக்க மக்கள் தொகையில் 1.5%. அமெரிக்காவில் ஒரு இந்தியர், தேசிய சராசரியைவிட 28% அதிகமாக சம்பாதிக்கிறார்கள். மேலும் அமெரிக்காவில் உள்ள

டாக்டர்களில் மைல் 38%

NASA விஞ்ஞானிகள் 12%

மைக்ரோ சாப்ட் கம்பெனில் 36%

IBM – ல் 28%

லை stafபவம்

INTEL – 17%

பாதியர்கள் பணியாற்றுகிறார்கள்

சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் கம்பனியின் இணை நிறுவனர் வினோத் கௌசலே

பெண்டியம் ஹார்வேடுன் தந்தை விநோத் தரம்

MACH – 7 என்ற அமெரிக்க ராக்கெட் திட்டத்தின் பொறுப்பாளர் மீரட்டை சார்ந்த அஜய் குமார்

லக்ஷ்மி மிட்டல், ஸ்வராஜ்பால், ஹிந்துஜா, ஜடானியா சகோதரர்கள், போன்றோர் இங்கிலாந்தில் பெரும் செல்வந்தர்களாக திகழ்கின்றனர்.

டாக்டர் ஹர்கோவிந்த் கொரானா, டாக்டர் சுப்பிரமணியம் சந்திரசேகர், பேராசிரியர் அமர்த்தியா சென், வி.எஸ்.நய்பால் போன்றவர்கள் நோபல் பரிசு பெற்ற பாரத வம்சாவளியினர்.

பாண்டிச்சேரியில் பிறந்த சியாமளன் ஹாலிவுட்டில் மிக அதிகமான வருமானம் சம்பாதிக்கும் வசன கர்த்தா

ப்ரிதா பன்சால் வெள்ளைமாளிகைக்கு ஓர் ஆலோசகர்.

அமெரிக்காவின் நேசனல் இன்ஸ்ட்டியுட் ஆப் ஸ்டேன்டர்ஸ் அமைப்பாளர் இயக்குனர் ஆர்த்தி பிராபாகர்.

காளிச்சரன், நாஸர் ஹீசேனும் மேற்குகிந்தியா, இங்கிலாந்து கிரிகெட் அணிகளின் தலைவர்களாக இருந்தார்கள். கோல்ப் விளையாட்டில் பிஜியின் விஜய் சிங் சாதனை செய்தார்.

பல நாடுகளில் நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் பல பொறுப்புக்களை பாரத வம்சாவளியினர் உள்ளனர்.

பிஜியின் பிரதமராக மஹேந்திர சௌத்திரி இருந்தார்.

வாசுதேவ் பாண்டே ட்ரினிடாடின் பிரதமராக இருந்தார்

S.R.நாதன் – சிங்கப்பூர் குடியரசு தலைவர்

பரத் ஜக்தேவ் – கயானா குடியரசு தலைவர்

அனுருத் ஜகநாத் – மொரிஷியஸ் ஜனாதிபதி

தேவன் நாயர் – சிங்கப்பூர் பிரதமராக இருந்தார்

சிவசாகர் ராம் கூலம் – மெரிஸியஸ் பிரதமராக இருந்தார்.

க்ஷிதத் ராமபால் – காமன் வெல்த் பொது செயலாளர்.

மேலே குறிப்பிடப்பட்டவை அனைத்தும் கங்கை ஆற்றில் இரு கைகளால் அள்ளி எடுத்த நீர் போலத்தான். இந்தப் பட்டியலுக்கு முடிவே கிடையாது. ஆங்கில வரலாற்று அறிஞர் ஆர்னால்டு ஜோசப் டாயின்பீ, “வரலாற்றின் மிக அபாயகரமான இந்தத் தருணத்தில் பண்டைய பாரதத்தின் வழி தான் (அசோகர், ராமகிருஷ்ணர், காந்தி) மீட்புக்கான ஒரே மார்க்கம். மோதல் இல்லாமல், ஒரே குடும்பமாக மனித இனம் வளர்வதற்கான மனப்பான்மையும் உணர்வும் இந்த மார்க்கத்தில் தான் இருக்கிறது. அணுகுண்டு யுகத்தில் மனித இனம் தன்னைத் தானே அழித்துக் கொள்ளாமல் இருப்பதற்கு ஒரே வழி இதுதான்.” என்கிறார். உலகத்தில் பல அறிஞர்களின் எதிர் பார்ப்பும் இதுவே.

நமது புனித வேதங்களில் தறப்பட்டுள்ள உலகை மேன்மையடையச் செய்வோம் (க்ருண்வந்தோ விஸ்வம் ஆர்யம்) என்ற கூற்று இப்போது உண்மையாகி வருகிறது. நாம் தன்னம்பிக்கையுடன், தற்பெருமை கொண்டு நமது முன்னோர்கள் காட்டியுள்ள பாதையில் சென்று உலகை மென்மையுறச் செய்வோம் என்ற உறுதி எடுப்போம்.

பாரத் மாதாகீ ஜெய்!

பாரில் உயர்ந்த பாரதம்

“பொன்னும் மணியும் மிகப் பொங்கி நின்ற இந்நாட்டில்
அன்னமின்றி நாளும் அழிவார்கள் எத்தனை பேர்!
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவார் இந்நாட்டினிலே.”

– என்று நமது நாட்டின் இன்றைய பொருள் வறுமை, சிந்தனை வறுமை இரண்டையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிச் சென்றிருக்கிறார் மகாகவி பாரதியார். இன்று நாமும்தான் பார்க்கின்றோம்.

இது வீழ்ச்சிதான். ஆனால் எவ்வளவு உயரத்திலிருந்து வீழ்ந்திருக்கிறோம் என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்த்து புரிந்து கொண்டால் பதைபதைக்கும் நமது உள்ளம். உலகமே வியந்து போற்றி, வணங்கிய அன்றைய பாரதத்தை பல நாட்டு அறிஞர் பெருமக்கள் கண்ட நோக்கில் காணுவோமானால் அதன் உண்மை உறுதிப்படும் நமக்கு.

மேலும் இந்த நாட்டின் படித்த கூட்டத்திற்கும், சிந்தனையாளர் கோஷ்டிக்கும் ஒரு வியாதி உண்டு. எந்த விஷயமானாலும் சரி அயலார், அதுவும் மேற்கத்திய நாட்டினர் சொல்வதுதான் இவர்கள் செவி வழியே சிந்தனையில் புகும். நாடு சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிய பின்பும் இன்றும் இது பொருந்தும். எனவே நமது நாட்டைப் பற்றி உலகின் உயர்ந்த சிந்தனையாளர்கள், வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்துள்ளோம். நமது மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டம், தன்மான உணர்வு எழுப்பவும். நமது முன்னோர்களின் சாதனைகளை அறிந்து கொள்ளவும் உதவும். அவர்களை மிஞ்ச வேண்டும் என்ற வேகமும் எண்ண எழுச்சியும் நம் மனதில் ஏற்பட இச்சிறு நூல் உறுதுணை புரியும் எனக் கருதுகிறோம்.

பாரில் உயர்ந்த பாரதம்

பாரதம் என்றால் ஒளியில், ஞானத்தில் திளைத்தல் என்று பொருள். பெயருக்கேற்ப நம் நாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய சாதனைகள் செய்துள்ளது. வானவியல், கணிதம், வேதியியல், பொறியியல், இசை, விவசாயம், உயிரியல், அணு விஞ்ஞானம், மருத்துவம், கலை போன்ற பல துறைகளையும் நமது முன்னோர்கள் அலசி ஆராய்ந்து அந்தத் துறைகளில் உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர். அவர்கள் வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் தன் நிகரற்று விளங்கினர். சத்தியம், வீரம், அன்பு போன்ற பண்புகளை உயிரினும் மேலாக மதித்துப் போற்றி வந்தனர்.

கல்வி

நமது முன்னோர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். காஞ்சி, நாளந்தா, தட்சசீலம், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் சர்வதேச பல்கலைக் கழகங்கள் இருந்தன. பல்லாயிரம் நூல்கள் கொண்ட நூல்நிலையங்கள் இவ்விடங்களில் அமைந்திருந்தன.

கி.மு.700 இல் உலகின் முதல் பல்கலைக் கழகம் தட்சசீலத்தில் அமைந்திருந்தது. அங்கு ஒரு சமயத்தில் 30, 000 மாணவர்கள் 146 துறைகளில் கல்வி பயின்றனர். 2,000 ஆசிரியர்கள் இருந்தனர். காலை

பக்தியார் கில்ஜியின் படையெடுப்பின் போது அவனது படையினர் நாளந்தா நூலகத்திற்கு வைத்த தீ, பல நாட்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

18 ஆம் நூற்றாண்டில் கூட மேற்கு வங்கத்தில் 80,000 பள்ளிகள் இருந்ததாகவும் 400 பேர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாகவும் தரம்பால் என்ற அறிஞர் ‘Beautiful Tree’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவம்

பாரத நாட்டின் மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறைகள் மிகத் தொன்மையானவை.

இன்று உலக நாடுகள் அனைத்தும் இருகரம் நீட்டி வரவேற்கும் யோகாவும், தியானமும் பாரத ரிஷிகள் உருவாக்கிய அரிய அறிவியல் நுட்பங்கள்.

மனித குலத்தின் முதல் மருத்துவ அறிவியலான ஆயுர்வேதம், ரிக்வேதத்தின் உபவேதம் ஆகும். அதில் உடற்கூறியல், மருந்தியல் பற்றி விளக்கங்கள் உள்ளன.

சரக சம்ஹிதையில் 20,000 மூலிகைகளைப் பற்றிய ஆய்வு அடங்கியுள்ளது.

சுஸ்ருத சம்ஹிதையில் உடற்கூறியல், அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் அதற்கான கருவிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. இதன் ஆசிரியரான சுஸ்ருதர் உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் வல்லுநர்.

ஸ்ரீமதி மெனிங் என்னும் அறிஞர் ஹிந்துக்களின் அறுவை சிகிச்சை கருவிகள், ஒரு மயிரிழையை நெட்டுவாக்கில் வகிர்ந்து தள்ளக்கூடிய அளவு கூர்மை உடையனவாக இருந்தன என குறிப்பிடுகிறார்.

“ஜென்னர் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே அம்மைப்பால் தயாரித்தலும் அம்மை குத்துவதிலும், அம்மை நோய் தடுப்பதிலும் ஹிந்துக்கள் வல்லுநர்களாக விளங்கினர்” என்று 1905 இல் சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆம்பல் பிரபு குறிப்பிட்டுள்ளார்.

பிளேக் நோய் எங்காவது தோன்றினால், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நோய்க் கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி அழித்து நோயைத் தடுக்கும் முறை ஹிந்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதாக கர்னல் கிங் (சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர்) குறிப்பிடுகிறார்.

தமிழ் நூல்களிலும் பல சான்றுகள் உள்ளன. தழும்பின்றி காயங்களை ஆற்றும் சிகிச்சை பற்றி புறநானூறும், கரு அமையும் காலம் பற்றி தொல்காப்பியமும் கூறுகின்றன. ‘தொய்யில் எழுதுதல்’ என்பது திருமுருகாற்றுப்படை கூறும் “அழகியல்” பற்றிய குறிப்பு. “இரும்புச் சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்த்து மருந்து கொள் மரத்தின் வாள்வடுமயங்கி வடுவின்றி தழும்பின்றி வடித்த யாக்கையன்’ என்ற குறிப்பில் அரிய தகவல் பொதிந்துள்ளது.

கணிகம்

பூஜ்யம் (0), எண்ணிலி α π இவற்றின் துல்லியமான மதிப்பை நம் முன்னோர்கள் கண்டுபிடித்திருந்தார்கள்.

1 முதல் 9 வரையிலான எண்கள் அராபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் சொல்வதை நமது தேச பாடநூல்களிலும் அப்படியே கற்பிக்கின்றோம். ஆனால் அராபிய வரலாற்றாசிரியர்களோ இவற்றை ஹிந்துக்கள் தந்த கொடை என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். ‘ஹிந்தஸா’ என்று இவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்.

கணிதத்தை பல வகையாகப் பிரித்துள்ளனர்.

வியக்த கணிதம் – கால்குஸ்
அவ்வியக்த கணிதம் (அல்லது)
பீஜ கணிதம் – அல்ஜீப்ரா
க்ஷேத்ர கணிதம் – திரிகோணமிதி

“லீலாவதி சம்ஹிதை” என்ற நூல் நமது முன்னோரின் கணிதப் புலமையை பறைசாற்றும் நூல்.

நமது முன்னோர்கள் பயன்படுத்திய மிகப் பெரிய எண் 1053. இதை கி.மு. 5000 ஆவது ஆண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய மிகப்பெரிய எண் 106. நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய எண் 1012 தான்.

சமஸ்க்ருதத்திற்கு பாணினி உருவாக்கிய கட்டமைப்பின் காரணமாக அது இன்று கம்ப்யூட்டருக்கு மிகவும் ஏற்ற ஊடகமாக ஏற்கப்படுகிறது.

வானசாஸ்திரம் :

சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை கோள வடிவம் கொண்டவை என்பது வேதகாலத்திலேயே நமது முன்னோர்கள் அறிந்திருந்த உண்மை . உலகம் உருண்டை என்று கோபர்நிகஸ் சொல்வதற்கு 1,600 ஆண்டுகள் முன்பே ஆர்யபட்டர் தனது நூலில் இதை விவரித்திருக்கிறார்.

நமது காலக் கணக்கு மிகவும் தொன்மையானது. பூமி சூரியனை சுற்றும் காலத்தைக் கணக்கிட்டு அதை 12 கோள்களாகப் பிரித்து, ஒரு வருடத்தை 12 மாதங்களாகப் பிரித்தனர். பூமி ஒரு கோளிலிருந்து அடுத்த கோளுக்கு மாறும் நாளே மாதப் பிறப்பு.

