“பொன்னும் மணியும் மிகப் பொங்கி நின்ற இந்நாட்டில்
அன்னமின்றி நாளும் அழிவார்கள் எத்தனை பேர்!
வேத உபநிடத மெய்ந்நூல்கள் எல்லாம் போய்
பேதைக் கதைகள் பிதற்றுவார் இந்நாட்டினிலே.”
– என்று நமது நாட்டின் இன்றைய பொருள் வறுமை, சிந்தனை வறுமை இரண்டையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிச் சென்றிருக்கிறார் மகாகவி பாரதியார். இன்று நாமும்தான் பார்க்கின்றோம்.
இது வீழ்ச்சிதான். ஆனால் எவ்வளவு உயரத்திலிருந்து வீழ்ந்திருக்கிறோம் என்பதை சற்றுப் பின்னோக்கிப் பார்த்து புரிந்து கொண்டால் பதைபதைக்கும் நமது உள்ளம். உலகமே வியந்து போற்றி, வணங்கிய அன்றைய பாரதத்தை பல நாட்டு அறிஞர் பெருமக்கள் கண்ட நோக்கில் காணுவோமானால் அதன் உண்மை உறுதிப்படும் நமக்கு.
மேலும் இந்த நாட்டின் படித்த கூட்டத்திற்கும், சிந்தனையாளர் கோஷ்டிக்கும் ஒரு வியாதி உண்டு. எந்த விஷயமானாலும் சரி அயலார், அதுவும் மேற்கத்திய நாட்டினர் சொல்வதுதான் இவர்கள் செவி வழியே சிந்தனையில் புகும். நாடு சுதந்திரமடைந்து அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிய பின்பும் இன்றும் இது பொருந்தும். எனவே நமது நாட்டைப் பற்றி உலகின் உயர்ந்த சிந்தனையாளர்கள், வரலாற்று அறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள் சிலரின் கருத்துக்களை தொகுத்துள்ளோம். நமது மக்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டம், தன்மான உணர்வு எழுப்பவும். நமது முன்னோர்களின் சாதனைகளை அறிந்து கொள்ளவும் உதவும். அவர்களை மிஞ்ச வேண்டும் என்ற வேகமும் எண்ண எழுச்சியும் நம் மனதில் ஏற்பட இச்சிறு நூல் உறுதுணை புரியும் எனக் கருதுகிறோம்.
பாரில் உயர்ந்த பாரதம்
பாரதம் என்றால் ஒளியில், ஞானத்தில் திளைத்தல் என்று பொருள். பெயருக்கேற்ப நம் நாடு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துத் துறைகளிலும் மிகப்பெரிய சாதனைகள் செய்துள்ளது. வானவியல், கணிதம், வேதியியல், பொறியியல், இசை, விவசாயம், உயிரியல், அணு விஞ்ஞானம், மருத்துவம், கலை போன்ற பல துறைகளையும் நமது முன்னோர்கள் அலசி ஆராய்ந்து அந்தத் துறைகளில் உயர்ந்த நிலையை அடைந்திருந்தனர். அவர்கள் வாழ்வியலின் எல்லாத் துறைகளிலும் தன் நிகரற்று விளங்கினர். சத்தியம், வீரம், அன்பு போன்ற பண்புகளை உயிரினும் மேலாக மதித்துப் போற்றி வந்தனர்.
கல்வி
நமது முன்னோர்கள் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். காஞ்சி, நாளந்தா, தட்சசீலம், உஜ்ஜயினி ஆகிய இடங்களில் சர்வதேச பல்கலைக் கழகங்கள் இருந்தன. பல்லாயிரம் நூல்கள் கொண்ட நூல்நிலையங்கள் இவ்விடங்களில் அமைந்திருந்தன.