பூமி சூரியனை சுற்ற ஆகும் காலத்தை அறிஞர் ஸ்மார்ட் கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாஸ்கராச்சாரியார் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்லிவிட்டார். (365.258756484 நாட்கள்.) மயம்

ஒரு விநாடி நேரத்தை 33.750 பகுதிகளாகப் பிரித்து அதை ‘த்ருதி’ என்ற நுண்ணிய கால அளவை கணக்கிட்டுள்ளார்கள்.

கட்டடக் கலை

இசைபாடும் துண்கள், நிழல்படாத கோபுரம், குறிப்பிட்ட நாளில் மட்டும் சூரியனின் கதிர்கள் தெய்வத்தைத் தொடுமாறு அமைக்கப்பட்ட கோயில்கள், கோயில் உச்சியில் இடிதாங்கி, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை போன்றவை நமது கட்டடக் கலைக்குச் சான்றாக இன்றும் இருக்கின்றன.

மதுரையில் கோயிலை மையமிட்ட நகரமைப்பு; சீரான ஊர் அமைப்பு, நேரான சாலைகள், மூடிய சாக்கடைகள், குளம் என்று சுகாதார முறையில் அமைக்கப்பட்ட நகரங்கள் ஹரப்பா, மொகஞ்சோதரா.

“பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஹிந்துக் கட்டடங்கள் உறுதி குலையாமல் நிற்கின்றன” என்று தார்ன்டன் குறிப்பிடுகிறார்.

விவசாயம் :

5,000 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் வளம் குன்றா நிலங்கள்.

கிராமந்தோறும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மூலம் சிறந்த நீர் நிர்வாகம். குடிமராமத்து என்ற தமிழகப் பாசனநீர் பங்கீட்டு, பாதுகாப்பு முறை தொன்மையானது.

உணவுப் பொருட்களை விற்பனை பொருளாக்காமல் எல்லோருக்கும், ஏன் எல்லா உயிரினங்களுக்கும் கிடைக்கும் வகையிலான விநியோக முறை.

உலகிலேயே பாசனத்திற்காக முதன்முதலில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரத்தில் தான் அணை கட்டப்பட்டது.

பொருளாதாரம்

அதர்வண வேதம், மகாபாரதத்தில் விதுர நீதி, பீஷ்மர் தருமருக்கு அளித்த உபதேசம் (சாந்தி பர்வம்), சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்றவை நமது பண்டைய பொருளாதார நூல்கள். –

இங்கு நாணயங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டது. “கி.மு. 800 -க்கும் முன்பே ஹிந்துக்கள் நாணயங்களைப் பயன்படுத்தி வந்தனர்” என்று பேராசிரியர் பிரன்ஸெப் என்பவர் கூறுகிறார்.

சுக்கிர நீதி – தொழிலாளர் நலன், வருங்கால வைப்புநிதி, காப்பு நிதி போன்ற கருத்துக்களைக் கூறுகிறது.

17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலேயர்கள் வரும்வரை பாரதம் உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது.

வியாபாரம்

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் வாரச்சந்தை முறை, திருவிழாக் காலங்களில் சிறப்பு சந்தை முறைகள் இருந்தது.

அரபு, கிழக்கு நாடுகளுடன் நவரத்தினம், ஏலம், கிராம்பு மற்றும் இரும்பு, எஃகினாலான போர்க்கருவிகள் கப்பல் மூலம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

வாஸ்கோடகாமா தென்னாப்பிரிக்காவின் கடல் ஓரம் நின்றிருந்தார். உப்புக் காற்று திடீரென வாசனைக் காற்றாக மாறியது. எப்படி என கேட்டார். ‘அதோ தெரிகிறதே அந்தக் கப்பல்தான் காரணம். அதில் ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் வருகின்றன’ என்றனர். இந்தக் கப்பல் இவ்வளவு வாசனையா என வியந்து அதனைப் பின்தொடர்ந்து நமது நாட்டிற்கு வந்ததாக தனது டைரிக் குறிப்பில் வாஸ்கோடகாமா எழுதியுள்ளார்.

நெசவு

டாக்கா மஸ்லின், மிகச் சிறந்த பருத்தி ஆடைகள், பட்டு, உயர்தர சால்வைகள், ரத்தினம் பதித்த ஜமுக்காளம் போன்றவை இங்கு தயாராயின.

நெசவுத் தொழில் உன்னத நிலையில் கிராமந்தோறும் லட்சக்கணக்கான குடும்பங்களை வாழவைத்தது.

உலோகவியல்

4,000 ஆண்டுகளுக்கு முன்பே தரமான உருக்கு தயாரானது என்பதற்கு டில்லியில் 10 டன் எடையுள்ள 24 அடி உயரமுள்ள துருப்பிடிக்காத தூண் சாட்சியாக உள்ளது.

2,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன எஃகு உற்பத்திக் கூடம் சென்னிமலை அருகில் கொடுமணல் என்ற ஊரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

1896 வரை உலகத்திலேயே பாரதத்திலிருந்து தான் வைரம் வந்ததாக அமெரிக்க வைர ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறது.

பேராசிரியர் வில்சன், “அண்மைக் காலத்தில்தான் இங்கிலாந்தில் நாம் இரும்பை உருக்கி வார்க்கும் கலையைக் கையாண்டு வருகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இரும்பை உருக்குகிற, இணைக்கின்ற மற்றும் எஃகு இரும்பை உருவாக்கிற கலையை மிகப் பழங்காலம் முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கையாண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.

விமானம், கப்பல் கட்டும் தொழில் நுட்பம்

பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரம் என்ற நூல் 339 வகை கப்பல், 703 வகை விமானம், 101 வகை ஊர்திகள் பற்றி குறிப்பிடுகிறது. அந்நூலில் ஆளின்றி தூரக்கட்டுப்பாட்டில் இயங்குபவை, ஒலியை விட வேகமாகச் செல்பவை, ஒலியால், சூரிய ஒளியால், ரசாயன மின்விசையால் இயங்குபவை என பலவித ஊர்திகள் பற்றி குறிப்பு உள்ளது. ராடருக்கு இணையான கருவி, தீய நச்சுக் கதிர்களிலிருந்து விமானியை காக்கும் ‘பிஞ்டா’ கண்ணாடி, ‘மங்கா’ என்னும் கண்ணுக்குத் தெரியாத கதிர்மூலம் எதிரி விமானத்தை வீழ்த்தும் தொழில் நுட்பம், வெப்பம் உறிஞ்சி, உலோகக் கலவைகளைப் (சோமக, சௌண்டலீகா, மௌர்த்விசா) பயன்படுத்தி செய்த விமானங்கள் போன்றவை பற்றியும் குறிப்புகள் உள்ளன.

டாக்டர் ரோபர்ட்டோ பினோட்டி என்ற விமான சாஸ்திர விஞ்ஞானி, “இந்நூல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இவையெல்லாம் வெறும் கற்பனை என்று என்னால் ஒதுக்க முடியவில்லை ” என்று கூறுகிறார்.

கப்பல் கட்டும் கலை சிந்து நதி பாய்ந்த பகுதியில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறப்பாக இருந்துள்ளது. ‘நவ் கத்’ என்ற சம்ஸ்க்ருத சொல்லிலிருந்தே Navigation என்ற ஆங்கில வார்த்தை பிறந்தது. ‘நேவி’ என்ற வார்த்தை ‘நௌ’ என்ற வார்த்தையிலிருந்து மறுவி வந்ததே. தமிழில் நாவாய் என்று சொல்லப்படுகிறது. ‘நவ்கா’ என்றால் படகு.

போஜராஜனால் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் ‘யுக்தி கல்பதரு’. இந்நூல் ‘சாமன்யா’ எனும் ஆறுகள் கடக்கும் கப்பல், ‘விசேஷா’ எனும் கடல் கடக்கும் கப்பல் என இரு வகைக் கப்பல்கள் பற்றி விளக்குகிறது. தங்கும் வசதிகளையொட்டி சர்வ மந்திரா, மத்திய மந்திரா, அக்ர மந்திரா என்று மேலும் மூன்று வகையாகப் பிரிக்கிறது. ஓர் அஜந்தா ஓவியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கப்பல் பயணம் செய்யும் காட்சி உள்ளது.

சம்ஸ்க்ருத இலக்கண ஆசிரியரான பாணினி (கி.மு. 7 ஆம் நூற்றாண்டு) தமது நூலில் பல படகுகளை உத்சங்க, உடுப, உதுபுத பீடகா என்ற பெயர்களில் குறிப்பிடுகிறார். 8

இங்கிலாந்தில் உள்ள கப்பல் கட்டுவோர் நிறுவனத்தின் உறுப்பினர் திரு. ஜெ.எல். ரெய்டு அவர்கள், “பண்டைய ஹிந்து ஜோதிடக் கலைஞர்கள் ஒருவகையான காந்தங்களைப் பயன்படுத்தி அடிக்கல் நாட்டுவதற்கும், பிற சமயச் சடங்குகள் நடத்துவதற்கும் வடதிசையை நிர்ணயம் செய்வதுண்டு. பண்டைய ஹிந்து திசையறி கருவியில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு இரும்பு மீனைவிட்டு அமைத்தனர். அதனை ‘மச்சயந்திரா’ என்று அழைத்தனர் எனக் கூறியுள்ளார்கள்.

கலைகள்

ஆய கலைகள் 64. அவை வளர அரிய பணி செய்துள்ளனர். மக்கள் மனங்களைப் பண்படுத்தும் கருவியாக கலைகளைப் பயன்படுத்தினர்.

சிற்பக்கலை : வானுயர்ந்த கோபுரங்கள், தஞ்சைப் பெரிய கோயில், மகாபலிபுரம் போன்ற கற்கோயில்கள், எல்லோரா குகைக் கோயில், கஜுராஹோ, ஒரிசாவின் கோனார்க் போன்றவை.

ஓவியக்கலை : அஜந்தா, எலிபண்டா, புதுக்கோட்டை சித்தன்னவாசல் போன்ற குகை ஓவியங்கள், நமது வீட்டு வாசலில் காலையில் தாய்மார்கள் போடும் கோலங்கள். 08

இசைக்கலை : நரம்பு இசைக் கருவிகளான வீணை, யாழ், தம்புரா; தோல் இசைக் கருவிகளான உடுக்கை, மிருதங்கம் போன்றவை.

மனித உடலும் மனமும் ஆன்மாவும் ஒருங்கிணைந்து 7 ஸ்வரங்கள் எழுந்தன. நேரம், மனநிலை ஆகியவற்றிற்கு ஏற்ற பல ராகங்களைத் தொகுத்தனர்.

ஆனந்தம் – ஆனந்த பைரவி

வீரம் – கம்பீர நாட்டை

பக்தி – தன்யாஸி

தாலாட்டு – நீலாம்பரி

அதிகாலையில் – பூபாளம்

மாலையில் – வசந்தா

சோகம் –

நாட்டியக்கலை : நவரச உணர்ச்சிகளை முகபாவத்தில், விரல் முத்திரைகளில் வெளிப்படுத்தும் பரதக்கலை, கதகளி, குச்சுபிடி, ஒடிசிநனய்தல் உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.

வாழ்வியல்

நமது முன்னோர்கள் வாழ்வியலில் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியதுடன் மக்கள் மனங்களுக்கு அணிகலனாகத் திகழும் உயர் பண்புகளையும் கடைப்பிடித்து வாழ்ந்தனர். அன்பு, தியாகம், வீரம், ஒழுக்கம், இயற்கையுடன் இணைந்த ஆரோக்கிய வாழ்வு போன்ற பண்புகளால் உலகிற்கே வழிகாட்டி வாழ்ந்தனர்.

“வீட்டுக்குப் பூட்டுப் போடாத நாடு இது” என்றார் சீனப் பயணி யுவான் சுவாங்.

– “உலகிலேயே மிகவும் நேர்மையானவர்கள் பாரதீயர்கள்” என்கிறது ‘ரீடர்ஸ்’ டைஜஸ்ட்’ பத்திரிகை நடத்திக் கருத்துக் கணிப்பு.

இரண்டாம் நூற்றாண்டில் நமது நாட்டிற்கு பயணியாக வந்த அர்ரியன் என்பவர் ஹிந்துக்கள் பொய் சொல்லுவதில்லை என்றார்.

ஆங்கில நீதிபதி கர்னல் ஸ்லீமன் என்பவர் கூறுகிறார்: “நூற்றுக்கணக்கான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். ஒரு பொய் சொல்லியிருந்தால் தனது சொத்து, சுதந்திரம், உயிர் ஆகிய அனைத்தும் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் இந்தியர்கள் பொய் சொல்ல மறுக்கிறார்கள்.”

13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷம்சுதீன் அப்துல்லா என்ற முஸ்லிம் அறிஞர் கூறுகிறார்: “ஹிந்துக்கள் எண்ணிக்கையில் கடல் மணல் போல் கணக்கற்றவர்கள்; ஏமாற்றும் வேலைகளுக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். எவர்மீதும் அட்டூழியம் நடத்தமாட்டார்கள். வாழ்வில் ஆசையோ, மரணத்தில் அச்சமோ அவர்களைத் தீண்டியதில்லை.”

“பண்பாளர்கள் இருப்பதால்தான் உலகம் அழிந்து போகாமல் இருக்கிறது” என்று திருவள்ளுவ முனிவர் அன்றே கண்டு சொன்னது அகச்சான்று. லியோ டால்ஸ்டாய் திருக்குறளை “ஹிந்து திருக்குறள்” என்கிறார்.

பார் போற்றும் பாரதம்

– “பாரதம் நம் இனத்தின் தாயகம். சம்ஸ்க்ருத மொழி அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய். பாரதம் நம் தத்துவ ஞானத்தின் தாய்; மற்றும் அரேபியர் மூலமாக நாம் பெற்ற கணிதக் கலையின் அன்னை ; புத்தர் மூலமாக அவன் வெளியிட்ட லட்சியங்களை கிறிஸ்தவ சமயம் மேற்கொண்டுள்ளதால் அச்சமயத்திற்கும் அன்னை அவளே; பண்டு தொட்டுப் பழகிவரும் கிராம மரபினால் பாரதம் சுயாட்சி முறைக்கும் ஜனநாயகத்திற்குமே தாய். அன்னை பாரதம், பலவகையில் நம் அனைவருக்கும் தாய் (India, mother of us all.)”

வில் டுரண்ட் (அமெரிக்கா)
‘The Story of Civillisation’ என்ற நூலில்.

“இயற்கை வளங்கள் பலவும் நிறைந்து வலிவும் வனப்பும் ஒருங்கே கூடிய நாடு. சுருங்கக் கூறின் ‘பூலோக சுவர்க்கம்’ என்று அழைக்கக்கூடிய நாடு ஏதேனும் உலகில் உள்ளதோ என்று நான் தேடினால், அதற்கு உலகில் விடையாக பாரதமே என் கண்முன் தோன்றுகிறது.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லர்
‘Sacred Books as the East’ என்ற நூலில்.

“மனிதகுலம், தன் அறிவாற்றலை சிறந்த முறையில் பயன்படுத்தியுள்ள இடம், அதனால் மிகவும் சிக்கலான பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்து ஆராய்ந்து, அவற்றில் ஒரு சிலவற்றிற்குத் தீர்வும் கண்டுபிடித்துள்ள நாடு. பிளாட்டோ, காண்ட் போன்ற அறிஞர்களின் நூலை அறிந்தவர்களும் அக்கறையுடன் அறிந்து கொள்ள வேண்டிய நாடு உலகில் எங்கேனும் உளதோ எனின், பாரத நாட்டையே நான் சுட்டிக் காட்டுவேன்.”

பேராசிரியர் மார்க்ஸ்முல்லர்.

“ஐரோப்பாவில் வாழும் நாம், கிரேக்க, ரோமானிய யூத இனங்களின் சிந்தனையில் ஊறி வளர்ந்த நாம், நம்முடைய அகவாழ்வு இன்னும் பரந்ததாக அமைய, குறுகிய கோட்பாடுகள் இல்லாது விரிந்து வளர, உண்மையிலேயே மானுட வாழ்வு வாழ, இன்று மட்டும் அல்ல, என்றைக்கும் அழிவற்ற வாழ்வு பெற வகை செய்வதற்காக நம் வாழ்க்கைக் குறைகளை நீக்கி நிறை செய்வதற்கு, வழிகாட்டியான ஏதேனும் நாடு உளதா என்று என்னைக் கேட்டால், பாரத நாட்டையே நான் சுட்டிக்காட்டுவேன்.”

பேராசிரியர் மாக்ஸ்முல்லர்

“நெடிதுயர்ந்த இரானியப் பீடபூமியில், செரிந்தியா பாலைவனச் சோலையில், திபெத்தில், மங்கோலியா, மஞ்சூரியாவில், பண்டை நாடுகளாம் சீனாவில், ஜப்பானில், மான், கெமர் என்ற கூட்டத்தினர் வாழும் இந்தோனேஷியாவில் வாழும் மக்களின் வாழ்வில் பாரதம் உயர்ந்த தன் கலாசாரத்தின் பதிவுகளை, அவர்கள் சமயத்துறையில் மட்டிலும் அல்லாமல், கலை இலக்கியத் துறைகளிலும் ஏற்படுத்தியுள்ளது.சுருங்கக் கூறின் ஆத்மீக வெளிப்பாட்டில் எல்லாம் பாரதம் தன் பதிவை ஏற்படுத்தியுள்ளது.”

எம்.ரெனேக் ரௌசட் (பிரெஞ்சு அறிஞர்)

“கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இங்கிலாந்து பகுதியில் வாழ்ந்த மக்கள் தோலுடையணிந்து, உடலில் சாயம்பூசி காடுகளில் திரிந்து கொண்டிருந்த அந்தப் பழைமையான காலத்திலேயே பாரதீயர்கள் தலைசிறந்த நாகரிக வாழ்க்கை நடத்தி வந்தனர்.”

லார்டு மெக்காலே (இங்கிலாந்து)

“1907 ஆம் ஆண்டு போகோஸ்கோல் என்ற இடத்தில் ஒரு கல்வெட்டினை, புதைபொருள் ஆராய்ச்சியாளர் ஹ்யூகோவின்கலர் என்னும் ஜெர்மானியர் கண்டுபிடித்தார். அதில் கி.மு. 1400 இல் மத்திய ஆசியாவில் போரிட்டுக் கொண்ட இரு கூட்டத்தினரிடையே ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

இதில் ஹிட்டைடிஸ் மற்றும் மிதானிஸ் என்ற இரண்டு கூட்டத்தினரும் மித்ரா, இந்திரா, வருணா, அசுவினி போன்ற தேவதைகளைப் போற்றி, இவ்விரு கூட்டத்தின் அரச குடும்பங்களிடையே ஏற்பட்டுள்ள திருமணத்திற்கு ஆசியளிக்க வேண்டுவதாக அக்கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.”

லின்யூடங்
‘பாரதத்தின் ஞானம்’ என்ற நூலில்.

“பாரதத்தில் வற்றாத பெருகி ஓடும் விஞ்ஞான அறிவென்னும் நதியின் ஒரு சிறு காட்சியினையே நாம் அறிந்துள்ளோம்.

உலகம் உய்வதற்கான அறிவு வளர்ச்சி ஞானத்தை அள்ளி வீசுவது பாரதம். புத்த பெருமான் தோன்றுவதற்கு முந்தைய காலத்திலேயே சாங்கிய தத்துவத்தையும் அணுக் கொள்கையையும் உலகிகு அளித்தது பாரதம். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் பாரதத்தின் கணிதக் கலையும், விண்வெளிக் கலையும் ஆர்யபட்டரின் ஆற்றலில் மலர்ச்சி கண்டது. ஏழாம் நூற்றாண்டில் பிரமகுப்தா அரிச்சுவடி கணிதத்தின் ஆழ்ந்த அறிவினால் சிறந்த வான ஆராய்ச்சி சாதனங்களை உருவாக்கினார். பன்னிரெண்டாம் நூற்றாண்டு பாஸ்கராச்சாரியர் மகளின் புகழ்மிக்க கணித ஞானத்தைக் கண்டு உலகமே வியந்தது.”

பேராசிரியர் ஒகஹுரா

”மனித குலம் தோன்றிய நாளிலிருந்து அவனது கற்பனைகள் எல்லாம் நனவாக்கப்பட்ட ஒரு இடம் உள்ளதென்றால் அது பாரத நாடாகும்.”

ரொமென் ரோலண்டு

“பருத்தி பாரத நாட்டுச் செடி. இங்கிருந்துதான் இச்செடியைப் பற்றிய ஞானமும், அதனைப் பயிராக்கும் முறையும் உலகின் பல பாகங்களுக்கும் சென்றன. இச்செடிக்கான பெயர் பாரத நாட்டிலிருந்து கடன் வாங்கி வைத்த பெயர்களேயாகும். சம்ஸ்க்ருதத்தில் பருத்திக்கு ‘கர்பஸா’ என்று பெயர். இது ஹீப்ருவில் ‘கபாஸ்’ என்றும் லத்தீன், கிரேக்க மொழிகளில் ‘கர்பசோஸ்’ அல்லது ‘கர்பாசோஸ்’ என்றும் அழைக்கப் படுகின்றன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்திய மம்மிகளுக்குப் பாரத நாட்டின் பருத்தி ஆடை அணிந்திருந்தனர்.”

சமன்லால்

‘தன் நாட்டிலிருந்து ஒரு படைவீரனைக்கூட அனுப்பாமல் இருபது நூற்றாண்டுகளாக, பாரதம் கலாசாரத் துறையில், சீனாவை வெற்றி கண்டு ஆட்சி நடத்தி வந்துள்ளது. இந்தக் கலாசார வெற்றியைப் பாரதம் என்றும் சீனாவின்மீது திணிக்கவில்லை. இவையனைத்தும், சீனா தானாகவே விரைந்து தேடி, பாரதம் நாடி வந்து, கற்று, ஏற்றுக்கொண்ட அனுபவம் ஆகும்.”

ஹூசி
(அமெரிக்காவில் இருந்த சீன நாட்டுப் பிரதிநிதி)

“இந்தியர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள்தான் எண்ணுவதற்குச் சொல்லிக் கொடுத்தார்கள். இந்த அறிவு இல்லாமல் எந்த விஞ்ஞானக் கண்டுபிடிப்பும் சாத்தியமாகியிருக்காது.”

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

“இந்தியா சமயங்களின் பூமி. மனித இனத்தின் தொட்டில். மனித மொழியின் பிறப்பிடம். வரலாற்றின் அன்னை . புராணங்களின் பாட்டி. மரபுகளின் கொள்ளுப் பாட்டி. வரலாற்றின் மிக மதிப்புவாய்ந்த அம்சங்கள் இந்தியாவில்தான் குவிந்திருக்கின்றன. உலகில் எல்லா மனிதர்களும் காண விரும்பும் இப்பூமியை ஒருமுறை பார்த்தவர்களை இதர உலகின் ஒட்டுமொத்த காட்சிக்கூட கவர முடியாது.”

மார்க் ட்வெய்ன்

இணையற்ற ஹிந்துத்துவம்

ஆர்தர் ஸ்கோபன் ஹீவர் : ”உபநிஷதங்கள் மிகவும் பயனுள்ளவை. மனித சிந்தனையை மேம்படுத்துபவை. உலகம் முழுவதிலும் இதற்கு இணையான நூல் எதுவும் இல்லை .

ஹென்றி டேவிட் தோரோ : “வேதத்திலிருந்து நான் படித்த பகுதிகள், மிகுந்த உயரத்திலிருந்து புனிதமான நதி என்மீது பாய்ந்த அனுபவத்தைத் தருகின்றது.”

கவர்னர் வாரன் ஹேஸ்டிங்ஸ் : “இந்தியாவில் பிரிட்டிஷ் அரசு அஸ்தமித்து வெகுகாலம் கழிந்த பிறகும், வளமையும் அதிகாரமும் தந்த பிற ஆதாரங்கள் மனித இனத்தின் நினைவிலிருந்தே அழிந்த பிறகும் பகவத்கீதை போன்ற எழுத்துக்கள் உயிர் வாழும்.”

ரால்ஃப் வால்டோ எமர்சன் :”எல்லா நாடுகளிலுமே பிரபஞ்சத்தின் அடிப்படை ஒற்றுமை பற்றிய சிந்தனைகள் உள்ளன. பிரார்த்தனையின் பேரின்பமும், பக்திப் பரவசமும் எல்லா உயிர்களையும் ஒரே உயிரோடு சங்கமிக்கச் செய்கிறது. வேதம், கீதை, விஷ்ணு புராணம் போன்ற ஹிந்துக்களின் புனித நூல்களில் இந்த மனநிலை பெரிய அளவில் வெளிப்படுகிறது.

கௌண்ட் ஜான்ஸ்டன் : ‘தி ஆரிஜின் ஆப் ஹிந்துயிஸம்’ என்ற நூலில் “ஹிந்துக்களுடைய சமயம், அவர்களுடைய நாகரிகம் இவற்றின் தொன்மையோடு போட்டி போட உலகில் வேறு ஒரு நாடும் கிடையாது” என்று கூறுகிறார்.

விக்டர் கஸின் : ‘ஹிஸ்டரி ஆப் மாடர்ன் பிலாஸபி’ என்ற நூலில், “பராதத்திலுள்ள அரசியல். தத்துவ நினைவுப் பட்டயங்களை நாம் உன்னிப்பாகக் கற்போமானால், எத்தனையோ உண்மைகள், ஆழ்ந்த உண்மைகள் நமக்குப் புலப்படும். ஐரோப்பிய சிந்தனை, அற்ப சொற்ப அளவிலேயே, முன்னேறச் செயலற்று நிற்கிற கோலத்துக்கு நேர்மாறாக பாரதீய சிந்தனையோட்டம் தருகிற சீர்மிகு காட்சி, நம்மை மண்டியிடச் செய்துவிடுகிறது. மானிட இனத்தின் தொட்டில் எனத் தகும் இந்த தேசமே மிக உன்னத தத்துவத்தின் தாய்நாடாக விளங்குவதையும் காணுகிறோம்” என கூறுகிறார்.

க்ரோஜர் (பிரான்ஸ்) : “தன்னை மானுட இனத்தின் தொட்டில் என்றோ அல்லது குறைந்த பட்சம், மனிதனின் புதுவாழ்வினைப் படிப்படியாக உருவாக்கிய ஆதிகால நாகரிகத்தின் களம் என்றோ உரிமை கொண்டாடிக் கொள்ள இந்த உலகில் நாடேனும் உண்டு என்றால் அது பாரதமேதான்.

லூயி ஜெகாலியட் (பிரான்ஸ்): “புராதன பாரத பூமியே! மானுடத்தின் தொட்டிலே! வெல்க! வெல்க! போற்றற்குரிய ஆற்றல்மிக்க அன்னையே! நூற்றாண்டுகள் பலவாக மிருகத்தனமான படையெடுப்புக்களும் துடைத்தழிக்க முடியாத தீரம் மிக்கவளே! நம்பிக்கை, அன்பு, கவிதை, அறிவியல் அனைத்துக்கும் பிறப்பளித்தவளே! எமது மேனாட்டு எதிர்காலத்தில் நினது மேலான இறந்தகாலம் புத்துயிர் பெற்றுப் பொலிவதாகுக!”

கர்னல் டாட் : “கிரேக்கத் தத்துவங்களுக்கெல்லாம் முன்மாதிரியாய் அமைந்த ஞானம் கொண்டு விளங்கிய இந்த மகான்களை உலகில் வேறெங்குதான் காண முடியும்? பிளேட்டோவும், டெல்ஸும், பிதாகோரஸும் அல்லவா இவரிடம் பாடங் கேட்டிருக்கிறார்கள்! இன்றும் ஐப்ராப்பியர் கண்டு வியக்கும் வகையில் கிரக நிலைகளை அறிந்து வைத்திருந்த வான சாஸ்திரங்களைத்தான் வேறெங்கேனும் காணமுடியுமா? நமது மெச்சுதலுக்குரிய கட்டடக் கலை வல்லுநரும் சிற்பிகளும்தான் இங்கு போல வேறெங்கு காண்போம்? கடுந் துயரிலிருந்து களிப்புக்கும், களிப்பிலிருந்து கடுந்துயருக்கும் மனதை அலைபாயச் செய்யவல்ல இசைவல்லார்தான் இவர்கள் போல வேறு எங்குள்ளனர்?