கி.மு.700 இல் உலகின் முதல் பல்கலைக் கழகம் தட்சசீலத்தில் அமைந்திருந்தது. அங்கு ஒரு சமயத்தில் 30, 000 மாணவர்கள் 146 துறைகளில் கல்வி பயின்றனர். 2,000 ஆசிரியர்கள் இருந்தனர். காலை
பக்தியார் கில்ஜியின் படையெடுப்பின் போது அவனது படையினர் நாளந்தா நூலகத்திற்கு வைத்த தீ, பல நாட்கள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
18 ஆம் நூற்றாண்டில் கூட மேற்கு வங்கத்தில் 80,000 பள்ளிகள் இருந்ததாகவும் 400 பேர்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் இருந்ததாகவும் தரம்பால் என்ற அறிஞர் ‘Beautiful Tree’ என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவம்
பாரத நாட்டின் மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவ முறைகள் மிகத் தொன்மையானவை.
இன்று உலக நாடுகள் அனைத்தும் இருகரம் நீட்டி வரவேற்கும் யோகாவும், தியானமும் பாரத ரிஷிகள் உருவாக்கிய அரிய அறிவியல் நுட்பங்கள்.
மனித குலத்தின் முதல் மருத்துவ அறிவியலான ஆயுர்வேதம், ரிக்வேதத்தின் உபவேதம் ஆகும். அதில் உடற்கூறியல், மருந்தியல் பற்றி விளக்கங்கள் உள்ளன.
சரக சம்ஹிதையில் 20,000 மூலிகைகளைப் பற்றிய ஆய்வு அடங்கியுள்ளது.
சுஸ்ருத சம்ஹிதையில் உடற்கூறியல், அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் அதற்கான கருவிகள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. இதன் ஆசிரியரான சுஸ்ருதர் உலகின் முதல் அறுவை சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையில் வல்லுநர்.
ஸ்ரீமதி மெனிங் என்னும் அறிஞர் ஹிந்துக்களின் அறுவை சிகிச்சை கருவிகள், ஒரு மயிரிழையை நெட்டுவாக்கில் வகிர்ந்து தள்ளக்கூடிய அளவு கூர்மை உடையனவாக இருந்தன என குறிப்பிடுகிறார்.
“ஜென்னர் கண்டுபிடிப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே அம்மைப்பால் தயாரித்தலும் அம்மை குத்துவதிலும், அம்மை நோய் தடுப்பதிலும் ஹிந்துக்கள் வல்லுநர்களாக விளங்கினர்” என்று 1905 இல் சென்னை மாகாண கவர்னராக இருந்த ஆம்பல் பிரபு குறிப்பிட்டுள்ளார்.
பிளேக் நோய் எங்காவது தோன்றினால், மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி நோய்க் கிருமி நாசினிகளைப் பயன்படுத்தி அழித்து நோயைத் தடுக்கும் முறை ஹிந்து சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளதாக கர்னல் கிங் (சென்னை கிங் இன்ஸ்டிட்யூட்டின் நிறுவனர்) குறிப்பிடுகிறார்.
தமிழ் நூல்களிலும் பல சான்றுகள் உள்ளன. தழும்பின்றி காயங்களை ஆற்றும் சிகிச்சை பற்றி புறநானூறும், கரு அமையும் காலம் பற்றி தொல்காப்பியமும் கூறுகின்றன. ‘தொய்யில் எழுதுதல்’ என்பது திருமுருகாற்றுப்படை கூறும் “அழகியல்” பற்றிய குறிப்பு. “இரும்புச் சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்த்து மருந்து கொள் மரத்தின் வாள்வடுமயங்கி வடுவின்றி தழும்பின்றி வடித்த யாக்கையன்’ என்ற குறிப்பில் அரிய தகவல் பொதிந்துள்ளது.
கணிகம்
பூஜ்யம் (0), எண்ணிலி α π இவற்றின் துல்லியமான மதிப்பை நம் முன்னோர்கள் கண்டுபிடித்திருந்தார்கள்.
1 முதல் 9 வரையிலான எண்கள் அராபிய எண்கள் என்று ஐரோப்பியர்கள் சொல்வதை நமது தேச பாடநூல்களிலும் அப்படியே கற்பிக்கின்றோம். ஆனால் அராபிய வரலாற்றாசிரியர்களோ இவற்றை ஹிந்துக்கள் தந்த கொடை என்று நன்றியோடு குறிப்பிடுகிறார்கள். ‘ஹிந்தஸா’ என்று இவற்றுக்குப் பெயரிட்டிருக்கிறார்கள்.
கணிதத்தை பல வகையாகப் பிரித்துள்ளனர்.