கௌண்ட் ஜான் ஸ்டன்ஸி : “ கிறிஸ்து பிறப்புக்கு 3000 ஆண்டுகள் முன்னரே ஹிந்துக்கள் வானசாஸ்திரத்திலும் புவியியலிலும் இத்துணை உயரிய அறிவை எய்தியிருக்கிறார்கள் என்றால், அதற்கும் முன் எத்தனை நூற்றாண்டுகளாக அவர்களது கலாசாரம் வளர்ந்து வந்திருக்கும்! ஏனெனில் அறிவியல் பாதையில் மனித மனம் படிப்படியாகத்தான் முன்னேறுகிறது.”

டாக்டர் அலெக்ஸாண்டர் : “ஐரோப்பிய தத்துவ முறைகள் அனைத்தின் வடிவங்களும் தன்னுள் பொதியப் பெற்று விளங்கும் அளவு ஹிந்து தத்துவ முறை விரிவானது. வியாபகமுள்ளது.”

கீதை பற்றி : ஒரு மகத்தான நாளில் பகவத்கீதையை நான் படித்தேன். எல்லா நூல்களையும்விட தலை சிறந்த நூல் அது. ஒரு பேரரசன் நம்மிடம் பேசுவது போல் உள்ளது. அருகதையற்ற எந்த விஷயத்தைப் பற்றியும் அது பேசவில்லை . மாறாக சாந்தமான, சீரான குரலில் வேறொரு யுகத்தின், வேறொரு சூழலின் ஞானத்தை வழங்குகிறது. இன்றும் நம்முன் இருக்கும் பல கேள்விகளுக்கு அந்தக் குரல் விடை அளிக்கிறது.

டாக்டர் அன்னி பெசன்ட் : “உலகின் மகத்தான மதங்களை எல்லாம் நாற்பது ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த பிறகு சொல்கிறேன். ஹிந்துயிசத்தைக் காட்டிலும் முழுமையான, விஞ்ஞானப் பூர்வமான, தத்துவார்த்தமான, ஆன்மீகமான ஒரு மதம் வேறெதுவும் இல்லை. ஹிந்துயிசம் இல்லாமல் இந்தியாவில் எதிர்காலம் கிடையாது என்பதில் சந்தேகமில்லை. ஹிந்துயிசம் என்ற மண்ணில் இந்தியாவின் வேர்கள் ஆழமாகப் புதைந்திருக்கின்றன. அந்த வேர்கள் துண்டிக்கப்பட்டால் இந்தியா என்ற மரம் உதிர்ந்து, உயிரிழந்து போகும். ஹிந்துக்கள் ஹிந்துயிசத்தைக் காப்பாற்றாவிட்டால் வேறு யார் அதைக் காப்பாற்றுவார்கள்? இந்தியாவின் புதல்வர்கள் தனது தாயின் நம்பிக்கையைக் கைவிட்டால் வேறு யார் அதைப் பாதுகாப்பார்கள்? இந்தியா மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றும். இந்தியாவும் ஹிந்துயிசமும் வேறல்ல.”

அல்டஸ் ஹக்ஸ்லி : “உலக தத்துவங்களிலேயே கீதைதான் மிகத் தெளிவானதும், விரிவானதுமான தத்துவம். எனவே, அதில் நீடித்து நிற்கும் மதிப்பு ஹிந்துக்களுக்கு மட்டுமின்றி மனித இனம் முழுமைக்கும் பயன்படும்.”

வில்ஹம் வான் ஹம்போல்ட் : “பகவத் கீதை உலக மொழிகளில் மிக அழகான நூல். ஒருவேளை இதுதான் உலகிலுள்ள உண்மையான ஒரே தத்துவப் பாடலாகவும் இருக்கலாம். உலகின் மிக ஆழமான, கனமான நூலாகவும் இருக்கலாம்.”

பேராசிரியர் ப்ரெயின்டேவிட் ஜோசப்சன் (மிக இளம் வயதில் நோபல் பரிசு பெற்றவர்) :

“வேதாந்தமும் சாங்கிய தத்துவமும் மனம் மற்றும் சிந்தனை செயல்படும் முறையின் அடிப்படை விதிகளை விளக்குகின்றன. இந்த விதிகள் குவாண்டம் துறையோடு (அணு மற்றும் மூலக்கூறுகள் துகள்களின் செயல்பாடு மற்றும் இடமாற்றம் குறித்த துறை) தொடர்பு கொண்டவை.”

என்.ஏ. பால்கிவாலா: பிரம்மம் பற்றி நமது முன்னோர்கள் சொன்னதும் ஜடப்பொருள்களின் புதிரான தன்மை பற்றி இன்றைய மகத்தான விஞ்ஞானிகள் சொல்வதும் ஒத்துப்போகின்றன. விஞ்ஞானம் முன்னேற, முன்னேற அது வேதாந்தத்திற்கு அருகில் செல்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான பாரம்பரியம் நமக்கு இருக்கிறது. ஆயினும், நாம் அதைப் பார்க்காமல் அற்ப விஷயங்ககளில் கவனம் செலுத்துகிறோம்.”

யெஹுதி மெனுஹின் (உலகப் புகழ்பெற்ற வயலின் கலைஞர்) : “சராசரி மேற்கிந்தியரைவிட ஒரு ஹிந்து நூறு மடங்கு பண்பட்டவன், நேர்மையானவன், சமய உணர்வுள்ளவன். நிதானமான கண்ணோட்டம் கொண்டவன்.”

சுவாமி விவேகானந்தர் : “ஹிந்துயிசத்தில்தான் இந்தியாவின் ஜீவன் அடங்கியிருக்கிறது. தனது முன்னேற்றங்களிலிருந்து பெற்ற பாரம்பரிய செல்வத்தை ஹிந்துக்கள் மறக்காதிருக்கும் வரை உலகில் எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது.”

காந்திஜி : “இடையறாமல் சத்தியத்தைத் தேடுவதுதான் ஹிந்துயிசம். இன்று நாம் சோர்ந்திருப்பதால் ஹிந்துயிசமும் தேங்கியிருக்கிறது. இந்தச் சோர்வு நம்மிடமிருந்து அகன்றால் ஹிந்துயிசம் இதுவரை இல்லாத அபாரமான திறமையுடன் பிரகாசமாக வெடித்துக் கிளம்பி முன்னோக்கிப் பாயும்.

ஜான் ஸ்டர்ஸன் : “தி விஸ்டம் ஆப் தி ஏன்ஷியண்ட் இண்டியா’ என்ற நூலில், “ஆத்மாவின் அமரத்தன்மை மற்றும் உடலை நீத்தபின் அதன் இருப்பு ஆகியவை ஹிந்துக்களின் புனித கிரந்தங்களில் துல்லியமாக வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும். அவை வெறும் தத்துவக் கோட்பாடுகளாக அல்லாமல் சமயச் சட்டங்களாகவே கொள்ளப்பட்டன. ஆத்மாவின் அமரத்தன்மை என்பது பிரச்சினைகள் மிகுந்த சிக்கலான விஷயம் என்று கருதிய கிரேக்க, ரேமானிய தத்துவ ஞானிகளைவிட ஹிந்துக்கள் எவ்வளவோ முன்னேறியிருந்தார்கள்.”

கால் ப்ரூக் : ” தத்துவத் துறையில் ஹிந்து போதிப்பவனாக விளங்குபவனாக விளங்குகிறான்; கற்றுக் கொள்ள வேண்டியவனாக அல்ல.”

அன்னை பூமி பாரதம் – 2

அன்னை பூமி பாரதம்

உலகில் பரிணாம வளர்ச்சியை உற்று நோக்கும் பொது மனித சமுதாயத்தில்  மட்டுமே உறவுகளும் அதற்கு ஆதாரமான உணர்வுகளும் ஆழமாக வேரூன்றியுள்ளன.மற்ற உயிர்களிடத்து இத்தகைய உணர்வுகள் வளர வாய்ப்பில்லை.

பறவை உலகம் – தாய் செய் உறவு:

பறவை ஒன்று முடடையிட்டுக் குஞ்சு பொரிக்கிறது; பின்னர் அக்குஞ்சுப்பறவை தாய்ப்பறவையினிடத்து பாசம் வைத்திருப்பது அத்தாய்ப்பறவை இறை தேடித் தரும் வரைதான்; அதுபோலவே தாய்ப் பறவைக்கும் தனது குஞ்சு என்ற உறவு, அக்குஞ்சுப் பறவை சிறகு முளைத்து, சிறகடித்துப் பறந்து சென்று இதை தேடும் வரைதான். அக்குறிப்பிடட பருவத்திற்குப் பின்னர் தாய் – குஞ்சு என்ற உறவுமுறை பறவை உலகத்தில் இல்லை.

விலங்கு உலகம் – தாய் சேய் உறவு:

நாய்,பூனை,ஆடு,மாடு போன்ற விலங்குகள் தங்கள் குட்டிகள் தங்களிடத்தில் பால் குடிக்கும் பருவம்வரை பாசவுணர்வு கொண்டுள்ளன. தாய்ப் பசு தன கன்று என்ற அடையாளம் கண்டு கொள்வதும் – அது தன்னிடத்தில் பால் குடிக்கும் வரைதான். அது போல கன்றிற்கும் தனது தாய் என்ற உணர்வு அப்பசுவினத்தில் பால் குடிக்கும் வரைதான் உள்ளது. பல் குடிக்கும் பருவத்திற்கு மேலே இவ்வுறவுகள் அர்த்தமற்றவையாகி விடுகின்றன.

இந்த தாய் – சேய் உறவு முறை ஒன்றைத் தவிர வேறு உறவு முறைகள் பறவை உலகிற்கும், விலங்கு உலகிற்கும் இல்லை.

தாய்யில்லாமல் நானில்லை:

பறவை, விலங்கினத்தை விட மனிதப் பிறவியை எல்லோரும் உயர்ந்த பிறவியாகக் கருதுகின்றனர். சான்றோர்கள் பெறுதற்கரிய பிறவியாகவே மனிதப் பிறவியைச் சொல்லுகின்றனர்.

‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’  என்பது ஒவ்வையார் வாக்கு.

ஆறறிவு பெற்ற மனித இனம் தயனிடத்து பால் குடிப்பதை நிருத்திப் பல ஆண்டுகளுக்குப் பின்னாலும் ‘தாய்’  என்கின்ற ஆழமான உணர்வு போவதில்லை.

அதற்கு மிக முக்கியமான காரணம் உண்டு.

மனித இனத்தில் மட்டும் பறவையினத்தைப் போல, விலங்கினத்தைப் போல குழந்தை பிறந்த சில தினங்கள் அல்லது மாதங்களுக்குள்ளாகவே சுதந்திரமாக வாழ முடிவதில்லை.

main-qimg-c6f298fad6724647b20ba7ed9c211a58-cகுழந்தை பிறந்து அதை பாராட்டிச் சித்திரட்டி வளர்த்து, பின் அது  கவிழ்ந்து, தவழ்ந்து,அமர்ந்து,தளிர் நடைபயில்வதற்கு பல மாதங்கள் ஆகின்றன;பின்னர் நடந்து தானே உணவு உண்டு, மொழி பயின்று பேசி வாழ்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகின்றன. அதுவரை, நம்மை நம் தாயும் தந்தையும் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். குறிப்புபாகத் தன்னை வருத்திக் கொண்டு குழந்தையை வாழ வைக்கும் தாயின் சேவைக்கு ஈரேழு உலகத்தில்  எதைக் கொடுத்தாலும் ஈடாகாது. அதனால்தான் வேதம் முதலில் ‘மாத்ரு தேவோ பவ’ என்று மொழிகின்றது. தமிழ் வேதமும் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்று இயம்புகின்றது.

மனித சமுதாயம் முழுவதிலும் தன்னை ஈன்றெடுத்த தாயை மதிக்கின்ற மனோபாவம் இயல்பானதாக அமைந்துள்ளது. இந்த மனோபாவம் தான் பார்க்கின்ற அனைத்தையும் தாயாகக் காணும்படி நம்மைச் செய்கின்றது.

பாரத நாட்டில் மட்டும்தான் தன்னை ஈன்றெடுத்த பெண்ணை மட்டும் தாயகப் பார்க்காமல் உலகிலுள்ள மற்ற பெண்களையும் தாயகப் பார்க்கும் கண்ணோட்டம் இயல்பாக இருக்கிறது.

இதனாலேயே தான் நம் பண்பாடு மற்ற எல்லாப் பண்பாடுகளையும் விட உயர்வானதாகக் கருதப்படுகிறது.

தாய்ப்பாலில்லாத போது தாய்ப்பாலுக்கு நிகரான தன் பாலக் கொடுத்து வளர்க்கும் பசுத்தாய் ஹிந்துக்களால் புனிதமாகப் போற்றி வணங்கப்படுகிறது. அதனால்தான் மஹாத்மா காந்தியடிகள் பசுவதை தடைச் சட்டம்   கொண்டுவர வேண்டும் என்றார்.

போலிப் பகுத்தறிவினால் பார்த்தால் நதியைத் தாயாகப் பார்ப்பது பைத்தியக்காரச் செயலாகத் தோன்றும்; அண்ணல்  உணர்வு பூர்வமாகப் பகுத்தறிவினால் பார்த்தால் நதி தாயாகிறது.இந்த ஹிந்து உணர்வு நாடெங்கும் விரவி நிற்கிறது. அதனால்தான் தமிழகத்தில் உள்ள நாத்திகள் கூட்டமும் கூட ‘காவிரித் தாய்’ என்று நதியைப் புகழ்வதை பார்க்கிறோம். ஒருபடி மேலே போய் காவிரித் தாய்க்குச் சிலை செடுப்பதையும் பார்க்க முடிகிறது.

விஞ்ஞான ரீதியாக   மட்டுமே சிந்தித்துச் செயல்படும் உலகில் எந்த விதமான உறவு முறைகளுக்கும் இடமிருக்க முடியாது. ஆன்மிக உணர்வுகள் நம் ரத்தத்தோடு கலந்து போய்விட்டதால்தான் தமிழகத்தின் போலிப் பகுத்தறிவு வாதிகள் தமிழ்த்தாய் என்று காவிரித்தாய் என்றும் மொழியையும் நதியையும் தாயாக உருவகப்படுத்தி அழைத்தனர். தமிழ்த்தாய்க்கும் சிலை அமைக்கின்றர். பாஷா ரூபிணி, வாக்தேவி என்று அம்பாளைப் போற்றுகின்ற தன்மைதான் மொழியைத் தாயகப் பார்க்க வைத்தது.

ஆன்மிக உணர்வுகள் இல்லாத வேறு எந்த நாட்டவரும் தங்கள் மொழியையும் நதிகளையும் தயாகப் பார்ப்பதில்லை.

அதர்வ வேதத்தில் ……

வெறும் பூப்பிரதேசமாக, நிலமாகப் பார்க்காமல் பூமித்தாயாக (பூமாதேவி) பார்க்கும் மொனோபாவம் தொன்றுதொட்டு ஹிந்துக்களாகிய நம்மிடம் இருந்து வந்துள்ளது.

“பூமித்தாயே! உன்னை அகழ்ந்து உழும்போது ஏற்படும் பள்ளங்கள் யாவும் உடனடியாக நிரைமேடு களாகட்டும்.

உன் உதிரத்து உதித்த நான் உனக்கு எவ்வித உறும் செய்யாமல் இருப்பேனாக. உன் உள்ளத்தில் வேதனையை ஏற்படுத்தாமல் நான் வாழ்வேனாக.

இந்திர தேவன் இந்த பூமியை எதிரிகளிடமிருந்து காத்து வருகிறான். பூமித்தாயே! எங்களை வாழ்விக்கும் வளத்தத்தினை எங்களுக்கு அருள்வாயாக! உன் மடியில் பாலும் தேனும் பெருக்கெடுத்து ஒடட்டும்.”

எனவே தான் எல்லாவற்றையும் தாயாகக் காண்கின்ற மனோபாவத்தை நம் ஹிந்து தர்மம் கற்று கொடுக்கிறது.

(ஆர்.பி.வி.எஸ். மணியன் அவர்கள் எழுதிய ‘புண்ணிய பூமி பாரதம்’ என்னும் நூலிலிருந்து பெரும்பாலான கருத்துக்கள் இங்கு எடுத்தாள பட்டுள்ளன.)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 26

கோட்சே செய்தது தவறு என்பதை இறைவன்தான் தீர்மானிக்கவேண்டும்.  காந்தியை கொன்றுவிட்டு கோட்சே ஒரு முறை இறந்தார்.  சம்பந்தமில்லாத RSS இன்று வரை பழி சுமக்கிறது.  முன்பே RSSஐ காங்கிரசுடன் இணைக்க சொன்னார் நேரு.  மறுத்தது சங்கம்.  நாளை இது பெரும் சவாலாக தனக்கு அமையும் என்று கருதிய நேரு எந்த விதமான ஆதாரமும் இல்லாமலே, இது சரியான சந்தர்ப்பம் என கருதி RSS தலைவர் குருஜியை கைது செய்து 6 மாதம் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யாமல் சிறைவைத்தார்.  சென்னை பிரபல வக்கீல் TVR சாஸ்திரி வக்காலத்து வாங்கி பேச, பட்டேலும் மும்பை ராஜதானி சட்டசபையில் RSSக்கும் காந்தி கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று பேச கொள்கைகளை விளக்கு எழுதி தரசொல்லி குருஜியை விடுதலை செய்தார்.  RSS மீதிருந்த தடை நீங்கியது.  ஆனால் அதற்குள் மக்களில் பலர் அவசரப்பட்டு நூற்றுக்கணக்கான ஸ்வயம்சேவகர்களை கொன்றார்கள்.

பல நாட்கள் கழித்து பிரிடிஷ் பிரதமந்திரி அட்லி ஒரு பேட்டியில் எங்களுக்கு காந்தியால் பிரச்சனையே இல்லை.  அவருடைய அஹிம்சா போராட்டம் எங்களை தொந்திரவு செய்யவே இல்லை என்றார்.  நிர்வாகத்திற்கு இடைஞ்சலாக இருந்ததா என்ற கேள்விக்கு MI – NI – MAL என்று இடைவெளிவிட்டு சொன்னார்.

Partition_of_India-en.svg_-1

ஆகஸ்ட் மாதம் 14 தேதி பாகிஸ்தானுக்கும் 15 ஆம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் பிறந்தன.

மக்களில் பலர் நாடு ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.  தீவிரவாதம் தோன்றியிருக்காது என்று எண்ணுகின்றனர்.  அது அவரவர் கருத்து.  மாப்ளா கலவரம், கல்கத்தா, நவகாளி, சிந்து பகுதியில் கொலைகள் நடந்த போது யாருமே தீவிரவாதிகள் கிடையாது.  உலக வரலாற்றிலேயே இப்படி நடந்ததில்லை.  இதற்கு முன்புவரை எத்தனையோ இனப்படுகொலைகள் நடந்திருக்கலாம்.  ஆனால் அவை அனைத்தும் அரசாங்கமோ , ஒரு கூட்டமோ செய்தது.  ஆனால் இதில்தான் மக்களே நேரடியாக பங்குகொண்டு கொன்றுகுவித்தனர்.  கொள்ளை அடித்தனர்.  கற்பழித்தனர்.  ஹிந்துக்களும் முஸ்லிம்களும் நிம்மதியாக வாழ ஒரே வழி ஒன்று நாட்டின் நாடி படித்து ஒத்து போய் ஒன்றாக வாழ்வது இல்லையேல் நிம்மதியாக பிரிந்து போய்விடுவது.  அகண்ட பாரதம் அமையுமா தெரியாது.  அப்படி அமைந்தால் முஸ்லிம்களை திரும்ப ஹிந்துக்களாக மாற்றிய பின்னரே சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற முடிவோடுதான் இருக்கவேண்டும்.  இல்லையேல் அவர்கள் தனியாகவே இருக்கட்டும்.  நெருப்பு, பகை, கடன் இது மூன்றையும் கொஞ்சம் போல விட்டு வைக்கவே கூடாது.  அதுவே வளர்ந்து பெரும் ராட்சசனாகி நம்மை கொன்றுவிடும்.

பாகிஸ்தான் என்று ஒரு தேசம் வேண்டுமா என்ற தேர்தலில் பல்வேறு மாநிலத்தில் உள்ள முஸ்லிம்கள் வேண்டும் என்று வாக்களித்தார்கள்.  சிந்த் பிரதேசத்தில், அதாவது பாகிஸ்தான், வட மேற்கு பகுதிகளில் உள்ளவர்கள் வேண்டாம் என்று வாக்களித்தார்கள்.  ஆனாலும், அந்த பகுதி பிரித்து பாகிஸ்தான் என்று அவர்களுக்கு தரப்பட்டது.  ஏன் அந்த பகுதி?  ஏன் அஸ்ஸாம் தரப்படவில்லை?  ஏன் கொல்கத்தா, வங்காளதேசம் முழுவதுமாக தரப்படவில்லை?  ஏனென்றால் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ரஷியா தலை தூக்கும் என்ற எண்ணம் பிரிட்டிஷாருக்கு இருந்தது.  அதனால் அவர்கள் இந்தியாவோடு ரஷிய கை கோர்த்தால் இந்திய கடற்பரதேசங்களில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளது என்று இப்போதைய  பாகிஸ்தானை பிரித்தார்கள்.  இரண்டு பக்கமும் நிம்மதி இல்லாமல் இருந்தால் இந்த நாடு தன்னை பாதுகாத்துக்கொள்ளவே திண்டாடும் என்று கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் என்று பிரித்தார்கள்.

பாகிஸ்தான் ஒரு புற்று நோய். வெட்டி போட்டாகிவிட்டது.  அது ஒரு இறையருள்தான்.  நமக்கு நம் வரலாறு தெரியவில்லை.  இதுதான் சாபம்,  பாகிஸ்தானை உயிரோடு வைத்திருக்க எது வேண்டும் என்று அவனுக்கு தெரிந்திருக்கிறது.  இந்திய மீது பகை.  பாட திட்டத்திலிருந்து தொலைகாட்சி செய்திகள் வரை இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கும் ஆண்களுக்கும் பாதுகாப்பில்லை என்றே சிறு வயது முதலே சொல்லி சொல்லி வளர்க்கிறான்.  UNO கூட்டத்தில் ஜூல்பிகர் அலி புட்டோ  நம்மை நாய்கள் என்று திட்டினான்.  பெனாசிர் புட்டோ பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் வந்து கொடியேற்றி நம்மை நாய்கள் என்று திட்டினாள்.  நமது பலம் நமக்கு தெரியவேண்டும்.  இயல்பாக நரசிம்ஹ ராவ்.ஒரு சுதந்திர தின சொற்பொழிவில் காஷ்மீரை பற்றி பேசுகிறார்.  காஷ்மீர் பற்றி இனி பேசுவதென்றால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மட்டும்தான் என்றார்.  இது பெரும் அச்சத்தை உண்டு பண்ணியது பாகிஸ்தானில்.  இது ஒரு போர் மிரட்டல் என்றனர்.  ஓய்வு பெற்ற பாகிஸ்தான் ராணுவ சொன்னார் என்னுடைய இந்தியாவுடனான மூன்று போர் அனுபவத்தில் சொல்கிறேன்.  பாரதம் என்றுமே பாகிஸ்தானுடன் போர் தொடுக்காது.  ஆனால் பாகிஸ்தான் போர் தொடுக்கும்.  இன்னொரு போர் நடந்தால் பாகிஸ்தான் உலக வரைபடத்திலிருந்து துடைத்து எறியப்படும் என்று.

Partition-of-India-Pakistan

உதவியே செய்தாலும் முஸ்லிம்கள் தங்கள் குணத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்பதை பங்களாதேஷ் மூலமாக நிரூபிக்கிறார்கள் இன்றுவரை.  தீர்ந்த பிரச்சனை என்று எதுவுமே வரலாற்றில் இல்லை.  முதுகெலும்புள்ள அரசு அமைந்தால், காலமும் நேரமும் கூடி வந்தால் நம்மால் நிச்சயம் இந்த இரு பகுதிகளையும் நம்மோடு இணைக்க முடியும்.  அது நடக்கும் ஒரு நாள்.

நமக்கு நாமே சொல்லிகொள்வோம்.  நமது முன்னோர்கள் நமக்காக செய்த தியாகமும் பட்ட வலியும் கொஞ்சநஞ்சமல்ல.  நமது தேசத்தையும் தேசீயத்தையும் பாதுகாக்க பாடுபடுவோம்.  நாட்டை ஒருங்கிணைப்போம்.  அவர்கள் சிந்திய இரத்தத்தை உழைப்பால் துடைப்போம்.

முற்றும் என்ற சொல்லுக்கு இரண்டு பொருள் உண்டு.  ஆகவே இனி ஒரு முறை இந்த தேசம் பிரிய கூடாது என்பதால் தேச பிரிவினையின் சோக வரலாற்றை இத்தோடு முடிந்தது என்று சொல்லி முடிக்கிறேன்.

வாழ்க பாரதம். 

வந்தே மாதரம். 

பாரத் மாதா கி ஜெய்.

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

காற்றை சுவாசிக்கும் கல் கருடன்

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன்

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்” என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா” என்றார் தேவசேனாபதி.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா” என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?” என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு” என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா… ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறாய்?” என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?” மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்” என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்.”

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்” என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?” என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்” என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்” என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே #நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் #திருநறையூரில் நிற்கிறது.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..

தேசபிரிவினையின் சோக வரலாறு – 25

நீதிமன்றத்தில் கோட்சேயின் வாதம்!!!

3111

காந்தி தன செயல்களுக்கு காரணம் வைத்திருந்தது போல கோட்சேவும் வைத்திருந்தார். அவை:
காந்தியின் அஹிம்சா கொள்கையை நான் மறுதலிக்கவில்லை. அவர் ஒரு மகானாக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு அரசியல்வாதியே அல்ல. அவருடைய அஹிம்சை கொள்கை தற்காப்பையும் சுய முன்னேற்றத்தையும் கூட தடுக்கிறது. மனிதன் வாழ தேவையான போராட்டத்தை கூட வன்முறை என்று கூட தடுத்தல் அழிவு பாதையே தவிர அஹிம்சா பதை அல்ல. தேச பிரிவினை தேவையற்றது. முஸ்லிம்களின் மக்கள் தொகை, தேசத்தோடு ஒப்பிடும்போது எவ்வளவு பேர் முஸ்லிம்கள் இருக்கிறார்கள்?
தனி தேசம் உருவாகியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. இப்படி ஒரு கட்டாயம் இருந்திருந்தால் மவுலானா அசாத் இந்தியாவில் இருந்திருக்க மாட்டார். ஜின்னா பிடிவாதம் செய்தார். காந்தி அவர் பக்கம் சாய்ந்தார். தேசமே எதிர்த்த போதும், அரசாங்கம் எதிர்த்த போதும், காந்தியால் இது நிகழ்ந்தது. ஒரு தேசத்தை விட ஒரு தனிப்பட்ட மனிதன் என்றுமே உயர்ந்தவனாக ஆக முடியாது.
ஒரு மக்களாட்சியில் உங்களுடைய தேவைகளை கத்தி முனையில் நிறைவேற்ற முயற்சிக்கவே கூடாது. ஜின்னா அதை செய்தார். காந்தி அந்த கத்தியாலேயே தேசத்தின் முதுகில், மக்கள் முதுகில் குத்தினார். நாட்டை துண்டாக்கி ஒரு துண்டை பாகிஸ்தானுக்கு கொடுத்தார். நாங்கள் அன்று போராடினோம். அனைத்தும் வீணானது. நமது நாட்டின் தேசத்தந்தை பக்கத்து நாட்டுக்கு தந்தையின் கடமைகளை செய்தார்! காந்தியை மந்திரி சபையை தன்னுடைய “சாகும்வரை உண்ணாவிரதத்தால்” மிரட்டி பணிய வைத்தார். அவருடைய உடல், மிரட்டல்கள் அனைத்தும் நாட்டின் பூகோளத்திற்கும், பொருளாதாரத்திற்கும் தீமையை விளைவிக்கின்றன. இன்று முஸ்லிம்கள் நாட்டின் பகுதியை துண்டாடினார்கள். நாளை சீக்கியர்கள் பஞ்சாப் கேட்கலாம். மதங்கள் ஜாதிகளாக பிரிகின்றன. ஒவ்வொரு ஜாதியும், இனமும் நாடு கேட்கும். இப்படியே போனால் ஒரு நாடு ஒரு மக்கள் என்றெல்லாம் சொன்னது எதற்காக? எதற்காக பிரிட்டிஷாரை சேர்ந்து எதிர்த்தோம்? ஏன் பிரிந்து எதிர்க்கவில்லை? பகத் சிங் என்ன சுதந்திர பஞ்சாப் கேட்டானா இல்லை சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர வங்காளம் கேட்டாரா?