வியக்த கணிதம் – கால்குஸ்
அவ்வியக்த கணிதம் (அல்லது)
பீஜ கணிதம் – அல்ஜீப்ரா
க்ஷேத்ர கணிதம் – திரிகோணமிதி
“லீலாவதி சம்ஹிதை” என்ற நூல் நமது முன்னோரின் கணிதப் புலமையை பறைசாற்றும் நூல்.
நமது முன்னோர்கள் பயன்படுத்திய மிகப் பெரிய எண் 1053. இதை கி.மு. 5000 ஆவது ஆண்டிலேயே பயன்படுத்தியிருக்கிறார்கள். கிரேக்கர்களும், ரோமானியர்களும் பயன்படுத்திய மிகப்பெரிய எண் 106. நவீன காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெரிய எண் 1012 தான்.
சமஸ்க்ருதத்திற்கு பாணினி உருவாக்கிய கட்டமைப்பின் காரணமாக அது இன்று கம்ப்யூட்டருக்கு மிகவும் ஏற்ற ஊடகமாக ஏற்கப்படுகிறது.
வானசாஸ்திரம் :
சூரியனை மையமாகக் கொண்டு கிரகங்கள் சுற்றி வருகின்றன. அவை கோள வடிவம் கொண்டவை என்பது வேதகாலத்திலேயே நமது முன்னோர்கள் அறிந்திருந்த உண்மை . உலகம் உருண்டை என்று கோபர்நிகஸ் சொல்வதற்கு 1,600 ஆண்டுகள் முன்பே ஆர்யபட்டர் தனது நூலில் இதை விவரித்திருக்கிறார்.
நமது காலக் கணக்கு மிகவும் தொன்மையானது. பூமி சூரியனை சுற்றும் காலத்தைக் கணக்கிட்டு அதை 12 கோள்களாகப் பிரித்து, ஒரு வருடத்தை 12 மாதங்களாகப் பிரித்தனர். பூமி ஒரு கோளிலிருந்து அடுத்த கோளுக்கு மாறும் நாளே மாதப் பிறப்பு.
பூமி சூரியனை சுற்ற ஆகும் காலத்தை அறிஞர் ஸ்மார்ட் கண்டுபிடிப்பதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பாஸ்கராச்சாரியார் மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு சொல்லிவிட்டார். (365.258756484 நாட்கள்.) மயம்
ஒரு விநாடி நேரத்தை 33.750 பகுதிகளாகப் பிரித்து அதை ‘த்ருதி’ என்ற நுண்ணிய கால அளவை கணக்கிட்டுள்ளார்கள்.
கட்டடக் கலை
இசைபாடும் துண்கள், நிழல்படாத கோபுரம், குறிப்பிட்ட நாளில் மட்டும் சூரியனின் கதிர்கள் தெய்வத்தைத் தொடுமாறு அமைக்கப்பட்ட கோயில்கள், கோயில் உச்சியில் இடிதாங்கி, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கல்லணை போன்றவை நமது கட்டடக் கலைக்குச் சான்றாக இன்றும் இருக்கின்றன.
மதுரையில் கோயிலை மையமிட்ட நகரமைப்பு; சீரான ஊர் அமைப்பு, நேரான சாலைகள், மூடிய சாக்கடைகள், குளம் என்று சுகாதார முறையில் அமைக்கப்பட்ட நகரங்கள் ஹரப்பா, மொகஞ்சோதரா.
“பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் ஹிந்துக் கட்டடங்கள் உறுதி குலையாமல் நிற்கின்றன” என்று தார்ன்டன் குறிப்பிடுகிறார்.
விவசாயம் :
5,000 ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்வதால் வளம் குன்றா நிலங்கள்.
கிராமந்தோறும் ஏரிகள், குளங்கள், குட்டைகள் மூலம் சிறந்த நீர் நிர்வாகம். குடிமராமத்து என்ற தமிழகப் பாசனநீர் பங்கீட்டு, பாதுகாப்பு முறை தொன்மையானது.
உணவுப் பொருட்களை விற்பனை பொருளாக்காமல் எல்லோருக்கும், ஏன் எல்லா உயிரினங்களுக்கும் கிடைக்கும் வகையிலான விநியோக முறை.