நான் இவரை கொல்ல போகிறேன். ஏனென்றால் இது என் கடமை. திருட்டுத்தனமாக கொன்றால் என் கண் முன்னேயே இது ஒரு குற்றமாகிவிடும். கொன்றுவிட்டு தப்பிக்கமாட்டேன். சரணடைவேன், தூக்கிலிடப்படுவென். ஒரு கொலை ஒரு தூக்கு. ஒரு கொலைக்கு இரு தூக்கு தண்டனை கூடாதென்று உங்களை தவிர்க்கிறேன். உதவிக்கு யாரும் வேண்டாம், கூட்டாளிகள் வேண்டாம். (இது நானா ஆப்தே மற்றும் வீர சாவர்க்கருக்காக சொல்லப்பட்டது. ஏனென்றால் அவர்களும் காந்திய கொள்கைகளுக்கு எதிரானவர்கள். கோட்சே காந்தியை யார் துணையும் இன்றி தானே கொல்லவேண்டும் என்று நினைத்தார். கடைசீவரை வீர சாவர்கருடன் இணைந்து பாரத நாட்டை பலமான சுதந்திர நாடாக ஆக்க பாடுபடுவேன் என்று நானா ஆப்தேயிடமிருந்து சத்தியம் வாங்கிகொண்டார். )

ஜனவரி மாதம் 30 தேதி, 12 மணிக்கு பிர்லா பவனை அடைந்தேன். காந்தி வெளியே ஒரு கட்டிலில் அமர்ந்து வெயிலை அனுபவித்துகொண்டிருந்தார். வல்லபாய் பட்டேலின் பேத்தி அவர் காலடியில் அமர்ந்து கொண்டிருந்தார். என் கையில் துப்பாக்கி இருந்தது. மிக சுலபமாக அவரை அங்கேயே கொன்றிருக்க முடியும். ஆனால் அவரை அங்கே கொல்லகூடாது என்று முடிவெடுத்தேன். அவர் கொல்லப்படபொவதில்லை தண்டிக்கப்படவிருக்கிறார் அவர் செய்த தவறுகளுக்காக. நான் அவரை கொல்லும்போது எனக்கு சாட்சிகள் வேண்டும். அங்கே யாரும் இல்லை. நான் தப்பிக்க விரும்பவில்லை. என் மனதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. கொன்றபின் சரணடைய வேண்டும். ஆனால் யாரிடம் போய் சரணடைவது. பஜனை நேரம் சாயங்காலம்தான். அப்போது நல்ல கூட்டம் இருக்கும். அன்றைய சாயந்திரம் சரியான நேரமாக இருக்கும் என்று முடிவெடுத்தேன்.

காந்தி படியேறினார். இரண்டு அடி முன்னால் வந்தார். தனது இரண்டு கைகளையும் இரண்டு பெண்களின் தோள்கள் மீது வைத்திருந்தார். இன்னும் எனக்கு மூன்றே நொடிகள்தான் தேவை. நானும் இரண்டு அடி முன்னால் வைத்தேன். காந்தியை நேருக்கு நேராய் பார்த்தேன். அவர் இதுவரை செய்த தியாகங்களுக்கும் சேவைகளுக்கும் அவரை ஒரு முறை வணங்கவேண்டும் என்று நினைத்தேன். அந்த இரண்டு பெண்களில் ஒருத்தி காந்திக்கு மிக ஆபத்தான அளவில் அருகில் இருந்தால். சுடும்போது அவள் மேல் படலாம் என்று பயந்தேன். முன்ஜாக்கிரதையாக இன்னும் ஒரு அடி முன்னால் சென்றேன். மரியாதையாக குனிந்து வணங்கினேன். மென்மையாக அந்த பெண்ணை தள்ளிவிட்டேன். அடுத்த நொடி காந்தியை சுட்டேன். அவர் மிகவும் க்ஷீணமாக இருந்தார். வெறுமனே ஒரு ஆஆஆ என்ற சத்தம் கேட்டது. கீழே விழுந்தார். ( காந்தி, ஹே ராம் என்று சொல்லி மடியவில்லை என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. எல்லோரும் சேர்ந்து கட்டிய கதை அது என்கிறார்கள் பலர். MAY IT PLEASE YOUR HONOR என்றொரு புத்தகத்தில் மிக விரிவாக தன்னுடைய வாதத்தை முன்வைத்துள்ளார். அந்த புத்தகமே அவர் வாதத்தின் தொகுப்புதான். அற்புதமாக இருக்கும் அது. அவ்வளவு எளிதில் கிடைக்காது. முடிந்தால் வாங்கி படியுங்கள். )
சுட்ட பின் துப்பாக்கி இருக்கும் கையை தூக்கி போலிஸ் போலிஸ் என்று கத்தினேன். சுமார் 30 நொடிகளுக்கு யாரும் அருகில் வரவில்லை. ஒரு போலிஸ் அதிகாரியை பார்த்து நானே அருகில் வரசொல்லி சைகை செய்தேன். என் கையை பிடித்தார். இரண்டாமவர் வந்து துப்பாக்கியை வாங்கினார். கை நழுவ விட்டேன்.

தீர்ப்பை எழுதிய நீதிபதி கோர்ட் டைரியில் இவ்வாறாக எழுதியுள்ளார். இந்த தகவலை கோட்சே நீதிமன்றத்தில் சொல்லும்போது மன்றமே மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ஆனால் அமைதியாக இருந்தது. அவர் பேசி முடித்தபின் மின் விசிறி சுழலும் சப்தமும், காகிதங்கள் படபடக்கும் சப்தமும், மக்கள் அழுகையால் மூக்கை உறிஞ்சும் சத்தமும், விசும்பல் சத்தமும்தான் கேட்க முடிந்தது . அந்த சுற்றுப்புறமே மின்னலை பாய்ந்தது போல ஒரு அதிர்வு இருந்தது.

இதுவரை என் வாழ்நாளில் இவ்வளவு தெளிவான தீர்க்கமான, தெளிவான, ஆணித்தரமான ஒரு வாதத்தை நான் இது வரை கேட்டதில்லை. இந்த மக்களை இங்கு ஜூரியாக நான் அமர்த்தியிருந்தால் அவர்கள் இவரை விடுதலை செய்திருப்பார்கள். நல்ல வேலையாக இவர்கள் ஜூரி இல்லை நான் அப்படி செய்யவும் இல்லை. வழக்கு விசாரிக்கப்படும் முன்னரே தீர்ப்பை நான் தீர்மானித்துவிட்டேன். நடந்தது வெறும் சடங்குதான். அவருக்கு பேச சந்தர்ப்பம் கொடுக்கப்படவேண்டும் என்பதால் அவரை பேச அனுமதித்தேன். என் உள்ளம் துக்கத்தால் விம்முகிறது என்று சொல்லி, இந்த கையெழுத்தை இடும்போது கண்ணிலிருந்து நீர் உருண்டு கையெழுத்தை நனைத்தது என்று முடித்திருக்கிறார்.

இம்மி அளவு துக்கமின்றி கோட்சே இறந்தார். தூக்கிலடப்படும் முன் அழைத்து செல்ல வந்த போலிஸ் மேலதிகாரி அழுகிறார். அவரை சமாதானப்படுத்திய பின் ஏதாவது கடைசி ஆசை இருந்தால் சொல்லுங்கள் என்றனர். எனக்கு ஒரு நல்ல காபி குடிக்க வேண்டும் போல் உள்ளது என்று கேட்டு வாங்கி குடித்தார். தன் மாமாவிடம் தான் வாங்கியிருந்த 100 ருபாய் கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்று சொன்னார். தான் அடைப்பதாக அந்த அதிகாரி சொல்ல நிம்மதியுடன் இனி நான் இந்த உலகிற்கு தர, பெற எதுவுமில்லை, விடை பெறுகிறேன் தாயே என்று சொல்லி RSS பிரார்த்தனையான ‘நமஸ்தே சதா வத்சலே மாத்ரு பூமே’ ஸ்லோகத்தை சொல்லிவிட்டு ‘பாரத் மாதா கீ ஜெய் என்று முடித்துவிட்டு தூக்கில் தொங்கினார். ஒரே நொடியில் இறந்தார்.

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 24

இந்த பக்கம் என்னவோ செய்யுங்கள் என்று நேரு வெளிநாடு சுற்றுபயணம் சென்றார். நேருவை போன்ற ஒரு பொறுப்பில்லாத  பிரதம மந்திரியை இந்த தேசம் இதுவரை கண்டதில்லை.   மூவர்ணக்கொடி காங்கிரசின் கொடியாக அதுவரை இருந்தது.  இவர் போய் UNஇல் ராட்டையை அகற்றி ஒரு சக்கரத்தை போட்டு அது அசோகரின் தர்ம சக்கரம் என்றார்.  உங்கள் தேசிய கீதம் எது என்று கேட்டபோது யாரையும் கேட்காமல் ஜனகணமன என்றார்.  திரும்பி இங்கு வந்தபோது இது பெரும் பிரச்சனையை ஆனது.  எல்லோரும் யாரை கேட்டு மூவர்ணக்கொடியையும், ஜனகனமனவையும் தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்டபோது முடிந்தவரை பேசி சமாளித்தார்.  இது பேண்ட் வாத்தியத்தில் அடங்காது என்றார்.  கிருஷ்ண ராவ் ப்ஹுலம்ரீகர் இதற்கு சிறப்பாக இசை அமைத்து காட்டினார்.  இல்லை இல்லை இதை கார்டன் ஏற்கவேண்டும்.  அவர்தான் மேல்நாட்டு இசைக்கு சக்ரவர்த்தி என்றார்.  அடித்து பிடித்து அவரிடம் சென்று போட்டு காட்டினார் கிருஷ்ண ராவ் ப்ஹுலம்ரீகர்.  அற்புதம், அபாரம் என்று பாராட்டி கடிதம் கொடுத்தார்.  அதை கொண்டு வந்து நேருவின் அலுவலகம் முன்னால் மணிக்கணக்காக நின்றும் உபயோகம் இல்லை.  அந்த பக்கம் வந்த SK பாட்டில் என்பவர் இவரை கண்டு விசாரிக்க, இவர் விவரம் சொல்ல, பொசுக்கென்று உள்ளே கூட்டிக்கொண்டு போனார்.  நேருவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அந்த ரிகார்டை இங்கே வைத்துவிட்டு போங்கள் என்றார்.  அதோடு முடிந்தது.  இதற்கு மேல் முடியவில்லை என்ற நிலையில் பாபு ராஜேந்திர பிரசாத்திடம்  சென்று இதுதான் கொடி, இதுதான் தேசியகீதம் என்று சொல்லுங்கள் என்று கெஞ்சி முடிக்க வைத்தார்.  ராஜேந்திர பிரசாத் ஜனகனமன, வந்தே மாதரம் இரண்டுமே தேசிய கீதம் என்று முடித்தார்.  இன்றும் நமது அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டுக்கும் சம அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளன. இதே போல மூவர்ணக்கொடி.  ஒவ்வொன்றுக்கும் ஒரு விளக்கம் கொடுத்தார்.  கடைசியில் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு அரிய விளக்கம் கொடுக்க இரண்டும் முடிவுக்கு வந்தது.

 

Mahatma Gandhi on the National Flag of India

DNymRW3UIAEaU7Q

இந்த கட்டத்தில் பட்டேலின் நிலைமையை சிந்தித்து பாருங்கள்.  இரும்பு மனிதன் என்ற பட்டம் எதற்கு? நாட்டை இணைத்ததற்கா?  எப்படி இணைத்தார்?  அங்கே மவுண்ட்பேட்டன் 560 சமஸ்தானமாக நாட்டை பிரித்து வேண்டுமென்றால் இந்திய பகுதி இல்லையேல் பாகிஸ்தான் இல்லையேல் தனி சமஸ்தானங்களாக இருக்கலாம் என்று விஷத்தனமாக அறிவித்தான்.  இந்த அனைத்து சமஸ்தானங்களையும் நேரடியாக பேசி, ஆளனுப்பி, புரியவைத்து, படையெடுத்து, கோடி அணிவகுப்பு செய்து, மிரட்டி, அடித்து என்று அனைத்து ராஜதந்திரங்களையும் செய்து இணைத்தார்.  அதுவும் வெறும் இரண்டே ஆண்டுகளில்.  பட்டேல்தான் சோமநாதர் ஆலயம் அமைந்துள்ள ஜுனாகத் சமஸ்தானத்தை கலவரம் தூண்ட வைத்து கிளர்ச்சி ஏற்படுத்தி இணைத்தார்.  தன் நாய்களுடன் பாகிஸ்தான் நோக்கி விரைந்தான் அந்த நவாப்.  ஹைதராபாத் நிஜாம் தன்னுடைய ரஜாக்கர்களை விட்டு அந்த பிரதேசத்திலுள்ள அனைத்து ஆண்களை கொள்ளவும் பெண்களை கற்பழிக்கவும் ஆணை பிறப்பித்தான். என்று ராணுவம் வரவேண்டுமோ அதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டது.  பிறகுதான் பாலங்களை தகர்க்க, சாலைகளை மரங்களை வெட்டி போட்டு மறிக்க திட்டமிட்டிருந்தனர்.  ரஜாக்கர்களின் அட்டூழியம் தாங்க முடியாமல் இருந்தது.  ஒரேயொரு ஆணைதான் இராணுவத்திற்கு இருந்தது.  தாடி, தொப்பி, சுன்னத் இதில் ஏதாவது ஒன்று இருந்தாலும் கேள்வி கேட்காமல் கொன்றுவிடு என்பதுதான் அது.  இரண்டே நாட்களில் ஹைதராபாத் பணிந்தது.  அதன் பிறகு 15 ஆண்டுகளுக்கு எந்த முஸ்லிமும் தாடி தொப்பி எல்லாம் அணியவேயில்லை.  நேருவிடம் வெறும் கொடி அணிவகுப்பு என்று சொல்லி இராணுவத்தை அனுப்பி இணைத்தது பிடிக்கவில்லை நேருவுக்கு.  பட்டேல் மீது கடும் கோபம் கொண்டார்.  காட்டான் என்று திட்டினார்.  1950 இல் அவர் இறக்கும் முன்.  பட்டேலின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள கூடாதென்று உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நேரு கீழிறங்கினார்.  காஷ்மீர மன்னன் ஹரிசிங் ரெண்டுகெட்டாந்தனமாக குழம்பினார்.  அங்கே சுதந்திர பாகிஸ்தானிலிருந்து காட்டுவாசிகள் கூட்டம் வெறிகொண்டு உள்ளே வர, இவரிடமிருந்த மொத்த ராணுவமோ முஸ்லிம்கள், அனைவரும் அவர்களோடு சேர, இறுதியில் பட்டேல் RSS தலைவர், குருஜியை அனுப்பி பேச சொன்னார்.  மன்னர் இந்தியாவுடன் சேர சம்மதித்தார்.  இரண்டே நாளில் கையெழுத்தானது.  காஷ்மிர விமான ஓடுதளம் பாழாகி இருந்தது.  பனி வேறு ஒரு பக்கம்.  ஜம்முவிலிருந்த ஸ்வயம்சேவகர்கள் இரவு பகலாக உழைத்தனர்.  ஓடுபாதையை ஏழே நாட்களில் செப்பனிட்டனர்.  அப்போது ஆயுதங்களை கொண்டு செல்ல விமானங்கள் இல்லை.  அனைத்து சிவில் விமானங்களும் தேசியமயமாக்கப்பட்டன.  எல்லா நாற்காலிகளையும் பிடுங்கி எறிந்து அனைத்தும் ராணுவத்திற்காக பயன்படுத்தப்பட்டன.  கண்ணிமைக்கும் நேரத்தில் காஷ்மீரத்தில் அமைதியை திருப்பினார்கள் இராணுவத்தினர். (கடைசியாக 1961 ஆண்டு சில நூறு ச்வயம்செவகர்கள் கோவாவை தாக்கினார்கள்.  உடனடியாக இராணுவம் விரைந்தது.  கோவாவை இந்தியாவோடு இணைத்தது.)

displayphoto1
Sri Guruji and Kashmir Raja Harisingh

இவையனைத்தும் ஒரு புறம் நடக்க திடீரென்று தினம்தோறும் லட்சகணக்கில் அகதிகள் வர ஆரம்பிக்க சமாளிக்க முடியவில்லை அரசால்.  திணறியது.  எலும்பை உறையவைக்கும் குளிர் அப்போது டில்லியில்.  ஒண்ணரை கோடி அகதிகள், எங்கு செல்வது இவர்களை தங்க வைக்க?  கூடாரங்கள் அமைக்கப்பட்டன.  திருமண மண்டபங்கள், பெரிய ஹால்கள், எதுவுமே போதவில்லை.  இத்தனை பேருக்கு தினம் உணவு, தண்ணீர், மருத்துவம், கழிவறை ஏற்பாடு என்று பறந்து பறந்து வேலை செய்தது நிர்வாகம்.  கடைசீயாக உபயோகமே இல்லாமல் எந்த தொழுகையும் நடக்காமல் Archaeological துறையின் கீழிருந்த ஷாஜஹான், அக்பர் கட்டிவிட்ட மசூதிகள் மிக பெரியவை என்று அங்கே தங்க வைக்க ஏற்பாடு செய்தார்.  உடனே ஓடினார்கள் முஸ்லிம்கள் காந்தியிடம்.  எங்கள் மசூதிகளின் புனிதத்தன்மையை கெடுத்துவிட்டார்கள், அங்கே அகதிகளை தங்க வைத்துவிட்டார்கள் என்று புலம்பி தீர்த்தனர் முஸ்லிம்கள்.  யாரென்றார் காந்தி.  பட்டேலென்று தெரிந்ததும் அவரை வர சொன்னார்.

உறையவைக்கும் பனி, உணவில்லை, தண்ணீரில்லை, மருத்துவர்கள் போதவில்லை, கூடாரங்கள் கட்ட துணியில்லை, ஆகவே தற்காலிகமாக தங்கவைத்தேன்.  பிறகு காலி செய்து கொடுத்துவிடலாம் என்றார்.  இன்னும் சில வாரங்கள் பொறுத்துகொள்ளுங்கள் என்றார்.  காந்தி பாகிஸ்தானுக்கு தரவேண்டிய 55 கோடி என்ன ஆயிற்று என்றார்.  (எந்த நேரத்தில் என்ன கேள்வி பாருங்கள்) எனக்கு அகதிகளுக்கு செலவழிக்கவே பணமில்லை. இப்போது தர முடியாது.  அவர்கள் போருக்கு தயாராகிறார்கள்.    காந்தி சொன்னார் அதைவிட கொடுத்த வாக்கை காப்பாற்றுவது முக்கியம்.  நீ பாகிஸ்தானுக்கு 55 கோடி தரும்வரை, அகதிகளை மசூதிகளிலிருந்து வெளியேற்றும்வரை  நான் உண்ண மாட்டேன்.  சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போகிறேன் என்று அமர்ந்தார்.  நாடு அதிர்ந்தது.

இவ்வளவு சக்தியும், திடமும், வைராக்கியமும் காந்திக்கு இருந்ததென்றால் இதை வைத்து ஜின்னாவையும், காங்கிரசையும் மடக்கி நாட்டை பிரிக்கவிடாமல் தடுத்திருக்கலாமே?  முஸ்லிம்கள் புலம்பியபோது வந்த கோபம், ஹிந்துக்கள் கொல்லப்படும்போது வரவில்லையே?  முஸ்லிம்களுக்கு ஒரு அளவுகோல், ஹிந்துக்களுக்கு ஒன்று.  நாடு பிரிந்த பிறகும் கூட முஸ்லிம்கள் தாஜாவை அவரால் மறக்க முடியவில்லை.  மனம் வெறுத்தார் பட்டேல்.  அமைதியாக குஜராத் போய் சேர்ந்து திரும்ப வரமாட்டேன் என்று சொன்னார்.

என்னை இரண்டாக வெட்டி போட்டுவிட்டு நீங்கள் நாட்டை பிரியுங்கள்  என்றீர்களே, நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களே, நாடு பிரிந்துவிட்டதே என்று கேட்டதற்கு, “வாழ்நாளெல்லாம் நான் கண்ட கனவு சிதறடிக்கப்பட்டது.  என்னுடைய வாழ்க்கை குறிக்கோள் சாக்கடை நீரில் அடித்துக்கொண்டு போய்விட்டது.  அரை நூற்றாண்டுகாலமாக நான் பட்ட பாடெல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.  கொழுந்துவிட்டெரியும் தீ, ஆரை ஓடும் இரத்தம்.  இவற்றைத்தான் நான் என் கண் முன்னே பார்க்கிறேன்”  என்றார்.  இத்தனை நடந்தும், இத்தனை பேசியும் எதற்காக என்று தெரியாமலே மீண்டும் மீண்டும் செய்த தவறுகளை செய்துகொண்டே இருந்தார்.

காஷ்மீரம் முழுமையாக நம் வசம் வருவதற்குள் நேரு திரும்பி வந்தார்.  பட்டேலை திரும்ப அழைத்து வந்தார்.  பணத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்து உறையும் பணியில் அனைவரையும் இழுத்து வெளியில் போட ஏற்பாடு செய்தார்.  காஷ்மீரம் வெளியுறவுத்துறையின் கீழ் வருகிறது.  அது என் துறை.  அதை நான் பார்த்துகொள்கிறேன் என்றார்.  காட்டுமிராண்டிகளும் பாகிஸ்தான் ராணுவமும் வந்து மிக பெரும் பகுதியை பிடித்தார்கள்.  நமது இராணுவம் திரும்ப தாக்கி இஸ்லாமாபாத் வரை சென்று அடித்தார்கள். நேரு இராணுவத்தை திரும்ப வரசொன்னார் மவுண்ட்பேட்டன் ஆலோசனைப்படி.  UNனிடம் புகார் சொல்ல சொன்னார் மவுண்பேட்டன்.  வென்ற இடங்களையெல்லாம் திரும்ப தரவைத்தார்.  ஹைதராபாத்தை நேரு இல்லாத நேரத்தில் இணைத்த பட்டேலால் அவர் வந்து பிறகு காஷ்மீரத்தை அவர் பொறுப்பில் விட வேண்டி வந்தது.  இன்று வரை அந்த பிரச்சனை தொடர்கிறது.  அப்போது மாராட்டிய மாகாணத்தை சேர்ந்த ஒருவன் முடிவெடுத்தான் காந்தியை கொல்வதென்று.  இனி வாழ அவருக்கு தகுதி இல்லை என்று நினைத்தான்.  அங்கே ஹிந்து பெண்கள் கற்பழிக்கப்ப்படும்போது, ஆண்கள் கொல்லப்பட்டபோது காந்தி சொன்ன அறிவுரை அனைவரையும் கொதிக்க வைத்தது.  அவர் சொன்னார், “முஸ்லிம்கள் உங்களை கற்பழிக்க வந்தால், அவர்களோடு சண்டையிடாதீர்கள்.  தடுக்காதீர்கள்.  உங்கள் மூச்சை பிடித்துக்கொண்டு உயிரை விடுங்கள்.  ஆண்கள் ஒரு முனுமுனுப்பின்றி வீரமாக அமைதியாக இறந்து போங்கள்.  நாமெல்லாம் ஹிந்துக்கள்.  இறந்தால் பிறக்கத்தானே போகிறோம்? ”  என்றார்.  இந்த தன்மை, இந்த பேதலித்த புத்தி, இந்த அபாயகரமான போக்கு என்னை ஒரு சுயநலமில்லாத, எந்த எதிர்பார்ர்ப்பும் இல்லாத, பல ஆயிரக்கனக்கனவர்களால் மதிக்கப்பட்ட ஒரு மாமனிதரை சுட வைத்தது என்றார்.

go

இதற்கு மேல் ஹிந்து சமுதாயத்திற்கு கேடு விளைவிப்பதற்குள் இவர் தீர்த்துக்கட்டபடவேண்டும் என்று எண்ணினார்.  RSSஸோடு அவர் பேசப்பட்டதற்கு 1932இல் விலகினேன் என்றார்.  16 ஆண்டுகாலம் அவரை கொல்ல எந்த முட்டாளும் காத்திருக்க மாட்டான். இதை உணராமல் பலர் இன்றும் இவர் கொலைக்கு RSS மீது பழிபோடுகின்றனர்.  இவரை கொன்றதால்தான் ஹைதராபாத்தை இணைக்க முடிந்தது.  பாகிஸ்தானுடன் போர் தொடுக்க முடிந்தது என்றார் கோட்சே.

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 23

மிக சில கிராமங்களில், முஸ்லிம்கள் ஹிந்துக்களுக்கு உதவ முன்வந்தார்கள்.  ஹிந்துக்கள் அனைவரையும் மதம் மாற்றினார்கள்.  கொல்ல வந்த முஸ்லிம்களிடம் பேசி. அவர்கள் இனி முஸ்லிம்கள் என்று சமாதானம் பேச முயன்றார்கள்.  இவ்வளவு தூரம் வந்துவிட்டு நாலு பெரியாவது கொன்றால்தான் நிம்மதி என்று சிலரை கொன்றுவிட்டு அரைமனதுடம் போனார்கள் முஸ்லிம்கள்.  சீக்கியர்கள் வீடுகளில் வைத்தும் அரிசி மில்களில் வைத்தும் கொளுத்தப்பட்டனர்.  மிச்சமிருந்தவர்கள் சண்டையிட்டு இறந்தார்கள்.  எவ்வளவுதான் ஹிந்துக்களும் சீக்கியர்களும் சண்டையிட்டாலும் வந்திருந்தவர்கள் அதிகம் பேர் இருந்ததால் ஆள் பலமோ துப்பாக்கி ரவைகளோ மற்ற ஆயுதங்களோ என்றுமே போதவில்லை.8. India Pakistan

இந்தியாவை நோக்கி செல்லும் மிக சில புகைவண்டிகளில் கூட பெண்களிடமிருந்து நகைகள், உடைகள் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டன.  தப்பித்த சில பெண்களும் தாய்தந்தையர் எதிரிலேயே மிரட்டி தூக்கி செல்ல பட்டார்கள்.  கதறி அழும் குழந்தைகளுக்கு கொடுக்க தண்ணீர் கூட இன்றி தங்கள் சிறுநீரையே மற்றவர்கள் முன்னால் கழிந்து பிடித்து குடிக்க கொடுத்தார்கள்.  கல்லெறிதல், கடத்தல், திருட்டு, கொலை எல்லாம் புகைவண்டிகளிலும் நிலையங்களிலும் சர்வசாதாரணமாய் நடந்தன.  கற்பழிக்கப்பட்டு தப்பிய பெண்கள் சுமார் 50,000 பேருக்கு  ஒரே மாதத்தில் கருத்தடை செய்யும்படி ஆனது.