உலகிலேயே பாசனத்திற்காக முதன்முதலில் குஜராத் மாநிலத்தில் சௌராஷ்டிரத்தில் தான் அணை கட்டப்பட்டது.
பொருளாதாரம்
அதர்வண வேதம், மகாபாரதத்தில் விதுர நீதி, பீஷ்மர் தருமருக்கு அளித்த உபதேசம் (சாந்தி பர்வம்), சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் போன்றவை நமது பண்டைய பொருளாதார நூல்கள். –
இங்கு நாணயங்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டது. “கி.மு. 800 -க்கும் முன்பே ஹிந்துக்கள் நாணயங்களைப் பயன்படுத்தி வந்தனர்” என்று பேராசிரியர் பிரன்ஸெப் என்பவர் கூறுகிறார்.
சுக்கிர நீதி – தொழிலாளர் நலன், வருங்கால வைப்புநிதி, காப்பு நிதி போன்ற கருத்துக்களைக் கூறுகிறது.
17 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஆங்கிலேயர்கள் வரும்வரை பாரதம் உலகிலேயே பணக்கார நாடாக இருந்தது.
வியாபாரம்
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நமது நாட்டில் வாரச்சந்தை முறை, திருவிழாக் காலங்களில் சிறப்பு சந்தை முறைகள் இருந்தது.
அரபு, கிழக்கு நாடுகளுடன் நவரத்தினம், ஏலம், கிராம்பு மற்றும் இரும்பு, எஃகினாலான போர்க்கருவிகள் கப்பல் மூலம் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
வாஸ்கோடகாமா தென்னாப்பிரிக்காவின் கடல் ஓரம் நின்றிருந்தார். உப்புக் காற்று திடீரென வாசனைக் காற்றாக மாறியது. எப்படி என கேட்டார். ‘அதோ தெரிகிறதே அந்தக் கப்பல்தான் காரணம். அதில் ஏலக்காய், கிராம்பு போன்ற வாசனைப் பொருட்கள் வருகின்றன’ என்றனர். இந்தக் கப்பல் இவ்வளவு வாசனையா என வியந்து அதனைப் பின்தொடர்ந்து நமது நாட்டிற்கு வந்ததாக தனது டைரிக் குறிப்பில் வாஸ்கோடகாமா எழுதியுள்ளார்.
நெசவு
டாக்கா மஸ்லின், மிகச் சிறந்த பருத்தி ஆடைகள், பட்டு, உயர்தர சால்வைகள், ரத்தினம் பதித்த ஜமுக்காளம் போன்றவை இங்கு தயாராயின.
நெசவுத் தொழில் உன்னத நிலையில் கிராமந்தோறும் லட்சக்கணக்கான குடும்பங்களை வாழவைத்தது.
உலோகவியல்
4,000 ஆண்டுகளுக்கு முன்பே தரமான உருக்கு தயாரானது என்பதற்கு டில்லியில் 10 டன் எடையுள்ள 24 அடி உயரமுள்ள துருப்பிடிக்காத தூண் சாட்சியாக உள்ளது.
2,000 ஆண்டுகளுக்கு முன் அழிந்துபோன எஃகு உற்பத்திக் கூடம் சென்னிமலை அருகில் கொடுமணல் என்ற ஊரில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
1896 வரை உலகத்திலேயே பாரதத்திலிருந்து தான் வைரம் வந்ததாக அமெரிக்க வைர ஆராய்ச்சிக் கழகம் கூறுகிறது.
பேராசிரியர் வில்சன், “அண்மைக் காலத்தில்தான் இங்கிலாந்தில் நாம் இரும்பை உருக்கி வார்க்கும் கலையைக் கையாண்டு வருகிறோம். ஆனால் ஹிந்துக்கள் இரும்பை உருக்குகிற, இணைக்கின்ற மற்றும் எஃகு இரும்பை உருவாக்கிற கலையை மிகப் பழங்காலம் முதல் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கையாண்டு வருகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்.
விமானம், கப்பல் கட்டும் தொழில் நுட்பம்
பரத்வாஜரின் வைமானிக சாஸ்திரம் என்ற நூல் 339 வகை கப்பல், 703 வகை விமானம், 101 வகை ஊர்திகள் பற்றி குறிப்பிடுகிறது. அந்நூலில் ஆளின்றி தூரக்கட்டுப்பாட்டில் இயங்குபவை, ஒலியை விட வேகமாகச் செல்பவை, ஒலியால், சூரிய ஒளியால், ரசாயன மின்விசையால் இயங்குபவை என பலவித ஊர்திகள் பற்றி குறிப்பு உள்ளது. ராடருக்கு இணையான கருவி, தீய நச்சுக் கதிர்களிலிருந்து விமானியை காக்கும் ‘பிஞ்டா’ கண்ணாடி, ‘மங்கா’ என்னும் கண்ணுக்குத் தெரியாத கதிர்மூலம் எதிரி விமானத்தை வீழ்த்தும் தொழில் நுட்பம், வெப்பம் உறிஞ்சி, உலோகக் கலவைகளைப் (சோமக, சௌண்டலீகா, மௌர்த்விசா) பயன்படுத்தி செய்த விமானங்கள் போன்றவை பற்றியும் குறிப்புகள் உள்ளன.
டாக்டர் ரோபர்ட்டோ பினோட்டி என்ற விமான சாஸ்திர விஞ்ஞானி, “இந்நூல் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும். இவையெல்லாம் வெறும் கற்பனை என்று என்னால் ஒதுக்க முடியவில்லை ” என்று கூறுகிறார்.
கப்பல் கட்டும் கலை சிந்து நதி பாய்ந்த பகுதியில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பாகவே சிறப்பாக இருந்துள்ளது. ‘நவ் கத்’ என்ற சம்ஸ்க்ருத சொல்லிலிருந்தே Navigation என்ற ஆங்கில வார்த்தை பிறந்தது. ‘நேவி’ என்ற வார்த்தை ‘நௌ’ என்ற வார்த்தையிலிருந்து மறுவி வந்ததே. தமிழில் நாவாய் என்று சொல்லப்படுகிறது. ‘நவ்கா’ என்றால் படகு.
போஜராஜனால் 11 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல் ‘யுக்தி கல்பதரு’. இந்நூல் ‘சாமன்யா’ எனும் ஆறுகள் கடக்கும் கப்பல், ‘விசேஷா’ எனும் கடல் கடக்கும் கப்பல் என இரு வகைக் கப்பல்கள் பற்றி விளக்குகிறது. தங்கும் வசதிகளையொட்டி சர்வ மந்திரா, மத்திய மந்திரா, அக்ர மந்திரா என்று மேலும் மூன்று வகையாகப் பிரிக்கிறது. ஓர் அஜந்தா ஓவியத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கப்பல் பயணம் செய்யும் காட்சி உள்ளது.
சம்ஸ்க்ருத இலக்கண ஆசிரியரான பாணினி (கி.மு. 7 ஆம் நூற்றாண்டு) தமது நூலில் பல படகுகளை உத்சங்க, உடுப, உதுபுத பீடகா என்ற பெயர்களில் குறிப்பிடுகிறார். 8
இங்கிலாந்தில் உள்ள கப்பல் கட்டுவோர் நிறுவனத்தின் உறுப்பினர் திரு. ஜெ.எல். ரெய்டு அவர்கள், “பண்டைய ஹிந்து ஜோதிடக் கலைஞர்கள் ஒருவகையான காந்தங்களைப் பயன்படுத்தி அடிக்கல் நாட்டுவதற்கும், பிற சமயச் சடங்குகள் நடத்துவதற்கும் வடதிசையை நிர்ணயம் செய்வதுண்டு. பண்டைய ஹிந்து திசையறி கருவியில் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் ஒரு இரும்பு மீனைவிட்டு அமைத்தனர். அதனை ‘மச்சயந்திரா’ என்று அழைத்தனர் எனக் கூறியுள்ளார்கள்.
கலைகள்
ஆய கலைகள் 64. அவை வளர அரிய பணி செய்துள்ளனர். மக்கள் மனங்களைப் பண்படுத்தும் கருவியாக கலைகளைப் பயன்படுத்தினர்.