பதிலுக்கு, ஹிந்துக்களும் சீக்கியர்களும், பாகிஸ்தானுக்கு சென்றுகொண்டிருந்த முஸ்லிம்களை நூற்றுக்கணக்கில் கொன்றார்கள்.  எவ்வளவு முயன்றாலும் அவர்களால் முஸ்லிம்களின் கொலைவெறிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.  ஹிந்துக்களால் சிலரை கொல்லமட்டும்தான் முடிந்தது.  முஸ்லிம் பெண்கள் யாருமே பலாத்காரம் செய்யப்படவில்லை.  இது ஒரு அதிசயம்தான். பாகிஸ்தானில் RSS இயக்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தார்கள்.  அவர்களிடம் குருஜி சொன்னார்.  நீங்கள் இறந்தாலும் பரவாயில்லை.  எவ்வளவு பேர் முடியுமோ அவ்வளவு பேரை காப்பாற்றுங்கள் என்று.  அந்த ஒரு வார்த்தைக்காக ஆயிரக்கணக்கான ச்வயம்சேவகர்கள் முஸ்லிம்களோடு சண்டையிட்டு மடிந்தார்கள்.  அவர்கள் போராடும் அந்த சில மணிநேரத்தில் இந்தபக்கம் பலர் தப்ப வழி செய்து கொடுத்து தாக்குதலை தாமதப்படுத்த முடிந்தது.  அப்படி ஒரு முக்கிய சிக்ஷக்காக இருந்து, சிந்து பகுதி சிறுவர்களுக்கு பயிற்சி அளித்த ஒருவர் இன்றும் தாம்பரத்தில் உயிரோடு இருக்கிறார்.   இந்த நிகழ்ச்சி பற்றி பேசினாலே நான் வளர்த்த பிள்ளைகள், என் குழந்தைகள் போய்விட்டார்களே என்று அழுகிறார்.

நடந்து  கடக்க முயன்றவர்கள் கதி?  சுமார் 300 கிலோமீட்டர் நடந்தால்தான் இந்திய வந்து சேர முடியும்.  வயதானவர்கள், நிறைமாத கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், ஆடு மாடுகள், அனைத்தையும் ஒரே நாளில் தூக்கிக்கொண்டு எப்படி வருவது?  வரும் வழியிலேயே பிரசவம் நிகழ்ந்துவிடும்.  நிற்க முடியாது.  நின்றால் தொலைந்தார்கள்.  இரத்தம் சொட்ட சொட்ட குழந்தையை கையில் வாங்கியபடி நடக்கவேண்டியதுதான்.  இதற்கு இடையில் அந்த பிள்ளைபெற்ற பெண்ணின் கணவனின் சகோதரியை ஒருவன் கடத்தினால் அவன் இவளை பார்ப்பானா, அவளை பார்ப்பானா?  தங்கையை விட்டுகொடுத்து மனைவியை காப்பாற்ற வேண்டி அழுதுகொண்டே போவான்.  இவை அனைத்தும் நடந்த விஷயங்கள்.  சென்னை அமெரிக்கன் தூதரகத்தின் அருகில் உள்ள OXFORD UNIVERSITY PRESS வெளியிட்டுள்ள THE  STERN  RECKONING வெளியிட்டுள்ள தகவல்கள் நூறு கதைகள் சொல்லும்.  கர்ப்பிணி பெண்களை சர்வசாதாரணமாக வயிற்றை கிழித்து கொன்றார்கள்.  வெளியே வந்து விழும் அந்த குழந்தையை அப்படியே ஆகாயத்தில் வீசி எறிந்து கத்தி முனையில் குத்தி பிடிப்பார்கள்.  குழந்தை இறக்கும், அதை கண்ட தாயும் இறப்பாள்.   மேலே சொன்ன புத்தகத்தில் ஒரு EXCEL SHEET போட்டு எந்தெந்த ஊரில் எவ்வளவு கொலை, கொள்ளை, கற்பழிப்பு, எவ்வளவு பேருக்கு கை கால் போனது என்று பட்டியலிட்டுள்ளார்கள்.  அகதிகளிடமிருந்து நேரடியாக திரட்டிய தகவல்கள்.  பதிவாகாமல் போனவை இன்னும் அதிகம்.  இந்த கொலை விழா சுமார் இரண்டு ஆண்டுகள் நடந்தது.  நேருவும் காந்தியும் இதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.  பிதற்றலாக ஏதேதோ அறிக்கைகள் விட்டபடி இருந்தார்கள்.

THE  STERN  RECKONING – DOWNLOAD

அம்பேத்கர் சொன்னார், மொத்த மக்கள்தொகையும் மாறட்டும்.  இங்கு ஒரு முஸ்லிம் கூட இருக்க கூடாது.  அங்கு ஒரு ஹிந்து கூட இருக்க கூடாது என்று.  ஜின்னா இதை ஆதரித்தார்.  அவரை முஸ்லிம்கள் கேட்டார்கள், “உங்களை கீழ்மையாக நடத்தும் இந்த ஜாதி ஹிந்துக்களுக்காகவா பேசுகிறீர்கள்? ” என்று.  அவர் சொன்னார்.  அது எங்கள் அண்ணன் தம்பி பிரச்சனை.  இதை ஒரு அந்நிய மதத்துக்காரனை வைத்துகொண்டு பேசவேண்டியதில்லை என்று.  எப்பேர்பட்ட STATESMAN பாருங்கள் அவர்.  உடனே முஸ்லிம்கள்  காந்தியிடம் புகார் சொன்னார்கள்.  இதை காந்தியும் நேருவும் வன்மையாக கண்டித்தனர்.  விரும்புபவர்கள் போகலாம்.  மாற்றவர்கள் இங்கேயே இருக்கலாம், வற்புறுத்தகூடாது என்று நிராகரித்தனர்.

கான் அப்துல் கபார் கான்
கான் அப்துல் கபார் கான்

கான் அப்துல் கபார் கான் என்று ஒரு முஸ்லிம், அவரை எல்லை காந்தி என்று அழைப்பார்கள். அவர் போராடி பல ஹிந்துக்களை காத்து எல்லை வரை உயிருடன் போக உழைத்தார்.  நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் அவரால் பிழைத்தனர்.  மிக தைரியமாக ஆயுதம் தாங்கிய முஸ்லிம்களை எதிர்த்து ஹிந்துக்களை காத்தார்.  அவர் பின்னே சிகப்பு சட்டை அணி என்று ஒன்று இணைந்து வேலை செய்தது.

 

 

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)

தேசபிரிவினையின் சோக வரலாறு – 22

11india-spl1

பிரிவினைக்கு பிறகு ஜின்னா தானே பாகிஸ்தானின் கவர்னர் அதிபராக படைத்தலைவராக பொறுப்பேற்பேன் என்று சொன்னார்.  இங்கே நேரு நீங்களே இங்கு இரு பொறுப்பிலும் இருங்கள் என்று சொல்லிவிட்டார்.  யாரையும் கேட்கவேயில்லை.

Cyril Radcliffe
Cyril Radcliffe

இங்கே சிரில் ராட்க்லிப் இரண்டு எல்லை கமிஷன்களை தலைமை ஏற்றான்.  ஒன்று பெங்கால் கமிஷன், இன்னொன்று சிந்து கமிஷன்.  இரண்டு இடங்களிலும் ஒரே நேரத்தில் இருக்க முடியவில்லை.  இருப்பது இரண்டே மாதம்.  அவனில்லாமலே பல கூடுதல்கள் நடந்தன.  பல முக்கிய விஷயங்களை அவன் கேட்கும் நிலையிலும் இல்லை.  அதற்கு நேரமும் இல்லை.  களத்திற்கு சென்று நிலைமையை ஆராய்ந்து பிரித்து கொடுக்கவும் இல்லை.  மனம் போல கோடுகளை வரைந்தான்.  லாகூர் ஹிந்துக்கள் அதிகமாக வாழும்பகுதி, சீக்கியர்களின் புனித ஸ்தலம் என்று எவ்வளவோ சொல்லியும் உங்களுக்கு கல்கத்தாவை கொடுத்தேன்,உங்களுக்கே லாஹூரையும் கொடுக்க முடியுமா, ஏதாவது ஒரு பேரு நகரம்தான் உங்களுக்கு என்று அதை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்தான்.  எந்த எதிர்ப்பையும் மதிக்கவில்லை.  மவுன்பேட்டனிடம் எந்த புகாரையும் எடுத்து செல்ல முடியவில்லை.  இந்த கமிஷனில் இருந்த மகாஜன் என்பவரது குடும்பம் இந்தியாவில் உள்ளதா பாகிஸ்தானில் உள்ளதா என்று அவருக்கே தெரியவில்லை கடைசி  நிமிடம்வரை.  ஏனென்றால் 14ஆம் தேதி பாகிஸ்தானுக்கு சுதந்திரம். நமக்கு 15 ஆம் தேதி.  எல்லைகள் தீர்மானிக்கப்பட்டது 17 ஆகஸ்டில்.  சில மணிநேரத்தில் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தன குடும்பத்தை மட்டும் உயிரோடு கூட்டி வரமுடிந்தது மகாஜனால்.

partition_riots_20040823இந்த பிரிவினை காலத்தில் நடந்த கொடூரங்கள் மனித பண்புகளை மீறியதாக இருந்தது.  இனி எப்பொழுதும் இந்த அளவிற்கு வன்முறை நடத்த முடியாது என்ற அளவிற்கு வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.  மலபாரை, கல்கத்தா மிஞ்சியது.  கல்கத்தாவை நவகாளி மிஞ்சியது.  இவை அனைத்தையும் ஒருங்கே சேர்த்தால் கூட பாகிஸ்தான் பிரிவின்போது ஹிந்துக்கள் பட்ட கஷ்டத்திற்கு ஈடாகாது.

மற்ற பிரதேசங்களில் இருப்பது போல சிந்திலும் ஹிந்துக்களும் சீக்கியர்களுமே முதலாளிகள்.  முஸ்லிம்கள், முன்பு சொன்னது போல முஸ்லிம் மன்னர்கள் முடி இழந்ததனால் கிடைத்த வேலைகளை செய்து வந்தார்கள்.  ஹிந்துக்கள் அவர்களுக்கு வேலை தந்ததால் ஏதோ பிழைப்பு இருக்கிறதே என்று இருந்துவிட்டார்கள். தகுதியை வளர்த்துக்கொள்ள, பெரிதாக பொருளீட்ட முயலவில்லை.  இந்த வாய்ப்பை அவர்கள் தங்கமான வாய்ப்பாக பார்த்தார்கள்.  இதை விட்டால் வேறு சந்தர்ப்பமே இல்லை என்று உணர்ந்தார்கள்.  போதாதற்கு மத வெறியும் தூண்டப்பட்டது.  கொள்ளையடிக்க, கொலை செய்ய காரணம் கிடைத்தது.  என்ன குற்றம் செய்தாலும் யாரும் கண்டுகொள்ளபோவதில்லை என்ற எண்ணம் அவர்களுள் மிருகத்தை தூண்டியது.

india_pakistan_division_28_02_2016பெற்றவர்கள், உறவினர்களை கட்டிபோட்டு அவர்கள் முன்னால் இளம் பெண்கள் ஒரே சமயத்தில் பலரால் பலாத்காரம் செய்யபட்டார்.  பலர் கடத்தப்பட்டனர்.  எங்கிருக்கிறார்கள் என்று கடைசீவரை தெரியாமே போயிற்று.  வெட்டவெளியில், நடைபாதைகளில், தெருவில், புகைவண்டிநிலையங்களில், விளையாட்டு மைதானங்களில் இன்னும் எல்லா இடங்களிலும் பெண்கள் பலாத்காரம் செய்யபட்டார்கள்.  அழகாக இருந்தால் பலமானவர்களால் கடத்தி கொண்டு செல்லப்பட்டு வீட்டிலே வைத்து தங்கள் இச்சைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தினார்கள்.  சின்ன குழந்தைகளை இரண்டு கால்களையும் பிடித்து இரண்டாக கிழித்து கொன்று போட்டார்கள்.  நவகாளியில் ஆனது போல பெரியவர்களது கால்களை வண்டியில் கட்டி கிழித்து கொன்றார்கள்.  சில இடங்களில் உயிரோடு வைத்து அருகே வைக்கோல் போரை கொளுத்தி கருக அடித்து, வறுத்து, எரித்து கொன்றார்கள்.   ஒரு கசாப்பு கடைக்காரனை ஹிந்து தாய் கேஞ்சியிருக்கிறாள் தன குழந்தையை விட்டுவிட சொல்லி.  தான் அணிந்திருந்த 16 சவரன் தங்கத்தை தந்திருக்கிறாள்.  வாங்கிகொண்டு கண்முன்னாலேயே சீவி கொன்றிருக்கிறான்.  (போலீசில், ராணுவத்தில் முஸ்லிம்கள் இருக்க கூடாது என்று சொன்னேனே, இதோ காரணம்.)  இவற்றில் பல இடங்களில் காவல் துறையினர், தாசில்தார், கமிஷனர் என்று பலர் துணை போயுள்ளனர்.  போலீஸ்காரர்கள் ஜீப்பில் ரோந்து வரும்போது கொள்ளையர் கூட்டம் வந்தால் அடித்த கொள்ளையில் 50% போலீசுக்கு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு.  மிச்சம் கொள்ளை அடித்தவர்கள் தங்களுக்குள் பங்கு போட்டுகொள்வார்கள்.  பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்ட பின்  மார்பகங்கள் அறுக்கப்பட்டு நிர்வாணமாக உயிரோடு விரட்டபட்டார்கள்.  இரத்தம் வழியவழிய அவர்கள் முகாம்களில் வந்து விழுந்து இறந்த கதைகள் ஏராளம்.  ஆண்களின் உறுப்புகள் அறுக்கப்பட்டன அல்லது கல்லால் அடித்து சிதைக்கப்பட்டன.  நாய்களும், கழுகுகளும் தின்று தீர்த்தன பிணங்களை.

நன்றி முகநூல் நண்பர் Anand Venkat, (RBVS மணியன், The Stern Reckoning – G.D.Khosla, May it please you honor – Nathuram Godse, The tragic story of partition of India – H.V.Seshadri)