சிற்பக்கலை : வானுயர்ந்த கோபுரங்கள், தஞ்சைப் பெரிய கோயில், மகாபலிபுரம் போன்ற கற்கோயில்கள், எல்லோரா குகைக் கோயில், கஜுராஹோ, ஒரிசாவின் கோனார்க் போன்றவை.
ஓவியக்கலை : அஜந்தா, எலிபண்டா, புதுக்கோட்டை சித்தன்னவாசல் போன்ற குகை ஓவியங்கள், நமது வீட்டு வாசலில் காலையில் தாய்மார்கள் போடும் கோலங்கள். 08
இசைக்கலை : நரம்பு இசைக் கருவிகளான வீணை, யாழ், தம்புரா; தோல் இசைக் கருவிகளான உடுக்கை, மிருதங்கம் போன்றவை.
மனித உடலும் மனமும் ஆன்மாவும் ஒருங்கிணைந்து 7 ஸ்வரங்கள் எழுந்தன. நேரம், மனநிலை ஆகியவற்றிற்கு ஏற்ற பல ராகங்களைத் தொகுத்தனர்.
ஆனந்தம் – ஆனந்த பைரவி
வீரம் – கம்பீர நாட்டை
பக்தி – தன்யாஸி
தாலாட்டு – நீலாம்பரி
அதிகாலையில் – பூபாளம்
மாலையில் – வசந்தா
சோகம் –
நாட்டியக்கலை : நவரச உணர்ச்சிகளை முகபாவத்தில், விரல் முத்திரைகளில் வெளிப்படுத்தும் பரதக்கலை, கதகளி, குச்சுபிடி, ஒடிசிநனய்தல் உயர்ந்த எண்ணங்களைத் தோற்றுவிக்கும்.
வாழ்வியல்
நமது முன்னோர்கள் வாழ்வியலில் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியதுடன் மக்கள் மனங்களுக்கு அணிகலனாகத் திகழும் உயர் பண்புகளையும் கடைப்பிடித்து வாழ்ந்தனர். அன்பு, தியாகம், வீரம், ஒழுக்கம், இயற்கையுடன் இணைந்த ஆரோக்கிய வாழ்வு போன்ற பண்புகளால் உலகிற்கே வழிகாட்டி வாழ்ந்தனர்.
“வீட்டுக்குப் பூட்டுப் போடாத நாடு இது” என்றார் சீனப் பயணி யுவான் சுவாங்.
– “உலகிலேயே மிகவும் நேர்மையானவர்கள் பாரதீயர்கள்” என்கிறது ‘ரீடர்ஸ்’ டைஜஸ்ட்’ பத்திரிகை நடத்திக் கருத்துக் கணிப்பு.
இரண்டாம் நூற்றாண்டில் நமது நாட்டிற்கு பயணியாக வந்த அர்ரியன் என்பவர் ஹிந்துக்கள் பொய் சொல்லுவதில்லை என்றார்.
ஆங்கில நீதிபதி கர்னல் ஸ்லீமன் என்பவர் கூறுகிறார்: “நூற்றுக்கணக்கான வழக்குகளை நான் நடத்தியிருக்கிறேன். ஒரு பொய் சொல்லியிருந்தால் தனது சொத்து, சுதந்திரம், உயிர் ஆகிய அனைத்தும் பாதுகாத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால் இந்தியர்கள் பொய் சொல்ல மறுக்கிறார்கள்.”
13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷம்சுதீன் அப்துல்லா என்ற முஸ்லிம் அறிஞர் கூறுகிறார்: “ஹிந்துக்கள் எண்ணிக்கையில் கடல் மணல் போல் கணக்கற்றவர்கள்; ஏமாற்றும் வேலைகளுக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். எவர்மீதும் அட்டூழியம் நடத்தமாட்டார்கள். வாழ்வில் ஆசையோ, மரணத்தில் அச்சமோ அவர்களைத் தீண்டியதில்லை.”
“பண்பாளர்கள் இருப்பதால்தான் உலகம் அழிந்து போகாமல் இருக்கிறது” என்று திருவள்ளுவ முனிவர் அன்றே கண்டு சொன்னது அகச்சான்று. லியோ டால்ஸ்டாய் திருக்குறளை “ஹிந்து திருக்குறள்” என்கிறார்.